*அருள்மிகு ஆதித்ய ஹிருதய பெருமாள் திருக்கோவில்*
உதயமார்தாண்டபுரம்
இராமாயணம் நிகழ்வோடு சம்பந்தப்பட்ட திருத்தலம்.
இதுவரை அதிகம் கேள்விபடாத ஆதித்யஹிருதய பெருமாள் திவ்ய சேஷ்திரம்
இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் இல்லை.
1
மிகவும் சக்தி வாய்ந்த சூரிய தோஷ நிவர்தி பரிகாரக்கோவில் ஆகும்.
*மூலவர்*
*ஆதித்ய ஹிருதய பெருமாள்*.
தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம்: தில்லைமரம்
தீர்த்தம் : பாஸ்கர தீர்த்தம்
ஊர் : உதயமார்த்தாண்டபுரம்,
திருவாரூர்
2
பழமை : 2000வருடங்களுக்கு முன்
கோவிலுக்கு மதுரகவி ஆழ்வார் வந்ததாக ஒரு குறிப்பு உள்ளது.
தரிசனம் கண்டவர்கள் :
அகஸ்தியர்,மதுரகவி ஆழ்வார், மூட்டை சித்தர் , அசுரகுரு சுக்கிராச்சாரியார்.
3
*அமைவிடம்* :
ஆதித்ய ஹிருதய பெருமாள் கோவில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி தாலுகா.
உதயமார்தாணடபுரம்
பஸ் நிலையத்தில் இருந்து 1 கிமி தொலைவில் வேம்பையா திடலில் உள்ளது.
4
*திருத்தலசிறப்பு*
ஆஞ்சநேயரின் இடது திருப்பாதம் தீர்த்தத்தில் பதிந்திருப்பதாக ஐதீகம்
*பொது தகவல்*
கோயிலின் கிழக்குப் பக்கம் ஆதித்ய ஹிருதய பெருமாள் வலப்பக்கம் ஸ்ரீதேவியுடனும், இடப்பக்கம் பூதேவியுடன் ,
9 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் கனிவாக அருள்பாலிக்கிறார்.
5
திருமார்பில் முப்புரிநூல்.
பீடம் நான்கு அடியில்
வட்ட வடிவில்,
இடது கையில் சங்கு,
வலக்கையில் வரம் அருளியும், கையில் கட்டைவிரலை மடித்து மோதிர விரல் மீது வைத்துள்ளார்.
6
தலையில் கிரிடத்துடன், நெற்றிப்பட்டம், தொல் காதும், குண்டலம் அணிந்துள்ளதுடன்
இரு கால்களிலும் கண்டிலம் அணிந்துள்ளார்.
7
*ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் :*
தலைகிரிடம்,நீள்நெற்றி,
கழுத்தில் ஆரம், மகாலட்சுமிக்கு அடையாளமாக, கையில் தாமரை மொட்டுடன் சிரித்த முகத்துடன் காட்சித் தருகின்றனர்.
8
கோயிலின் இடப்பக்கம் நேர்த்திக்கடன் செய்யும் வகையில் அகல் விளக்கு ஏற்ற வசதியாக கட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலின் முன் பக்கம் பாஸ்கர தீர்த்த குளம் எப்போதும் தண்ணீர் வற்றாமல் உள்ளது.
9
*பிரார்த்தனை* :
கண் மருத்துவத் துறையில் புகழ் பெறவும்,
கணக்குப்பாடத்தில்
சிறப்படையவும்,
கம்ப்யூட்டர் துறையில்
வளர்ச்சியடையவும்,
திருமணம் மற்றும்
புத்திர பாக்கியம் கிடைக்கவும்,
10
நவகிரக தோஷங்கள் தீரவும் இங்கு பெரும் திரளான மக்கள் ஞாயிற்றுக்கிழமை வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
11
கண்பார்வை கோளாறு குணமடைய பாடல் :
"கண்கண்ட ருத்திரராம் கண்கண்ட திருமாலாம்
கண்கண்ட பிரம்மருமாம் கண்கண்ட சக்தியுமாம்
கண்கண்ட ஒலியொளியாம் கண்கண்ட வேதமுமாம்
பண்கொண்டு விண்ணுண்டக் கதிரவரின் கார் போற்றி"
என்று வழிபாட்டு பாடலை பாடியும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
12
*நேர்த்திக்கடன்*
அத்திப்பழங்களை தேனில் ஊறவைத்து, முந்திரி, திராட்சை, கற்கண்டு ஆகியவற்றை ஆதித்ய ஹிருதய பெருமாளுக்கு
நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும்.
13
மேலும் பக்தர்கள் நட்சத்திர வடிவில் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
14
*தலபெருமை*
கலியுகம் முடிவதை குறிக்கும் சாதனங்கள் பல உள்ளது.
