அன்பெழில் Profile picture
Jun 1 12 tweets 2 min read Twitter logo Read on Twitter
#மகாபெரியவா
சங்கராம்ருதம் - 523
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்

பல வருடங்களுக்கு முன் ஒருநாள் இரவு கொட்டித் தீர்த்துக் கொண்டு இருந்த மழையில், ஶ்ரீமடத்திலிருந்து ரெண்டு பேர், தொழிலதிபர் ஶ்ரீ A.C முத்தையாவின் வீட்டுக்கு வந்தார்கள். Image
அவர்களை தகுந்த முறையில் வரவேற்றார்.

“என்ன விஷயம்? இத்தன மழைல”

“பெரியவா ஆக்ஞை! சிதம்பரத்ல நடராஜருக்கு வைரக்ரீடம் பண்றதுக்காக நிதி தெரட்டச் சொல்லி பெரியவா உத்தரவிட்டிருக்கா! எங்களால ஓரளவுதான் முடிஞ்சுது. இங்க மெட்ராஸ்ல சில பேரைப் பாத்துக் கேக்கலாம்னு இருக்கோம். அதுக்கு நீங்க
தான் ஸஹாயம் பண்ணணும்”

பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர் ஶ்ரீ முத்தையா.

“அதுக்கென்னங்க? பெரியவா உத்தரவிட்டாப் போறுமே! கட்டாயம் எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட சொல்றேன் எவ்வளவு நிதி தெரட்டி தர முடியுமோ என்னால ஆனதை செய்யறேன் மீதி எவ்வளவு தேவையோ, அத நானே குடுக்கறேன் இது, எங்களோட பாக்யம்”
வாய் வார்த்தையாக சொன்னதோடு நில்லாமல், அவ்வாறே தந்து, சிதம்பரம் நடராஜருக்கு வைரக்ரீடம் ஸமர்ப்பிக்கும் பணியை சிறப்பாக முடித்தார். 1992-ல் ஸ்ரீபெரும்புதூர் வேங்கடேஶ்வரா எஞ்ஜினீரிங் காலேஜை துவக்கினார் ஶ்ரீ முத்தையா. அதற்கு முன் பெரியவாளை தர்ஶனம் பண்ணப் போனார்.

“பெரியவாளுக்கு இந்த
ஸால்வையை ஸமர்ப்பிக்கறேன்”

பெரியவா அந்த ஸால்வையை உற்றுப் பார்த்தார்.

“பட்டா?“

“ஆமா பட்டுதான்”
|
“நா ஸன்யாஸி! பட்டு எனக்கு வேணாமே”

பட்டை ஏற்றுக் கொள்ளுவது பெரியவாளுடைய “அஹிம்ஸா தர்மத்துக்கு” புறம்பானது. ஆனால், அன்போடு வந்தவரை, அவர் கொண்டு வந்த பட்டு ஸால்வையுடன் திருப்பி
அனுப்பவும் மனஸில்லை. தர்மத்தை, சாஸ்த்திரத்தை இம்மியளவும் மீறாமல், அதே சமயம் யாரையும் நோக அடிக்காமல் த்ருப்திப்பட வைப்பதில், பெரியவாளுக்கிணை பெரியவாதான்! எனவே அவரைக் கொஞ்சம் நிற்கச் சொல்லிவிட்டு, தான் போர்த்திக் கொண்டிருந்த கதர்த்துணிப் போர்வையை எடுத்து, தன் சிரசில் வைத்துக்
கொண்டு, பக்கத்திலிருந்த பாரிஷதரிடம் தந்தார்.

“இந்தாடா இத முத்தையாவோட சம்ஸாரத்துக்கிட்ட குடுக்கச் சொல்லு”

என்ன ஒரு பாக்யம்! எப்பேர்ப்பட்ட ஆஶீர்வாதம்! நடராஜருவுக்கு வைரக்ரீடம் அணிவிக்க மனமுவந்து, அதுவும் ஶப்தமில்லாமல் நிதி அளித்ததால், அந்த நடராஜாவே இப்படியொரு அமோஹமான அனுக்ரஹத்தை
பண்ணிவிட்டார். பணம் இருந்தால் மட்டும் போதாது அதை நல்ல கார்யங்களுக்கு, ஆத்மார்த்தமாக, டம்பம் இல்லாமல் குடுக்க வேண்டுமே!

சில நாட்கள் முன்புதான், ஶ்ரீ முத்தையாவின் மகனுக்குக் கல்யாணம் நிச்சயமானது. பத்து மாஸம் கழித்துத்தான் கல்யாணம் நடக்க இருந்தது.

