அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Dec 2, 2022, 10 tweets

#நம்பிக்கை #பக்தி
என பணத்தேவைகளை கவனித்துக் கொள்ள திருக்கோளூர்
#வைத்தமாநிதி_பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என் உடல் ஆரோக்கியத்தை
அற்புதமாக கவனிக்க திருஎவ்வுள்ளூர்
#வைத்திய_வீரராகவன்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என் மனத்தில் கவலைகள்
உண்டாகும்போது, 'கவலைப்படாதே'
என்று

சொல்ல திருக்கச்சி #பேரருளாளன்_வரதராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

குறைவில்லாமல் அழகழகான, அற்புதமான வஸ்திரங்கள் எப்பொழுதும் தர த்வாரகாநாதன்
#ரண்சோட்ஜீ என்னோடு எனக்காக இருக்கிறார்.

எனக்கு வேண்டிய ருசியான ஆகாரத்தை என் ஆயுள் முழுவதும் தர
பூரி நாயகன் #ஜகந்நாதன்
என்னோடு எனக்காக

இருக்கிறார்.

என் குடும்பத்தை என்றும்
சந்தோஷமாகக் காப்பாற்ற திருமலை மேல் #திருப்பதி_ஸ்ரீநிவாஸன்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னை விரோதிகளிடமிருந்து
எல்லா சமயங்களிலும் காப்பாற்ற,
அஹோபிலம் #மாலோல_நரசிம்மன் என்னோடு எனக்காக இருக்கிறார்.

என் வாழ்க்கையை சரியான பாதையில் நடத்த

திருவல்லிக்கேணி
#பார்த்தசாரதி என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னை இரவில் சுகமாக தூங்க வைக்க திருப்புளியங்குடி #பூமிபாலர்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னை காலையில் அன்போடு அழகாக எழுப்ப திருக்குறுங்குடி
#சுந்தர_பரிபூரண_நம்பி
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னோடு ஆனந்தமாக

குள்ளக்குளிர குடைந்து நீராட
யமுனைத்துறைவன் #பாங்கே_பிகாரி
என்னோடு எனக்காக இருக்கிறார்.

நான் சொன்னபடி செய்யவும்,
என்னோடு எல்லா இடத்திற்கு வரவும்,
திருவெஃகா
#சொன்ன_வண்ணம்_செய்த_பெருமாள் என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னை உரிமையோடு தொட்டுப்
பேசவும், என்னோடு விளையாடவும்
பண்டரீபுரம்

#விட்டலன்_பாண்டுரங்கன்
என்னோடு எனக்காக இருக்கிறான்.

எனக்கு பொழுது போகாத
சமயங்களில் என்னோடு உட்கார்ந்து பேச தென்திருப்பேரை
#மகர_நெடுங்குழைக்காதர்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

எனக்கு வேண்டிய உபதேசங்களைச்
சொல்லித்தரவும், என்னைக் குளுமையாக வைக்கவும் எப்போதும்
பத்ரிகாஸ்ரமம்

#நாராயணன் என்னோடு எனக்காக இருக்கிறார்.

எனக்கு எல்லா ஆழ்வார்களையும்
தரிசிக்க வைப்பதற்கும், பூமியில் வாழ எல்லா வளங்களையும் தருவதற்கும்,
ஸ்ரீரங்கம் #ரங்கராஜன் என்னோடு எனக்காக இருக்கிறார்.

நான் கொஞ்சி மகிழவும், எனக்கு அன்புத் தொல்லை தரவும், குருவாயூர்
#உன்னி_க்ருஷ்ணன் என்னோடு

என்னோடு எனக்காக இருக்கிறான்.

என்னோடு கடற்கரையில் காலார நடந்து கொண்டு, வயிறு குலுங்க சிரிக்க வைக்க, திருக்கடல்மல்லை
#ஸ்தல_சயனப்_பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னிடம் தைரியமாகப் பொய்
சொல்ல, என்னை உரிமையோடு
மத்தால் அடித்துத் திருத்த, உடுப்பி
#ஸ்ரீக்ருஷ்ணன் என்னோடு எனக்காக

இருக்கிறான்.

எனக்காக தூது செல்ல, எனக்காக வாதாட, திருப்பாடகம்
#பாண்டவர்_தூத_பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

எனக்கு மோக்ஷத்தைத் தர, என் மனதிற்கு சாந்தி தர, எனக்கு புகழைத் தர, திருவனந்தபுரம்
#ஸ்ரீ_அனந்தபத்மநாப_ஸ்வாமி
என்னோடு எனக்காக இருக்கிறார்.

இத்தனை பேர் என்னோடு இருக்க,

நான் எதைப்பற்றி கவலைப்பட வேண்டும்? இன்னும் இது போன்று எனக்காக நிறைய பேர் இருக்க நான் #ஆனந்தத்தில் நீந்திக் களித்துக் கொண்டு இருக்கிறேன். எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறேன். எப்போதும் ஆனந்தமாகவே இருப்பேன்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling