SSR 🐘 Profile picture
Apr 18 5 tweets 2 min read Twitter logo Read on Twitter
மகாபாரதம்;

சூதாடி வெல்ல முடியாமல் முடிதுறந்ததால்,

தன் முடிவிழுத்தி முடிவிரித்து
முடியை முடியேன் என
முடிவெடுத்தாள் ஒருத்தி,

குருதியில் ஓடியது குருசேத்திரம்,
முடியாத முடியால் அழிந்தது குருகுலம்,
நடந்து முடிந்தது மகாபாரதம்,

-திரௌபதி

1/4
சிலப்பதிகாரம்;

தன் சிலம்பு ஒன்று சிக்கியதால்
சினம்கொண்டு சீறி முடிகலைத்து
மூர்க்கமாய் எழுந்தாள் இன்னொருத்தி,

முடிவாய் முடிதுறந்தான் பாண்டியன்,

முடியாத அவள் கூந்தலால் தன் கற்பின் வலிமையால் எரிந்து கரியாய் முடிந்தது மதுரை.

- கண்ணகி

2/4
கணவனை வேண்டி
முடியாத தன் நீள் முடியை
முடியாது முடிவாக இருந்தாள்
அசோகவனத்தில் ஒருத்தி,

முடியாத அவள் கூந்தலால்
முடிந்தது அரக்கர் குலம்,

எரிந்து பொரிந்து முடிந்தது இலங்கை.

- சீதை

3/4
அள்ளி முடியாத கூந்தல்களால் இத்தனை முடியாத முடிவில்லா சரித்திரங்கள்,

எத்தனை உயிர்சேதங்கள்,
எத்தனை அழிவுகள்
எத்தனை கண்ணீர்த்துளிகள்,

முடியாத கூந்தலை
அவிழ்த்து ஆடவிடும் பெண்ணே,

முடியப்போவது யார் ?
அழியப்போவது யார் ?
எரியப்போவது யார் ?

@ranjanikovai பதில் இருக்கா ?
4/4 Image
குறிப்பு; கவிதையில் எத்தனை முடி இருக்கு என சரியாக கூறும் ID களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தேடுத்து 10 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கபடும்.

பரிசு வழங்குபவர்கள் : @ragulshiv மற்றும் @Praburithika1

நன்றி வணக்கம் 🙏
#SSR

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR 🐘

SSR 🐘 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

Apr 20
சிறுத்தொண்டர் ஆற்றிய பெருந்தொண்டு:

''பிள்ளைக்கறி சீராளன் அமுது படையல் விழா":20-4-2023 இன்று இரவு 11-55க்கு துவங்கி மறுநாள் விடிய விடிய திருச்செங்காட்டங்குடி சூளிகாம்பாள் உடனுறை உத்திராபதீஸ்வரர் திருக்கோயில் நடைபெருகிறது,

#நோக்கம்சிவமயம்
#சீராளன்
#பிள்ளைக்கறி
#அமுதுபடையல்

1/23 Image
சம்பந்தர், திருநாவுக்கரசர், காளமேகப் புலவர், அருணகிரி நாதர் போன்ற அடியார் பெருமக்களின் பாடல் பெற்றது இவ்வாலயம்,

இன்று காலை உத்திராபதீஸ்வரருக்கு மகா அபிஷேகமும்,பின்னர் வெள்ளை சாத்தி புறப்பாடும் மதியம் 2 மணிக்கு அமுது கேட்க சிறுத்தொண்டர் மடத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும்,

2/23 Image
(21-4-2023) அதிகாலை 2 மணிக்கு அமுது உண்ண உத்திராபதீஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பிள்ளைக்கறி அமுது பிரசாதத்தை பெற்று பரணி விரதமிருந்து உட்கொண்டால் குழந்தை பேறு கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

3/23 Image
Read 23 tweets
Apr 3
இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து,

புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது,

இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள் எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

#மூலிகைஅறிவோம்

1/8
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

2/8
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

3/8
Read 8 tweets
Mar 10
வணக்கம்🙏
சிவசொந்தங்களே.!

சில நாட்களுக்கு முன் மாற்று மதத்தினர் நமது கோவில் வாசலில் கறிசோறு சாப்பிட்ட வீடியோக்கு முட்டு குடுத்த நாயி ஒன்னு கண்ணப்ப நாயனார் பத்தி பேசிட்டு இருந்துச்சு அதுக்கு மட்டும் இல்ல அரைவேக்காடு எல்லாருக்கும் இந்த தரேட்

#SSRthreads
#நோக்கம்சிவமயம்
1/16 Image
கண்ணப்ப நாயனார் தன் கண்ணை பிடுங்கி சிவலிங்கதிற்கு வைத்தார் நீ இப்படி கண்ணை பிடுங்கி வைப்பியா என் கேள்வியும் கேட்டிருந்தாரகள் ?

எத்தனை பேருக்கு இந்த கேள்வியின் முழு அர்த்தம் புரியும் புரிந்திருக்கும் ?

அதனால் அனைவருக்கும் புரியும்படி விளக்க விரும்புகிறேன்.

