தனது தேவி சீதையை ராவணன் சிறையெடுத்துச் சென்றதால் கோபித்த ராமபிரான், வானர சேனைகளுடன் இலங்கை மீது படையெடுத்துச் சென்று ராவணனை வென்றார். அவனையும் அவனது கூட்டத்தாரையும் அழித்தார். ராவணனின் தம்பியான விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கினார்.
1
ராவணன் வேதவிற்பன்னன், பிரம்மாவின் வழிவந்த வேதியன். அதனால், அவனைக் கொன்ற பாவம் ராமபிரானை பிரம்மஹத்தியாக வந்து வாட்டியது. அது தீர அவர் கிழக்கு வங்கக் கடற்கரையில் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். அதனால், அவரது பெரும்பாவம் ஒழிந்தது என்றாலும், சிறுசிறு இடையூறுகள் உண்டாயின.
2
அவற்றை நீக்கும் பொருட்டு, அவர் காவிரிக்கரைக்கு வந்து கும்பகோணத்திற்கு அருகில் குடில் அமைத்துத் தங்கினார். அங்கே அவர் 108 சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டார்.
சிவ வழிபாட்டின் பயனால் அவரைத் தொடர்ந்து வந்த பாவங்கள் நாசமாயின. அதையொட்டி அந்தத் தலம் பாவநாசம் எனப்பட்டது.
3
அந்தப் பாவநாசத் திருத்தலத்தின் சிறப்புக்களைக் கண்டு மகிழலாம். ராமபிரான் 108 சிவலிங்கங்களை வைத்துச் சிவபெருமானை வழிபட்ட தலம் பாபநாசம். இது கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற திருத்தலமான திருப்பாலைத் துறைக்கு அருகில் உள்ளது.
4
திருப்பாலைத்துறை, வங்காரம்பேட்டை, ராமநாதன் கோயிலான 108 சிவலிங்கத் தலம் ஆகியவை ஒரே ஊரின் கீழ் இருப்பவைகளாகும். ராமநாதன் கோயிலான 108 சிவலிங்கக் கோயில் முதன்மைச் சாலையை ஒட்டியே உள்ளது.
5
சாலையை விட்டு இறங்கியதும், அழகிய தீர்த்தக்குளத்தைக் காணலாம். இந்த குளத்தின் அக்னி மூலையில் சிவாலயம் அமைந்துள்ளது. சிவாலயத்தில் முதன்மை மூர்த்தியாக கருவறையில் வீற்றிருப்பவர் ராமநாதேஸ்வரர் ஆவார்.
6
இவர் ராமரும், சீதையும் தமது பரிவாரங்களுடன் வழிபட்ட மகாலிங்கமாவார். இந்த லிங்கம் ஐந்தடிக்கும் மேல் உயரமானதாகவும் கனகாத்திர கம்பீரமானதாகவும் இருக்கின்றது.
7
மேற்கு நோக்கிய வாயிலுக்கு வெளியே நந்தி மண்டபம், பலிபீடம் ஆகியவை உள்ளன. இந்த வாயிலுக்கு வெளியே தெற்கு நோக்கியவாறு அம்பிகை சந்நதி பெரியதாகவும், விசாலமானதாகவும் இருக்கிறது. இதில் பெரியவடிவுடன் அன்னை பராசக்தி, பர்வதவர்த்தினி என்னும் பெயரில் எழுந்தருளியுள்ளார்.
8
நாம் வாயிலைக் கடந்து கோயிலுக்கு உள்ளே சென்றதும், முதலில் பிராகாரத்தை வலம்வரலாம். கன்னிமூலையில் கணபதி எழுந்தருளியுள்ளார்.
9
இவரை வணங்கிய பின்னர், முருகனை வணங்கி விட்டு வடக்குத் திருமாளிகை பத்தியை அடையலாம். இங்கு சிறிய மண்டபத்தில் ராமர் தமது பரிவாரங்களுடன் சிவலிங்க பூஜை செய்யும் காட்சி புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.
10
இதை அடுத்துள்ள வடக்குப் பிராகாரத் திருமாளிகை பத்தி மூன்று பந்திகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நெடும் பந்தியில் வரிசைக்கு 35 லிங்கங்கள் வீதம், 3 வரிசையில் 105 லிங்கங்கள் அமைந்து உள்ளன.
11
இவை யாவும் அளவால் பெரிய லிங்கங்களாகும். ஒவ்வொரு லிங்கத்திற்கும் பஞ்சமுக விளக்கு அமைத்து, அதன் ஐந்து முகங்களிலும் திரியிட்டுத் தீபம் ஏற்றுகின்றனர்.