கலியுகத்தின் கடைசி மூன்று நாட்களில் சூரியன் கிழக்கே
அல்லாது மேற்கே உதிப்பதாகும்.
இது சித்தர்களின் யுக நியதியாக கிரந்தங்களில் விளக்கப்படுகிறது.
15
*கலியுகத்தின் இறுதி நாட்களான அந்த மூன்று தினங்களில் நிகழும் மேற்கு திசை சூரிய உதயம்*
16
சூரியன் திசை மாற்றத்தை
உதய மாருதி, உதய நாழி,
சகோரம், சிம்புள்,
சரபம், யாளி,
தூப்பல் ஆகிய ஏழு முக்கியமான சூரிய லோகத்து தெய்வீகப்பறவைகளே
முதன்முதலில் தீர்க்க தரிசனமாய் அறிந்து மனிதர்களுக்கும் உணர வைக்கும்.
17
பட்சி சாஸ்திர
வாக்கு மெய் வாக்கியமாய் பொழியும
மூல முதல் தலமாகியது ஆதித்யஹிருதய பெருமாள் திருக்கோவில் .
பின்னாளில் உதயமார்த்தாண்டபுரம் என மருவியதாக கூறப்படுகிறது.
18
இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்த சூரிய சக்தி வழிபாட்டு தலமாகும்.
மேலும் நல்ல சீதோஷ்ண நிலை இருப்பதால் பல்வேறுப்பகுதியில் இருந்து பறவைகள் வேடந்தாங்கல் போல் இனப் பெருக்கத்திற்கு வந்து செல்வதைக் காணலாம்.
19
அகஸ்திய மகரிஷி ராமபிரானுக்கு உபதேசித்த ஆதித்ய ஹிருதயம் என்னும் அற்புத துதியை படைப்பதற்கு
பிள்ளையார் சுழி போட்ட தலம் என்ற சிறப்பிற்குரியது.
20
சூரிய பகவானிடம் வேத பாடம் கற்கையில் ஆஞ்சநேயர், சூரியன் உதயமாகும் உதயகிரி மலையில் ஒருபாதத்தை வைத்தும், சூரியன் உதயமானதும், அஸ்தகிரி மலையில் மற்றொரு பாதத்தை வைத்தும் சூரிய சக்கரத்தின் படுவேகத்திற்கு இணையாய் ஓடிக்கற்றார்.
21
இதனால் இங்கு ஆஞ்சநேயரின் இடது திருப்பாதம் தீர்த்தத்தில் பதிந்திருப்பதாக ஐதீகம்.
மூட்டை சித்தர் வாழ்ந்தருளிய இடம் அவரின் சிறப்பு
மிக்க ஆயுத எழுத்தான (ஃ) பெருமை கூறி தோன்றி தவழ்ந்தற்கான இத் திருதலத்தில் சிறப்பாக கூறப்படுகிறது.
22
கோயில் எதிரில் பாஸ்கர தீர்த்தம் என சிறப்பிக்கப்படும் அழகிய திருக்குளம் எப்போதும் வற்றாமல் உள்ளது.
சுக்கிராச்சாரியார் வழிபட்ட இத் தலத்தில் பாஸ்கர தீர்த்தம் முதன்மையானது.
23
மேலும் கடுமையான பிதுர் தோஷங்களையும், குறிப்பாக தந்தை வழியில் தர்ப்பணம், திவசம், முறைப்படி ஆற்றாததால் விளையும் பிதுர் தோஷங்களை களைய வல்ல பிதுர் முக்தி பூமியாகும்.
இக்கோயில் இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முற்பட்டது. .
24
*தல வரலாறு* :
சிவ-விஷ்ணு தலமாக இருந்தது என்றும் கருதுகின்றனர். 9 ஆடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஆதித்ய ஹிருதய பெருமாள் விக்கரகங்கள் கருவறையில் பல தலைமுறையாக இருந்து வந்துள்ளது.
25
அகஸ்திய மாமுனிவர் அரிய சூரிய சக்தி மந்திரங்களை ஓதி வழிபட்டு ஆதித்ய ஹிருதயம் துதியை இயற்றுவதற்கு பிள்ளையார் சுழி இட்ட புண்ணிய பூமி என சித்தர்களால் போற்றப்பட்டதும்,
26
ஆதித்ய ஹிருதயம் என்னும் மந்திரத்தை அகத்திய மாமுனிவரால் இலங்கை ராம- ராவண யுத்தத்திற்கு ராமபிரான் செல்வதற்கு முன் இப்பெருமாள் முன்னிலையில்
ஸ்ரீ ராம பெருமானுக்கு உபதேசம் செய்யப்பட்டதும் இந்த மண்ணில்தான் என்று கூறப்படுகிறது.
27
*சிறப்பம்சம்* :
அதிசயத்தின் அடிப்படையில்: முன்னால் சொன்னது போல் ஆஞ்சநேயரின் இடது திருப்பாதம் தீர்த்தத்தில் பதிந்திருப்பதாக ஐதீகம்.
