தனது குழந்தை தும்மிய போது, அக்குழந்தையின் தாயானவள், குழந்தை தும்மத் தும்ம, "நூறு, ஆயிரம்..." ('ஆண்டு நோயற்று வாழ்க') என்று சொல்லி வாழ்த்துவது போல எம்பெருமாள் மதுரை ஸ்ரீகூடலழகரை 'பல்லாண்டு' பாடி வாழ்த்தியவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த பெரியாழ்வார்!
2
மதுரையையாண்ட வல்லப தேவ பாண்டியனுக்கு, 'பரம்பொருள் யாது?' என்பதில் ஐயப்பாடு எழுகிறது. தனது ஐயப்பாட்டைத் தீர்த்து வைக்கும் ஆன்மீக குருவிற்கு பொற்கிழி தர ஒரு அறிவிப்பு செய்கிறான். அதற்கென்று பொற்கிழியை வித்வத் சபையில் கட்டித் தொங்க விடுகிறான்.
3
இந்தச் செய்தியை கனவின் மூலமாக, கூடலழகப் பெருமாள், விஷ்ணு சித்தனான திருவில்லிபுத்தூரில் வாழ்ந்து வந்த பெரியாழ்வாருக்கு உணர்த்துகின்றார்.
4
மதுரைக்குச் சென்று வித்வத் சபையில் பெரியாழ்வார், ‘ஸ்ரீ மந் நாராயணனே பரம்பொருள்’, என்ற தத்துவத்தை விளக்கிச் சொல்ல, பரிசுப் பொருளான பொற்கிழி வளைந்து கொடுத்தது. பெரியாழ்வார் பொற்கிழியை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.
5
பெரியாழ்வாரின் விளக்கத்தில் மனம் மகிழ்ந்து போன பாண்டிய மன்னன், பெரியாழ்வாரைப் போற்றிப் பாராட்டும் வகையில், அவரை பட்டத்து யானை மீதேற்றி, நகர் வலம் வரச் செய்தான்.
6
அப்போது, தனது பக்தனின் சாதனையால் பெருமிதம் கொண்ட பெருமாள், ஆகாயத்தில் தனது கருட வாகனத்தில், தனது துணைவியருடன் காட்சி தந்தார். பெருமாளின் திருவுருவைக் கண்ட மக்கள், அவருடைய சொரூப சுந்தரத்தில் மயங்கிப் போனார்கள். 'கல்லடி பட்டாலும், கண்ணடி படக் கூடாதல்லவா'?
7
ஆகவே, பெருமாளின் மீது கண் திருஷ்டி பட்டு விடக் கூடாதென்று, பெரியாழ்வார் 'பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு' வாழ, பெருமாளுக்கு பன்னிரண்டு பாடல்களை 'திருப்பல்லாண்டு' பாடியது இன்றைக்கும் பெருமாள் கோவில்களில் ஒலிப்பது மிகச் சிறப்பு.
8
ஒருமுறை மதுரையில் தொடர்ந்து மழை பெய்யவே, மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாயினர். தங்களை மழையிலிருந்து காத்தருளும்படி பெருமாளை வேண்டினர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சுவாமி, நான்கு மேகங்களை ஏவினார். அவை, மதுரையைச் சுற்றி நான்கு மாடங்களாக ஒன்று கூடி, மழையிலிருந்து மக்களை காத்தது.
9
இவ்வாறு, நான்கு மேகங்கள் ஒன்று கூடியதால் இத்தலம், நான்மாடக்கூடல் என்றும், கூடல் மாநகர் என்றும் பெயர் பெற்றது. அழகான பெருமாளும் கூடலழகர் என்று பெயர் பெற்றார்!
10
தல வரலாறு:
தான் தவமிருந்து, பெருமாளை மனித ரூபத்தில் தரிசித்த, பிரம்மாவின் புத்திரர் சனத் குமார், தேவ சிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு, அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டை செய்த திருவுருவமே நாம் தரிசிக்கும் கூடலழகர் பெருமாள்.
11
கோவில் தலத்தின் சிறப்புகள்:
108 வைணவத் தலங்களில் 4-வது தலமாகும் மதுரையிலுள்ள கூடலழகர் பெருமாள் கோவில்.
பெரியாழ்வார் பெருமாளுக்கு 'திருப்பல்லாண்டு' பாடிய தலம்.
பரிபாடலிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்ட தலம்.
12
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வாரால் மங்கள சாஸனம் செய்த தலம்.
நின்ற, கிடந்த, அமர்ந்த முக்கோலத்தில் பெருமாளை இக்கோவிலில் தரிசிக்க முடியும்.
