Profile picture
, 27 tweets, 4 min read Read on Twitter
ராபர்ட் கிளைவ் - 18

அன்று நவம்பர் 22, 1774ம் ஆண்டு லண்டனை உலுக்கிய நாள்

ஆம், அமெரிக்க சுதந்திர போராட்டத்தை ஒடுக்கி ஜார்ஜ் வாஷிங்கடனை வழிக்கு கொண்டுவர கிளைவினை அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானத்து அவரிடம் தகவலை சேர்க்க சென்ற பொழுதுதான் அந்த அதிர்ச்சி செய்தி வந்தது
அந்த மாவீரன் கிளைவ் தற்கொலை செய்திருந்தான், எத்தனையோ களங்களை கண்ட அந்த மாவீரன்,எத்தனையோ அற்புத வெற்றிகளை பெற்ற அந்த அற்புத வீரன் சிறிய கத்தியால் தன் கழுத்தை அறுத்து இறந்திருந்தான்

எந்த லண்டனில் இருமுறை தற்கொலை முயற்சியில் தோற்று இந்தியாவிற்கு கூலிக்காரனாய் சென்று பெரும் அரசனாய்
திரும்பினானோ அந்த லண்டனில் இம்முறை தற்கொலை செய்திருந்தான்

சிலரின் ஜாதக அமைப்பு உள்நாட்டில் பிச்சைகாரனாகவும் வெளிநாட்டில் ராஜாவாகவும் வாழவைக்கும் என்பார்கள், கிளைவிற்கு அந்த ஜாதகமாக இருந்திருக்கலாம்

கிழக்கிந்திய கம்பெனி அலறியது, ஏதோ விசாரணை செய்தோம் அதற்காக அவரை விட்டுவிடவா
போகின்றோம்,மற்ற ஊழியர்களை கட்டுக்குள் வைக்கத்தான் இவரை விசாரித்தோம் என சோகத்தில் மூழ்கியது

பிரிட்டன் ராணுவமோ இனி அமெரிக்க சுதந்திரத்தை தடுக்க முடியாது,கிளைவினை தவிர வாஷிங்டனை தடுக்க யாராலும் முடியாது என திகைத்து நின்றது

இந்தியாவில் எப்படி வாழ்ந்தவன் கிளைவ்,அவன் முட்டளவு
தங்கமும் வைரமும் கொட்டி வணங்கினர் மன்னர்கள், அவன் குதிரையினை வணங்க கூட பெரும் வரிசை இருந்தது

அப்படிபட்ட கிளைவின் இறுதிமரியாதை சரியாக இல்லை, காரணம் அக்கால கிறிஸ்தவமுறைபடி தற்கொலை என்பது பெரும் பாவம்,கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் முறைபடி அடக்கம் செய்யமாட்டார்கள்
இதனால் அவனுக்கு பெரும் மரியாதையும் கிடையாது,பெரும் கல்லறையும் இன்றுவரை கிடையாது

ஆனால் உள்ளுக்குள் ஒவ்வொருவரும் அழுதார்கள், கதறி கதறி அழுதார்கள்

எப்படிபட்ட மாவீரன் கிளைவ்?

அவர்களின் மால்பெரா முதல் உல்ப் என பிரசித்தி பெற்ற தளபதிகளின் மொத்த உருவமாய் அவனை கண்டார்கள்
ஒரு சாதாரண கூலியாளாய் இந்தியா சென்றான்,டூப்ளேயின் திமிரும் ஆங்கிலேயரை அவன் மட்டமாக நடத்தியதுமே கிளைவ் எழும்ப காரணம்

அப்பொழுதும் கிளைவ் டூப்ளேயினை அடக்கத்த்தான் போர்களம் வந்தானே தவிர, இந்தியாவினை ஆளும் ஆசை எல்லாம் இல்லவே இல்லை

ஆர்காடு நவாபான முகமது அலிதான் கிளைவ் ஆட்சியினை
பிடிக்க முதல்காரணம்,அவனின் சூழலை கிளைவ் பயன்படுத்தி கொண்டான்

கிட்டதட்ட 150 ஆண்டுகால வணிகத்தினை மட்டும் ஒழுங்காக பார்த்த பிரிட்டிசாருக்கு, எக்காலமும் இங்கு வியாபாரம் தவிர எதுவும் சாத்தியமில்லை என எண்ணிய பிரிட்டிசாருக்கு இங்கு ஆளும் சாத்தியம் உண்டென கிளைவே காட்டினான்
ஆற்காடு சமஸ்தானத்தை வென்று ஆங்கில ஆட்சிக்கு அடிகோலினான் கிளைவ்

அப்படியே வங்கத்தின் சிராஜ் உத்தவ்லாவினை சாய்த்து ஆங்கில ஆட்சியினை ஸ்திரபடுத்தினான்

ஆந்திரா,ஒரிசா என தொடர்ந்து அடித்து கிழக்கு கடற்கரை முழுக்க ஆங்கில கொடி பறக்க விட்டிருந்தான் கிளைவ்

அவன் இல்லை என்றால் இங்கு ஆங்கில
ஆட்சியுமில்லை,ஒன்றுமில்லை. மூல காரணம் அந்த கிளைவ்

அந்த மாவீரனே அன்று மரணித்து கிடந்தான்,அவன் சாகும் அளவு அவன் மனதை பாதித்த சம்பவம் என்ன?

