*திருச்சி உறையூரில் அழகுற அமைந்திருக்கிறது கமலவல்லி நாச்சியார் கோயில். அரங்கனையே கைப்பிடித்த பூரிப்புடனும் கனிவுடனும் அழகு ததும்பக் காட்சி தருகிறாள் தாயார்.*
1
ஊடல் இல்லாத உறவுகளே இல்லை. ஊடலும் அதற்குப் பிறகான சமாதானமும் இன்னும் புரிதலையும் நெருக்கத்தையும் பிரியத்தையும் ஏற்படுத்தும். இந்த ஊடல் இறைவனுக்குள்ளேயே நிகழ்ந்திருக்கிறது.
2
ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருக்கும் ரங்கனுக்கும் தாயாருக்கும் நடந்த ஊடலும் அதன் பிறகான புரிதலும் விவரிக்கும் புராணம், நாம் அறிந்ததுதானே.
3
அந்தக் காலத்தில் பரந்துவிரிந்த சோழ தேசத்தின் தலைநகரம் உறையூர். இந்தப் பகுதியில், நந்தசோழன் எனும் மன்னன் ஆட்சி செய்துவந்தான். குறைவற நல்லாட்சி புரிந்து வந்தான். இறைப்பணியிலும் ஈடுபட்டு, சிறந்த பக்திமான் என்று பேரெடுத்தான்.
4
ஆனால் என்ன, அள்ளியெடுத்துக் கொஞ்சி மகிழ, ஒரு வாரிசு இல்லை அவனுக்கு.திருமாலின் மீது மாறா பக்தி கொண்டிருந்த மன்னனின் மனநிலையை, ஏக்கத்தை அறியாமலா இருப்பார் மகாவிஷ்ணு? அவனின் பக்தியில் மகிழ்ந்த பரமன், தன் இல்லாள் மகாலக்ஷ்மியையே மன்னனுக்கு மகளென அவதரிக்கச் செய்தார்.
5
தாமரைத் தடாகத்தில், தாமரை மலர் மீது தங்கமென ஜொலித்த குழந்தையைக் கண்டான். குதூகலமானான். அரண்மனைக்குக் கொண்டு வந்தான். ராணியிடம் கொடுத்து மகிழ்ந்தான். நெகிழ்ந்து போனாள் அரசி. 'கமலவல்லி' எனப் பெயர் சூட்டி வளர்த்தார்கள்.
6
உலகத்துக்கே நாயகியான மகாலக்ஷ்மி, சோழ தேசத்தின் இளவரசியாக வளர்ந்தாள்.
வலம் வந்தாள். தன் துணைவனான பரம்பொருளுடன் மகாலக்ஷ்மியும் சேரும் தருணமும் வந்தது.
வேட்டைக்காரனைப் போல் வந்தான் அரங்கன். அதுவொரு பலாச வனம். அங்கே தன் தோழியருடன் இருந்த கமலவல்லி, அரங்கனைக் கண்டாள்.
அன்றிரவு... மன்னனின் கனவில் அரங்கன் வந்தான். தன் தேவியையே மகளாக வளர்த்து வந்தாய் எனும் உண்மையைச் சொல்லியருளினார் அரங்கன். 'சந்நிதிக்கு அழைத்து வா' எனப் பணித்தார். இதைக் கேட்டு நெகிழ்ந்து போனான் மன்னன்.
9
திருவரங்கம் இருக்கும் திசை நோக்கி, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தான்.
பகிர்வு ஸ்ரீராமஜெயம்
விடிந்ததும் பரந்தாமனின் அருளுரைப்படி, மணமகள் போல் மகளை, மகாலக்ஷ்மியை அலங்கரித்து, அரங்கநகருக்கு ஊர்வலமாய் அழைத்து வந்தான்.
10
சந்நிதியில் நின்ற கமலவல்லியை, தனக்குள் ஐக்கியப்படுத்தி, மன்னனுக்கு அருளினார் அரங்கன். தன் பக்திக்கும் குணத்துக்கும் இறைவன் வழங்கிய கொடை என்று நெக்குருகிய மன்னன், உறையூர் வந்த கையுடன்... ஓர் ஆலயம் அமைக்கத் தீர்மானித்தான்.
11
மகாலக்ஷ்மியே மகள் கமலவல்லியாக அவதரித்ததால், அவளின் நினைவாகவே ஆலயம் அமைத்தான் மன்னன். மகாலக்ஷ்மியை மகளாக வளர்த்தவனாயிற்றே. அரங்கனை தன் மாப்பிள்ளையாகவே பாவித்து பூஜித்தான்.
