Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture
Mar 27 23 tweets 3 min read Twitter logo Read on Twitter
*ராஜயோகம் தரும் கும்பகோணம் ராமஸ்வாமி*

* யுகங்களாக புராணப் பெருமை கொண்டது கும்பகோணம். அதில் ரத்னமாக ஒளிர்கிறது ராமஸ்வாமி திருக்கோயில்.

1
* புராணத்திற்கு இணையாக நானூறு ஆண்டுகட்கு முன்பு சரித்திரப் பின்னணியில் பெரும் போர்ச் சூழலின் இறுதியில் எழுப்பப்பட்டது. ராஜபக்தியில் விளைந்த ஞானப்பிரானின் கருணை கருவூலமே இந்த ராமஸ்வாமி திருக்கோயில்.

2
* கும்பகோண நகரத்தின் மையமாக அமைந்துள்ளது ஸ்ரீராமஸ்வாமி கோயில். ராஜகோபுரம் நெடிதுயர்ந்து ராமநாம முத்திரையுடன் வரவேற்கிறது.

* மகாமண்டபத்திற்குள் நுழைந்தவுடன் மாபெரும் சிற்பக்காடுகளுக்குள், எழில் சூழ் சிற்பச் சோலைகளுக்குள் நுழைகிறோம்.

3
* சிற்பக்கலையில் இதற்கு மிஞ்சி வேறெதுவும் செய்ய முடியுமா என்று சவால் விட்டிருக்கிறார்கள். கற்கள் பேசுமோ என்றவருக்கு இக்கோயிலில் கற்களைக்கொண்டு காவியம் படைத்தான்.

* ஆச்சரியமாக சுக்ரீவபட்டாபிஷேக புடைப்புச் சிற்பம் காணும்போது விழி விரியும்.

4
* திருவிக்கிரமனாக நிமிர்ந்த எம்பெருமானின் சிற்பம் முன்பு நிற்க பிரமாண்ட சக்தியின் முன்பு சிறுதூசாக மனம் உணரும்.

* ராமபட்டாபிஷேகத்தைப் பார்க்க அகமும், புறமும் மறைந்து வெறும் ராமம் மட்டுமே இங்கிருக்கிறது எனும் பேருண்மை திரண்ட வெண்ணையாக திகழ்ந்தெழும்.

5
* ஆஞ்சநேய ஸ்வாமியை விதம் விதமான சிற்பங்களில், பல்வேறு பக்திப்பாவனை கொண்ட திருமுகங்களாக இருக்கின்றன.

* பாரதத்தின் பெருமை கூறும் ரிஷிகளின் திருவுருவங்களை நூற்றுக்கணக்கில் கல்லில் வடிவமாக இருக்கின்றன.

6
* முனிவர்களின் முகத்தில் தவழும் அமைதியை கண்ட மாத்திரத்தில் நமக்குள்ளும் அதைப் பரவிடச் செய்யும் வித்தையை அநாயாசமாகச் இருக்கின்றன.

7
* ஒன்றா...இரண்டா...நூறா...
ஆயிரமா... எத்தனை என்று எண்ணி மாளவில்லை. இது பக்தியா...கலைத்திறனா... என்று பிரித்துப் பார்க்க இயலவில்லை. இந்தச் சிற்பம் அழகு, அதோ அந்தச் சிற்பம் எவ்வளவு நேர்த்தி என்று ஒவ்வொன்றாகப் பார்த்த மனம், பலநூறு சிற்பங்கள் கொடுத்த பிரமிப்பில் அயர்ந்து போகிறது.

8
* சிற்பக்காடுகள் தாண்டி நேரே கருவறை நோக்கி நகரும்போது பச்சைக்கற்பூரத்தின் மணமும், துளசியின் வாசமும் நெஞ்சை குளிர்விக்க, குங்குமத்தின் சுகந்தம் மனதை சுழற்றும்.

