அன்பெழில் Profile picture
May 16 16 tweets 8 min read Twitter logo Read on Twitter
#ஸ்ரீமுருகப்பெருமானின்_ஆறுபடைவீட்டுச்_சிறப்புகள்
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய 6 தீப்பொறிகள் ஒன்றிணைந்து ஆறுமுகனாய் உருவானதை புராணம் சொல்கிறது. உலகம் உய்வதற்காக பரம்பொருளான சிவபெருமானால் தோற்றுவிக்கப் பட்ட அவதாரமே ஆறுமுகப் பெருமான். கருணையே வடிவான 6 திருமுகங்களை, Image
12 கரங்களை தாங்கி அருள் பாலித்து அடியவர்களை காக்கும் கலியுகக் கடவுள் அவர். #முருகு எனும் சொல் அழகு, இளமை, தெய்வ நலம், மணம் ஆகிய பொருள்களைக் குறிக்கும். முருகு என்னும் திருப்பெயரோடு அன் விகுதி சேர்த்து #முருகன் என்னும் திருப்பெயர் சூட்டிப் போற்றி வழிபடுகிறோம். சூரபத்மன் என்னும்
அசுரன் பலகாலம் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவமிருந்தான். தவத்தின் வலிமையால் சிவபெருமானிடம் 108 யுகங்கள் வாழும் ஆயுளும், 1008 அண்டங்களை ஆளும் அதிகாரத்தையும், சிங்க வாகனமும், இந்திர ஞானத்தேரும், அழியாத வஜ்ஜிர தேகமும், சிவனது சக்தியினாலன்றி வேறு எந்தச் சக்தியினாலும் அழிக்க முடியாத
மாபெரும் வரங்களைப் பெற்றான். தான் பெற்ற வரங்களினால் அகங்காரம் கொண்டு, தேவர்களையும், முனிவர்களையும் சிறையிலடைத்து சித்திரவதை செய்தான் சூரபத்மன். தேவர்கள் யாவரும் கயிலை வாழ் சிவபெருமானிடம் வந்து, சூரபத்மன் தேவர்களையெல்லாம் சிறையிலடைத்து கொடுமைகள் புரிகிறான் என்று முறையிட்டனர்.
சூரபத்மனின் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் சிவபெருமானை வேண்டினர். "தேவர்களே நீங்கள் இனி வருந்த வேண்டாம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட யாம் ஒரு புதல்வனை ஈந்தருள்வோம். அப்புதல்வன் எனது நெற்றிக் கண்ணிலிருந்து உண்டாகும் 6 தீப்பொறிகளிலிருந்து உருபெறுவான்
அவன் தங்களின் குறைகளைக் களைந்து காத்தருள்வான்" என்று கூறியருளினார் ஈஸ்வரன். அதன்படியே சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய 6 தீப்பொறிகளையும் சரவணப் பொய்கையில் 6 தாமரை மலர்களில் விட்டது, அவை 6 குழந்தைகளாக விசாக நட்சத்திரம் கொண்ட திருநாளில் அவதரித்தன. அக்கினிப் பொறியாய்
இருந்து அவதரித்தமையால் #அக்கினி_கர்ப்பன் என்றும், கங்கையில் தவழ்ந்தமையால் #காங்கேயன் என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியமையால் #சரவணன், #சரவணபவ என்றும் திருப்பெயர்களுடன் ஆறுமுகன் அழைக்கப்படுகிறார். இந்த 6 குழந்தைகளையும் ஈசனின் கட்டளைப்படி கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால்,
#கார்த்திகேயன் என்ற திருநாமத்தாலும் அழைக்கப்படுகிறார். கோவில் திருக்கரத்தில் வேலை ஏந்தியதால் #வேலாயுதன் என்றும், ஒளியுடைய வேலாக விளங்கியமையால் #கதிர்வேலன் என்றும், தமிழ்த் தெய்வமாக விளங்குவதால் #புலவன் என்றும், மயில் மீது ஊர்வதால் #மயில்வாகனன் என்றும், சேவற்கொடியினை உடைய
காரணத்தால் #சேவற்கொடியோன் என்றும், கடம்பமலர் அணிவதால் #கடம்பன் என்றும், அன்பர்களின் நெஞ்சத்தில் வாழ்வதால் #குகன் என்றும், மாறாத இளமையோன் ஆதலால் #குமரன் என்றும் பல்வேறு பெயர்களால் முருகப்பெருமான் போற்றப்படுகிறார். கார்த்திகைப் பெண்களினால் வளர்க்கப்பட்ட 6 குழந்தைகளையும் சரவணப்
பொய்கையில் இருந்து எடுத்து வரும்படி பார்வதியிடம் சிவபெருமான் அருளினார். பார்வதி தேவியும் அதன்படியே 6 குமாரர்களையும் ஒரே சமயத்தில் தன்னுடைய 2 திருக்கரத்தினால் வாரி அணைத்து எடுத்தாள். 6 உருவங்களும் ஒரே உருவமாகி, ஓருடல், 6 தலைகள், 12 கரங்கள், 2 பாதங்களை உடைய அற்புத உருவமாக மாறியது.
அழகே வடிவமெடுத்து #கந்தன் என்னும் நாமத்துடன் ஆறுமுகன் விளங்கினான். படைவீடு என்பது போர் புரியும் படைத் தலைவன் படைகளுடன் தங்கியிருக்கும் இடத்தைக் குறிக்கும். ஆறுமுகப்பெருமான் சூரபத்மனுடன் போர் புரியும் பொருட்டு தங்கியிருந்த ஒரே இடம் #திருச்செந்தூர். ஆயினும் ஏனையத் தலங்களும் படைவீடு
என்றே அழைக்கப்படுகின்றன. #நக்கீரர் #திருமுருகாற்றுப்படை என்னும் தம்முடைய நூலில் ஆறுமுகப் பெருமான் தங்கியிருந்த தலங்களையும் ஆறுமுகப் பெருமானை வழிபடுவோர் எல்லா கஷ்டங்களையும் நீக்கப் பெற்று அருளைப் பெறுகின்றனர் என்றும் அவரது பெருமைகளை கூறி ஆற்றுப் படுத்துகிறார். அதனை ஆறுமுகனுக்கு Image
ஆற்றுப் படைவீடு என்று அழைக்கப்பட்டு பின்னர் அதுவே ஆறுபடை வீடாயிற்று. கச்சியப்ப சிவாச்சாரியார், அகத்திய மாமுனிவர், ஒளவையார், வள்ளலார் போன்ற எண்ணற்ற புலவர்களும் முருகன் புகழை பாடிப் பேறு பெற்றுள்ளனர்.
ஆறுபடை வீடுகள்:
1. திருப்பரங்குன்றம்
2. திருச்செந்தூர்
3. பழனி
4. சுவாமி மலை Image
5. திருத்தணி
6. பழமுதிர்ச்சோலை என்பனவாகும்.
#அருணகிரிநாதர் அவருடைய பாடலில் ஆறுபடை வீடுகளை, ஆறு திருப்பதி எனக் குறிப்பிடுகிறார். ஆறுபடை வீடுகளுக்கு பல தத்துவ விளக்கங்களை அளிக்கிறார். நம் உடலிலுள்ள 6 ஆதாரங்களின் விளக்க இடங்கள் என்பதாகும்.
1. திருப்பரங்குன்றம் - மூலாதாரம் Image
2. திருச்செந்தூர் - சுவாதிட்டானம்
3. திருஆவினன்குடி (பழனி) - மணிபூரகம்
4. திருஏரகம் (சுவாமிமலை) - அநாகதம்
5. பழமுதிர்ச்சோலை - விசுத்தி
6. குன்று தோறாடல் (திருத்தணி) - ஆக்ஞை
மனித உடலிலுள்ள ஆறு ஆதாரங்களை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறுமே Image
ஆறுபடை வீடுகளென யோகிகள் கூறுவர். ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும். வளமான வாழ்க்கை அமையும்.
அறுபடை வீடுகளை தரிசித்து குமரக் கடவுளின் அருளைப் பெறுவோம்.

