அன்பெழில் Profile picture
Apr 4, 2023 24 tweets 7 min read Read on X
#நரநாராயணர் #பத்ரிகாஸ்ரமம்
தவத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்ட மகாவிஷ்ணு எடுத்த இரட்டை அவதாரமே நர நாராயணர்கள். கடவுள் மனிதனாகவும், மனிதன் கடவுளாகவும் ஆகமுடியும் என்ற தத்துவத்தை விளக்குவது இத்திருவவதாரம். மகா விஷ்ணுவின் பல்வேறு திருநாமங்களுண்டு. முக்கியமான 245-வது நாமம்
'நாராயணா’ என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கூறுகிறது. #நாராயணா என்றால், 'எல்லா ஜீவன்களும் உறையுமிடம்’ என்று பொருள். ஸ்ரீமந் நாராயணனிடம் இருந்து தான் சப்தரிஷிகளும், தேவர்களும், பஞ்சபூதங்களும், அனைத்து ஜீவராசிகளும் தோன்றி உள்ளன என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது.
'ஓம் நமோநாராயணாய’ என்ற மந்திரம்
பகவான் விஷ்ணுவைச் சரணடையவும், மோக்ஷத்தை அடையவும் வழிவகுக்கும் உன்னத மந்திரம் என்று புராணங்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றன. நர நாராயணர் என்பவர்கள் பகவான் விஷ்ணு எடுத்த இரட்டை அவதாரம்.
நரன் என்பது மனிதத் தன்மையையும், நாராயணா என்பது தெய்வத் தன்மையையும் விளக்குவது.
'நர நாராயணன்’
என்பது மனிதனும் தெய்வமும் இணைந்த சக்தியைக் குறிப்பிடுவதாகும். நாராயணன் என்கிற தெய்வத்திடம் இருந்து எந்நாளும் பிரிக்க முடியாத மனித சக்தியைக் குறிப்பதே நரநாராயண அவதாரம். தெய்வீக உணர்வோடு, இறைவனை அறிந்து பூரண ஞானம் பெற்ற மனிதன் தான் நரர்களில் நாராயணன். தன்னலம் இல்லாமல் மனித
நேயத்துடன் வாழ்ந்து தர்மத்தைக் காக்கின்றவனே நரநாராயணன். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் #பகவத்கீதையில், “சாதுக்களை ரக்ஷித்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தை ஸ்தாபிக்க நான் எல்லா யுகங்களிலும் அவதரிப்பேன்”என்று கூறுகிறார். அதற்காக அவர் மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம,
கிருஷ்ண, கல்கி ஆகிய பத்து அவதாரங்கள் எடுத்துள்ளார். இந்த தசாவதாரத்தைத் தவிர, பகவான் விஷ்ணு எடுத்த அம்ஸாவதாரங்கள் பற்றியும் நமது புராணங்கள் குறிப்பிடுகின்றன. வேதங்களைக் காக்க குதிரை முகத்தோடு தோன்றிய ஹயக்ரீவ அவதாரம், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் வடிவிலே எடுத்த
தத்தாத்ரேய அவதாரம், உலகை நோயிலிருந்து காப்பாற்றி ஆரோக்கியத்தை அருளுவதற்காக எடுத்த தனவந்திரி அவதாரம்
ஆகியவற்றைத் தொடர்ந்து எடுத்த அம்ஸாவதாரம்தான் நர நாராயண அவதாரம். விஷ்ணு புராணத்திலும் சிவபுராணத்திலும், வாமன புராணத்திலும், ராமாயண- மகாபாரத காவியத்திலும் இந்த நரநாராயண அவதாரத்தின்
பெருமை விளக்கப்படுகிறது. சிருஷ்டி காலத்தில் பிரம்மதேவன் தனது மார்பிலிருந்து தர்ம தேவனை சிருஷ்டித்தான். தர்மங்களையும் நியாயங்களையும் காப்பாற்றும் பொறுப்பு அந்தத் தேவனுக்குத் தரப்பட்டது. தர்மதேவன் தட்சப்பிரஜாபதியின் 10 புத்திரிகளை மணந்து, அற்புதமான புதல்வர்களைப் பெற்றான். அவர்களில்
ஹரி, கிருஷ்ணா, நரன், நாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஹரியும் கிருஷ்ணனும் பிரம்மஞானம் பெற்ற யோகிகளாகி, உலகம் உய்ய தவம் இயற்றலாயினர். நர நாராயணர்கள் முற்றும் துறந்த முனிவர்களாகி, இமயத்தில் அமைந்த பத்ரிகாஸ்ரமத்தில் தவம் மேற்கொண்டனர். பத்ரிகாஸ்ரம் என்பதே இன்றைய #பத்ரிநாத்
ஷேத்திரம். மனித இனத்துக்கு அமைதியும் சாந்தியும் ஏற்பட பன்னெடுங்காலம் நர நாராயணர்கள் இங்கே தவம் செய்தனர். அவர்களின் தவவலிமை எல்லா உலகங்களிலும் பிரதிபலித்தது. தேவர்களின் தலைவனான தேவேந்திரனை இது பாதித்தது. தனது இந்திர பதவியை அடைய யாரோ அசுரர்கள் கோர தவம் செய்வதாக அவன் எண்ணினான். தனது
பதவியையும் தேவலோகத்தையும் காப்பாற்ற நினைத்த தேவந்திரன், நர நாராயணர்களின் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தான். முதலில் தேவேந்திரன் காமதேவனை அனுப்பி, நர நாராயணர்கள் மனத்தில் ஆசையை உருவாக்க முயற்சித்தான்.