9
மூலஸ்தானத்தில் பட்டாபிராமனாக ராமச்சந்திரஸ்வாமியும், சீதாப்பிராட்டியும் ஒரே சிம்மாசனத்தில் அமர்ந்திருந்து ராஜ்யபரிபாலன திருக்கோலத்தில், சாளக்கிராம திருமேனியாக சேவை சாதிக்கிறார்.

* கம்பீரத்தோற்றம். இடதுகாலை மடக்கி மற்றொருகாலை பூமியில் தொங்கவிட்டிருக்கும் அழகு காணுதற்கரியது.

10
* நீருண்டமேகம் போன்ற நிறம். அதில் ஞானச்சூரியனின் கிரணங்களால் ஒளிரும் தெள்ளிய திருமுகம். தாமரைபோன்ற மலர்ந்த கண்களில் அமுதச்சாரல் வீசுகின்றன. கூரிய நாசி. செவ்விய இதழ்கள். அதன் ஓரமாகத் தவழும் பேரானந்தப் புன்னகை. கைகள் அபய ஹஸ்தம் காட்டி எப்போதும் காப்பேன் என்று கூறுகிறது.

11
* சீதாப்பிராட்டியார் அருளமுதம் பெருக்கி ராமனிடம் விநயமாக நம் குறைகள் எடுத்துக் கூறுகிறார். நிறைவான வாழ்க்கையை வாரித் தருகிறார். அருகேயே சத்ருக்னன் ராம அண்ணாவிற்கு வெண்சாமரம் வீசும் காட்சி வேறெங்கும் காணக்கிடைக்காத அற்புதம். தர்மத்தை அழகாக வாழ்ந்து வழிகாட்டும் அருமைச் சகோதரன்.

12
* லட்சுமணாழ்வார், ஸ்ரீராமரின் கோதண்டத்தை கையில் ஏந்திக்கொண்டு, அஞ்சலி ஹஸ்தமாக கைகூப்பிக்கொண்டு நிற்பதைப்பார்க்கும்போது உள்ளுக்குள் ஒரு கேவல் பொங்கிவருகிறது.

* அவருக்குப் பக்கத்திலேயே பரதாழ்வார் வெண்குடை சமர்ப்பித்துக் கொண்டு நிற்கும் காட்சி காண கண்கள்கோடி வேண்டும்.

13
* எல்லோரையும் தாண்டி ராம சேவகனாக, ராம தாசனாக, அனைத்தையும் ராம சொரூபமாக பார்க்கும் ஆஞ்சநேயஸ்வாமி இத்தலத்தில் ஆச்சரியமான முறையில் சேவைசாதிக்கிறார்.

14
* கைகளில் வீணை ஏந்தி, சதாகாலமும் ராமகாவியச் சுவடியை பாராயணம் செய்துகொண்டிருக்கும் கோலம் காணக்கிடைக்கா. அக்காட்சியை காணும் கண்களில் கண்ணீர் தானாய் சுரக்கும்.

* உற்சவமூர்த்திகள் பொலிந்து அழகாகக் காட்சிதருகின்றனர்.

15
* சந்நதியில் மனம் காணாது போகிறது. அயோத்திக்கே சென்று விட்ட ஓர் உணர்வு நம்மைச் சூழ்கிறது.

* எம்பெருமானுக்குச் நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் ராம.. ராம.. ராம.. எனும் திவ்யநாமத்தை சொல்வதேயாகும். இதுவே சகலத்தையும் கொண்டுவந்து கொடுக்கும் என்பது வேதரிஷிகளின் வாக்கு.

16
* சமீபத்தில் தோன்றிய மகானான ராமாயணம் தாத்தா என்று அழைக்கப்பட்ட வாசுதேவபிரம்மம், ராமனை கண்ணாரக் கண்டவர். இத்தல ராமனிடம்தான் தீட்சை பெற்றார். ராமாயணப் பாராயணம் செய்து செய்து ராமமயமானார்.

