*அருள்மிகு
பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேயர்
திருக்கோவில்*
பஞ்சவடி,
புதுச்சேரி.
எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அருள் புரிவேன்’ என்பது அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் வாக்கு. ஆஞ்சநேயர் பல தோற்றங்களில் காட்சி தந்து, தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
1
அத்தகைய தோற்றங் களில் தனிச்சிறப்பு கொண்டது, பஞ்சமுக ஆஞ்சநேயர் திருவடிவம்.
ஆஞ்ச நேயருக்கு பஞ்சமுகங்கள் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. பஞ்சவடி என்றால் ஐந்துவித மரங்கள் சூழ்ந்த வனம் என்பது பொருளாகும்.
2
முன்னொரு யுகத்தில் அரசு, ஆல், வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய ஐந்து வித மரங்கள் அடர்ந்த வனமாக இந்தப் பகுதி விளங்கியிருக்கிறது. ரிஷிகளும் முனிவர்களும் இந்தப் பிரதேசத்தில் குடில்கள் அமைத்துத் தங்கி, தவமும் யாகங்களும் நடத்தி
வந்துள்ளார்கள்.
3
ராம - ராவண யுத்தத்தில் ராவணன் தோல்வி அடையப் போகும் நிலையில், அவனைக் காப்பாற்ற மயில் ராவணன் ஒரு யாகம் செய்தான். அந்த யாகம் தடங்கல் இல்லாமல் முடிந்து விட்டால், ராம லட்சுமணர்கள் அழிந்து விடுவார்கள். எனவே, அவனுடைய யாகத்தைத் தடுத்து நிறுத்த ஆஞ்சநேயர் விரும்பினார்.
4
36 அடி உயர பிரமாண்ட திருமேனியுடன் அருள் புரிகிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர்.
ராமபிரானின் உத்தரவு பெற்று மயில் ராவணனின் யாகத்தைத் தடுக்கப் புறப்பட்ட ஆஞ்சநேயர், நரசிம்மர், வராகர், கருடன், ஹயக்கிரீவர் ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.
5
அவர்களும் தங்களுடைய சக்திகளை ஆஞ்சநேயருக்கு வழங்கியதுடன், அவருடைய முகங்களாகவும் திகழ்ந்தனர்.
ஆஞ்சநேயர் பஞ்சமுகங்களுடன் காட்சி தரும் ஆலயம் திண்டிவனம் - பாண்டிச்சேரி சாலையில் உள்ள பஞ்சவடி எனும் கிராமத்தில் அமைந் துள்ளது.
36 அடி உயர பிரமாண்டத் திருமேனியுடன் அருள்புரிகிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர்.
7
இந்தத் தலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்துருக்கனன், பரதன் ஆகியோர் ஒரே சந்நிதியில் அருள்பாலிக் கின்றனர். ஸ்ரீ ராமபிரானின் பாதுகையும் இந்தத் தலத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்துச் செல்கிறார்கள்.
8
இந்த ஆஞ்சநேயரை வழிபடு பவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக் கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, மன அமைதி மற்றும் சகல
சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
9
மிகவும் வரப்பிரசாதியான பஞ்சமுக ஆஞ்சநேயர், வேண்டிய வரங்களை வேண்டியபடியே அருள்பவர். நம் துயரங்கள் யாவற்றையும் போக்கி அருள் புரிகிறவர். 🙏
சகல தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய சிறந்த பரிகாலத்தலம்.
தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணலாம்.
1
தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலம் ஈரோடு மாவட்டம் பவானியில், நான்கு மலைகளுக்கு இடையில், பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் இத்தலம் உள்ளது.
2
காவிரி, பவானி நதிகள் கூடும் சங்கமத் துறையில் அமைந்துள்ளதால் சிவனுக்கு சங்கமேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. முனிவர் விஸ்வாமித்திரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர் என்றும் அழைக்கபடுகிறார்.தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. 3
கடவுள் எங்கு உள்ளார், எப்படி உள்ளார், என்ன செய்கிறார்?
#1 கடவுள் எங்கே இருக்கிறார்?
#2 எப்படி இருக்கிறார்?
#3 என்ன செய்து கொண்டு இருக்கிறார்?
கிருஷ்ண தேவராயர் கேட்ட கேள்விக்கு யாராலேயும் பதில் சொல்ல முடியவில்லை.
அப்போ தெனாலி ராமன் முன் வந்து, அரசே இதுக்கு நான் விடையளிக்கிறேன்ன்னு சொல்லிட்டு,
ஒரு மெழுகு வர்த்தியை ஏத்தி, அரசே இந்த மெழுகு வர்த்தியின் தீபம் எந்த திசையைக் காட்டுகிறதுன்னு கேட்டான்..?
அவர் அது மேல் நோக்கி காட்டுகிறது. எந்த திசையையும் குறிப்பிட்டுக் காட்டவில்லைன்னு சொன்னார். சரின்னு சொல்லிட்டு மெழுகுவர்த்தியை திருப்பி திருப்பி மேலும் கீழும், குறுக்கும் நெடுக்குமாக வைத்தான். அப்போதும் தீபம் மேல் நோக்கியே நின்றது.
ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் ! என துல்லியமாக தெரியவேண்டு மெனில் ? அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது !
கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல் தரையில் ! கையோ ! காலோ ! ஊன்றாமல் ? எழுந்திருக்க முடிந்தால் ? அவருக்கு ஆயுசு நூறு !!*
*தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ (?) இருவரோ(?) வந்து கையை பிடித்து எழுப்பி விடும் நிலையில் இருந்தால் ? உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம் !!*
*ஜெரென்டாலஜி துறை ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து ! எழ வைத்து ! ஆய்வு செய்தார்கள் !!*
*கை ! முட்டி ! என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு !!*
சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன்.
காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான்.
அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள்.
ஆனால், காந்தி மட்டும் "ராம்!ராம்!!" என்று சொன்னது, அவனை மிகவே யோசிக்க வைத்தது. அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான். ஆனால், காந்தியை அவ்வப்போது
உற்றுப் பார்த்தான்.
இலேசாகப் புன்முறுவல் காட்டினான்.
ஒரு நாள் "மிஸ்டர் காந்தி"!என்று கனிவாக அழைத்து
நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்;
என்ன வேண்டும் என்றான்? ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றார் காந்தி. அவன் "பைபிள்" சார்ந்த இரு நூல்களைப் பரிசாக கொடுத்தான்.
*கரு தந்து உரு தந்து காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!*
தலைமுறை தலைமுறையாகத் தமது குலம் செழித்து விளங்க வேண்டும் என்பதே எல்லோரின் ஆசையும். அதற்கு வேண்டியது மகப்பேறு பாக்கியம். ‘மழைப்பேறும் மகப்பேறும் மகேசனுக்கே தெரியாது’ என்றொரு பழமொழி உண்டு.
1
திருமணமான எல்லாத் தம்பதிகளுக்கும் பிள்ளைப்பேறு கிடைத்துவிடுவதில்லை. அதிலும் தற்போது குழந்தைப்பேறின்மை பலருக்கும் இருந்துவரும் கவலை.
2
மருத்துவம், கோயில்கள், சோதிடம், பரிகாரம் என அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப் போனவர்களுக்குக்கூட நம்பிக்கைப் பேரொளியாக விளங்குபவள் திருக்கருகாவூர் அன்னை கர்ப்பரட்சாம்பிகை.