காமதேவனுக்குத் துணையாக சில அப்ஸர கன்னிகளையும் அனுப்பினான். ஆனால், நர நாராயணர்களை
எந்த விதத்திலும் அவர்களால் அணுக முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட தருணத்தில், தவத்திலிருந்த நாராயணர் தனது துடையைக் கையால் ஓங்கி அடித்தார். அதிலிருந்து சௌந்தர்யமும் தேஜஸும் மிக்க ஓர் அப்ஸரப் பெண் தேவதை தோன்றினாள். அவளது அழகிய தோற்றத்தைக் கண்டு இந்திரனும், காமனும், மற்ற தேவதேவியர்களும்
திகைத்து நின்றனர். துடையிலிருந்து தோன்றிய அந்தத் தேவதைக்கு 'ஊர்வசி’ என்று பெயரிட்டு அழைத்தார் நாராயணர். 'ஊரு’ என்றால் துடை என்று பொருள். தங்கள் தவத்தின் நோக்கத்தை நர நாராயணர்கள் தேவேந்திரனிடம் எடுத்துக்கூற, அவன் தன் தவறுக்கு வருந்தி, அவர்களின் ஆசி கோரினான். அப்போது கலைத் திறமை
அனைத்தும் கொண்ட ஊர்வசியை தேவேந்திரனிடம் ஒப்படைத்தார் நாராயணன். அவள் தேவலோகத்தின் இசை நடனக் கலைஞராகி, தேவர்களுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தாள். நர நாராயணர்களை வணங்கிய தேவேந்திரன், தேவ லோகத்திலிருந்த அமிர்த கலசத்தை அவர்களிடம் ஒப்படைத்து, பாதுகாப்பாக வைத்திருந்து, தேவர்களும்
தர்மவான்களும் அதனால் பயனடைய வழிசெய்யுமாறு வேண்டினான். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு, தேவர்களை ஆசீர்வதித்துத் தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். பிறகு, மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. அது, நர நாராயணர்களை சிவபெருமானோடு இணைத்த சம்பவம். சிவபெருமானை ஒதுக்கி வைத்து விட்டு தட்சன் பெரும் யாகத்தை
தொடங்கினார். சிவபெருமானின் பத்தினியும், தட்சனின் மகளுமான தாட்சாயினி அந்த யாகத்துக்குச் சென்று, தன் தந்தை செய்யும் தவறைச் சுட்டிக்காட்டி வாதிட்டாள். கோபம் அடைந்த தட்சன், மகளென்றும் பாராமல் அவளை நிந்தித்தான்.
