*கரு தந்து உரு தந்து காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!*
தலைமுறை தலைமுறையாகத் தமது குலம் செழித்து விளங்க வேண்டும் என்பதே எல்லோரின் ஆசையும். அதற்கு வேண்டியது மகப்பேறு பாக்கியம். ‘மழைப்பேறும் மகப்பேறும் மகேசனுக்கே தெரியாது’ என்றொரு பழமொழி உண்டு.
1
திருமணமான எல்லாத் தம்பதிகளுக்கும் பிள்ளைப்பேறு கிடைத்துவிடுவதில்லை. அதிலும் தற்போது குழந்தைப்பேறின்மை பலருக்கும் இருந்துவரும் கவலை.
2
மருத்துவம், கோயில்கள், சோதிடம், பரிகாரம் என அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப் போனவர்களுக்குக்கூட நம்பிக்கைப் பேரொளியாக விளங்குபவள் திருக்கருகாவூர் அன்னை கர்ப்பரட்சாம்பிகை.
3
‘அம்மா, என்னை அம்மா என அழைக்க ஒரு பிள்ளையைக் கொடு தாயே!’ என்று சரணாகதி அடையும் பெண்களுக்கு அவளே ஆதரவாக நிற்கிறாள். அவர்களின் வயிற்றில் கருவை அருளி, அதை அந்தத் தாய் சுகமாகப் பிரசவிக்கும்வரை காத்து நிற்கிறாள், திருக்கருகாவூர் அன்னை.
4
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்துக்குத் தெற்கே 6 கி.மீ தூரத்தில் உள்ளது திருக்கருகாவூர். தஞ்சையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலும், சாலியமங்கலத்திலிருந்து வடக்கே சுமார் 10 கி.மீ தூரத்திலும்
5
எல்லா வாகன வசதிகளோடும் திருக்களாவூர் எனும் திருக்கருகாவூர் அமைந்துள்ளது (திருக்கருக் காவூர் என்றும் வழங்கப்படுகிறது).
‘கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர் அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே!’ என்று இந்த ஊர் ஈசனான முல்லைவன நாதரைப் பாடியுள்ளார் திருஞானசம்பந்தர்.
6
வெட்டாற்றின் கரையில் முல்லைவனமாக இருந்த ஊர் வடமொழியில் மாதவி வனம் என்றும் அழைக்கப்பட்டது. அதனால் ஈசன் மாதவி வனேஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார்.
7
முல்லை வனத்தில் சுயம்புவாகத் தோன்றிய லிங்கத் திருமேனியில் முல்லைக்கொடிகள் படர்ந்து கிடந்தனவாம். அந்தக் கொடி படர்ந்திருந்த வடுவை சிவலிங்கத்தின் மீது இன்றும் நாம் காணலாம்.
8
உளிபடாத, தானே எழுந்த லிங்கத் திருமேனி, புற்றுமண்ணால் ஆனது. இதனால் இங்கே இறைவனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. புனுகு மட்டுமே சார்த்தப்படுகிறது. பஞ்சாரண்யத் தலங்களில் உஷத் காலத்தில் தரிசிக்க வேண்டிய முதல் தலம் திருக்கருகாவூர்.
9
இங்குள்ள அம்பிகை கருக்காத்தம்மன், கர்ப்பரட்சாம்பிகை, முல்லைவன நாயகி, மாதவி என்றெல்லாம் போற்றப்படுகிறாள். முன்பு நித்ருவர் என்ற முனிவர், தன் மனைவி வேதிகையுடன் இங்கே வசித்துவந்தார். வேதிகை கருவுற்று இருந்தபோது, அவளைத் தனியே விட்டுவிட்டு வருணனைக் காணச் சென்றிருந்தார் நித்ருவர்.
10
அப்போது ஒருநாள், ஊர்த்துவபாதர் என்ற முனிவர் இவர்களுடைய ஆசிரமம் வந்து, தன் பசிக்கு பிக்ஷை கேட்டார். கருவுற்றிருந்த வேதிகை தளர்ச்சி கொண்டு அயர்ந்து படுத்திருந்தபடியால் இவருடைய குரல் கேட்டும் எழுந்து வரமுடியவில்லை.
11
இதை அறியாத ஊர்த்துவபாதர், ‘ராச யட்சு’ என்ற நோயால் பாதிக்குமாறு சாபமிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இதனால் வேதிகையின் கருவுக்கு பின்னம் வந்தது. அவள் உடனே திருக்கருகாவூர் ஈசனையும் அம்பிகையையும் வேண்டித் துதித்தாள்.
12
இதனால் அம்பிகையே ஒரு தாயாகத் தோன்றி, கலைந்த கருவை ஒரு குடத்துக்குள் வைத்து, குழந்தை ஜனிக்கும் நாள் வரை காப்பாற்றி வைத்துத் தந்தாள்.
‘நைந்துருவன்’ என்னும் நாமம் கொண்ட அந்தக் குழந்தை வேதிகையிடம் சேர்ந்தது.