12
இந்த லிங்கப்பந்தி பார்ப்பதற்குக் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. இந்த லிங்கங்களை வலம் வந்து வணங்குகின்றனர். இவை யாவும் ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை என்று கூறுகின்றனர்.
13
இந்த லிங்கங்களை வலம் வந்து வணங்கியபின், பிராகாரத்தின் கோடியில் அமைந்துள்ள, காசி விஸ்வநாதரையும் அவருக்கு அருகில் சந்நதி கொண்டுள்ள விசாலாட்சி அன்னபூரணி தேவியரையும் வணங்கி மகிழ்கிறோம்.
14
கோமுகிக்கு அருகில் சண்டேஸ்வரர், அவரை அடுத்து துர்க்கை ஆகியோர் உள்ளனர். தென்கிழக்கு முனையில் நால்வர் பெருமக்களும், சேக்கிழாரும் தனி வளைவிற்குள் வடக்கு நோக்கியவாறு இருக்கின்றனர்.
15
அவர்களை வணங்கிய பின் தெற்கு நோக்கி காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை வணங்கி அருள் பெறுகிறோம். அவரை அடுத்து இரண்டு ஆஞ்சநேயர் திருவுருவங்கள் உள்ளன.
16
இத்தலத்தில் நெடுநாள் வாழ்ந்து மரண மடைந்த இரண்டு வானரங்களின் நினைவைப் போற்றும் வகையில், இந்த இரண்டு அனுமன் திருவுருவங்கள் இங்கே அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
17
இவரை அடுத்து கணபதியைக் கண்டு தொழுகிறோம். பின்னர் மேற்கு நோக்கிய வாயில் வழியாக மகாமண்டபத்தை அடைகிறோம்.
18
இந்த மண்டபத்தின் வடக்குப் பகுதியில் பாதுகாப்பு அறையில் நடராசர், சோமாஸ்கந்தர், தனி அம்மன் சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், வள்ளி தெய்வயானை, சண்டேஸ்வரர், முதலிய உலாத் திருமேனிகள் எழுந்தருளி வைக்கப்பட்டுள்ளன.
19
இவர்களை வணங்கிய பின்னர் விசாலமான அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் மிகப் பெரிய வடிவில் இருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ராமநாதப் பெருமானைக் கண்டு தொழுகிறோம். இவர் திருமேனி அற்புதக் கோலமாகக் காட்சியளிக்கிறது.
20
ராமர் வழிபட்ட இந்த மூர்த்தியைக் கண்ணாரக் கண்டு வழிபட்டால் முன்செய்த பாவங்கள் யாவும் நாசமடைந்து நன்மை பெருகும் என்பது உறுதியாகும். இவரை வழிபட்டு அனுமன், சனீஸ்வரன், ராம லட்சுமணர், வானரச் சேனைகள் ஆகிய யாவரும் பிரம்மகத்தி முதலான பாவங்கள் நீங்கி மேன்மை அடைந்துள்ளனர்.
21
நாமும் நமது பாவ வினைகள் நீங்கி, புண்ணியம் பெற்று சுகமான வாழ்வைப் பெற இவரிடம் பிரார்த்திப்போம்.
22
கருவறையில் ஒன்று, வடக்குப் பிராகாரத்தில் 106 லிங்கங்கள் ஆக மொத்தம் 107 லிங்கங்களைத் தரிசித்த நாம், 108-ஆவது லிங்கத்தைக் காணக் கோயிலுக்கு வெளியே வந்து, அதன் தென்புறம் உள்ள பெரிய சந்நதியை அடைகிறோம்.
23
இது முகமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றுடன் கூடிய தனிக்கோயிலாகவே இருக்கிறது.
இதனுள் வீற்றிருக்கும் லிங்கவடிவமும் பெரியதாகவே இருக்கிறது. இவருக்கு அனுமந்தீசர் என்பது பெயராகும்.
24
ராமரிடம் உத்தரவு பெற்று, ஆஞ்சநேய சுவாமி 108-வது லிங்கத்தைத் தனியே அமைத்து சிவனருள் பெற்றதாகக் கூறுகின்றனர். இந்த சந்நதி மூலத்தானத்திற்கு இணையாகவே இருக்கிறது.
25
இந்த தலத்தில் 108 லிங்கங்களை வழிபட்ட பின்னரே அன்னை பர்வதவர்த்தினியை வழிபட வேண்டும் என்ற வழக்கத்தை வைத்துள்ளார்.
26
அதன்படியே 108 லிங்கத்தைத் தரிசித்த பின் அன்னையை வழிபட்டு அருள்பெறுகிறோம்.