தாட்சாயினி 'தட்ச யாகம் அழியட்டும்’ என்று சாபமிட்டு, யாகசாலையில் பிராணத்
தியாகம் செய்தாள். இதனால் கோபமடைந்த சிவபெருமான், வீரபத்திரர் வடிவில் தோன்றி யாக சாலையை அழித்தார். அப்போது அவர் கையிலிருந்து புறப்பட்ட திரிசூலம் தீயைக் கக்கிக்கொண்டு விண்ணில் கிளம்பியது. நேராக அது பத்ரிகாஸ்ரமம் அடைந்து, அங்கே ஆழ்ந்த தவத்திலிருந்த நாராயணர் மார்பில் தாக்கியது. ஆனால்,
நர நாராயணர்களைச் சுற்றியிருந்த தவ மண்டலத்தின் சக்தியால் திரிசூலம் திசை திரும்பி சிவபெருமானையே தாக்கியது. அப்போது சிவபெருமான் தலை முடிக்கற்றை திரிசூலத்தின் வெப்பத்தால் கருகியது. அதனால், அது காய்ந்த வைக்கோல் போல ஆனது.
இதனால் சிவனுக்கு 'முஞ்சகேசன்’ என்ற பெயர்ஏற்பட்டது. 'முஞ்ச’
என்றால் காய்ந்த புல் என்று பொருள்.
தேவர்கள் அனைவரும் சிவபெருமானை அமைதியாக இருக்கும்படி வேண்டினர்.
அப்போது சிவபெருமான், ''நர நாராயணர்களின் தவவலிமையை உலகுக்கு எடுத்துக்காட்டவே நான் இந்தத் திருவிளையாடல் புரிந்தேன்.
நர நாராயணர்களின் தவம் என்னைச் சாந்தப் படுத்திவிட்டது. #பத்ரிகாஸ்ரமம்
அருகிலேயே நானும் அமர்ந்து, என் பக்தர்களுக்கு அருள்பாலிப்பேன். நான் அமர்ந்த இடம் #கேதார்நாத் என்று பெயர் பெறும். பத்ரிகாஸ்ரமத்தில் எனது திரிசூலம் விழுந்த இடத்தில் வெந்நீர் ஊற்றுகள் தோன்றி, காலம் காலமாக இங்கு வரும் பக்தர்களின் நோய் தீர்க்கும் தீர்த்தமாகச் செயல்படும். தேவர்களும்
மனிதர்களும் வழிபடும் விஷ்ணு- சிவ ஸ்தலங்களாக பத்ரிநாத்தும் கேதார்நாத்தும் திகழும்” என்று கூறி அருளினார். நர நாராயணர்களின் தவம் தொடர்ந்தது. இந்த நர நாராயணர்களே துவாபர யுகத்தில் அர்ஜுனனாகவும் கிருஷ்ணனாகவும் தோன்றினார்கள் என்கிற விவரம் மகாபாரதத்தில் உள்ளது. மகாபாரத காலத்தில், சிவ
பெருமான் கிராடன் என்ற வேடன் வடிவில் தோன்றி அர்ஜுனனின் பலத்தைப் பரீட்சை செய்வதற்காக அவனுடன் யுத்தம் செய்த வரலாறும், அதன்பின் அவனுக்குப் பாசுபதாஸ்திரம் தந்து அருளிய வரலாறும், நரனுக்கும் சிவனுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது. பிரிக்க முடியாத ஜீவாத்மா, பரமாத்மாவின் பிரதிபிம்பமே நர
நாராயணர்கள். தூய தவத்தாலும், தார்மிக நெறியாலும் மனிதன் தெய்வமாகலாம் என்பதே நர நாராயண தத்துவம்.

ஓம் நமோ நாராயணாய!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 3
#சேதுபந்தன_சரித்திரம்
லங்காபுரிக்கு சென்று அசோகவனத்தில் திரிசடை என்கிற அரக்கியின் பாதுகாப்பில் இருந்த சீதாப்பிராட்டியை கண்டு, அனுமான் கணையாழியை பெற்றுக்கொண்டு, கண்டேன் சீதையை, என்று இராமரிடம் சொன்ன போதே, இராவணன் அந்திமம் தீர்மானிக்கப்பட்டது. அடுத்து, இலங்கைக்குச் செல்ல சேது Image
சமுத்திரத்தில் சேதுபந்தனம் என்கிற பாலம் கட்டப்பட வேண்டும். அது வழியாகத் தான் இலங்கைக்கு செல்ல முடியும். இராமருக்கு சொந்தமாக சைனிகஸேனகள் இல்லை! தற்போது எந்த தேஸத்திற்கும் ராஜனும் இல்லை. சொந்தம் என்று சொல்லிகொள்ள சகோதரன் இலக்ஷ்மணன் மற்றும் அனுமன், சுக்ரீவனும் வாலியின் புத்திரனும்,Image
கரடிகளின் தலைவன் ஜாம்பவான் ஆகியோர் தான் இருந்நதார்கள். எல்லோரும் ஒன்று கூடி சேதுபாலம் பணி தீர்மானிக்கப்பட்டது. பாலம் பணியை தொடங்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு, அதற்காக 3 நாட்கள் மௌன விரதமும் உண்ணா நோன்ம்பும் அனுஷ்டித்தார். கடற்கரையில் தர்ப்பைப் புல்லை பரப்பி பத்மாசனத்தில்
Read 12 tweets
Jul 2
#நற்சிந்தனை
#அதர்மத்திற்குத்_துணைபோனால்_துயரமே_மிஞ்சும்_கர்ணனின்_வாழ்வே_சான்று.
