சென்னை-வேளச்சேரி பகுதியில், மூன்று கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஒன்று, தண்டீஸ்வரம் கோயில், இங்கு சிவன் அருள்பாலிக்கிறார். மற்றொன்று, யோக நரசிம்மர் கோயில், மூன்றாவது, பிடாரி செல்லியம்மன் கோயில்.
1
இந்த கோயிலை பற்றி இந்த
பதிவு..
இந்த மூன்று கோயில்களுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.
பல்லவ காலத்தில் கட்டப்பட்ட கோயில்களாகும்.
மூன்று கோயில்களும் அருகருகே இருப்பதும், ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட கோயில்களாகவும் காணப்படுகின்றன.
2
வேளச்சேரி, தண்டீஸ்வரம் சிவன் கோயில் எதிரே அழகிய கட்டிட வேலைப் பாடுகளுடன், ``அருள் மிகு பிடாரி செல்லியம்மன்’’ திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சாமுண்டேஸ்வரி, பிரம்மி, வாராஹி, வைஷ்ணவி, மகேஸ்வரி, கௌமாரி, இந்திராணி ஆகிய சப்தமாதர்கள் அருள்பாலிக்கிறார்கள்.
3
உற்சவராக, பிடாரி செல்லியம்மன் அருள்கிறாள். இவர்களுடன், விநாயகரும் இருப்பது கூடுதல் சிறப்பு. மேலும், தட்சிணாமூர்த்தி, காவல்தெய்வங்கள், நவகிரகங்கள் ஆகியவை தனித்தனி சந்நதிகளாக இருந்து பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்கள்.
4
கிராம தேவதை
அருள்மிகு பிடாரி செல்லி யம்மன், வேளச்சேரிக்கு எல்லை அம்மனாக இருந்தருளுகிறாள். அதனால், அம்மை, காலரா போன்ற நோய்களுக்கு இந்த அம்மனையே வழிபடுகிறார்கள் இப்பகுதி மக்கள். மேலும், ஊர் மக்களுக்கு காத்து கருப்பு அண்டவிடாமல் காத்தருளுகிறாள்.
5
அதுமட்டுமின்றி, செழிப்பான வாழ்வு பெற செல்லியம்மனை வேண்டிக் கொள்கிறார்கள், பிற பகுதியை சேர்ந்த பக்தர்கள். வேண்டிய சிறிது நாட்களிலேயே வாழ்வில் மாற்றம் நிகழ்வதாக, அனுபவபூர்வமாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
6
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில், ராகு காலத்தில் விளக்கு ஏற்றுவது இங்கு விசேஷமாகும்.
7
வரங்களை தரும் வாராஹி அம்மன்
இங்கு, பிரதானமாக செல்லியம்மன் இருந்தாலும், வாராஹி அம்மனை வழிபடுவோர் அதிகளவில் காணப்படுகின்றன. திருமணத் தடை, வீடு, மனை வாங்க நினைப்போர், வேலைவாய்ப்பு போன்ற காரிய சித்திக்கு வாராஹியை வேண்டிக் கொண்டு,
8
21 மஞ்சள் அல்லது 21 எலும்பிச்சை ஆகியவற்றை கையினால் கட்டி வாராஹிக்கு மாலையாக சாற்றி வழிபட்டால், காரியங்கள் நிறைவேறுவதாக இங்கு பூஜை செய்யும் பூசாரி தெரிவித்தார்.
9
மேலும், வெள்ளிக்கிழமை அன்று நினைத்த காரியங்கள் ஜெயமாக, எலும்பிச்சை பழத்தை வாராஹி அம்மனின் பாதத்தில் வைத்து வேண்டிக்கொண்டு, அதை பெற்று வீட்டினுள் இருக்கும் பூஜை அறையிலோ அல்லது வீட்டின் வாசல் பகுதியிலோ கட்டியும் வைக்கலாம்.
10
தித்திக்கும் திருவிழா
திருவிழாவின் போது, செல்லியம்மன் (உற்சவர்) வேளச்சேரி பகுதி முழுவதிலும் திருவீதி உலா நடைபெறுகின்றன. காந்தி ரோடு, தண்டீஸ்வரம் பகுதி மற்றும் வேளச்சேரியில் இருக்கும் சுமார் 25 தெருக்களுக்கு செல்லியம்மன் திருவீதி உலா வருகிறாள்.