12
அதனால்தான், இங்கே உள்ள பெருமாளுக்கு அழகிய மணவாளன் என்றே திருநாமம் சூட்டி மகிழ்ந்தான். தாயாரின் திருநாமம்... சொல்லவா வேண்டும். கமலவல்லி நாச்சியார்.திருச்சி உறையூரில் அழகுற அமைந்திருக்கிறது கமலவல்லி நாச்சியார் கோயில்.
13
அரங்கனையே கைப்பிடித்த பூரிப்புடனும் கனிவுடனும் அழகு ததும்பக் காட்சி தருகிறாள் தாயார்.உரிய வயது வந்தும், இன்னும் திருமணமாகவில்லையே
என்று கலங்கித் தவிப்பவர்களுக்கு, கமலவல்லித் தாயார் கல்யாண வரத்தைத் தந்தருள்கிறார்.
14
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், மாதந்தோறும் வருகிற ஆயில்யம் நட்சத்திர நாளில், வீட்டில் விளக்கேற்றி சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கி, மனதார வேண்டிக்
கொள்ளுங்கள்.
15
வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவார் கமலவல்லித் தாயார்.தொடர்ந்து, கமலவல்லித் தாயாரை வணங்குங்கள். மணமாலை தோள் சேரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.🙏
திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி நட்சத்திரக் குன்று என்று அழைக்கப்படும் ஊரில் மலை மேல் சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது.
1
சிவன் தான் லிங்க வடிவில் காட்சியளிப்பார். ஆனால் இங்கு லிங்க வடிவ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். இங்கு முருகர் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். இத்திருத்தல கருவறையில் நாகாபரணத்துடன் முருகரும் சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒன்றாக காட்சி தருகிறார்கள்.
2
இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சி புராணம் மற்றும் அருணாச்சல புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய புராண வரலாறு உள்ளது. 27 நட்சத்திரங்களும் சிவ சர்பமும் முருகப் பெருமானை வழிபடுகிறார்கள்.
ஹிந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
பாரத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விசாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை காட்டினார்கள் ???
கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ????
மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ????
🤔
உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ???
எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.
சென்னையில் சாலையோர கடையொன்றில் சாப்பிட சென்றிருந்தேன். சாப்பாடு தயாராக இருந்தது, மதிய நேரம் என்பதால் சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், பிரிஞ்சி, சாப்பாடு என எல்லாம் மணக்க மணக்க இருந்தது.
கடைக்காரரிடம் சாம்பார் சாதம் கொடுக்கும்படி கேட்டேன், அவரோ சிறிது நேரம் காத்திருக்கும்படி சொன்னார், என்ன விஷயம் என கேட்டதற்கு, வாழையிலை காலியாகிவிட்டது கடையில் வேலை செய்பவர் வாழையிலை வாங்கிவர சென்றுள்ளதாகவும், அவர் வந்தவுடன் கொடுக்கிறேன் என்றார்.
சாப்பிட வந்தவர்களில் ஒருவர் கேட்டார் "இப்பொழுதுதான் பிளாஸ்டிக் கவர்கள் வந்துருக்கே அதிலே பரிமாறலாமே என கேட்டார்".
அருள்மிகு ரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் (வெங்கடேசப்பெருமாள்) திருக்கோவில்...
காரமடை,கோயம்புத்தூர்.
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து மூலவர்-தாயார் சன்னதிகளையும் மதில், தேர் திருப்பணியும், செய்ததாக வரலாறு கூறுகிறது.
1
கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார்.
2
காரமடையில் முன்பு காரை செடிகளும், தண்ணீர் மடைகளும் ஆங்காங்கே இருந்ததால் காரைமடை என்று பெயர் பெற்று, பிறகு மருவி காரமடை என ஆனது.
எல்லாம் அறிந்த நாரதருக்கே ஒரு சந்தேகம். ஒரு முனிவரிடம் கேட்டார்.
முனிவர் சொன்னார். "ரொம்ப சுலபம். 'நாரம்' என்றால் 'தண்ணீர்'. 'அயனன்' என்றால் 'சயனித்திருப்பவன்'. அவன் கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா? அதனால் நாராயணன் என்றார்.
நாரதருக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை. நாராயணனிடமே ஓடினார்.
ஐயனே! உம்மை நான் நாராயணா...நாராயணா... என்று துதிக்கிறேன். ஆனால், அதற்கு சரியான விளக்கம் தெரியவில்லை! அது உம் பெயர் தானே! நீரே விளக்கம் சொல்லுமே!''
குறும்புக்கார நாரதர் கேட்ட கேள்விக்கு, குறும்பு நாராயணனும் குறும்பாகவே பதிலளித்தான்.
அடடா...எனக்கும் தெரியாதே! எதற்கும் நீ நர்மதைக் கரையில் இருக்கும் வண்டிடம் போய் கேள். அதற்குத் தெரியும் என்று கேள்விப்பட்டேன்''.