தன் பக்தனின் ஆயுளை நீட்டிப்பதற்காக பெருமாளே வடக்கு நோக்கித் தலை வைத்து படுத்த அற்புத திவ்யதேசம்.

அப்பேற்பட்ட பரந்தாமனின், வைகுண்டவாசனின் திவ்யதேச தரிசனம்!!!

அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோவில்
திருப்பரமேச்சுர விண்ணகரம்.

1
மூலவர்: வைகுந்தநாதன், பரமபதநாதன்

தாயார்: வைகுந்தவல்லி

உற்சவர்: வைகுந்தநாதன்

கோலம்: இருந்த, கிடந்த நின்ற திருக்கோலம்

விமானம்: முகுந்த விமானம்

தீர்த்தம்: ஐரம்மத தீர்த்தம்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

2
திருப்பரமேச்சுர விண்ணகரம்:-

வைகுந்த வாசனான இறைவன் நாராயணா வைகுண்டத்தில் உள்ளவாறே நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலத்தில் மூன்று நிலைகளையும், மூன்று அடுக்குகளாக அமைந்த இத்திருக்கோவிலில் சேவை சாதிக்கிறார்.

3
பரமேச்சுர வர்மன் என்ற மன்னனால் அமைகக்கப்பட்ட தலமாதலால், "திருப்பரமேச்சுர விண்ணகரம்" என்பது பெயர்.

மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்த கலைநயம் மிக்க ஆலயம் இதுவாகும்.

4
தலவரலாறு :-

ஒருமுறை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியர்களும் ஒன்றாக பூலோகத்திற்கு வந்து தவம் செய்தனர்.  அவர்களது தவத்திற்கு அத்திரி, பிருகு, காசிபன், கவுண்டில்யன், திரியோரிஷேயன், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள் உதவி செய்தனர்.

5
மூன்று தேவியரையும் அழைத்துச் செல்ல பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் பூலோகம் வந்தனர்.

ரிஷிகளின் தவவலிமையால் தேவியர்களை நெருங்க முடியாத மூவரும், ஒரு கந்தர்வ கன்னியை அனுப்பினர். அவளை கண்ட பரத்வாஜர் காமுற, ஒரு குழந்தை பிறந்தது.

6
வேடுவ வடிவமெடுத்த மஹாவிஷ்ணு, அக்குழந்தைக்கு "பரமேச்சுர வர்மன்" என பெயரிட்டு வளர்த்தார்.

பிறப்பிலேயே திருமால் பக்தனாக இருந்த பரமேச்சுரனுக்கு ஆய கலைகளையும் கற்றுக் கொடுத்தார். கலைகள் அனைத்தையும் கற்று முடிப்பதற்குள் அவனுக்கு இறுதிகாலமும் நெருங்கிவிட்டது.

7
அவனது ஆயுளை அதிகரிக்க விரும்பிய விஷ்ணு ஒரு சூசகம் செய்தார்.  எமன் வரும் நேரம் பார்த்து வடக்கு பக்கம் தலையை வைத்து படுத்துக் கொண்டார். பொதுவாக வடக்கே தலையை வைத்து படுத்துக் கொண்டால் ஆயுள் குறையும் என்பர்.

8
மனிதர்களுக்கே இவ்விதி இருக்கும் போது உலகைக் காக்கும் விஷ்ணு இவ்வாறு படுத்திருக்கிறார் என்றால் என்ன ஆகும்????

அவரது நிலையைக் கண்ட எமன் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என எண்ணி அவரருகே வந்து எழுந்திருக்கும் படி வேண்டினான்.

9
அவரோ மறுத்தார். காரணம் புரியாமல் எமன் விழித்தபோது, தனது பக்தனது ஆயுள் நீட்டினால், தான் எழுந்திருப்பதாகக் கூறினார். பக்தனுக்கு இரங்கும் விஷ்ணுவின் கோரிக்கையை ஏற்ற எமன், பரமேச்சுரனின் உயிரை எடுக்காமல் அவனுக்கு தீர்க்காயுள் கொடுத்துச் சென்று விட்டான்.

10
இதைக் கண்ட பரமேச்சுரன் தந்தையான வேடுவரை யார் எனக் கேட்க, அவர் மகாவிஷ்ணுவாகக் காட்சி கொடுத்தார். மகிழ்ந்த அவன் இவ்விடத்தில் மூன்று கோலங்களையும் ஒவ்வொரு நிலையில் வைத்து மும்மாடக் கோவிலாகக் கட்டினான்.