முடிந்த பொழுது அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய திவ்ய சேஷ்திரம் ஆதித்யஹிருதய பெருமாள் திருக்கோவில்.
28
*திருவிழாக்கள்*
ஶ்ரீராம நவமி,
சித்திரை மாதம் அட்சைய திருதியை,
ஆடி அமாவாசை,
தை அமாவாசை,
அனுமன் ஜெயந்தி,
வைகுண்ட ஏகாதசி,
நவராத்திரி ,
உள்ளிட்ட இராம பிரானுக்கு உரிய அத்தனை திருவிழாகளும் வெகு விமரிசையாக கொண்டாடபடுகிறது.
29
இத்தகைய பெருமை வாய்ந்த உதயமார்த்தாண்டபுரம் ஶ்ரீ ஆதித்ய ஹிருதய பெருமாள் கோவில் திருப்பணி நடைப் பெற்று கும்பாபிஷேகம் 2015 ல் நடைபெற்றது. 🙏
சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன்.
காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான்.
அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள்.
ஆனால், காந்தி மட்டும் "ராம்!ராம்!!" என்று சொன்னது, அவனை மிகவே யோசிக்க வைத்தது. அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான். ஆனால், காந்தியை அவ்வப்போது
உற்றுப் பார்த்தான்.
இலேசாகப் புன்முறுவல் காட்டினான்.
ஒரு நாள் "மிஸ்டர் காந்தி"!என்று கனிவாக அழைத்து
நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்;
என்ன வேண்டும் என்றான்? ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றார் காந்தி. அவன் "பைபிள்" சார்ந்த இரு நூல்களைப் பரிசாக கொடுத்தான்.
*கரு தந்து உரு தந்து காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!*
தலைமுறை தலைமுறையாகத் தமது குலம் செழித்து விளங்க வேண்டும் என்பதே எல்லோரின் ஆசையும். அதற்கு வேண்டியது மகப்பேறு பாக்கியம். ‘மழைப்பேறும் மகப்பேறும் மகேசனுக்கே தெரியாது’ என்றொரு பழமொழி உண்டு.
1
திருமணமான எல்லாத் தம்பதிகளுக்கும் பிள்ளைப்பேறு கிடைத்துவிடுவதில்லை. அதிலும் தற்போது குழந்தைப்பேறின்மை பலருக்கும் இருந்துவரும் கவலை.
2
மருத்துவம், கோயில்கள், சோதிடம், பரிகாரம் என அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப் போனவர்களுக்குக்கூட நம்பிக்கைப் பேரொளியாக விளங்குபவள் திருக்கருகாவூர் அன்னை கர்ப்பரட்சாம்பிகை.
இறைவன்: நெல் மணிகளை வேலி அமைத்து காப்பாற்றியதால் சிவபெருமான், ‘நெல்லையப்பர்’ என அழைக்கப்படுகிறார்.
இறைவி: காந்திமதி அம்மன்.
காலம்: ஆலயத்தின் ஆரம்ப காலக்கட்டுமானங்கள் பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனால் (பொ.ஆ.7-ம் நூற்றாண்டு) அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ‘சோழன் தலைகொண்ட வீர பாண்டியன்’ (பொ.ஆ.946-966) திருப்பணி பற்றிய கல்வெட்டு உள்ளது.
பின்னர் சோழர்கள் (10-12 ஆம் நூற்றாண்டு), ஹொய்சாளர்கள் (13 ஆம் நூற்றாண்டு), பிற்காலப் பாண்டியர்கள் (13-14 ஆம் நூற்றாண்டு) மற்றும் விஜயநகர ஆட்சியாளர்கள் (15-16 ஆம் நூற்றாண்டு) பல பங்களிப்புகளைச் செய்தனர்.
முழுமுதற் கடவுளை மறந்தால் என்ன நடக்கும் என்பதை விளக்கும் பதிவு...
ஒரு சமயம், ஓர் எலிக்கு ஒரு பூனையினால் தொல்லை ஏற்பட்டது. ஆகவே, அந்த எலி இறைத்தன்மையை உணரச் செய்யும் ஆற்றல் படைத்த ஒரு சாதுவிடம் சென்று, “அன்புள்ள ஐயா, நான் மிகுந்த கவலையில் உள்ளேன்,” என்று கூறியது.
“என்ன கஷ்டம்?”
எலி கூறியது, “என்னை ஒரு பூனை எப்போதும் துரத்துவதால், எனக்கு மன அமைதி இல்லை.”
“என்ன வேண்டும் உனக்கு?”
“தயவுசெய்து என்னை பூனையாக மாற்றிவிடுங்கள்.”
“சரி. பூனையாக மாறுவாயாக!”
சாதுவின் வாக்கினால் அந்த எலி உடனடியாக பூனையாக மாறியது.