அன்பெழில் Profile picture
Jun 11 10 tweets 3 min read Twitter logo Read on Twitter
#மகாபெரியவா
பாகவத ஸப்தாகம், நவாகம் என்றாலே பல பக்தர்களுக்கு மாயவரம் #சிவராமக்ருஷ்ண_சாஸ்த்ரிகள் தான் நினைவிற்கு வருவார். அப்படி ஒரு அருமையான ப்ரவசன மேதை! ப்ரவாகமாக ஸ்லோகங்களும் மேற்கோள்களும் வர்ஷிப்பார். கேட்டது போதும் என்று யாருக்குமே தோன்றாது. மெய் மறந்து கேட்கும் கூட்டம். Image
அப்படிப்பட்ட பண்டிதருக்கு திடீரென்று சரீர அசக்தி உண்டாகி, மனதிலும் மறதி இடம் பிடித்ததால், ப்ரவாகமாக வரும் பேச்சு தடைபட்டது. குடும்பமே கலங்கியது. திக்கற்றவருக்கு தெய்வமே துணை! என்று வேறு எங்கு போவார்கள்? பெரியவாளின் தரிசனத்துக்கு வந்து கதறி அழுதார்கள். சாஸ்த்ரிகளும் பேச்சு
வராவிட்டாலும், கண்களில் வழிந்த கண்ணீரால் தன் இயலாமையை கூறினார். சாதரணமாக நம்மைப் போல வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவோர்க்கு, வாக்கு தடைபட்டால் "நல்லதாப் போச்சு!" என்று நம் குடும்பத்தாரே நினைப்பார்கள். ஆனால், சாஸ்த்ரிகளோ, பகவத் குணங்களை வர்ஷிப்பது தடைபட்டதே என்று உருகினார். அவருடைய
குடும்பத்தார் மட்டுமில்லாமல், அவருடைய ப்ரவசனத்தைக் கேட்டு உருகிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருந்தினார்கள். நல்ல கார்யம் தடைபட பகவான் விடுவானா? "எதுக்கு இத்தனை அழுகை? ஒண்ணும் கவலைப் படாதே! இன்னிக்கே, இப்போவே நீ ஸொஸ்தமாயிடுவே!" கம்பீரமாக அபயம் கொடுத்துவிட்டு, சில ஸ்லோகங்களை
எடுத்துக் கூறினார். "போ! நம்ம சந்த்ரமௌலீஶ்வரர் ஸன்னதில நின்னுண்டு, இந்த ஸ்லோகங்களை சொல்லு!" ஸ்வாமி ஸந்நிதியில் நின்றுகொண்டு பெரியவா குறிப்பிட்ட ஸ்லோகங்களை, கண்களும் சேர்ந்து அருவி போல் கொட்ட, மெல்ல சொல்லத் தொடங்கினார் சாஸ்த்ரிகள். கூட்டத்தினர் கண்களும், காதுகளும், மனதும்
சாஸ்த்ரிகள் மேல்தான்! அப்படியே மடை திறந்த வெள்ளம் போல் கொஞ்சங்கூட தங்குதடையில்லாமல் ஸ்லோகங்கள் வந்தன! அத்தனை பேரும் ஆனந்தப் பட்டனர். நல்வாக்கை அனுக்ரஹித்த ஸரஸ்வதியான பெரியவாளை அழுதபடி நமஸ்காரம் பண்ணினார். சில நாட்களிலேயே உடல் நிலையும் தேறி பழையபடி ப்ரவாகமாக ஸப்தாகமும், நவாகமும்
அவர் வாக்கில் வர ஆரம்பித்தன! பெரியவா ஸரஸ்வதி தேவியின் திருநக்ஷத்ரமான மூலநக்ஷத்ரத்தன்று மௌனவ்ரதம் இருப்பார். அதற்கு அவர் சொல்லும் விளக்கம். "ஓயாம எதையாவுது பேசிண்டே இருக்கோம். அது பொறத்தியார்க்கு நல்லது பண்றதா? இல்லியான்னெல்லாம் யோசனை கெடையாது! மொழிக்காக ஒர்த்தருக்கொர்த்தர்
அடிச்சுக்கறதைப் பாத்தா நாம எல்லாருமே ஊமைகளாப் போய்ட மாட்டோமான்னு தோணறது! எல்லாரும் முடிஞ்சவரை ஜாஸ்தி பேசாம இருக்க பழகிக்கணும். அவசியமானதுக்கு மட்டும் பேசினாப் போறும். வாணா [வாழ்நாள்] பூரா, கண்டதைப் பேசிண்டே இருக்கறதுக்கு ப்ராயஶ்சித்தமா, வாக்ஶக்தியை நமக்கெல்லாம் அனுக்ரகம் பண்ற
வாக்தேவியோட நக்ஷத்ரமான மூலா நக்ஷத்ரத்தன்னிக்காவுது கொறஞ்ச பக்ஷம் எல்லாரும் மௌனவ்ரதம் இருக்க பழகிக்கணும்".
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻


ஏழு பாகமாக உள்ளது மொத்தம் ஒன்பது மணி நேரம் #சிவராமக்ருஷ்ண_சாஸ்த்ரிகள் அவர்களின் பாகவத சப்தாகம்🙏🏻 via @PGVenkat1

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 12
#தேவ_மொழி_சமஸ்கிருதம்
#சில_முக்கியத்_தகவல்கள்
சமஸ்கிருதம் அனைத்து மொழிகளுக்கும் தாயாக கருதப் படுகிறது. (துல்லியமாக 6909 மொழிகளுக்குத் தாய்)

சமஸ்கிருதம் #உத்தர்காண்ட் இன் ஆட்சிமொழி

இஸ்லாமிய படையெடுப்பு என்ற குறுக்கீடுக்கு முன் சமஸ்கிருதம் இந்தியாவின் தேசிய மொழியாக இருந்தது. Image
நாசாவின் கருத்துப்படி, சமஸ்கிருதம் பூமியில் பேசப்படும் மிகத் #தெளிவான_மொழி ஆகும்.

உலகில் உள்ள எந்த மொழியையும் விட சமஸ்கிருதத்தில் அதிக சொற்கள் உள்ளன. தற்போது சமஸ்கிருத அகராதியில் 102.78 பில்லியன் சொற்கள் உள்ளன.

சமஸ்கிருதம் எந்த பாடத்திற்கும் ஓர் அற்புதமான புதையல் ஆகும், Image
யானைக்கு சமஸ்கிருதத்தில் 100 க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பது போல!

ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட 60,000 சமஸ்கிருத கையேடுகளை நாசா வைத்துள்ளது. இதில் நாசா ஆராய்ச்சி செய்கிறது.

