அன்பெழில் Profile picture
Apr 11 13 tweets 4 min read Twitter logo Read on Twitter
#நற்சிந்தனை சூட்சும சக்திகளும் நமது உடலும், சூட்சம விஞ்ஞானத்தை நமக்கு உணர்த்துகிறது. நம் மனம் எங்கு உள்ளது? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நம் மனம் (உள்ளது) செல்கிறது. அதற்கு தூரம் தடை இல்லை. நாம் தீயவர்களை நினைக்கும் போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. Image
இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் சூட்சும சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும். சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப் படுகிறது. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ Image
சரீரத்தில் பதிவாகி உள்ளது. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும். சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது. மருந்தின்றி மாத்திரை
இன்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது. உடலின் உறுப்புக்கள் அனைத்தும் மனத்துடன் சேர்ந்து இயங்குவதே ஆரோக்கியம். மனது நோயுற்ற பின்னரே உடல் நோயுறுகிறது. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது. மனிதன் தலை மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழி Image
காட்டி. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சுமசக்தி காந்தசக்தி போல அவனைச் சுற்றி பாதுகாத்து வருகிறது. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள தொடர்பின் பாதிப்பே ஆகும். சிறுவர் Image
சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெருகும். நோயாளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும். மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும். மனிதன் தலை கீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் Image
உள்ளது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒருவித மொழியில் நம்முடன் பேசுகிறது. ஒரு மனிதனை புண்படச் செய்வது நூதனமான கொலைக்கு சமம். மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது. நாம் விஞ்ஞான அறிவை
மட்டும் பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாக, அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி
நுழைகிறது. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது. கடல்நீர் (உப்பு நீர் என்பதால்) நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது. வீட்டில் உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய சக்திகள் நீங்கும். கர்ப்பம் கொண்ட பெண் தீய
எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரீரத்தின் கவசம் பலம் பெறுகிறது. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல. சூரிய ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண
ஒட்டுண்ணிகளை அழிக்கிறது. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும். நாம் பயன் படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும். ல்நமது வீட்டில் பஞ்ச பூத பிராண
சக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.
சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 13
#மகாபெரியவா
நன்றி-குமுதம் லைஃப்
தொகுப்பு-எஸ்.வெங்கட்டராமன்.
13-09-2017 தேதியிட்ட இதழ்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

காசியாத்திரை முடித்து கங்கா ஜலத்தை எடுத்து வந்த ஒரு பக்தர், தன் தாயாரின் ஆசைப்படி அதை பரமாசார்யரிடம் சேர்ப்பித்தார். அப்பொழுது அவர் முகாம் இட்டிருந்த இடத்தினருகே Image
உள்ள துங்கபத்ராவில் மூழ்கி ஸ்நானம் செய்த போது மகாபெரியவா கங்கா ஜலத்தையும் சிரசில் ஊற்றி குளித்தார். ஸ்நானம் அனுஷ்டானம் முடிந்ததும் அப்படியே ஆற்று மணலில் நடந்து முகாம் இருந்த இடத்துக்குப் புறப்பட்டார். இந்த சமயத்தில் கங்கா ஜலத்தை தந்திருந்த அந்த பக்தர், மகாபெரியவாளின் திருப்பாதம்
பதிந்த தடத்தைப் பார்த்தார். அந்த பக்தருக்கு எதோ பொறிதட்டினாற் போல் இருந்தது. பரமாசார்யா இது தனக்காகவே தந்திருக்கிற பிரத்யேக பிரசாதம் என்று தோன்றியது. உடனே ஆசார்யா பாதம் பதிஞ்சிருந்த மண்ணை அப்படியே சேகரிச்சு எடுத்து, தன்னிடம் இருந்த பட்டுத்துணியில் முடிச்சா கட்டி எடுத்துக் கொண்டார
Read 13 tweets
Apr 13
#ஆதிசங்கர_பகவத்பாதாள் #விஷ்ணுசஹஸ்ரநாமம்
பண்டிதர்கள் முதல் பாமரர் வரை படித்துப் பயன்பெறும் படி லலிதா சஹஸ்ரநாமத்திற்கு விரிவுரை எழுதவேண்டும் என்று நினைத்தார் ஆதிசங்கரர். உடனே தன் சீடர்களுள் ஒருவனை அழைத்து,
"சிஷ்யனே, பூஜையறையில் லலிதா சஹஸ்ரநாம ஓலைச் சுவடி இருக்கும். அதை எடுத்து வா" Image
என்றார். உள்ளே சென்ற சீடன் ஓலைச் சுவடிகளுக்கிடையே லலிதா சஹஸ்ரநாமத்தை தேடி எடுத்து சங்கரரிடம் கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்த சங்கரர், "சீடனே நான் உன்னைக் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம். ஆனால் நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் பார்" என்றார். சீடன் படித்துப் பார்த்த போது 'விஷ்ணு சஹஸ்ர
நாமம்' என்றிருந்தது. மன்னிப்புக் கேட்ட சீடன், மறுபடி உள்ளே சென்று தேடி லலிதா சஹஸ்ரநாம சுவடிகளைக் கொண்டு வந்து கொடுத்தான்.