2/16
இப்பொழுது இறைவனே யார் என்று தெரியாதவ்ர்கள்,
இறைவனை எப்படி அடைவது என்ற அடிப்படை சிந்தனை அறியாதவர்கள்,
யாரேனும் அசைவம் சாப்பிட்டு இறைவனை அடைய முடியுமா என்று கேட்டால் ?

அவர்கள் எடுத்து காட்டாக வைப்பது
“கண்ணப்ப நாயனாரைத்தான்”.

எடுத்து காட்டு நல்ல தன இருக்கு ஆனா,

3/16
Read 16 tweets
Aug 7, 2022
தஞ்சாவூர் என்றால் உங்களுக்கு எது ஞாபகத்திற்கு வரும்?

தஞ்சை பெரியகோயில்,
திருமுறைகளை மீட்ட இராஜராஜன்,
தலையாட்டிப் பொம்மைகள்,
தஞ்சாவூர் ஓவியம்.
இதானே ?

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி தஞ்சாவூர் நாவில் நீர் ஊறவைக்கும் உணவுகளுக்கும் பெயர் போனது என்பது தெரியுமா?

1/20
#SSRThreads
உணவுப் பாரம்பரியமே ஒருநாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது.

ஒருமுறை தஞ்சை மாவட்ட உணவுகளைச் சுவைப்பவர்கள் அதன் சுவைக்கு அடிமையாகிவிடுவார்கள் என்னை போல,

காவேரி பாய்ந்து வளம் சோ்த்த விவசாயம் முதன்மைத் தொழிலாக இருப்பதால் தமிழகத்தின் நெற்களஞ்சியம்னு சும்மாவா சொன்னாங்க

2/20
வயல்வெளிகளும் தண்ணீரின் சுவையும் அப்பப்பா,

சரி நம்ம மேட்டருக்கு வருவோம்,

தஞ்சாவூரில் ஓங்கி வளர்ந்த உணவு வரலாற்றில் இன்று இடம் பிடித்திருப்பது லஸ்ஸி.

நல்ல ருசியான தயிர்தான் லஸ்ஸிக்கு மிகமுக்கியமான அடிப்படை பொருள். கறந்த பாலை வாங்கி, ஒன்றுக்கு பாதியாக சுண்டக்காய்ச்சி,

3/20
Read 21 tweets
Aug 5, 2022
என்னப்பா மகள் பிறந்திருக்காளா ?

ஆமான்னே, அதான் புது Fan வாங்கிட்டு போறேன், வீட்ல பழைய Fan சத்தம் கேட்கும் பிள்ளை தூங்க கஷ்டபடுவா,

என்னப்பா கோவிலுக்கு போறேம்னு பணம் கேட்டியே எதுக்கு ?

மகளுக்கு காது குத்தி மொட்டை போடத்தான்னே,

கையில காசு இல்ல அதான்,

1/6
#SSRThreads
#FBPost
என்னடா செருப்பு கடைல நிக்கிற ?

மகளை கான்வென்டுல சேர்த்தேன் அதான் புது ஷூ வாங்க வந்தேன்,

என்னடா பத்திரிக்கை ?

மகள் ஆளாயிட்டான்னே,

வீட்டுக்காரியும் மச்சானும் சடங்கு நடத்த சொல்லிட்டாங்க உள்ளூர் மண்டபத்துல வாடகை கம்மி நீ அவசியம் வந்திருங்கண்ணே.

1/5
என்ன செல்போன் கடை பக்கம் ?

பொண்ணு கூட படிக்கும் பிள்ளைகள் எல்லாம் செல் வச்சிருக்காம், ஆதான் அவளுக்கும் வாங்க வந்தேனே,

என்னடா மெடிக்கல் பக்கம் வந்திருக்க ?

மவளுக்கு வயித்த வலி, வீட்டுக்கு தூரமாம், வீட்ல போன் பண்ணி ஜூஸ், நாப்கினும் வாங்கிட்டு வர சொன்னா அதான் வந்தேன்.

1/4
Read 7 tweets
Nov 18, 2021
கொக்கரை:- (Thread)

நீண்டு நெளிந்த ஒரு மாட்டுக்கொம்புதான் சிவவாத்தியமான கொக்கரை.

பாலை நிலத்துக்கு உரிய கருவி கொக்கரை.

கோயில் இசைக்கருவிகளில் நாதஸ்வரம் முக்கியத்துவம் பெற்ற கருவி என்பது நம் எல்லாரும் அறிந்த ஒன்று இதன் தொடக்க வடிவமே கொக்கரை என்கிறார்கள் இசை வல்லுனர்கள்.

1/1
கொக்கரையை ‘சின்னக்கொம்பு’ என்றும் சொல்வர். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இக்கருவி இசைக்கப்படுகிறது.

திருமுறை முழுவதும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

திருமுறை 3,4,5,6,7,11 ஆகியவற்றில் கொக்கரை கருவி இடம்பெறுகிறது.

1/2
#நோக்கம்சிவமயம்
கந்தபுராணத்தில் பல இடங்களிலும் திருப்புகழில் சில இடங்களிலும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

நக்கீரர், காரைக்காலம்மையார், அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமான் ஆகியோர் கொக்கரை பற்றி பாடியுள்ளனர்.

நான்காம் திருமறையில் ஈசனின் வடிவத்தை வர்ணிக்கும் ஒரு பாடலில்,

1/3
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(