கணினி மென்பொருட்கள் உருவாக்க சமஸ்கிருதம் சிறந்த மொழியாக கருதப்படுகிறது. ஃபோர்பார்ஸ் இதழ், வேறு எந்த Image
Read 14 tweets
Jun 12
#காஞ்சி_வரதராஜப்_பெருமாள்_கோயில்
#திருக்கச்சி என்றும் அழைக்கப்படும் கோவில். 108 திவ்ய தேசங்களுள் கோயில் என்பது திருவரங்கத்தைக் குறிக்கும், மலை என்பது திருவேங்கடத்தானை - திருப்பதியைக் குறிக்கும், பெருமாள் கோயில் என்றால் அது காஞ்சி வரதராஜரைக் குறிக்கும். வைணவ பாரம்பரியத்தில் Image
திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த இக்கோவில் நகரத்திற்கு மையத்தில் அமைந்துள்ளதுஇராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது. மூலவர் வரதராஜப் பொருமாள் மேற்குப் பார்த்த வண்ணம், நின்ற திருக்கோலத்தில் சேவார்த்திகளுக்கு அருள் புரிகிறார். #பெருந்தேவி ImageImage
தாயார் கிழக்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் பொ.யு. 1053ல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப் பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் தெரிகிறது. முதலாம் விக்கிரம சோழனும் கோயிலை விரிவு Image
Read 31 tweets
Jun 12
#மகாபெரியவா
நீங்கள் பலமுறை இந்த சம்பவத்தைப் பற்றி படித்திருப்பீர்கள், இது பற்றி தெரியாதவர்களுக்காக இன்னும் ஒரு முறை.
சென்னையைச் சேர்ந்த திருமதி கலா மூர்த்தி பகிர்ந்தது:
ஒரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து Image
என்ன ரொம்ப வலிக்கிறதா? என்று கருணையுடன் கேட்டார். பிறகு, கீழ்க்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, தினமும் நூற்றி எட்டு தடவை இதைச் சொல், கவலைப்படாதே என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.
அஸ்மின் ப்ராத்மன் நனுபாத்மா கல்பே
த்வமித்தம் உத்தாபித பத்மயோனி
அநந்தபூமா மம ரோகராசிம்
நிருந்த்தி
வாதாலய வாஸ விஷ்ணோ
- ஸ்ரீமத் நாராயணீயம்
பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.
ஆறு மாதங்கள் கழித்து, அந்த பக்தர் மீண்டும்
Read 5 tweets
Jun 11
#தேசியம்
இந்திரா காந்தியை இரும்பு பெண்மணி என்று அழைப்பார்கள். அது உண்மையா?
#விங்கமாண்டர்_அபிநந்தன் பெயரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அந்த ஒற்றை பாரத வீரன் பத்திரமாக நாடு திரும்பவில்லை என்றால் பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இருக்காது என்று முழக்கமிட்டவர் பாரத பிரதமர் Image
#மோடி. அபிநந்தன் போல வேறு சில விமானிகளின் பெயர் பட்டியல் இதோ!
விங் கமாண்டர் ஹர்சரன் சிங் டாண்டோஸ்,
படைத் தலைவர் மொஹிந்தர் ஜெயின்,
படைத் தலைவர் ஜே.எம்.மிஸ்திரி,
படைத் தலைவர் ஜே.டி.குமார்,
ஸ்க்வாட்ரன் லீடர் தேவ் பிரசாத் சாட்டர்ஜி,
விமான லெப்டினன்ட் சுதிர் கோஸ்வாமி
விமான லெப்டினன்ட்
வி வி டாம்பே,
பிளைட் லெப்டினன்ட் நாகசாமி சங்கர்,
பிளைட் லெப்டினன்ட் ராம் எம் அத்வானி,
ப்ளைட் லெப்டினன்ட் மனோகர் புரோகித்,
பிளைட் லெப்டினன்ட் தன்மய் சிங் டாண்டோஸ்,
பிளைட் லெப்டினன்ட் பாபுல் குஹா,
பிளைட் லெப்டினன்ட் சுரேஷ்சந்திரா சண்டல்,
பிளைட் லெப்டினன்ட் ஹர்விந்தர் சிங்,
ப்ளைட்
Read 8 tweets
Jun 11
#MahaPeriyava
Narrated by Sri Salem Ravi

A person who was working for a company at Ambattur had lots of problems in his life! Sick wife, useless children to name a few. He had a friend who was Maha Periyava’s devotee.
The friend advised the person, “Instead of going through the Image
trauma of facing your difficulties alone, go to Kancheepuram. Have darshan of our Maha Periyava once. All your difficulties will vanish at that instant”. The person listened to this advice and came to Kancheepuram. He thought, “Even Kings from different parts of the world,
Presidents and also poor peasants come for Maha Periyava’s darshan. There will be lots of people around Periyava all the time. In the midst of all the crowd, how can I go near Him and explain my problems”. He got out the bus and reached the Sri Matham. Big Surprise! There was
Read 16 tweets
Jun 11
#மகாபெரியவா அருள்வாக்கு

கிணற்று நீரில் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பிக்கிறது. அது போல நம் துக்கங்களை ஞானமான தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கத்துக்கான காரணங்கள் இருந்தாலும், Image
தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரி துக்கம் லேசாகிவிடும்.

நல்ல செயல்கள் செய்தால் ஈஸ்வரன் நமக்கு கை கொடுப்பார், அவர் தான் நமக்கு கை, கால், கண் வழங்கியதுடன், ஆலோசிக்க புத்தியும் கொடுத்துள்ளார். இந்த சக்தியும், புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான நல்ல செயல்களை செய்ய வேண்டும்
வழுக்கு மரத்தின் இயல்பு சறுக்குவது. சறுக்கிச் சறுக்கி விழுவதைச் சமாளித்துக் கொண்டு முயற்சி செய்து மேலே ஏறினால் வெற்றி உண்டாகும். அப்படியே வாழ்வில் சறுக்குவதும் இயல்பாகும்.
தீய எண்ணம் உள்ளவனோடு சேர்க்கை வைத்துக் கொள்ளும் போது தீய எண்ணம் ஏற்படுகிறது. கோபம், தீய எண்ணம் இல்லாத
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(