"உனக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கவில்லையா? நான் கேட்டதைக் கொண்டு வராமல் மறுபடியும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையே கொண்டு வருகிறாயே?" என்று கடிந்து கொண்டார் சங்கரர்
Read 6 tweets
Apr 13
#காயத்ரி என்பது மந்திரம் அல்ல, இது 24 எழுத்துக்கள் கொண்ட ஒரு மீட்டர் ஆகும், அதில் ஆயிரக்கணக்கான எழுத்துக்கள் உள்ளன. புகழ்பெற்ற #காயத்ரி மந்திரம் சாவித்ரி என்று அழைக்கப்படுகிறது. இது ரிக் வேதம் 3:5:6:10 ல் இருந்து வருகிறது.
சவிதா காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் Image
கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.

பொருள்
இந்த முழுப் பிரபஞ்சத்தையும் உருவாக்கியுள்ள உன்னதமானவரின் ஒளியை (அதாவது சூரியனை) தியானிக்கிறோம். அதுவே நம் மனதை ஞானத்தை நோக்கித் Image
தூண்டட்டும் அல்லது அந்த ஒருவர் நம் புத்தியை ஒளிரச் செய்வாராக. அந்த ஒருவர் நம் மனம், பேச்சு மற்றும் செயல்களை வழிநடத்தட்டும். காயத்ரி மந்திரங்கள் 3 பகுதிகளைக் கொண்டுள்ளது - எதில்? எதன் மூலம்? எப்படி?
#தியானம்
கேள்வி 1. எதைப் பற்றி சிந்திக்க அல்லது தியானிக்க வேண்டும்?
பதில்: உச்ச
Read 25 tweets
Apr 12
#மகாலட்சுமியும்_நுனிப்பகுதியும் எதில் ஒன்றிலும் நுனிப் பகுதி லட்சுமி ஸ்தானமாகும். கை கால் நுனி விரல் ஆனாலும் இலைகளின் நுனி ஆனாலும் பழங்களின் நுனி ஆனாலும் நாக்கின் நுனியும் லட்சுமி ஸ்தானமாகும். மகா சரஸ்வதியும் மகா லட்சுமியும் ஆட்சி செய்யும் நாக்கில் சுப வார்த்தைகள் எதை பேசினாலும் Image
அதன் பலனை நமக்கும் கொடுப்பார்கள். அது போல் காய் கிழங்கு பழம் வகைகள் வெட்டினாலும் முதலில் அடிப் பகுதியை வெட்டிய பின்னரே மற்ற பகுதியை நறுக்குவது நல்லது. அடிப் பகுதி எதிலும் சக்தி பகுதியாகும், முனை பகுதியே வளர்ந்து வரும் பகுதி. அதன் முனையை கிள்ளினால் வளர்ச்சி தடைபடுகிறது.
தலையிலும்
லட்சுமி வாசம் செய்வதால் தான் தலையில் யாரும் கொட்டக்கூடாது என்பர். பாவம் போக்க கங்கைக்கு போனாலும் தலை மூழ்கி தான் பாவம் தீர குளிக்க வேண்டும், ஆக சிரசு மிக முக்கியம், சுத்த லட்சுமி ஸ்தானமாகும்.
எதை நாம் அடைய விரும்புகிறோமோ அதை பற்றிய சிந்தனை நம் நினைவில் இருந்து பார்த்துக் கொண்டால்
Read 4 tweets
Apr 12
#கண்நோய்_தீர்க்கும்_கரியமாணிக்கப்_பெருமாள்
திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயில் பின்புறம் மகா விஷ்ணு, கரிய மாணிக்கப் பெருமாள் என்ற திருநாமத்தில் கோயில் கொண்டு உள்ளார். இத்தலத்தில் நின்ற, அமர்ந்த, சயன திருக்கோலங்களில் சேவை சாதிக்கிறார். மகா பாரதத்தை நமக்கருளிய #வியாசமாமுனிவரின் Image
முதல்சீடரான #பைலர் தாமிரபரணி நதிக்கரையில் வாழ்ந்து வந்தார். இவர் தான் தாமிரபரணி கரையில் #திருவேங்கடாநாதபுரம் ஸ்ரீனிவாசர் தீர்த்தக்கட்டம் உருவாக காரணமானவர். ஒருநாள் இவர் தாமரபரணி கரையில் குறுக்குத் துறையில்அமர்ந்து ஸ்ரீனிவாசப் பெருமானை நினைத்து தவம் புரிந்தார். இங்கு கோயில் இல்லா Image
காரணத்தினால் பைலர் மனதிற்குள் பெருமானை நினைத்து பூஜை செய்தார். சுமார் 1 கோடி மலரை அர்ச்சனை செய்தார். அந்த கோடி மலரும் ஒன்றாக சேர்ந்து மிப் பிரகாசமான #நீலரத்தினமாக மாறியது. அதன் பின் அவரே கரிய மாணிக்கனாராக தாமிரபரணி நதிக்குள் காட்சி தந்தார். அவரை பைலர் #நீலமணிநாதர் என்ற திருநாமம் Image
Read 21 tweets
Apr 12
#தருமமிகு_மயிலை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயில் அருகே, 6 பழமையான, அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே உள்ளன. இவை சென்னையின் #சப்தவிடங்க_ஸ்தலங்களைப் போல் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்தரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் இதன் விசேஷமாகும். இந்த 7 சிவ ஆலயங்களையும் ஒரே நாளில் Image
தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு சிவாலயங்களுக்கு நவக்கிரகத்தோடும் தொடர்பு உள்ளது. இவற்றோடு அப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்துவிட்டால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு கோயில்களுமே 12-ம் Image
நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்த போது, அவர்கள் வழிபட்ட முறையில் தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
1. விசாலாட்சி உடனுறை ஸ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில் (சூரியன் ஸ்தலம்)
மயிலை
Read 37 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(