“பெரியவா ஆசீர்வாதத்தோட பையனுக்கு
இந்த வருஷ கடஸீல கல்யாணம் வெச்சிருக்கு”

பெரியவாளிடம் தன் மகனின் திருமணத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.
பெரியவா ஒரு க்ஷணம் அமைதியாக இருந்தார். பிறகு பாரிஷதரை அழைத்தார்.

“ரெண்டு மட்டைத் தேங்கா எடுத்துண்டு வா”
மட்டைத் தேங்காய் வந்ததும், அதை தன் திருக்கரங்களால் தொட்டு ஆஶிர்வதித்து,
முத்தையாவிடம் குடுத்தார். சாதாரணமாக கல்யாணப் பத்ரிகை கொண்டு வந்து, முறையாகக் குடுக்கும் போதுதான், பெரியவா மட்டைத் தேங்காய் கொடுத்து ஆஶிர்வாதம் பண்ணிக் கொடுப்பார். ஆனால், இப்போது மட்டும் ஏன் இப்படி பத்து மாஸம் முன்னாலேயே, பத்திரிகை கூட இல்லாமல், மட்டைத் தேங்காய் தந்து ஆசீர்வாதம்
பண்ணினார்? பாரிஷதர்கள் உள்பட யாருக்கும் விளங்கவில்லை. பெரியவா செய்யும் எந்த காரியத்துக்கும் அர்த்தம் இல்லாமல் போகுமா? ஶ்ரீ முத்தையாவின் மகனின் திருமணத்துக்கு 15 நாட்கள் முன்னாடியே நம் பெரியவா ப்ருந்தாவன ப்ரவேசம் செய்து விட்டார். அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம் ஸ்ரீ
சந்திரசேகர குரும் ப்ரணமாமிமுதான்வஹம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 2
#கிருஷ்ண_கமலம்
நாகலிங்க மலரில் எப்படி சிவபெருமான் வாசம் செய்கிறாரோ அதே போல ஸ்ரீ கிருஷ்ணர் வாசம் செய்யக் கூடிய மலர் கிருஷ்ண கமலம். இந்த பூவின் அமைப்பு நடுவில் திரெளபதி, மும்மூர்த்திகள், பஞ்ச பாண்டவர்கள், 100 கெளரவர்கள் என அனைவரும் கிருஷ்ணரோடு சேர்ந்து வாசம் செய்யக் கூடிய மலர். ImageImage
ஸ்ரீ கிருஷ்ணர் கையில் உள்ள சுதர்சன சக்கரத்துக்கு நிகராக இந்த மலரை குறிப்பிடுகிறார்கள். இந்த பூவின் பெயர் கிருஷ்ண கமலம், இதனை மஹாபாரத பூ, பஞ்ச பாண்டவர் பூ என்றும் அழைப்பார்கள். இதன் ஆங்கில பெயர் #PassionFlowet ஸ்ரீ கிருஷ்ணரை இஷ்ட தெய்வமாக கொண்டவர்கள், கிருஷ்ணரை நடு நாயகனாக வைத்து Image
வழிபடுவர்கள் இந்த செடியை கண்டிப்பாக வீட்டில் வளர்க்கவும். வீட்டிற்குள் அதிகப்படியான நேர்மையான ஆற்றலை ஈர்க்கும் (Positive Vibrations) நறுமணமான மலர். இது ஒரு கொடி வகையை சேர்ந்தது. சிறிய தொட்டியில் வைத்தும் வளர்க்கலாம். அதிக இடவசதி, அதிகமாக வெயில் தேவையில்லை. இந்த பூவை கிருஷ்ணருக்கு Image
Read 4 tweets
Jun 2
#அஹோபிலம் #அஹோபலம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள அஹோபிலம் பெருமாளின் பெருமையை திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
பக்தன் பிரகலாதனுக்கு அருள்பாலிக்க ஹிரண்யகசிபுவைத் தன் தொடையில் வைத்து வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொண்டவர், நரசிம்மர். பின்னர் கோபம் Image
தணிந்து, கையில் படிந்த ரத்தக் கறையை அருகில் உள்ள ஓடை நீரில் சுத்தம் செய்து கொண்டார். அந்த ஓடையில் அவர் கை வைத்த இடம் என்னும் இடம் சென்னிறமாகக் காணப்படுவதைப் பார்க்க முடிகிறது. அந்த இடத்தினை ஒட்டிக் கொஞ்சம் முன்னும் பின்னும் பார்த்தால் ஒடை நீர் சாதாரணமாக இருக்கும். இந்த அற்புதத்தை
இன்றும் காணலாம். நவ நரசிம்மரின் பெயர்கள்,
பார்க்கவ நரசிம்மர்,
காரஞ்ச நரசிம்மர்,
யோக நரசிம்மர்,
சத்ரவட நரசிம்மர்,
க்ரோடாகார நரசிம்மர்,
மாலோல நரசிம்மர்,
அஹோபில நரசிம்மர்,
பாவன நரசிம்மர்,
ஜ்வாலா நரசிம்மர் ஆகியவை ஆகும். இத்தலத்தில் தாயாருடன் இருக்கும் பெருமாள் மாலோலன். Image
Read 5 tweets
Jun 2
#வில்லுடையான்பட்டு_சிவசுப்ரமணிய_சுவாமி_கோவில்
முருகன் வள்ளி- தெய்வானையுடன் கையில் வில்லும், அம்பும் தரித்த நிலையில் காட்சி அளிக்கிறார். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. #முருகு என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். முருகன் என்றால் Image
இளமையான அழகன் என்று கூறலாம். முருகு என்பதிலுள்ள மூன்று எழுத்துக்களும் (ம்+உ, ர்+உ, க்+உ - முருகு) உகார எழுத்துக்களாகும். இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றைக் குறிக்கின்றன. நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஆறு வகை சமயங்களில் ஒன்றான #கௌமாரம் என்பதன் தெய்வமும் Image
முருகனே ஆவார். சிவன் தன் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்படுத்திய நெருப்பு காமனை எரித்த பின்னர், வாயு பகவானால் சரவணப் பொய்கை ஆற்றில் விடப்பட்டது. அந்த நெருப்பு 6 குழந்தைகளாக உருவாகி கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, Image
Read 24 tweets
Jun 2
#MahaPeriyava
Narrated by Sri Balu Mama
Source: E-book In the Presence of the Divine Vol II
There was a very poor old lady by the name Parvati. She made her living by selling Kolam (rangoli) books. She had drawn many different kinds of kolam, printed it all in a little book and Image
went from door to door selling it, priced it at fifty paise. She made a rupeeor two every day and managed somehow. She was among those that put up in thatched huts near Periyava’s camp. She did not compromise with her orthodoxy. She would follow the camp. A cluster of huts would
come up near the camp and such devotees would stay on near the camp for Periyava’s darśan. Every day she was given a small quantity of rice grain and along with a brinjal or a handful of green vegetable which she procured, she would cook herself one frugal meal. She came to give
Read 26 tweets
Jun 2
#மகாபெரியவா அருள்வாக்கு