11
அவளை வரவேற்று, அனைத்து பக்த அன்பர்களும் ஒன்றுகூடி, வாணவேடிக்கை வெடித்து திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றன.
12
விசேஷ நாட்கள்
* ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தமிழ் புத்தாண்டு ஆகிய நாட்களில், செல்லியம்மனுக்கு சந்தன அபிஷேகம், சந்தன அலங்காரம் மற்றும் விஷேச அலங்காரங்கள் செய்யப்பட்டு, கோயினுள் உள்ள ஊஞ்சலில் அமரவைப்பார்கள். அதனை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
13
* நவராத்திரி அன்று காலையிலும், மாலையிலும் என இரு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பிரசாதங்கள், பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. அதேபோல், ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன (சப்தமாதர்கள்).
14
* மார்கழி மாதத்தில் காலை 5.00 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
15
சென்னை கோயம்பேட்டிலிருந்து வேளச்சேரிக்கு பேருந்துகள் உள்ளன. அதில் ஏறி தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இந்த கோயிலுக்கு செல்லலாம். 🙏
சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலை விலுள்ள தேவாரத்தலம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில். இறைவன் திருநாமம் ஆரண்யேசுரர். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் 'ஆரண்யேசுரர்' என்று அழைக்கப் படுகிறார்.
1
விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறை யிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்காரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது.
2
தேவலோகத் தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவ தலைவன் பதவி கிடைக்க தேவகுருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப் பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங் களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான்.
'சுயநலம்' ஒரு தொற்று வியாதி என்றும் கூறலாம். சுயநலவாதிகளோடு உறவு கொள்பவர்கள் தம்மை அறியாமலே அக்குணம் தம்மை பிடிக்க விட்டு விடுவார்கள்.
சுயநலம் மனதை இருட்டாக்கி விடும். சுற்றி இருப்பவர்களை வெறுக்க வைத்து விடும். சுயநலம் நல்ல குணம் அல்ல.
சுயநலம் கொண்டவர்களிடம் தன்னை விட மற்றவர்கள் முன்னுக்கு வந்து விடுவார்களோ என்ற பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவர்கள் நிம்மதியை இழந்துத் தவிப்பார்கள்.
இன்று பெரும்பாலானவர்கள் அதிகப்படியான
மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். அதற்கு சுயநலமும் ஒரு காரணம்.
சுயநலம் அதிகம் கொண்டவர்கள் தன் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வளர்ச்சியைப் பற்றி பொறாமைபட்டுக் கொண்டு அவர்களுக்கு எப்படி எல்லாம் நெருக்கடி கொடுக்க முடியும் என்று தான் சிந்தித்துக் கொண்டு இருப்பார்கள்.
இந்திய சுதந்திரத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு வீரத் தியாகியை நமக்குத் தெரியவில்லை என்பது மன்னிக்க முடியாத தவறு. இதற்கு சரித்திரத்தை தன் போக்குக்கு இழுத்துச் சென்ற காங்கிரஸே காரணம்.
சுதந்திரம் என்ற வார்த்தையை சொன்னவுடன் தாத்தா காந்தி, மாமா நேரு போன்ற தலைவர்களை மட்டும் தேசியமயமாக்கிவிட்டு, மற்றவர்களை அந்தந்த மாநிலங்களுக்குச் சொந்தமாக்கிய காங்கிரஸின் பாடத் திட்டமே இதற்குக் காரணம்.
அடுத்தவரை குறை சொல்லி பிரயோஜனமில்லை. வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாத நமக்கும் அதில் பங்கு உண்டு.
எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதற்கான பலன் நமக்குக் கிடைக்க வேண்டும். இதுதான் நம் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார்.
பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது.
இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, " இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்"
என ஏளனம் செய்தது.
கோவையிலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் ஒத்தக்கால் மண்டபம் என்ற ஊர் அமைந்துள்ளது. 'கோவில்களின் கிராமம்' என்றழைக்கப்படும் பகுதி இது.திரும்பிய திசையெங்கும் ஆன்மிக மணம் வீசும் வகையில் அற்புதத் தலங்கள் பல உள்ளன.
2
வைணவப் பெரியவரான ராமானுஜர் இத்திருத்தலத்திற்கு வந்து,துறவறம் பூண்டு இந்த பெருமாளின் அன்பையும் அருளையும் பெற்றார் என்கிறது தல வரலாறு.