11
இப்பரமேச்சுர வர்மன் தான் பல்லவ வம்சத்தின் துவக்கமாக இருந்து ஆட்சி செய்தார் என்று வரலாறு கூறுகின்றனர்.

12
மங்களாசாசனம்:-

திருமங்கையாழ்வார் இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது, "பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரமதுவே" என அனைத்து பதிகங்களிலும் பல்லவ மன்னனின் பெருமையைச் சேர்த்து பாடியுள்ளார்.

13
பல்லவர்களின் போர்புரியும் திறனை குறிப்பிடும்போது அவர்கள் ஒலிக்கும் பறையானது விண் அதிரும்படி இருக்கும் என குறிப்பிடுகிறார்.

14
இதனாலேயே இத்தலத்திற்கு "பரமேச்சுர விண்ணகரம்" என பெயர் வந்தது. திவ்யதேசங்களில் மன்னனையும் சேர்த்து இத்தலத்தையும் சேர்த்து மங்களாசாசனம் செய்திருப்பதால் பல்லவ மன்னனுக்கு விஷ்ணு அருளியதை உறுதிப்படுத்துகிறார்.

15
வைகுண்ட காட்சி :-

இத்திருக்கோவில் மூன்று தளங்களைக் கொண்டது. தரை  தளத்தில் (அமர்ந்த) வீற்றிருந்த கோலத்திலும், முதல் தளத்தில் சயனக் (கிடந்த) கோலத்திலும், இரண்டாம் தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் காட்சி கொடுக்கிறார்.

16
தரைத்தலத்தில் உள்ள மூர்த்தியை மட்டும் தினமும் தரிசிக்க முடியும். முதல் தளமானது வைகுண்ட காட்சியாகக் கருதப்படுவதால் மாதந்தோறும் வருகின்ற இரண்டு ஏகாதசி தினங்களில் மட்டும் தரிசிக்க முடியும்.

17
இரண்டாம் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் சிதைவடைந்ததால், கடந்த 1964 ஆம் ஆண்டிலிருந்து தரிசனம் செய்ய இயலாமல் போனது.

அவற்றை சரி செய்ய இறைவன் அருள புரிய வேண்டும் என நாம் அனைவரும் பிராத்திப்போம்.

18
சிறப்புகள்:-

மூன்று தலங்களைக் கொண்டுள்ள திவ்யதேசம்.

கீழ்தளம் - அமர்ந்த கோலம், முதல் தளம் - சயனத் திருக்கோலம், இரண்டாம் தளம் - நின்ற திருக்கோலம்.

19
திருமகள் தாயார்  வைகுண்ட வல்லி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

திருமங்கையாழ்வார் பாசுரம் பாடியருளிய திவ்யதேசம். 🙏

#வாழ்க_பாரதம்
#வளர்க_பாரதம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Mar 8
சுந்தர காண்டம்!

ராமாயணத்தில், எந்தக் காண்டத்துக்கும், ராமனின் பெயரோ, சீதையின் பெயரோ வைக்கவில்லை! ஆனால் அனுமன் பெயர் கொண்டு ஒரு காண்டமே உள்ளது! Image
அது, சுந்தர காண்டம்! இது தான் தொண்டருக்குக் கிட்டிய பெருமை! அனுமனுக்குச் சுந்தரன் என்ற பெயர் உண்டு! அவன் பெயர் தான் இங்கு வைக்கப்பட்டுள்ளது!
அனுமனை விரும்பாதார் தான் யார்? வடை மாலை, வெற்றிலை மாலை, ராமஜெயம் எழுதப்பட்ட மாலை – இப்படி மாலை மரியாதைகள் தான் என்ன?
சிறிய திருவடி, மாருதி, ஆஞ்சனேயன், ராம தூதன், சொல்லின் செல்வன், சமய சஞ்சீவி என்ற எத்தனை பட்டப் பெயர்கள் இவனுக்கு? மனத்துக்கினியான் ராமனுக்குக் கூட இவ்வளவு சிறப்புகள் கொடுத்திருக்கிறார்களா?
Read 12 tweets
Mar 7
*ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவார்.*

*கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்* 

*விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார்.*
*ஓரளவுக்கு வருமானம் வந்தது.* 

*அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார்.*

*ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார்.*

*அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை.*

*எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !*
*அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு .. அதை இவர் பார்த்தார் ..*

*அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்.* 

*"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்.*
Read 13 tweets
Mar 7
சிந்துப்பட்டி பெருமாள் கோவில்:

பெருமாள் கோயில் என்றால், துளசியும் தீர்த்தமும்தானே பிரசாதமாகப் பெறுவோம். கூடவே, விபூதியும் தருகிறார்கள் என்றால்... பெறுகின்ற நமக்கு வியப்பாகத்தானே இருக்கும். அது எந்தக் கோயில்? விபூதி தருவதற்கு என்ன காரணம்?