சரவணபவாய நமஹ
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 17
#ஜகத்குரு_ஆதிசங்கரர்
ஆதி சங்கர பகவத் பாதாள் மிகவும் நலிவுற்று இருந்த இந்து மதத்தையும் வேதங்களையும் காத்து அருளினார். பல ஸ்லோகங்களை இயற்றி, வேத வேதாந்த நூல்களுக்கு விளக்கவுரை எழுதினார். நம் அகண்ட பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் அத்வைத மடங்களை நிறுவி இந்து மதத்தை பரப்பினார். Image
அவரின் வரலாறு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. பொ.யு 7ம் நூற்றாண்டில், (அவர் பிறந்த காலம் பற்றி இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன) கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில், சிறந்த இறை பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற அந்தண தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் இறைவன் மீது
இருந்த மிகுந்த பக்தியால், ஏழை எளிய மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வந்தனர். ஆனால் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற மனக்குறை இருந்து வந்தது. இதை பார்த்த பெரியோர்கள் அவர்களுக்கு ஓர் ஆலோசனை கூறினர். திருச்சூரில் வடக்குநாதன் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தொடர்ந்து ஒரு
Read 11 tweets
May 17
#ஆயுளை_அழிக்கும்_ஆறு_வாள்கள்
திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள்வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே. ஏன் என்று கேட்டார்.
அதற்கு விதுரர், ஆறு கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை அழிக்கின்றன. அவை
அதிககர்வம், அதிகம் பேசுதல், தியாக மனப்பான்மை இன்மை, கோபம், சுயநலம், நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது என்றார்.
விதுரர் கூறிய அந்த 6 வாள்கள் எப்படியிருக்கும்? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும்?

1. தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர் கெட்டவர்கள் என Image
நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவனைக் கடவுள் சீக்கிரம் அழித்து விடுவார். ஆகவே, கர்வம் கொள்ளாமலிருக்க வேண்டுமானால், தன் விஷயத்தில் குற்றங்களைப் பார்க்க வேண்டும். பிறர் விஷயத்தில் குணங்களைப் பார்க்க வேண்டும்.

2. அதிகம் பேசுகிறவன் வீண் விஷயங்களைப் பற்றிப் பேசி, வீண்
Read 8 tweets
May 17
#MahaPeriyava
Narrated by Srimatam Balu
There was this young lady, a sadhu by nature, deeply devoted to Periyava and would often come for darśan. She was quiet, never asked for anything or spoke about herself. She married and settled down. When Periyava was camping in Chennai, he Image
was walking through T. Nagar one day. This young lady lived there. She came out of her house when Periyava walked down that street, prostrated to Periyava. “Periyava must be gracious to give me his pādukas” she said. It was mid-day and blistering hot.
“How shall I walk if I give
you my pādukas?”
“Here, Periyava,” said the lady in readiness and placed another pair she had brought with her, at Periyava’s feet.
“Why! I thought that I was smart, but she is smarter than I thought I was! She has never asked me anything for herself.” Periyava stepped out his
Read 42 tweets
May 17
#Meaningful_Hindu_Practices
On auspicious occasions, we prefer giving a gift in the envelope that is never like Rs.100, 500 or 1000, but is always Rs.101, 501 or 1001 so on. Why do we add that extra one rupee? There are four age-old reasons for doing that.
1 Zero signifies an Image
end, while One signifies a new beginning. That extra one rupee ensures that the receiver does not come across a zero.
2 Mathematically, the numbers 100, 500 and 1000 are divisible, but the numbers 101, 501 and 1001 are indivisible. we want our good wishes and blessings to remain
indivisible.
3 The added one rupee is a symbol of continuity, ahead of the basic amount. It strengthens the bond between the giver and the receiver. It simply means, "our good relationship will continue".
4 However, the added rupee must be a coin, and never a one rupee note. A
Read 4 tweets
May 16
#சில_பழமொழிகளும்_அதன்_பொருளும்

1. மந்திரம் தான் பொய்யானால், பாம்பை பாரு.

மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ளலாம். பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல Image
தெரிந்தவரை சொல்ல விட்டு நாம் தள்ளி நின்று இதைப் பார்க்கலாம்.

2. மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு.
வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் மருந்து, அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாண-வேடிக்கையை பாருங்கள் Image
என்பது இதன் பொருள்.

3. சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு.
ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்று இருப்பதைப் பார்த்து வியப்பு அடைந்திருப்பர். எனவே ஜோதிடம் பொய் Image
Read 6 tweets
May 16
#மகாபெரியவா
கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெரியவாளைத் தவிர, வேறு தெய்வமே இல்லை என்று, உறுதியாய் நம்பியவர் மீளா அடிமை என்னும் பிரதோஷம் மாமா. அப்படிப்பட்டவர், ஒரு நாள் தன் அலுவலகத்தில் யாரோ வைத்தீஸ்வரன் கோயிலைப் பற்றி Image
பேசிக் கொண்டிருந்ததில் மனதில் லேசான சலனம். தானும் அக்கோயிலுக்குப் போகவேண்டும் என்கிற ஆசை மனதினுள். தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் அக்கோவிலுக்குப் போனவர்தான்.அவரது தந்தையின் பெயரும் வைத்தியநாத சர்மா. அதனால் தன்னை வைத்தீஸ்வரர் அழைக்கிறார் என்கிற நினைப்புடன், வீட்டீற்கு வந்து தன்
துணைவியாருடன் இதைப் பற்றிப் பேசுகிறார். துணைவியார், திடீரென எதிர்கேள்வி கேட்டார். "பெரியவாளே சாட்சாத் பரமேஸ்வரராய் இருக்கார்னு சொல்வீர் களே. இப்போது ஏது இன்னொரு தெய்வத்தைப் பார்க்கணும்னு சொல்றேளே?"--உண்மை உறைத்தது. மீளா அடிமை ஆடித்தான் போனார். தான் ஏதோ ஒரு பெரிய தவறு செய்து
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(