* யுகங்களாக புராணப் பெருமை கொண்டது கும்பகோணம். அதில் ரத்னமாக ஒளிர்கிறது ராமஸ்வாமி திருக்கோயில்.
1
* புராணத்திற்கு இணையாக நானூறு ஆண்டுகட்கு முன்பு சரித்திரப் பின்னணியில் பெரும் போர்ச் சூழலின் இறுதியில் எழுப்பப்பட்டது. ராஜபக்தியில் விளைந்த ஞானப்பிரானின் கருணை கருவூலமே இந்த ராமஸ்வாமி திருக்கோயில்.
2
* கும்பகோண நகரத்தின் மையமாக அமைந்துள்ளது ஸ்ரீராமஸ்வாமி கோயில். ராஜகோபுரம் நெடிதுயர்ந்து ராமநாம முத்திரையுடன் வரவேற்கிறது.
* மகாமண்டபத்திற்குள் நுழைந்தவுடன் மாபெரும் சிற்பக்காடுகளுக்குள், எழில் சூழ் சிற்பச் சோலைகளுக்குள் நுழைகிறோம்.
3
* சிற்பக்கலையில் இதற்கு மிஞ்சி வேறெதுவும் செய்ய முடியுமா என்று சவால் விட்டிருக்கிறார்கள். கற்கள் பேசுமோ என்றவருக்கு இக்கோயிலில் கற்களைக்கொண்டு காவியம் படைத்தான்.
* திருவிக்கிரமனாக நிமிர்ந்த எம்பெருமானின் சிற்பம் முன்பு நிற்க பிரமாண்ட சக்தியின் முன்பு சிறுதூசாக மனம் உணரும்.
* ராமபட்டாபிஷேகத்தைப் பார்க்க அகமும், புறமும் மறைந்து வெறும் ராமம் மட்டுமே இங்கிருக்கிறது எனும் பேருண்மை திரண்ட வெண்ணையாக திகழ்ந்தெழும்.
5
* ஆஞ்சநேய ஸ்வாமியை விதம் விதமான சிற்பங்களில், பல்வேறு பக்திப்பாவனை கொண்ட திருமுகங்களாக இருக்கின்றன.
* பாரதத்தின் பெருமை கூறும் ரிஷிகளின் திருவுருவங்களை நூற்றுக்கணக்கில் கல்லில் வடிவமாக இருக்கின்றன.
6
* முனிவர்களின் முகத்தில் தவழும் அமைதியை கண்ட மாத்திரத்தில் நமக்குள்ளும் அதைப் பரவிடச் செய்யும் வித்தையை அநாயாசமாகச் இருக்கின்றன.
7
* ஒன்றா...இரண்டா...நூறா...
ஆயிரமா... எத்தனை என்று எண்ணி மாளவில்லை. இது பக்தியா...கலைத்திறனா... என்று பிரித்துப் பார்க்க இயலவில்லை. இந்தச் சிற்பம் அழகு, அதோ அந்தச் சிற்பம் எவ்வளவு நேர்த்தி என்று ஒவ்வொன்றாகப் பார்த்த மனம், பலநூறு சிற்பங்கள் கொடுத்த பிரமிப்பில் அயர்ந்து போகிறது.
8
* சிற்பக்காடுகள் தாண்டி நேரே கருவறை நோக்கி நகரும்போது பச்சைக்கற்பூரத்தின் மணமும், துளசியின் வாசமும் நெஞ்சை குளிர்விக்க, குங்குமத்தின் சுகந்தம் மனதை சுழற்றும்.
9
மூலஸ்தானத்தில் பட்டாபிராமனாக ராமச்சந்திரஸ்வாமியும், சீதாப்பிராட்டியும் ஒரே சிம்மாசனத்தில் அமர்ந்திருந்து ராஜ்யபரிபாலன திருக்கோலத்தில், சாளக்கிராம திருமேனியாக சேவை சாதிக்கிறார்.
* கம்பீரத்தோற்றம். இடதுகாலை மடக்கி மற்றொருகாலை பூமியில் தொங்கவிட்டிருக்கும் அழகு காணுதற்கரியது.
10
* நீருண்டமேகம் போன்ற நிறம். அதில் ஞானச்சூரியனின் கிரணங்களால் ஒளிரும் தெள்ளிய திருமுகம். தாமரைபோன்ற மலர்ந்த கண்களில் அமுதச்சாரல் வீசுகின்றன. கூரிய நாசி. செவ்விய இதழ்கள். அதன் ஓரமாகத் தவழும் பேரானந்தப் புன்னகை. கைகள் அபய ஹஸ்தம் காட்டி எப்போதும் காப்பேன் என்று கூறுகிறது.
11
* சீதாப்பிராட்டியார் அருளமுதம் பெருக்கி ராமனிடம் விநயமாக நம் குறைகள் எடுத்துக் கூறுகிறார். நிறைவான வாழ்க்கையை வாரித் தருகிறார். அருகேயே சத்ருக்னன் ராம அண்ணாவிற்கு வெண்சாமரம் வீசும் காட்சி வேறெங்கும் காணக்கிடைக்காத அற்புதம். தர்மத்தை அழகாக வாழ்ந்து வழிகாட்டும் அருமைச் சகோதரன்.
12
* லட்சுமணாழ்வார், ஸ்ரீராமரின் கோதண்டத்தை கையில் ஏந்திக்கொண்டு, அஞ்சலி ஹஸ்தமாக கைகூப்பிக்கொண்டு நிற்பதைப்பார்க்கும்போது உள்ளுக்குள் ஒரு கேவல் பொங்கிவருகிறது.