17
சதாசர்வ காலமும் ராமகாதையை உள்ளத்தில் நெய்து நெய்து நெக்குருகிக் கிடந்தவர். ராமரோடும், பிராட்டியோடும் சகஜமாகப் பேசியவர்.

18
சந்தேகித்தோருக்கெல்லாம் நேரில் காட்டியவர். ஆன்ம அனுபவத்தில் நம்மாழ்வாரை நிகர்த்தவர். இத்தலநாயகனை கொண்டாடியவர். அவரையும் மனதில் நினைந்து நகர மனமின்றி பிராகாரம் நோக்கி செல்கிறோம்.

19
* பிராகாரச் சுற்றுச் சுவரில் வேறெந்த கோயிலிலுமில்லாத அளவுக்கு ராமாயணத்தை மிக அழகிய சித்திரங்களாகத் தீட்டியுள்ளனர்.

20
* நாயக்கர்கால பாணியில் வரைந்த ஓவியங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. தூரிகையால் சித்திரங்கள் வரைந்து ராமகாதையை அழகாகச் சொல்கின்றன. ராமாயணமா அல்லது ராம ஆரண்யமா என்று பிரமிக்கவைக்கின்றன.

21
* இதைப்பார்த்தாலே போதும் ராமாயணப்பாராயணப் பலன் நமக்குக் கிடைத்துவிடும். பெரிய கோயில். நின்று நிதானமாக தரிசிக்க வேண்டிய ஆன்மிகக் கருவூலம். பார்க்கப் பார்க்க ஆயிரம் விஷயங்களை கொட்டும் கோயில்.

22
வெறுமே ராமநாமத்தைச் சொல்லுங்கள். இத்தல ராமர் உங்களை அழைப்பார். பிராகாரத்தைச் சுற்றி வந்து நமஸ்கரித்து நிமிர ராமனின் அருட்பாணம் நம்மை துளைத்தெடுப்பதை எளிதாக உணரலாம்.🙏

#வாழ்க_பாரதம்
#வளர்க_பாரதம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Mar 28
"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்..."
ஒரு கிராமத்தில் மஹாபெரியவர் முகாம். கிராமத்தில் பல
வகையான தொழில் செய்பவர்களும் - விவசாயம், பெட்டிக்கடை, துணி வெளுத்தல், காய்கறிக் கடை, டெய்லர், பால்-தயிர் வியாபாரம், தோட்ட வேலை, கூலியாட்கள் என்றுள்ளவர்கள் - தரிசனம் செய்ய வந்தார்கள். Image
பெரியவருக்குக் கள்ளங்கபடமறியாத கிராமத்து மக்களிடம் ரொம்பவும் பரிவு உண்டு. அதிகமான படிப்பு குறிப்பாக சமயக்கல்வி - இல்லாவிட்டாலும், அவர்களில் பெரும்பாலனவர்கள் தர்ம வழியில் நடக்கிறார்கள் என்ற நம்பிக்கை.. அதனால் அவர்களிடம் நெருங்கிப் பேசுவார்கள்.
வேளாள வம்சத்தில் வந்த நல்ல ஜோசியர் ஒருவர் பெரியவர் தரிசனத்துக்கு வந்தார்.
வழக்கம்போல் பெரியவர், பெயர் -தொழில் விசாரித்தார்கள்.
"சாமி! நான் ஜோசியம் சொல்லிப் பிழைக்கிறேனுங்க. பரம்பரைத் தொழில். அதனால விட முடியலே. நல்ல நாள் குறிப்பது, கல்யாணத் தேதின்னு சொல்லுவேன்.
Read 12 tweets
Mar 28
நவகிரகங்கள் கெட்டு போனால் என்ன செய்ய வேண்டும்.

சூரியன் கெட்டால் எதிலும் அடக்கம், பணிவை கடைபிடிக்க வேண்டும்..!