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார். தந்தை பெயரை அறியாதவன், தேரோட்டியின் வளர்ப்பு மகன் என்றார்கள் உலகக்தார். இது என் தவறா? இது Image
அரச குமாரர்கள் மட்டுமே கற்குமிடம் என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு வில் வித்தையைக் கற்றுத் தரவில்லை. இது என் தவறா? ஷத்ரியனுக்கு இனி வில் வித்தையைக் கற்பிக்க மாட்டேன் என்று தன் சீடன் பீஷ்மரிடம் சபதம் செய்த பரசுராமரை ஏமாற்றி நான் அந்தணன் என்று கூறி வில் வித்தையைக் கற்றேன்.
இந்திரனால் நான் அந்தணன் இல்லை, சத்திரியன் என்பதைப் பரசுராமர் அறிந்துவிட்டார். எனவே குரு பரசுராமர் எனக்கு சாபமிட்டார். முக்கிய தருணத்தில் நீ கற்ற வித்தை அனைத்தும் மறந்து போகும் என்று என்னைச் சபித்து விட்டார். குருவிடம் பொய் சொன்ன தவற்றை நான் வேண்டுமெனாறே செய்யவில்லை. எனது Image
Read 23 tweets
Jul 2
#கூர்ம_ஜெயந்தி
ஜீலை 2 2024 கூர்ம ஜெயந்தி நன்னாள். மகா விஷ்ணுவின் அருளை பெறுவதற்கு உகந்த நாள். ஆனி 18, தேய்பிறை துவாதசி திதியில் கூர்ம (ஆமை வடிவம்) அவதாரம் எடுத்தார் மகாவிஷ்ணு. இந்நாள் மங்களகரமான தொடக்கங்கள் மற்றும் ஆன்மீக வளர்ச்சியைக் குறிக்கிறது. க்ஷீர சாகர மந்தனத்தின் போது Image
பிரம்மாண்டமான மந்தாரஞ்சல் பர்வதத்தை தனது முதுகில் தூக்கியவர் கூர்ம அவதாரம். உருவு கண்டு இகழாமல், அதன் பெருமை கண்டு போற்ற வேண்டும் என்பதே கூர்ம அவதாரத்தின் நோக்கம். பணிவு கொண்டு மலை சுமந்த கூர்ம மூர்த்தி பாற்கடலில் இருந்து அனைத்தையும் மீட்டு கொடுத்தார். பாற்கடலில் பள்ளி கொண்டு Image
இருக்கும் மகாவிஷ்ணு அரக்கர்களை அழிக்க பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். ஆனால் அவர் எடுத்த கூர்ம அவதாரம் யாரையும் அழிப்பதற்காக அல்ல. மேருமலையை மத்தாக கடையும் போது அதை தாங்கி நிற்பதற்காக எடுத்த அவதாரம் ஆகும். பாற்கடலில் அமிர்தம் பெறுவதற்காக தேவ அசுரர்களுக்கு உதவி செய்தார். அதே Image
Read 20 tweets
Jul 1
#ஸ்ரீநரசிம்மர்
பகவானின் எல்லா அவதாரங்களுமே பக்தர்களுக்கு அனுக்ரகம் செய்தவைதான். என்றாலும், நரசிம்மாவதாரத்துக்கு ஒரு தனி ஏற்றம். பக்த பராதீனன், பக்தவத்சலன் என்கிற திருநாமங்களெல்லாம் அவனுக்கே பொருந்தும். ஏன்?