* அவருக்குப் பக்கத்திலேயே பரதாழ்வார் வெண்குடை சமர்ப்பித்துக் கொண்டு நிற்கும் காட்சி காண கண்கள்கோடி வேண்டும்.
13
* எல்லோரையும் தாண்டி ராம சேவகனாக, ராம தாசனாக, அனைத்தையும் ராம சொரூபமாக பார்க்கும் ஆஞ்சநேயஸ்வாமி இத்தலத்தில் ஆச்சரியமான முறையில் சேவைசாதிக்கிறார்.
* சந்நதியில் மனம் காணாது போகிறது. அயோத்திக்கே சென்று விட்ட ஓர் உணர்வு நம்மைச் சூழ்கிறது.
* எம்பெருமானுக்குச் நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் ராம.. ராம.. ராம.. எனும் திவ்யநாமத்தை சொல்வதேயாகும். இதுவே சகலத்தையும் கொண்டுவந்து கொடுக்கும் என்பது வேதரிஷிகளின் வாக்கு.
16
* சமீபத்தில் தோன்றிய மகானான ராமாயணம் தாத்தா என்று அழைக்கப்பட்ட வாசுதேவபிரம்மம், ராமனை கண்ணாரக் கண்டவர். இத்தல ராமனிடம்தான் தீட்சை பெற்றார். ராமாயணப் பாராயணம் செய்து செய்து ராமமயமானார்.
சந்தேகித்தோருக்கெல்லாம் நேரில் காட்டியவர். ஆன்ம அனுபவத்தில் நம்மாழ்வாரை நிகர்த்தவர். இத்தலநாயகனை கொண்டாடியவர். அவரையும் மனதில் நினைந்து நகர மனமின்றி பிராகாரம் நோக்கி செல்கிறோம்.
19
* பிராகாரச் சுற்றுச் சுவரில் வேறெந்த கோயிலிலுமில்லாத அளவுக்கு ராமாயணத்தை மிக அழகிய சித்திரங்களாகத் தீட்டியுள்ளனர்.
20
* நாயக்கர்கால பாணியில் வரைந்த ஓவியங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. தூரிகையால் சித்திரங்கள் வரைந்து ராமகாதையை அழகாகச் சொல்கின்றன. ராமாயணமா அல்லது ராம ஆரண்யமா என்று பிரமிக்கவைக்கின்றன.
21
* இதைப்பார்த்தாலே போதும் ராமாயணப்பாராயணப் பலன் நமக்குக் கிடைத்துவிடும். பெரிய கோயில். நின்று நிதானமாக தரிசிக்க வேண்டிய ஆன்மிகக் கருவூலம். பார்க்கப் பார்க்க ஆயிரம் விஷயங்களை கொட்டும் கோயில்.
22
வெறுமே ராமநாமத்தைச் சொல்லுங்கள். இத்தல ராமர் உங்களை அழைப்பார். பிராகாரத்தைச் சுற்றி வந்து நமஸ்கரித்து நிமிர ராமனின் அருட்பாணம் நம்மை துளைத்தெடுப்பதை எளிதாக உணரலாம்.🙏
"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்..."
ஒரு கிராமத்தில் மஹாபெரியவர் முகாம். கிராமத்தில் பல
வகையான தொழில் செய்பவர்களும் - விவசாயம், பெட்டிக்கடை, துணி வெளுத்தல், காய்கறிக் கடை, டெய்லர், பால்-தயிர் வியாபாரம், தோட்ட வேலை, கூலியாட்கள் என்றுள்ளவர்கள் - தரிசனம் செய்ய வந்தார்கள்.
பெரியவருக்குக் கள்ளங்கபடமறியாத கிராமத்து மக்களிடம் ரொம்பவும் பரிவு உண்டு. அதிகமான படிப்பு குறிப்பாக சமயக்கல்வி - இல்லாவிட்டாலும், அவர்களில் பெரும்பாலனவர்கள் தர்ம வழியில் நடக்கிறார்கள் என்ற நம்பிக்கை.. அதனால் அவர்களிடம் நெருங்கிப் பேசுவார்கள்.
வேளாள வம்சத்தில் வந்த நல்ல ஜோசியர் ஒருவர் பெரியவர் தரிசனத்துக்கு வந்தார்.
வழக்கம்போல் பெரியவர், பெயர் -தொழில் விசாரித்தார்கள்.
"சாமி! நான் ஜோசியம் சொல்லிப் பிழைக்கிறேனுங்க. பரம்பரைத் தொழில். அதனால விட முடியலே. நல்ல நாள் குறிப்பது, கல்யாணத் தேதின்னு சொல்லுவேன்.
*கோட்டயம் மாவட்டம் கேரள மாநிலம் மள்ளியூர் அருள்மிகு மகா கணபதி ஆலயம்*
*மூலவர்:விநாயகர்*
*பழமை:500 வருடங்களுக்குள்*
மள்ளியூர்*
கோட்டயம்*
கேரளா*
*திருவிழா*
*விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி*
1
*தல சிறப்பு*
*கர்ப்பக்கிரகத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில், காக்கும்கடவுளான கிருஷ்ணன் அமர்ந்திருப்பது சிறப்பு.*
2
*பொது தகவல்*
*கோயில் சுற்றுப்பகுதியில் சாஸ்தா, மகாவிஷ்ணு, துர்க்கை, அந்தி மகா காவலன், யக்ஷி, நாகர் சன்னதிகள் உள்ளன. கேரள மாநிலம் அருகே வேறெங்கும் இல்லாத விசேஷம் இக்கோயிலில் உள்ளது.
ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்
“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும்,
சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.
அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.