13
குழந்தைக்கு அவன் அம்மாவிடம் பால் இல்லாதபடியால் அம்பாள் காமதேனுவை அனுப்பிப் பால் கொடுக்கச் சொன்னாள் என்றும், அப்போது காமதேனு தன் கால் குளம்பினால் பூமியில் கீறியதும் பால்குளம் தோன்றியது என்றும் கூறப்படுகிறது.
14
அன்றிலிருந்து இன்று வரை இந்த ஆலயத்து அன்னை கருக்காத்த அம்மனாக நின்று இங்கு வருவோருக்கு மழலைப் பேற்றை வரமாக வழங்கி, கருவுற்ற பெண்களுக்கு உற்ற துணையாகவும் இருந்து வருகிறாள்.
15
குழந்தைப்பேறு இல்லாத பெண்கள், அன்னை கருக்காத்த நாயகியை பக்தியோடு வேண்டி, நெய்யினால் படி மெழுகி, கோலமிட்டு, அர்ச்சனை செய்ய வேண்டும். அம்மன் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட நெய்யை 45 நாள்கள் தொடர்ந்து உண்டு வந்தால், குழந்தைப் பேறு கிட்டும் என்பது இன்று வரை நடந்துவரும் அதிசயம்.
16
அதுமட்டுமல்ல, கரு உண்டாகிய பெண்களுக்கும் உற்ற துணை இவளே. 10 மாதங்கள் அவர்களின் பிள்ளையை கவனமாகப் பாதுகாத்து, தாயையும் சேயையும் கவனமாகப் பிரித்துத் தரும் தாதியாகவும் இந்த அன்னை விளங்குகிறாள்.
17
இவளை வேண்டி, விளக்கெண்ணெய் மந்திரித்து வயிற்றில் தடவினால், அவர்களின் கருவுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் சுகப்பிரசவம் ஆவதும் இங்கு சாதாரணமானது என்கிறார்கள் ஊரார்.
18
திருமண வரம் அளிக்கும் தேவியாகவும் இந்த அன்னை விளங்குகிறாள் என்பதும் விசேஷமே. திருமணம் தொடங்கி, சுகப்பிரசவம் வரை கூடவே இருந்து பெண்களைக் காப்பவள் இந்தக் கருக்காத்தம்மன்.
19
சேக்கிழார், நால்வர் சந்நிதிகள், தட்சிணாமூர்த்தி, நிருதி விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி, ஆறுமுகர், பிரம்மன், துர்கை, சண்டிகேஸ்வரர் என்று இங்கு எண்ணற்ற சந்நிதிகள் உள்ளன. தல விருட்சமான முல்லைக்கொடி சண்டிகேஸ்வரருக்கும் திருமஞ்சனக் கிணற்றுக்கும் இடையே உள்ளது.
20
திருக்கருகாவூர் திருத்தலத்தில் இருக்கும் நான்கு தீர்த்தங்களும் விசேஷமானவை. கோயிலுக்கு எதிரே உள்ள பால் குளம், அடுத்து சத்தியகூபம் என்னும் தீர்த்தம், சுவாமி மற்றும் அம்பிகைக்கு இடையே உள்ளது. ஊருக்குத் தென்மேற்கே அமைந்திருக்கும் பிரம்ம தீர்த்தம் பிரம்மனால் உருவானது.
21
விருத்த காவிரி எனும் காவிரியின் கிளை நதியாகிய வெட்டாறுதான் நான்காவது தீர்த்தம். இதை ‘முள்ளிவாய்’ என்று கூறுகிறார்கள்.
22
சோமாஸ்கந்தர் வடிவில் அமைந்திருக்கும் ஈசன், அம்பாள், மற்றும் அந்த சந்நிதிகளுக்கு இடையே அமைந்திருக்கும் ஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றை ஒருசேர வலம்வருவது வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.
23
வளர்பிறை பிரதோஷ நாளில், இங்குள்ள ஈசனுக்குப் புனுகு சார்த்தி வணங்கினால், தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. வெளியிலிருந்து வாங்கி வரப்படும் புனுகைச் சார்த்த அனுமதி கிடையாது.
24
பிரம்மதேவர், சுவர்ணாகரன் என்ற வைசியன், கெளதம மகரிஷி, சந்திரன், பீமசேனன், புண்ணியத்துவசன், திருமகள் உள்ளிட்ட பல தேவர்களும் ஞானிகளும் வழிபட்ட கோயில் இது.
25
‘50 வருடங்களுக்கு முன்பு காஞ்சி மகா பெரியவா இங்கே வந்து தங்கியிருந்தபோது, காலையில் காவிரியில் குளித்துவிட்டு வந்து வியாச பூஜை செய்வார். சோமாஸ்கந்த அமைப்பில் கோயில் இருப்பதால், முழுப் பிராகாரம் சுற்றி வருவார்.
26
அப்போது கல்லும் முள்ளுமாகக் கிடந்த பிராகாரத்தில் வேக வேகமாக நடப்பார்’ என்று நினைவு கூர்கிறார்கள் இவ்வூர் மக்கள்.
