நீட் ஏன் வேண்டாம் - கிராமப்புற மாணவர்கள் சாதிக்கமுடியாது

நவோதயா பள்ளிகள் ஏன் வேண்டாம் - அதுல ஹிந்தி இருக்கு, கிராமப்புற மாணவர்கள் ஏழை, சோத்துக்கே கஷ்டப்படறவன்க்கு ஹிந்தி ஒரு கேடா?

புதிய கல்வி கொள்கை ஏன் எதிர்க்கறீங்க - கிராமப்புற மாணவர்கள் மூணு மொழி எல்லாம் படிக்க முடியாது....
அப்புறம் அவனுக்கு தேர்வு எழுதறது எல்லாம் கஷ்டம், 8வது வரைக்கும் பாஸ் பண்றது கட்டாயம். தொழில்கல்வி எல்லாம் சொல்லி குடுத்தா அவன் குலத்தொழில் தான் கத்துக்குவான்.

மொத்ததில் கிராமப்புற மாணவர்கள், ஏழைகள், படிப்பறிவில் தாழ்ந்தவர்கள், குழத்தொழில் எல்லாம் கேவலமானது, அவர்களுக்கு..
கையேழுத்து போடும் அளவுக்கு படித்தால் போதும்.

என்ன லாஜிக்ங்க இது, இல்லே என்ன கொடுமைங்க இது.

பொதுவா கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு ரோஷம் அதிகம்ன்னு கேள்விபட்டு இருக்கேன், இப்படி உங்களை ஒவ்வொரு மீடியாவும், அரசியல்வாதியும், வேடதாரிகளும் கேவலப்படுத்தறாங்களே..
இதுக்கு பதில் நீங்க தானே சொல்லணும், நீங்க எல்லாம் உழைத்து முன்னேறும் தன்மை உள்ளவர்கள் இல்லையா? நம் நாட்டின் முன்/இந் நாள் ஜனாதிபதிகள், முக்கிய தலைவர்கள், அரசு அதிகாரிகள், கார்பரேட் நிறுவன தலைவர்கள் எல்லாம் கிராமத்தில் இருந்து வந்தவங்க தானே.

அவர்கள் எந்த விதத்தில் குறைச்சல்?
கிராமப்புற மாணவர்கள் தான் இன்னைக்கு அதிக அளவில் இராணுவத்தில் இருக்கிறார்கள், ஹிந்தியில் வெளுத்து கட்டுகிறார்கள்.

அப்போ அவங்களுக்கு மொழி ஒரு பிரச்சனை இல்லை தானே.

திலகவதி என்னும் @PTTVOnlineNews நெறியாளர் அப்பட்டமாக சோத்துக்கு வழியில்லாதவனுக்கு ஹிந்தி ஒரு கேடான்னு கேட்பது ..
எவ்வளவு பெரிய அநீதி. இதை எல்லாம் யார் கேட்பர்.

நவோதயா பள்ளிகள் உண்டு உறைவிட பள்ளிகள் என்ற உண்மை கூட அறியாத இவர்கள் எல்லாம் எதில் சேர்த்தி.

மாவட்டத்துக்கு மூணு தானே என்று ஒரு உபகேள்வி. போன வாரம் கூட இரு புதிய மாவட்டங்கள் உதயமானது.
இன்று பரப்பளவில் மாவட்டங்கள் சிற்றூர் அளவிற்கு
சுருங்கி போனதே. அது மட்டுமல்ல இன்று நகரமயமாக்கல் என்ற ஆக்டோபஸ் வேகமாக கால்களை பரப்பி வரும் வேளையில் இவர்கள் மட்டும் கிராமப்புற மாணவர்கள் என்று ஒதுக்குவது ஏன்.

சென்னையில் இருக்கும் பெரிய வேடதாரிகளுக்கு என்றுமே கிராமம் என்றால் பஞ்சபராரிகள் வாழும் இடம் என்ற எண்ணம். எங்கே அவர்கள்..
இவர்களை நெருங்கி விடுவாரோ என்று பயம். அவர்களுக்கு உதவுவதாக நினைத்து அவர்களை தாழ்மைபடுத்துகின்றனர் இவர்கள்.