தஞ்சாவூரில் இருந்து சுமார் 34 கி.மீ., தொலைவில் பாபநாசம் உள்ளது. 🙏
*இராவணனின் மனைவி குறித்து பலரும் அறியாத சுவாரசிய விஷயங்கள்!*
பராக்கிரமசாலி ,யாழ் இசைப்பதில் வல்லவர் ,மிகச் சிறந்த சிவபக்தரான ராவணனின் மனைவி மண்டோதரி. இவள் சிறந்த பெண்மணி, ஒழுக்கத்தில் ,கற்பில் சிறந்த மாதரசி ஆவாள்.
மயன் என்னும் தேவதச்சனின் மகளாக பிறந்தார். சிறந்த சிவ பக்தையாக திகழ்ந்த மண்டோதரி, மிகவும் அழகானவர், செல்வவளம் மிக்க மயனால் சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டாள். இந்திரஜித் இவளது மகன்
இலங்கையை ராவணன் அழகியதொரு நகரமாக உருவாக்க எண்ணி மயனை அணுகினான்.
அங்கு அடக்கமும் அழகும் பொருந்திய மண்டோதரியை கண்டு மனதை பறிகொடுத்தான். இராவணன் மயனின் சம்மதத்துடன் மண்டோதரியை மணந்து கொண்டான். அசுர குலத்தில் அவதரித்தவராயினும் சிறந்த சிவ பக்தையாக, தன் கணவனுக்கு சிறந்த துணையாக ,பதிவிரதா தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்தவர் மண்டோதரி.
ஒருவர் பக்குவமடைந்து விட்டார் என்று அறிந்து கொள்வது எப்படி?
சண்டைக்கோழிகள் வளர்ப்பதில் ஆர்வம் உள்ள பண்ணையார் ஒருவருக்கு புதிதாக ஒரு சேவல் குஞ்சு கிடைத்தது. அதனை வீர,தீர பராக்கிரமம் மிக்க சேவலாக வளர்க்க வேண்டும் என்று ஆசை.
சுற்றிலும் விசாரித்தசமயம் ஊருக்கு வெளியே வஸ்தாது ஒருவர் சேவல்களைப் பயிற்றுவிக்கும் செய்தி கிடைத்தது.அவரிடம் சென்று சேவலை சண்டையிட பயிற்சி செய்து தருமாறு கேட்டார்.வஸ்தாதும் , சரி! என்று ஏற்றுக் கொண்டார்.
பண்ணையார் சுமார் ஒரு மாதம் கழித்து செல்லும் சமயம், அந்த சேவல் அங்கும், இங்குமாக சென்று மற்ற சேவல்கள் இடம் சண்டை இட்டுக் கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் பண்ணையாருக்கு ஆச்சரியம்.
3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன. 🦜
4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை. 🦜
5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.🦜
6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை. 🦜
7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை. 🦜
8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது. 🦜
இத்தல இறைவன் சதுர வடிவ ஆவுடையார் மீது வீற்றிருப்பது கூடுதல் சிறப்பு. தீராத கடன் தொல்லை தீரவும் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.
1
தஞ்சாவூரின் தென்பகுதியில் கோனூர்நாடு கோட்டை தெருவில் அமைந்துள்ளது, கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில். அகத்திய மாமுனி வழிபட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று.
2
'அகம்' என்பதற்கு 'மனம்' என்றும் பொருள் உண்டு. மனதை நல்வழிபடுத்தும் இறைவன் என்பதால், இவருக்கு 'அகத்தீஸ்வரர்' என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.
ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.
ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார். அந்தக் கண்ணைக் குணப்படுத்தஒரே ஒரு வழிதான்.
அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.
இனிப்பே சாப்பிடக்கூடாது என்று சொல்லும் ஆங்கில
மருத்துவர்கள் அறிவாளிகள்
இனிப்பு - மண்ணீரல் - உதடு - கவலை - இரைப்பை - மண்.
❝மாவுச்சத்துக்கு யார் சர்க்கரை என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை.செரிமான கோளாறால் ஏற்படும் நீரிழிவு பிரச்சனைக்கு யார் சர்க்கரை நோய் என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை❞
இலை போட்டு முதலில் இனிப்பு வைத்தவன் எல்லாம் முட்டாள் அல்ல.
வீட்டு திண்ணையில் வழிப்போக்கர்களுக்கு ஒரு மூடி தேங்காயும் ஒரு உருண்டை கருப்பட்டி வைத்தவன் எல்லாம் முட்டாள் அல்ல.