கோவையிலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் ஒத்தக்கால் மண்டபம் என்ற ஊர் அமைந்துள்ளது. 'கோவில்களின் கிராமம்' என்றழைக்கப்படும் பகுதி இது.திரும்பிய திசையெங்கும் ஆன்மிக மணம் வீசும் வகையில் அற்புதத் தலங்கள் பல உள்ளன.
2
வைணவப் பெரியவரான ராமானுஜர் இத்திருத்தலத்திற்கு வந்து,துறவறம் பூண்டு இந்த பெருமாளின் அன்பையும் அருளையும் பெற்றார் என்கிறது தல வரலாறு.
3
ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாதமுனிகள் தொடங்கி,குரு பரம்பரையில் ஆளவந்தாருக்கு அடுத்து வந்தவர் ஸ்ரீ ராமானுஜர்.இவர் காலத்தில் வைணவத்தின் மறுமலர்ச்சி தொடங்கியது என்றே வரலாறு குறிப்பிடுகிறது.
4
இத்தலப் பெருமாள்,நவகிரக தோஷங்களை நிவர்த்தி செய்வதால், ' நவகோடி நாராயணன்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும்,ராமானுஜர் பெருமாளை இத்திருநாமத்தில் முதன் முதலில் அழைத்ததால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் காரணங்களைக் குறிப்பிடுகின்றனர்.
5
நவகோடி ரிஷிகளும் வழிபட்ட நாராயணர் இவர் என்ற கூற்றும் இங்கு உண்டு.
தமிழ்நாட்டிலே, வேறு எங்கும் இல்லாத வகையில்,பெருமாள் நவகோடி நாராயணர் என்ற திருநாமத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பினும் சிறப்பு என மெய் சிலிர்க்கின்றனர் உள்ளூர் பக்தர்கள்.
6
இதன் காரணமாக 108 திவ்ய தேசங்களுக்கு இணையாக இத்தலமும் திகழ்வதாகக் கூறுகின்றனர்.
இக்கோவிலில் கல்வெட்டு ஒன்று உள்ளது.ஆனால் இக்கல்வெட்டு சிதலமடைந்த நிலையில் இருப்பதால் கோவில் வரலாறு பற்றி சரியாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை என்கின்றனர்.
7
இருப்பினும்,இத்தலம் சுமார் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழைமை வாய்ந்ததாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர் அனுமானிக்கின்றனர்.
8
கோவை மாவட்டத்தின் மத்தியப் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலையும்,புற நகர்ப் பகுதியில் உள்ள இக்கோவிலையும் அரசர்களும் வீரர்களும் போர்ப் பாசறையாகப் பயன்படுத்தியுள்ளனர்.
9
திப்புசுல்தானின் படைவீரர்கள் ஸ்ரீரங்கப் பட்டிணத்திலிருந்து திண்டுக்கல் செல்லும் போது,இக்கோவிலில் முகாமிட்டிருந்தனர் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
இக்கோவிலைச் சுற்றியும் மிகப் பெரிய கோட்டை இருந்ததாகவும் பிற்காலத்தில் சிதைந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.
10
கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இக் கோவிலின் அமைப்பானது மகாமண்டபம்,அர்த்தமண்டபம்,
கருவறை என்ற அமைப்பில் உள்ளது.
இத்திருத்தலத்தின் உள்ளே நுழையும் போது,
மகாமண்டபத்தில் கருடாழ்வார் பெருமாளைத் தரிசனம் செய்த நிலையில் இருக்கிறார்.
11
கருவறையில், ஸ்ரீதேவி,பூதேவியுடன் காட்சியளிக்கும் பெருமாளின் தோற்றம் கண்களைக் கொள்ளைக் கொள்ளச் செய்கிறது.
மூலவர் எழுந்தருளியிருக்கும் கருவறையிலேயே ராமானுஜரும் எழுந்தருளி இருப்பது அபூர்வக் காட்சி என்று வியக்கின்றனர் பக்தர்கள்.