இன்னொரு உண்மை, இன்று புதிய சிபிஎஸ்சி, இன்டெர்நேஷ்னல் பள்ளிகள் இடப்பற்றாகுறை காரணமாக அருகில் உள்ள கிராமங்களில் கிளை பரப்பி வருகின்றதே, அங்கேயும் வசதியுள்ள மாணவர்கள்
படிக்கின்றனரே, வசதியில்லாதவன் நகரமாயினும் கிராமமாயினும் அரசு பள்ளியில் தானே படிக்கின்றனர். அப்போ வசதி இல்லாதவர்கள் மும்மொழி படிக்க வக்கில்லாதவர்கள் என்று சொல்வது நியாயமா. அவர்களுக்கு அந்த வாய்ப்பை தடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் குடுத்தது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞன் வேலை கேட்டு வந்தான், ITI படித்து உள்ளதாக சான்றிதழ் காட்டியதும், தமிழில் விண்ணப்பம் எழுதி தருமாறு கேட்டதற்கு, ஓரிரு வாக்கியங்களுக்கு மேல் எழுத தடுமாறினான். ஆங்கில வழி கல்வி கற்றவனோ என்று..
உங்களை போலவே நானும் எண்ணி ஆங்கிலத்தில் எழுத சொன்னால், பெயர் மட்டுமே எழுத தெரியும் என்று உண்மை ஒப்புவித்தான். ஒரு நிமிடம் தூக்கிவாரி போட்டது.

இது எதோ லட்சத்தில் ஒருவர் என்று நினைக்க கூடும், ஆனால் எண்ணற்ற அரசு பள்ளி மாணவர்கள் 8வது வரை இப்படி தான் கற்பிக்க படுகின்றனர் என்பதே
நிதர்சனம். எந்த மொழியுமே கற்காதது அந்த மாணவன் குற்றமா, ஆசிரியர் குற்றமா, இல்லை பாடத்திட்டத்தின் குற்றமா.

அவன் கற்றது சரியா பிழையா என்று ஒரு மதிப்பீடு இருந்திருந்தால் என்ன தவறு நேர்ந்திருக்கும்.

அதே மாணவன், ITI எப்படி தேறினார் என்பது சொன்னால் அது இன்னும் கொடுமை. ...
வேடதாரிகள் தங்கள் பிள்ளையை உலகளாவிய பள்ளிகளில் படிக்க வைத்துவிட்டு ஊரான் பிள்ளைக்கு மட்டும் கள்ளிப்பால் கொடுப்பது என்ன நியாயம்.

படிப்பறிவினை பற்றி எதாவது சொல்ல வந்தால், சிஸ்டம் சரியில்லை என்று சொல்லிவிட்டு அதை நிவர்த்தி மட்டும் செய்யவே கூடாது என்பது ஓரவஞ்சனை தானே?
வெறும் 3000 மாணவர்கள் பயன்பெறும் மருத்துவ படிப்புக்கு மட்டுமே பேசாமல், ஏராளமானோர்
கற்கும் கலைஅறிவியல் கல்விக்கு குரல்கொடுக்க சொன்னால், மருத்துவம் கிடைக்காதவன் தானே பிகாம் படிக்கிறான் என்று பேசும் அறிவிலிகளை என்னவென்று சொல்வது.

தொழிற்கல்வி படித்தால் என்ன..
தவறு என்ற கேள்விக்கு அது குலத்தொழிலை ஊக்குவிக்கும் என்று சொல்வது பத்தாம்பசலித்தனம். இவர்கள் மறைமுகமாக குறிப்பிடும் தொழில்கள் இன்று சாதி குலம் கடந்து அனைவரும் கற்று பல்வேறு அலங்கார நிபுணர்களாக ஜொலிக்கின்றனர். இன்று டெய்லரிங் படிக்காத குடும்ப தலைவிகள் குறைவே.

வாய்ப்புகள் ஏராளம்
ஆனால் அனைவரும் ஒரே விஸ்காம் மட்டும் படித்து போட்டியிட்டால், திலகவதிகள் திணற வேண்டி வரும்.

மொத்தத்தில் இன்னொரு முறை கிராமப்புற மாணவர்கள் லாயக்கு இல்லாதவர்கள் என்று இனி யாரெனும் சொன்னால், பதில் சொல்ல வேண்டியது உப்பு போட்டு சாப்பிடும் எனதருமை கிராமப்புற
சந்ததிகளே.

சற்றே மூர்க்கமாக வார்த்தையில் பதில் சொல்லி, செயலில் ஜெயித்து காட்டுவீர்கள் என்று திடமாக நம்பும் உங்கள் நிஜமாகவே நேசிக்கும் உற்ற நகர்ப்புற தோழன். வாழ்க ஜனநாயகம். வளர்க இந்தியா.
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Mugundan 🍁 முகுந்தன் 🇮🇳
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!