‘எங்கே இருக்கிறான் உன் ஹரி?’ என்ற ஹிரண்யனின் கேள்விக்கு, ‘எங்கும்Image
இருக்கிறான்’ என்று பதில் சொல்லிவிட்டான் பாலகனான பிரகலாதன். அதையடுத்து கவலை வந்துவிட்டதாம் பகவானுக்கு. ஹிரண்யன் எதையாவது காட்டி, ‘இதில் உன் பகவான் இருக்கிறானா என்று கேட்பானோ?’ என்று. அதனால், சகல வஸ்துக்களுக்குள்ளும் தன்னை நிரப்பிக் கொண்டானாம். இதைத்தான், ‘பக்தனாலே பகவானுக்கு
வந்த ஆபத்து’ என்று சொல்வார்கள் பெரியவர்கள். அவதார சூட்சுமத்தால் தன்னுடைய வியாபகத்தை உணர்த்திய பகவான், தன்னுடைய அபூர்வ குணாம்சத்தையும் வெளிப்படுத்துகிறான். அதைத்தான், ‘விஷம விலோசனன்’ என்று குறிப்பிடுகிறார் ஸ்வாமி தேசிகன். அதென்ன? நம்முடைய கண்கள் இரண்டாக இருந்தாலும் ஒரு நேரத்தில்
Read 13 tweets
Jun 30
#நாகலிங்க_பூ
சிவலிங்கத்தை ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்றால், லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கட்ட வேண்டும். அந்த பாத்திரத்திலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழும். சோழமன்னர் ஒருமுறை ஒரு சிவாலயத்தை கட்டினார். அப்போது அவருக்கு ஒரு அச்சம் தோன்றியது. Image
நம் காலத்திற்குப் பிறகு தண்ணீர் ஊற்றுவார்களோ இல்லையோ என்ற அச்சம் தான் அது. உடனே சந்திரகாந்த கற்கலால் கருவரையின் மேற்கூறையை அமைத்து மையத்தில் ஒரு கமலத்தை அமைத்தார். என்ன அதிசயம் 24 வினாடிக்கு ஒரு முறை காற்றின் ஈரத்தை சந்திரகாந்தக் கல் உறிஞ்சி சிவ லிங்கத்தில் தண்ணீராகச் சொட்டியது. Image
கோயில் இருக்கும் ஊர் திட்டை. அது போல் இந்த நாகலிங்க மலரின் மேற்கூறையில், சின்னச் சின்ன ஆட்டணா இருக்கும் அந்தத் தும்பித் தாரையில் இருந்து 24 வினாடுக்கு ஒரு முறை ஒரு பனித்துளி அளவு தண்ணீர் லிங்கத்தில் விழும் அதிசயம் நடைபெறும்.
1. நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம் இருக்கும்Image
Read 8 tweets
Jun 30
#அழகர்கோவில்_நூபுரகங்கை
அழகர் கோவிலில் இருக்கும் நூபுர கங்கை தீர்த்தம் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வருவதாக நம்பப்படுகிறது. பல ஆராய்ச்சிகள் மேற்க்கொண்டும் இதுவரை இந்த தீர்த்தம் உற்பத்தியாகும் இடம் எது என்று யாராலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. நூபுர கங்கைக்கு ஒரு புராணக்கதை Image
உள்ளது. விஷ்ணு பகவான் வாமன அவதாரம் எடுத்தபோது விண்ணையும், மண்ணையும் அளப்பதற்காக விண்ணுலகத்தில் ஒரு காலையும், மண்ணுலகத்தில் ஒரு காலையும் வைப்பார். விண்ணுலகத்தில் பாதம் வைக்க செல்லும்போது பிரம்மா தன்னுடைய கமண்டலத்திலிருந்து கங்கை நீரை ஊற்றி விஷ்ணுவின் பாதத்தை வரவேற்றார். அந்த Image
கங்கை நீர் பெருமாளின் கணுக்காலை தொட்டு சில துளிகள் அழகர்மலையில் விழுந்ததாக சொல்லப் படுகிறது. அன்று முதல் இன்று வரை அழகரின் திருவடியில் பெருகிவரும் புண்ணிய நதியாக திகழ்கிறது. கணுக்காலுக்கு சமஸ்கிருதத்தில் நூபுரம் என்ற பெயர் உண்டு. அதனால்தான் இந்த தீர்த்தத்திற்கு நூபுர கங்கை என்றImage
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(