அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள், காமாட்சி அம்மன். செய்யாறின் தென் கரையில் அம்பாள், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்த 7 இடங்களில் அமைந்த ஆலயங்கள் ‘சப்த கயிலாய தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
1
அந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
மண்டகொளத்தூர்
சென்னை- போளூர் நெடுஞ்சாலையில், போளூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மண்டகொளத்தூர். இங்கு தர்மநாதேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
2
இறைவன்- தர்மநாதேஸ்வரர், இறைவி- தர்மசம்வர்த்தினி. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பக்தர்களின் பாவங்களைப் போக்கி, நிம்மதியை அருளும் இறைவனாக, இத்தல மூலவர் அருள்புரிகிறார்.
3
தாமரைப்பாக்கம்
போளூருக்கு தென்மேற்கே 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. இங்கு அக்னீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இறைவன்- அக்னீஸ்வரர், இறைவி- திரிபுரசுந்தரி. இத்தல இறைவனை, தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தால், ஈசனை அடையும் வழி பிறக்கும்.
4
தென்பள்ளிப்பட்டு
போளூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் கலசப்பாக்கம் என்ற ஊரில் உள்ள செய்யாற்றின் பாலத்தைக் கடந்து 3 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை சென்றடையலாம்.
5
இங்கு கயிலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இறைவன்- கயிலாசநாதர், இறைவி- கனகாம்பிகை. இந்த திருத்தலத்திற்குச் செல்வதற்கு பார்வதிக்கு, மகாவிஷ்ணு வழிகாட்டினாராம். இதனால் இங்கு பள்ளிகொண்ட கோலத்தில் பெருமாளுக்கும் சன்னிதி அமைந்துள்ளது.
6
இதன் காரணமாகவும் இந்த ஊருக்கு 'தென்பள்ளிப்பட்டு' என்ற பெயர் வந்தது என்கிறார்கள்.
7
நார்த்தாம்பூண்டி
தென்பள்ளிப்பட்டு தலத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் நார்த்தாம் பூண்டி உள்ளது. இங்குள்ள கயிலாசநாதர் திருக்கோவில் மிகவும் தொன்மை வாய்ந்ததாக திகழ்கிறது.
8
இங்குள்ள இறைவன்- கயிலாசநாதர், இறைவி- பெரியநாயகி. கோவிலில் உள்ள இலந்தை மரத்தின் அடியில் நாரத முனிவர், ஈசனையும், வள்ளி-தெய்வானை உடனாய முருகரையும் வணங்கும் சிற்பத்தைக் காணலாம்.
9
வாசுதேவம்பட்டு
திருவண்ணாமலையில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வாசுதேவம்பட்டு. இந்த திருத்தலம் செய்யாற்றின் கரையிலேயே உள்ளது. இங்கு சவுந்திரநாயகி உடனாய பக்தவச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.
10
முன் காலத்தில் 'ஆட்கொண்டேஸ்வரர்' என்று இந்த இறைவன் போற்றப்பட்டு உள்ளார். சப்த கயிலாய தலங்களில் 7-வதாக அமைந்த இந்தக் கோவிலை சோழர்கள் கட்டமைத்துள்ளனர்.
11
இத்தல ஈசனை, சித்திர, விசித்திரகுப்தர்கள் வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு, ஆலயத்தின் ஈசான்ய மூலையில் தனிச் சன்னிதி எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை.
12
பழங்கோயில்
கலசப்பாக்கத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பழங்கோயில் உள்ளது. பார்வதி தேவி பிரதிஷ்டை செய்த சப்த கயிலாயங்களில் இது 'மத்திய கயிலாசம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
13
இங்கு பாலக்ரிதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இறைவன்- பாலக்ரிதீஸ்வரர், இறைவி- பாலாம்பிகை. இங்குள்ள மூலவர் 'ஷோடச மூர்த்தி' ஆவார். மூலவர் சன்னிதிக்கு பின்புறத்தில் ருக்மணி- சத்யபாமா உடனாய வேணுகோபால சுவாமி சன்னிதி உள்ளது.
14
கரைப்பூண்டி
போளூரில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. செய்யாற்றின் தென்கரையில் அமைந்ததால், 'கரைப்பூண்டி' என்ற பெயர் வந்தது. இங்கு கரைகண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
15
இறைவன்- கரைகண்டேஸ்வரர், இறைவி- பாலசுந்தரி. தல விருட்சம்- வில்வ மரம். இங்கு வடதிசை நோக்கி பாயும் செய்யாற்றில், ஐப்பசி மாதத்தில் நீராடும் 'துலா ஸ்நானம்' சிறப்பானதாக கருதப்படுகிறது.🙏
இனிப்பே சாப்பிடக்கூடாது என்று சொல்லும் ஆங்கில
மருத்துவர்கள் அறிவாளிகள்
இனிப்பு - மண்ணீரல் - உதடு - கவலை - இரைப்பை - மண்.