1
அதற்கு நாம் சிந்துப்பட்டி செல்ல வேண்டும். மதுரை மாவட்டம்- திருமங்கலம்- உசிலம்பட்டி சாலையில், சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது சிந்துப்பட்டி. இங்குள்ள பழைமையான வேங்கடேச பெருமாள் கோயிலில்தான் இந்த விசித்திரம். கோயிலின் வரலாற்றைத் தெரிந்துகொண்டால், இதற்கான விளக்கம் கிடைக்கும்.

2
கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில், தக்காண பீடபூமி மற்றும் தென்பகுதியில் சுல்தான்களின் ஆதிக்கம் இருந்தது. அவர்கள் ஆளுகைக்கு எதிராகத்தான், விஜயநகர சாம்ராஜ்ஜியம் தோன்றியது. நலிவுற்றிருந்த ஆலயங்கள் பல அதன் பிறகு புத்துயிர் பெற்றன.

3
Read 34 tweets
Mar 6
*ஹோலி பண்டிகை 🌈*

மனிதனின் பருவக்கால மாற்றத்தை விழாக்கள் எடுத்து கொண்டாடுவது இயல்பு. ஆனால், இயற்கையோட பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம்தான் ஹோலி பண்டிகை என்கிற அரங்கபஞ்சமி.
இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளில் குறிப்பிட்ட இனத்தவரால் இப்பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுது.குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர்.
மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும்   நிலைநாட்டுவதே  ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும்.
Read 27 tweets
Mar 5
*குபேர வாழ்வருளும் கும்பேஸ்வரர்*

அகிலத்தையே சுருட்டி ஆதி சக்திக்குள் லயமடையச் செய்யும் மகாப் பிரளயம் பெருக்கெடுத்து வரும் காலம் அருகே வந்தது. ஆழிப் பேரலைகள் அண்ட சராசரத்தையும் முறுக்கி அணைத்து ஆரத் தழுவி தமக்குள் கரைத்துக் கொள்ளும் ஊழிக்காலம் உந்தி வருவதை அறிந்தார், பிரம்மா.

1
மும்மூர்த்திகளுமே யோக நித்திரையில் ஆழ மகாகாளி மட்டும் தாண்டவமாடிக் களிக்கும் பிரளயம் நெருங்கியது பார்த்து அதிர்ந்தார் நான்முகனான பிரம்மா. பீஜங்கள் எனப்படும் பிரபஞ்ச படைப்பாற்றலின் விதைகளாக திகழும் பிரபஞ்ச மூல அணுக்கள் அழிந்துவிடுமோ என அஞ்சினார்.

2
படைப்பின் ஆதாரமாக விளங்கும் வேதங்கள் கூட பிரளயப் பேரழிவில் ஆதி சக்தியில் சென்று ஒடுங்கி விடுமோ என கவலை அவரை வாட்டியது. அகிலத்தை படைத்து எண் திக்கும் பரவச் செய்து சகல ஜீவராசிகளையும் செழிக்க வைக்க வேண்டுமென்ற பேரவா அவரை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தது.

3
Read 58 tweets
Mar 5
மாசி மக மகத்துவங்களும்... பாவங்கள் போக்கும் 20 தீர்த்தங்களும்...

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்வது இயல்பு. பாவம் செய்துவிட்டு பாவத்துக்குப் பரிகாரமாக புண்ணியம் தேடி ஒவ்வொருவரும் பல்வேறு ஆலயங்களுக்குச் செல்கிறோம்.
இதனால் ஏற்படும் தோஷத்தை போக்கிக்கொள்வதற்காக ஜபம் – தபம் போன்ற பல்வேறு பரிகாரங்களைச் செய்கிறோம்.  மாதங்களில் மகத்தான மாதம் என்று அழைக்கப்படுவது மாசி.

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம்.
இந்த மாதம் முழுவதும் கடலாடும் மாதம்’ என்றும், தீர்த்தமாடும் மாதம்’ என்றும் சொல்வார்கள்.
Read 29 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(