கிளைவிடம் ஒரு விஷேஷ குணம் இருந்தது,தன்னை சார்ந்தவர்கள் பாதிக்கபடும்பொழுது அவன் முழுக்க அவர்களை காப்பதிலே மாறிவிடுவான்
அவர்களை காக்க முடியவில்லை என்றால் அவன் மன கொந்தளிப்பும்,அந்த ஆக்ரோஷமும் எல்லை மீறியதாகிவிடும்

சென்னை கோட்டையில் தன்னையும் தன் கூட்டத்தையும் கைதியாய் இழுத்து சென்ற டூப்ளேயினை பழிவாங்கும் முன் அந்த கைதிகள் முகம் தன் முன் நிழலாடுவதாய் சொன்னான், அந்த வெறிதான் அவனை மாவீரனாக்கி
டூப்ளேவினை முடக்க வைத்தது

வங்கத்து நவாப் 150 ஆங்கில கைதிகளை இருட்டறையில் சித்தரவதை செய்து கொன்ற காலங்களில்,அந்த ஆங்கிலேயர்கள் எல்லாம் பேயாக மாறி தன்னை தூங்கவிடாமல் செய்கின்றார்கள் என அவனே சொல்லி,புகழ்பெற்ற பிளாசி யுத்ததை நடத்தி நவாபினை பழிவாங்கி இருக்கின்றான்
அப்படிபட்ட கிளைவின வங்கத்து பஞ்சமும்,அந்த பட்டினி சாவுகளும் மிகவும் பாதித்துவிட்டன‌

கம்பெனிக்கோ அதன் விசாரணைக்கோ அவன் அஞ்சவில்லை,மாறாக வங்கத்து மக்களை தான் காப்பாற்றவில்லை என்ற குற்ற உணர்வு அவனை வாட்டிற்று

தான் இங்கு வந்திருக்க கூடாது என்றும்,அம்மக்களை தானே கொன்றுவிட்டதாகவும்
புலம்பிகொண்டே இருந்தான்

ஆம் அந்த மக்களை தன் மக்களாகவே கருதியிருக்கின்றான்.

அவர்கள் போக்கில் மிக வசதியாக வாழ்ந்த மக்களை செயற்கை பஞ்சத்தை உருவாக்கி கொன்றதன் மூல காரணம் தானே என பொறுப்பேற்றான்

அந்த பெருந்தன்மையான மனம் அவனுக்கு இருந்திருக்கின்றது

அந்த மன உளைச்சல் அதிகமாகியது,
அது இன்னொரு மன்னனால் என்றால் பழி தீர்த்திருப்பான், கம்பெனியில் இவன் காட்டிய வழியில் வந்த பஞ்சம் அல்லவா? யாரை பழிவாங்க?

தன்னைதானே தற்கொலை செய்து கொண்டு பழிவாங்கினான் கிளைவ்

அந்த மாவீரனின் வரலாறு இத்தோடு முடிந்தது

ஆனால் அவன் தொடங்கி வைத்த இந்திய கைபற்றல் இன்றுவரை முடியவில்லை,
கிளைவினை தொடர்ந்து காரன் வாலிஸ்,லாரன் ஹேஸ்டிங் என பலர் வந்தனர்,வங்கத்தை கிளைவ் பிடித்து பலமான அஸ்திவாரம் இட்டிருந்ததால் டெல்லி,பஞ்சாப் என அவர்கள் கைபற்ற எளிதானது

திப்பு சுல்தானை வீழ்த்தி அடுத்த 30 ஆண்டுகளில் மொத்த இந்தியாவினையும் கைபற்றியது கம்பெனி

அடுத்த கொஞ்ச காலங்களில்
கம்பெனி காட்டு ஆட்சி நடத்துவதாக வந்த புகாரை அடுத்து பிரிட்டன் அரசே இந்தியாவினை எடுத்துகொண்டது

இதற்கெல்லாம் மூல காரணம் அந்த கிளைவ்,ஆம் செத்து கிடக்கும் இந்த கிளைவ்

கிளைவின் மரணம் அமெரிக்க சுதந்திரத்தை சாத்தியபடுத்தியது, கிளைவ் இறந்த அடுத்த இரு வருடங்களில் அமெரிக்கா
சுதந்திர நாடானது, பிரிட்டன் அரசின் கடைசி நம்பிக்கையாக கிளைவ் இருந்தார்,அவர் இறந்தபின் அமெரிக்காவின் விதி மாறிற்று