❝மாவுச்சத்துக்கு யார் சர்க்கரை என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை.செரிமான கோளாறால் ஏற்படும் நீரிழிவு பிரச்சனைக்கு யார் சர்க்கரை நோய் என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை❞
இலை போட்டு முதலில் இனிப்பு வைத்தவன் எல்லாம் முட்டாள் அல்ல.
வீட்டு திண்ணையில் வழிப்போக்கர்களுக்கு ஒரு மூடி தேங்காயும் ஒரு உருண்டை கருப்பட்டி வைத்தவன் எல்லாம் முட்டாள் அல்ல.
தனது தேவி சீதையை ராவணன் சிறையெடுத்துச் சென்றதால் கோபித்த ராமபிரான், வானர சேனைகளுடன் இலங்கை மீது படையெடுத்துச் சென்று ராவணனை வென்றார். அவனையும் அவனது கூட்டத்தாரையும் அழித்தார். ராவணனின் தம்பியான விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கினார்.
1
ராவணன் வேதவிற்பன்னன், பிரம்மாவின் வழிவந்த வேதியன். அதனால், அவனைக் கொன்ற பாவம் ராமபிரானை பிரம்மஹத்தியாக வந்து வாட்டியது. அது தீர அவர் கிழக்கு வங்கக் கடற்கரையில் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். அதனால், அவரது பெரும்பாவம் ஒழிந்தது என்றாலும், சிறுசிறு இடையூறுகள் உண்டாயின.
2
அவற்றை நீக்கும் பொருட்டு, அவர் காவிரிக்கரைக்கு வந்து கும்பகோணத்திற்கு அருகில் குடில் அமைத்துத் தங்கினார். அங்கே அவர் 108 சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டார்.
சிவ வழிபாட்டின் பயனால் அவரைத் தொடர்ந்து வந்த பாவங்கள் நாசமாயின. அதையொட்டி அந்தத் தலம் பாவநாசம் எனப்பட்டது.
*காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில்* (அனந்த பத்மநாபேசம்) என விளங்கும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இக்கோவில் குறிப்புகள், *காஞ்சிப் புராணத்தில்* தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.
*தல வரலாறு*
கயிலாயத்தில் இறைவனும் இறைவியும் ஏதேனும் ஓர் விளையாட்டை விளையாடலாம் என்றெண்ணி ஓர் விளையாட்டை விளையாடினர். அப்போது அங்கிருந்த திருமாலை அவ்விளையாட்டிற்குரிய நடுவராக நியமித்துவிட்டு விளையாட்டைத் தொடர்ந்தனர்.
விளையாட்டின் இறுதியில் அம்பிகையே வெற்றி பெற்றாள். ஆனால் தான் தான் வெற்றி பெற்றதாக இறைவன் கூறினார். நடுவராக இருந்த திருமாலோ இருவருடைய மாறுபாடான நிலைமையைக் கண்டு, தன் நடுநிலைமை மாறி இறைவனே வெற்றி பெற்றதாக கூறினார்.
ஒரு மரத்தடி பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான். எதிரில் ஒரு தட்டு. அதில் சில நாணயங்கள். அந்தப் பக்கம் வருவோர் போவோரெல்லாம் அவனுக்கு பொருள், உணவு ஆகியவற்றை கொடுப்பார்கள். அவனுக்கு பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருப்பான். இருவரும் நண்பர்கள்.
ஒரு நாள் அவன் பாடிக்கொண்டிருந்தான். அவ்வழியே அந்த நாட்டு அரசன் சென்று கொண்டிருந்தான். பாட்டு அரசனை கவர்ந்தது.
நீ அருமையாக பாடுகிறாய். உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்!; என்றான் அரசன்.
மகிழ்ந்து போனான் பார்வையற்றவன்.
அரசே! நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை. அரசராகிய நீங்கள் சாப்பிடும் மதிய உணவை ஒரு நாளாவது நான் சாப்பிட வேண்டும். இந்த ஆசையை நிறைவேற்றுவீர்களா? என்று கேட்டான்.
சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.
அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால்
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.