சத்தியம் என்றால் வாக்கும் மனமும் ஒன்று படுவது மட்டுமல்ல. நல்ல மனதில் எழுகின்ற நல்ல எண்ணங்களை மட்டும் வாக்கில் வெளிப்படுத்துவதே சத்தியம். நல்ல விளைவுகளைத் தரும் நல்ல சொற்களைப் பேசுவதே சத்தியம்.

தர்மம், நீதி ஆகிய குணங்களைக் கொண்டவனே பண்புடையவன். எந்த Image
சூழலிலும் தர்மத்தைப் பின்பற்றுபவனே உயர்ந்த மனிதன்.
சமூகசேவை எண்ணம் கொண்டவர்கள் குடும்பத்தையும் கடமையுணர்வோடு பாதுகாக்க வேண்டும்.
இறைவனை எண்ணிச் செய்யும் செயல்கள் எளிதாக நிறைவேறும். வழிபாட்டிற்கான பலன் நிச்சயம் நம்மைத் தேடி வரும். அறியாமல் செய்தாலும் கூட அதற்கான நன்மை நமக்குண்டு.
லாபநஷ்டக் கணக்கு மட்டுமே பார்த்துக் கொண்டு வியாபாரம் நடத்தக் கூடாது. பிறருக்கு உதவியாக வாழ வேண்டும் என்னும் லட்சிய நோக்கமும் வியாபாரத்திற்கு மிகவும் அவசியம்.
எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக் காட்டாகவே வாழ்வது தான் அதிக சக்தி வாய்ந்ததாகும். உபதேசம் செய்வது எளிதானது. ஆனால், அதன்
Read 4 tweets
Jun 1
#uthiramerur #Modi #NewParliamentBuilding #MahaPeriyava
While performing Bhumi Puja of the New Parliament building, our PM mentioned about a place known as Uthiramerur. There's some very good information about the Democratic Processes in ancient Bharateeya cities and villages! Image
Uthiramerur (TamilNadu) is a model of Democracy! Uthiramerur is situated in Kancheepuram District, about 90 kms from Chennai. It has a 1,250-year old history! There are three important Temples. The three Temples have a large number of inscriptions, notably those from the reigns Image
of Raja Raja Chola (985-1014 CE.) his son Rajendra Chola, and the Vijayanagar Emperor Krishnadeva Raya! During the period of Parantaka Chola [907-955 CE.] the village administration was honed into a perfect system, through elections by the people! In fact, inscriptions on Image
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(