மேலும், இங்கு வந்து வழிபட்டு ஜாதக தோஷங்கள்,திருமணத் தடை,குழந்தைப் பேறின்மை உள்ளிட்ட குறைகள் நிவர்த்திப் பெற்று பலன் அடைந்தவர்கள் ஏராளம்.
14
செண்பகம்,மல்லிகை போன்ற மலர்களை பெருமாளுக்குச் சூட்டி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.புரட்டாசி மாத சனிக்கிழமை,வைகுண்ட ஏகாதசி,கோகுலாஷ்டமி போன்ற விசேஷ நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
15
இத்தனை அருமை பெருமைகளைக் கொண்ட "ஸ்ரீமந்நாராயணனை" தரிசிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் இங்குள்ள பெரியோர்கள்.
16
இறைவனின் அன்பையும்,அருளையும் பெற,ராமானுஜர் வழிபட்ட இத்திருத்தலத்துக்கு வந்து நலமும் வளமும் பெற,இவ்வூர் பெருமக்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள். 🙏
* யுகங்களாக புராணப் பெருமை கொண்டது கும்பகோணம். அதில் ரத்னமாக ஒளிர்கிறது ராமஸ்வாமி திருக்கோயில்.
1
* புராணத்திற்கு இணையாக நானூறு ஆண்டுகட்கு முன்பு சரித்திரப் பின்னணியில் பெரும் போர்ச் சூழலின் இறுதியில் எழுப்பப்பட்டது. ராஜபக்தியில் விளைந்த ஞானப்பிரானின் கருணை கருவூலமே இந்த ராமஸ்வாமி திருக்கோயில்.
2
* கும்பகோண நகரத்தின் மையமாக அமைந்துள்ளது ஸ்ரீராமஸ்வாமி கோயில். ராஜகோபுரம் நெடிதுயர்ந்து ராமநாம முத்திரையுடன் வரவேற்கிறது.
* மகாமண்டபத்திற்குள் நுழைந்தவுடன் மாபெரும் சிற்பக்காடுகளுக்குள், எழில் சூழ் சிற்பச் சோலைகளுக்குள் நுழைகிறோம்.
ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்
“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும்,
சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.
அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.
சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலை விலுள்ள தேவாரத்தலம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில். இறைவன் திருநாமம் ஆரண்யேசுரர். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் 'ஆரண்யேசுரர்' என்று அழைக்கப் படுகிறார்.
1
விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறை யிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்காரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது.
2
தேவலோகத் தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவ தலைவன் பதவி கிடைக்க தேவகுருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப் பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங் களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான்.
'சுயநலம்' ஒரு தொற்று வியாதி என்றும் கூறலாம். சுயநலவாதிகளோடு உறவு கொள்பவர்கள் தம்மை அறியாமலே அக்குணம் தம்மை பிடிக்க விட்டு விடுவார்கள்.
சுயநலம் மனதை இருட்டாக்கி விடும். சுற்றி இருப்பவர்களை வெறுக்க வைத்து விடும். சுயநலம் நல்ல குணம் அல்ல.
சுயநலம் கொண்டவர்களிடம் தன்னை விட மற்றவர்கள் முன்னுக்கு வந்து விடுவார்களோ என்ற பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவர்கள் நிம்மதியை இழந்துத் தவிப்பார்கள்.
இன்று பெரும்பாலானவர்கள் அதிகப்படியான
மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். அதற்கு சுயநலமும் ஒரு காரணம்.
சுயநலம் அதிகம் கொண்டவர்கள் தன் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வளர்ச்சியைப் பற்றி பொறாமைபட்டுக் கொண்டு அவர்களுக்கு எப்படி எல்லாம் நெருக்கடி கொடுக்க முடியும் என்று தான் சிந்தித்துக் கொண்டு இருப்பார்கள்.