27
தொட்டில் வழிபாடு: தமிழகத்திலேயே இங்கே மட்டும்தான் தங்கத் தொட்டில் பிரார்த்தனை உள்ளது. அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், இங்கு வந்து தங்கத் தொட்டிலில் தங்கள் பிள்ளையைப் படுக்கவைத்து, அம்பாள் சந்நிதியை வலம் வருகின்றனர்.
28
குழந்தை வரம் வேண்டி வருபவர்களும் இந்தப் பிரார்த்தனையைச் செய்யலாம். அவர்கள், குழந்தைக்குப் பதிலாகக் கோயிலில் தரப்படும் ஸ்கந்தர் விக்கிரகத்தைத் தொட்டிலில் இட்டு, வலம்வந்தால், குழந்தைப்பேறு நிச்சயம் வாய்க்கும் என்கிறார்கள்.
29
‘எங்களுக்கும் ஒரு பிள்ளை பிறக்காதா’ என்று ஏங்கித் தவிக்கும் அன்பர்கள் உடனே சென்று இந்த அன்னையைப் பிடித்துக் கொள்ளுங்கள். இவளன்றி யாருமில்லை என்று உணர்ந்துகொள்ளுங்கள்.
30
இவளின் கருணைக் கண்கள் மலர்ந்துவிட்டால் போதும், கரு தருவாள்; காப்பாள்; துணையிருப்பாள்... உங்கள் ஏழேழ் தலைமுறைக்கும் காவல் தந்து கவலை தீர்ப்பாள். அவளே கர்ப்பரட்சாம்பிகை!🙏
ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் ! என துல்லியமாக தெரியவேண்டு மெனில் ? அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது !
கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல் தரையில் ! கையோ ! காலோ ! ஊன்றாமல் ? எழுந்திருக்க முடிந்தால் ? அவருக்கு ஆயுசு நூறு !!*
*தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ (?) இருவரோ(?) வந்து கையை பிடித்து எழுப்பி விடும் நிலையில் இருந்தால் ? உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம் !!*
*ஜெரென்டாலஜி துறை ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து ! எழ வைத்து ! ஆய்வு செய்தார்கள் !!*
*கை ! முட்டி ! என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு !!*
*அருள்மிகு
பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேயர்
திருக்கோவில்*
பஞ்சவடி,
புதுச்சேரி.
எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அருள் புரிவேன்’ என்பது அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் வாக்கு. ஆஞ்சநேயர் பல தோற்றங்களில் காட்சி தந்து, தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
1
அத்தகைய தோற்றங் களில் தனிச்சிறப்பு கொண்டது, பஞ்சமுக ஆஞ்சநேயர் திருவடிவம்.
ஆஞ்ச நேயருக்கு பஞ்சமுகங்கள் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. பஞ்சவடி என்றால் ஐந்துவித மரங்கள் சூழ்ந்த வனம் என்பது பொருளாகும்.
2
முன்னொரு யுகத்தில் அரசு, ஆல், வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய ஐந்து வித மரங்கள் அடர்ந்த வனமாக இந்தப் பகுதி விளங்கியிருக்கிறது. ரிஷிகளும் முனிவர்களும் இந்தப் பிரதேசத்தில் குடில்கள் அமைத்துத் தங்கி, தவமும் யாகங்களும் நடத்தி
வந்துள்ளார்கள்.
சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன்.
காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான்.
அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள்.
ஆனால், காந்தி மட்டும் "ராம்!ராம்!!" என்று சொன்னது, அவனை மிகவே யோசிக்க வைத்தது. அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான். ஆனால், காந்தியை அவ்வப்போது
உற்றுப் பார்த்தான்.
இலேசாகப் புன்முறுவல் காட்டினான்.
ஒரு நாள் "மிஸ்டர் காந்தி"!என்று கனிவாக அழைத்து
நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்;
என்ன வேண்டும் என்றான்? ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றார் காந்தி. அவன் "பைபிள்" சார்ந்த இரு நூல்களைப் பரிசாக கொடுத்தான்.
இறைவன்: நெல் மணிகளை வேலி அமைத்து காப்பாற்றியதால் சிவபெருமான், ‘நெல்லையப்பர்’ என அழைக்கப்படுகிறார்.
இறைவி: காந்திமதி அம்மன்.
காலம்: ஆலயத்தின் ஆரம்ப காலக்கட்டுமானங்கள் பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனால் (பொ.ஆ.7-ம் நூற்றாண்டு) அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ‘சோழன் தலைகொண்ட வீர பாண்டியன்’ (பொ.ஆ.946-966) திருப்பணி பற்றிய கல்வெட்டு உள்ளது.
பின்னர் சோழர்கள் (10-12 ஆம் நூற்றாண்டு), ஹொய்சாளர்கள் (13 ஆம் நூற்றாண்டு), பிற்காலப் பாண்டியர்கள் (13-14 ஆம் நூற்றாண்டு) மற்றும் விஜயநகர ஆட்சியாளர்கள் (15-16 ஆம் நூற்றாண்டு) பல பங்களிப்புகளைச் செய்தனர்.