13
ஆண்டாள், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், ஆஞ்சநேயர், இராமர், கிருஷ்ணர், கருடர் ஆகியோர்களுக்கு சன்னிதிகள் அமைந்திருப்பதோடு, இவ்வைணவ கோவிலில் நவக் கிரக சன்னிதி அமைக்கப்பட்டிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.
14
திருமணத் தடை, புத்திரத் தடைகள் நீங்கவும், கல்வியில் சிறக்கவும் பக்தர்கள் பெருமாளைச் சேவித்துக் கொள்கிறார்கள்.
ஒரு மரத்தடி பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான். எதிரில் ஒரு தட்டு. அதில் சில நாணயங்கள். அந்தப் பக்கம் வருவோர் போவோரெல்லாம் அவனுக்கு பொருள், உணவு ஆகியவற்றை கொடுப்பார்கள். அவனுக்கு பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருப்பான். இருவரும் நண்பர்கள்.
ஒரு நாள் அவன் பாடிக்கொண்டிருந்தான். அவ்வழியே அந்த நாட்டு அரசன் சென்று கொண்டிருந்தான். பாட்டு அரசனை கவர்ந்தது.
நீ அருமையாக பாடுகிறாய். உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்!; என்றான் அரசன்.
மகிழ்ந்து போனான் பார்வையற்றவன்.
அரசே! நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை. அரசராகிய நீங்கள் சாப்பிடும் மதிய உணவை ஒரு நாளாவது நான் சாப்பிட வேண்டும். இந்த ஆசையை நிறைவேற்றுவீர்களா? என்று கேட்டான்.
சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.
அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால்
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பூமியில் வாழும் மனிதனுக்கு அவனின் ஒவ்வொரு கால வயதிலும் பிறரின் உதவியில்லாமல் வாழவே முடியாது...
ஆனால்!, விலங்குகளுக்கு அப்படி அல்ல. பால் கறப்பு முடிந்து அடுத்த கன்றுக்கு பசு தயாரானதும் பசு வேறு, கன்று வேறு என்றாகி விடும். அதன் பிறகு கன்றின் வாழ்க்கை அதன் கையிலோ அல்லது அது எவரிடம் இருக்கிறதோ அவரின் கையிலோ மாறி விடும். இதே போலத்தான் ஒவ்வொரு விலங்கினங்களும் வாழ்கின்றன...
ஆனால்!, மனிதனை எடுத்துக் கொண்டால் குழந்தையாய் இருக்கும் பொழுதில் இருந்தே அம்மாவின் உதவி தேவை. அம்மாவிற்கு அப்பாவின் உதவி தேவை. அப்பாவிற்கு பிறரின் உதவி தேவை என்று உதவி உதவி என்று பிறரிடமிருந்து பெறுவது வாழ் நாள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்...
சகல தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய சிறந்த பரிகாலத்தலம்.
தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணலாம்.
1
தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலம் ஈரோடு மாவட்டம் பவானியில், நான்கு மலைகளுக்கு இடையில், பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் இத்தலம் உள்ளது.
2
காவிரி, பவானி நதிகள் கூடும் சங்கமத் துறையில் அமைந்துள்ளதால் சிவனுக்கு சங்கமேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. முனிவர் விஸ்வாமித்திரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர் என்றும் அழைக்கபடுகிறார்.தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. 3
கடவுள் எங்கு உள்ளார், எப்படி உள்ளார், என்ன செய்கிறார்?
#1 கடவுள் எங்கே இருக்கிறார்?
#2 எப்படி இருக்கிறார்?
#3 என்ன செய்து கொண்டு இருக்கிறார்?
கிருஷ்ண தேவராயர் கேட்ட கேள்விக்கு யாராலேயும் பதில் சொல்ல முடியவில்லை.
அப்போ தெனாலி ராமன் முன் வந்து, அரசே இதுக்கு நான் விடையளிக்கிறேன்ன்னு சொல்லிட்டு,
ஒரு மெழுகு வர்த்தியை ஏத்தி, அரசே இந்த மெழுகு வர்த்தியின் தீபம் எந்த திசையைக் காட்டுகிறதுன்னு கேட்டான்..?
அவர் அது மேல் நோக்கி காட்டுகிறது. எந்த திசையையும் குறிப்பிட்டுக் காட்டவில்லைன்னு சொன்னார். சரின்னு சொல்லிட்டு மெழுகுவர்த்தியை திருப்பி திருப்பி மேலும் கீழும், குறுக்கும் நெடுக்குமாக வைத்தான். அப்போதும் தீபம் மேல் நோக்கியே நின்றது.