இந்தியா,அமெரிக்கா என இருநாடுகளின் தலை எழுத்தை மாற்றியவன் கிளைவ்

வரலாற்றில் கிளைவிற்கு இணையான வீரன் யாருமில்லை, வெறும் கூலிக்காரனாய் சேர்ந்தவன்,ஒரு அவசரத்தில்
போர்களம் கண்டானே தவிர அனுபவம் ஏதுமில்லை

ஆனால் போர்களத்திலே போரை கற்றான்,கற்று சண்டையிட்டான். அவனிடமிருந்த அந்த தைரியம் அவனை உயர்த்தியது

இந்த ஓர்மிசென்ட்,மீர்ஜாபருடன் பழகும் பொழுது வஞ்சகம் தந்திரம் எல்லாம் கற்றுகொண்டான்

தைரியம்,சாதுரியம், முன்னெச்சரிக்கை,தந்திரம் என சகல
குணங்களையும் வளர்த்து மிகபெரிய தளபதியாய் உயர்ந்தான்

வரலாற்றில் அவனுக்கு ஈடு யாருமில்லை,அவன் சாதனையினை நெருங்க கூட யாருமில்லை

ஒரே ஒருவனை சொல்ல முடியுமென்றால் மாவீரன் நெப்போலியனை சொல்லலாம், ஆனால் நெப்போலியன் ராணுவ கல்லூரியில் பயின்றவன்,நிரம்ப படித்தவன்
ஆனால் கிளைவிற்கு அனுபவம் ஒன்றே பாடம்

பிரிட்டன் வரலாற்றில் இன்றும் தனித்து நிற்கின்றான் கிளைவ், லண்டனில் மாபெரும் சிலை எல்லாம் உண்டு

ஆசியாவில் எங்கள் சாம்ராஜ்யம் அமைய அவனே முழுகாரணம் என்றும் மாபெரும் அடையாளம் என்றும் அவனை கொண்டாடுகின்றார்கள்
சென்னை கோட்டையில் அவன் வாழ்ந்த மாளிகை இன்றும் உண்டு,அவன் திருமணம் செய்த அந்த ஆலயமும் உண்டு

மிக மிக சுவாரஸ்யமான வரலாறு அவனுடையது,சென்னை ஜார்ஜ் கோட்டையில் ஒரு காலத்தில் கிளைவின் கொடி பறந்தது

சென்னை கோட்டையினையும் கிளைவினையும் பிரிக்க முடியாது,
கிளைவின் போர்களத்திற்கும் வீரத்திற்கும் நெப்போலியனை ஓரளவு ஒப்பிட்டு காட்ட முடியும்

கிளைவ் மாபெரும் வரலாறு, இந்திய வரலாற்றை மாற்றி வைத்த பெரும் வரலாறு.

அவனை பற்றி பேசும்பொழுது பின்தொடர்ந்த அனைவருக்கும் நன்றி 🙏

(முற்றும்)

(மருதநாயகம் கதை படமாக வந்தால் அதில் கிளைவும் வருவார்,
மருதநாயகத்தை கண்டெடுத்தவர் கிளைவ்தான்.

அவனை மாவீரனாக்கி மதுரையினை ஆள வைத்ததும் அவர்தான்

ஆனால் வங்கப்போர் முடிந்து சில விசாரணை சிக்கல்களில் கிளைவ் மாட்டியபொழுது, கம்பெனியார் கடுமையாக இந்தியாவினை சுரண்டிய பொழுது மருதநாயகத்திற்கும் பிரிட்டிசாருக்கும் மோதி அவன் கொல்லபட்டான்
கிளைவ் கவனத்திற்கு வராமல் கொல்லபட்டவன் மருதநாயகம், அவர் களத்தில் இருந்தால் அவனை விட்டிருக்கமாட்டார்

தன்னை போலவே உருவான அவன் மேல் அவருக்கு தனி பாசம் இருந்தது

இதை எல்லாம் கமலஹாசன் தன் படங்களில் சொல்வார் என பார்த்தோம்,அவரோ இனி மய்யத்தில்தான் நடிப்பாராம்
கிளைவினை மாவீரனாக்கியது தமிழகம் அதுவும் கடலூர் கோட்டையும்,சென்னை கோட்டையுமே அவன் மாவீரனாக உருவாகிய இடம்

ஆற்காடே அவன் களம் கண்டு யுத்தம் பயின்ற இடம்.

தமிழகத்திற்கும் அவனுக்குமான உறவு பிரிக்க முடியாதது
சென்னை பாண்டிச்சேரி செங்கல்பட்டு ஆரணி ஆற்காடு எல்லாம் அவனை உருவாக்கிய இடங்கள்.

இங்குதான் அவன் போரை போரிலே கற்றான்

அவன் வரலாறு எழுதப்படும் இடமெல்லாம் தமிழகமும் இருக்கும் என்பதுதான் சிறப்பு )

மருதநாயகம் 👇

Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Wolfrik
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!