அன்பெழில் Profile picture
May 11 10 tweets 2 min read Twitter logo Read on Twitter
#நற்சிந்தனை ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் Image
தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார். சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவர்
உளி உடைந்து விட்டது. என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார். வண்டியை கிளப்ப முயற்சி செய்தார் ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. இருட்டி போய் விட்டது இனி
உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன் என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார். தச்சர் வீடு வந்ததும், தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா என்று முதலாளி சொன்னார். வீட்டுக்குள் வாங்க முதலாளி என்று அவரை
உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார். தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை. தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி Image
அனைத்து முத்தம் கொடுத்தார். தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். காலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார். தச்சர் எந்த வித கவலையும்
இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார். வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது என்றார். அதுவா முதலாளி இது என்
உடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன். வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது. காலையில் வண்டி பழுதானதற்கும், நான்
தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்? நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு போவேன். ஆனால் என்ன ஆச்சரியம்
என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும். தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றார்.
வாழ்வில் பாதி பிரச்சினை நம் கோபத்தைத் தவறாக குடும்பத்தாரிடம் காட்டுவதால் வருவது!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 12
#Food_for_thought At the point of death, a renowned civil servant, Tom Smith called his children and after praying for them, advised them to follow his footsteps so that they can have their peace of mind in life. The eldest child, Elizabeth, a graduate, looked at the other Image
siblings and yelled, "Daddy, its unfortunate you are dying without a penny in your bank account. It is a pity you are leaving us the same wretched life you lived. Personally, I can't emulate you, she continued. Other fathers in the neighbourhood that you tag as being corrupt,
thieves of public funds left houses and properties for their children. See the kind of comfortable life they live and the schools they attend. You are dying after 35 years of public service with just one rickety car. The only honour you have in this room is the citation of an
Read 19 tweets
May 12
#மகாபெரியவா அருள்வாக்கு

இப்போது நாம் இத்தனை பேரும் ஒரே ஒரு மரத்தின் நிழலில் இருக்கிறோம். ரொம்ப வருஷங்களுக்கு முன் இத்தனூண்டு சின்னதாக இருந்த ஒரு செடிதான் இப்போது இவ்வளவு பேருக்கும் நிழல் தருகிற மரமாக ஆகியிருக்கிறது. இன்றைக்குச் சின்னவர்களாக இருக்கிற நீங்களும் பெரியவர்களாகிற போது Image
இந்த மரம் மாதிரிப் பலபேருக்கு உபகாரமாக இருக்க வேண்டும்.
இது ஒரு பள்ளியின் மர நிழலில் ஆற்றிய உரை.

வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது பிறருக்கெல்லாம் உபகாரம் செய்வதற்காகத்தான். நிறையச் சம்பாதித்து அதையெல்லாம் நமக்காகவே செலவழித்துக் கொண்டால் ஸ்வாமி சந்தோஷப்படமாட்டார்.
அவருக்கு நாம் எப்படிக் குழந்தையோ அதே மாதிரி ஏழைகள், நோயாளிகள், அநாதைகள் எல்லாரும் குழந்தைகள். அந்தக் குழந்தைகளுக்கு நாம் உபகாரம் பண்ணாமல் நமக்கே செலவழித்துக் கொண்டால் ஸ்வாமி அதற்கப்புறம் நமக்கு அருள் செய்யமாட்டார்.

அதனால் நீங்கள் எல்லோரும் உலகத்துக்கு உங்களால் முடிந்த உபகாரத்தை
Read 6 tweets
May 12
#மகாபெரியவா
எழுத்தாளர் சாவி
நன்றி-பால ஹனுமான்.

காஞ்சி மாமுனிவர் அப்போது இளையாத்தங்குடியில் தங்கியிருந்தார்.
சாவியும், மணியனும் பெரியாரைப் பேட்டி கண்டு விகடனில் எழுதுவதற்காக திருச்சிக்குப் போயிருந்தார்கள். அங்கே பெரியார் மாளிகையில் பேட்டியை முடித்துக் கொண்டு அங்கிருந்து Image
இளையாத்தங்குடிக்குப் போனார்கள். இவர்கள் போன போது ஸ்வாமிகள் ஒரு மரத்தடியில் அமர்ந்து பக்தர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். சாவியைக் கண்டதும், ‘நேரே மெட்ராசிலிருந்து வரயா? இல்ல வழில எங்கேயாவது தங்கிட்டு வரயா?’ என்று கேட்டார்.
திருச்சியில் பெரியாரைச் சந்தித்து விட்டு வருகிறோம்
என்ற உண்மையைச் சொல்ல அப்போது சாவிக்கு தைரியம் வரவில்லை. அதனால், "மெட்ராஸ்லேர்ந்து வரோம்" என்று பொய்யும் சொல்லாமல் மெய்யும் சொல்லாமல் பொதுவாகச் சொல்லி விட்டார். ஸ்வாமிகள் அமர்ந்திருந்த அந்தச் சூழ்நிலையே வித்தியாசமாக இருந்தது. சற்று தூரத்தில் யாரோ ஒரு வயசான வெள்ளைக்கார பெண்மணி
Read 21 tweets
May 12
வால்மீகி ராமாயணம் 24,000 ஸ்லோகங்கள் கம்ப ராமாயணம் 10,569 பாடல்கள் கொண்டது. அதே போல துளசிதாசர் இயற்றிய ராமாயணமும் பல்லாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. நம்மால் அத்தனை படித்துப் பாராயணம் செய்ய முடியாது என்பதால் பல #சுருக்க_ராமாயணங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அதில் ஒன்று 16 வார்த்தை ராமாயணம் Image
இதோ!
#பிறந்தார்_வளர்ந்தார்_கற்றார்_பெற்றார்
#மணந்தார்_சிறந்தார்_துறந்தார்_நெகிழ்ந்தார் #இழந்தார்_அலைந்தார்_அழித்தார்_செழித்தார் #துறந்தார்_துவண்டார்_ஆண்டார்_மீண்டார்

விளக்கம்:
1. பிறந்தார்
ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தார்.

2.வளர்ந்தார் Image
தசரதர், கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தார்.

3.கற்றார்
வசிஷ்டரிடம் சகல வேதங்கள், ஞானங்கள், கலைகள் முறைகள் யாவும் கற்றார்.

4.பெற்றார்
வசிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு, விஸ்வாமித்ரர் யாகம் காத்து, விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றார் Image
Read 11 tweets
May 11
#MahaPeriyava
Narrated by a close assistant of Periyava
Source: Maha Periyaval Darisana Anubhavangal – Vol 6
There were about six devotees standing in front of Maha Periyava. Another ‘local’ devotee also came there and prostrated.
Periyava asked the new man, ‘Have you visited Image
Kasi?”
“No”
“Chidambaram?”
“No”
Periyava continued, “Thirupathi? Madurai? Thiruvannamalai? Pazhani? Kanyakumari?”
For each of these, the devotee gave only one reply, “No”.
Periyava smiled and said, “You have seen all these people!”
The ‘local’ devotee was confused.
“Do you know
the names of all these people standing here? The first person is Kasi, the next is Chidambaram; then Thirupathi, then Maruthai, the next is Annamalai, then Pazhani and the name of the lady at the end is Kanyakumari." It is very rare to see so many persons with their names as
Read 5 tweets
May 11
#வாசுகி_நர்த்தனர் அபூர்வ சிவ வடிவம்
#ஸ்ரீமேகாம்பிகை_சமேத_மேகநாதேஸ்வரர்_ஆலயம்.

சென்னை தாம்பரத்தில் இருந்து 17 கி.மீ தூரத்தில், வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் கண்டிகை தாண்டியதும் மேலக்கோட்டையூரில் உள்ளது இக்கோவில். வாசுகி பாம்பின் மீது சிவபெருமான் நர்த்தனமாடும் திருக்கோலமே வாசுகி Image
நர்த்தனர் திருக்கோலம். தேவர்கள் அமுதம் கிடைக்க வாசுகியையே கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடந்தனர். அமுதமும் பெற்றனர். இதனால் தேவர்களுக்கு அமுதம் கிடைக்கத் தானே காரணம் என்று எண்ணியதாம் வாசுகி பாம்பு, அதனால் ஆணவத்தில் படம் விரித்தாடி விஷம் கக்கி சகலரையும் அஞ்சச் செய்தது. இது கண்டு Image
பயந்த தேவர்கள் ஈசனைச் சரண் அடைய, ஈசன் வாசுகியின் தலை மீது தன் திருப்பாதம் வைத்து நாட்டியம் ஆடினார். ஈசனின் வேகத்தால் நிலைகுலைந்த வாசுகி அவரிடம் அபயம் கேட்டது. வேண்டியவருக்கு அருள் செய்யும் விமலானாம் ஈசன், வாசுகியை மன்னித்துத் தன்னுடைய கழுத்தில் அணிந்து கொண்டு நாகாபரணராகத் Image
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(