சந்திரன் கெட்டால் மனதை தியானம், தெய்வ வழிபாட்டின் வழியே விழுப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்..!
செவ்வாய் கெட்டால், வீண் வம்பு மற்றும் சண்டைகளை தவிர்க்க வேண்டும், செயல்களில் நிதானம் மிக அவசியம்..!

புதன் கெட்டால், பேச்சை குறைக்க வேண்டும், வாய் சவடால் பேசகூடாது, யாருக்கும் எதையும் சொல்லிக்கொடுகிறேன் என்று முந்திரிகொட்டைதனம் அறவே கூடாது..!
குரு கெட்டால், உபதேசம் செய்யக்கூடாது, ஆன்மீக விஷயங்களை வெளிப்படுத்த கூடாது, தெரியாத விஷயங்களில் தலையிடக்கூடாது..!

சுக்கிரன் கெட்டால், எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும், ஆடை ஆபரணங்களில் எளிமை இருக்க வேண்டும், பணத்தை தேவையின்றி செலவழிக்க கூடாது..!
Read 6 tweets
Mar 28
*கோட்டயம் மாவட்டம் கேரள மாநிலம் மள்ளியூர் அருள்மிகு மகா கணபதி ஆலயம்*

*மூலவர்:விநாயகர்*

*பழமை:500 வருடங்களுக்குள்*

மள்ளியூர்*
கோட்டயம்*
கேரளா*

*திருவிழா*

*விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி*

1 Image
*தல சிறப்பு*

*கர்ப்பக்கிரகத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில், காக்கும்கடவுளான கிருஷ்ணன் அமர்ந்திருப்பது சிறப்பு.*

2
*பொது தகவல்*

*கோயில் சுற்றுப்பகுதியில் சாஸ்தா, மகாவிஷ்ணு, துர்க்கை, அந்தி மகா காவலன், யக்ஷி, நாகர் சன்னதிகள் உள்ளன. கேரள மாநிலம் அருகே வேறெங்கும் இல்லாத விசேஷம் இக்கோயிலில் உள்ளது.

3
Read 18 tweets
Mar 27
அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன்..

ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது..

காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்..

அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை..
மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன..

எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள்..

யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை..

மன்னனால் தூங்க முடியவில்லை.. உணவும் குறைந்து விட்டது.. மன்னன் பொலிவு இழந்தான்..
மன்னனோடு சேர்ந்து நாடும் களை இழந்தது..

இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி அங்கு வந்து சேர்ந்தார்..

மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார்..

"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி.. நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது.."
Read 18 tweets
Mar 27
ஒரு நாடு. ஒரு திருடன். அவன் பலே கெட்டிக்காரன். 

எந்த தவறைச் செய்தாலும் ஆதாரமில்லாமல் செய்வான். மாட்டிக் கொள்ள மாட்டான்.அவனுக்கு எதிராக எந்த ஆதாரங்களும், சாட்சிகளும் இது நாள்வரை இல்லை.
அதனால், ஊரில் பெரிய மனிதராக வலம் வந்து கொண்டிருந்தான். அவனுடன் சேர்ந்து ஆதாயங்களை அனுபவிக்க ஒரு கூட்டமும் இருந்தது.
"இவ்வளவு தைரியமாக உலவி வருகிறாயே! உனக்கு பயமாக இல்லையா?", என்று எல்லோரும் கேட்பார்கள்.

"நான் தவறு செய்வதை நிரூபிக்கும் ஆதாரம் இருந்தால், காண்பியுங்கள். பிறகு தண்டியுங்கள்", என்பான் திருடன்.

அந்த நாட்டு அரசனும் எதுவும் செய்ய முடியாமல், அமைதியாக இருந்தான்.
Read 11 tweets
Mar 26
கருவறைக்குள் நம் வேண்டுதல்கள் மறந்து போவது ஏன்..?

ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்
“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும்,
சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.

அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(