44 பேரின் உயிரை குடித்த ஒரு சம்பவத்துக்கு இந்தியா பதிலடி குடுத்திருக்குது.

ஒரு இந்தியனா #IAF ன் சாதுரியத்தை, துல்லிய தாக்குதலை நினைத்து எனக்கு பெருமையே.

ஆனா தனிப்பட்ட மனுஷனா இதை பெருமையா நினைக்கல. என் குடும்பத்தில் ஒருத்தரை அநியாயமா கொலை செஞ்சவங்கள பழிதீர்த்த வெறிதான் கொஞ்சம்
அடங்கிருக்கு. அந்த மசூத் அசார் இறந்துட்டான்னு வரும் செய்தி தான் எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தோசத்தை தரும்.

ஆனா அதைவிட வேதனை ரொம்ப அதிகமாயிருக்கு. மோடி எனக்கு புடிக்கும், ஒரு அரசியல்வாதியா.

ஆனா அதே நேரம் இந்த தாக்குதல் மன்மோகன் சிங் ஆட்சியில நடந்திருந்தாலும் நான் இதே கௌரவம்
இதே பெருமை, இதே சந்தோசம் அடைஞ்சிருப்பேன். ஏன்னா நான் முதல்ல இந்தியன், அப்புறம் தான் ஹிந்து, தமிழன், இந்த மாவட்டதுக்காரன், இந்த ஜாதிக்காரன், இந்த அரசியல்கட்சி சார்பாளன் எல்லாம்.

இப்படி ஒரு தாக்குதல் நடக்கவே இல்லே, போற போக்குல ரெண்டு குண்டு கீழே விழுந்திருச்சுன்னு பாகிஸ்தான்
சொல்றதுல ஆச்சரியமே இல்லே. ஏன்னா அடி வாங்கினவன் அந்த அவமானத்தை மறைக்க இப்படி தான் சொல்லுவான்.

ஆமா இந்தியா தாக்குதல் நடத்திச்சு, நாங்க ஏமாந்திட்டோம்ன்னு பாகிஸ்தான் சொன்னா தான் ஆச்சரியமே.

இனி என்ன நடக்கும், அவனுக இதை விட அதிகமா ஏதாவது பண்ண முயற்சி பண்ணுவாங்க, ஆனா எனக்கு என்னோட
அரசாங்கம் மேலயும், என்னோட பாதுகாப்பு படை மேலயும் பெரிய அளவுல நம்பிக்கை இருக்கு.

கண்டிப்பா இப்படி பாகிஸ்தான் மாதிரி தூங்கிட்டு இருக்க மாட்டாங்க, 120 கோடி பேர்ல ஓவ்வொருத்தாரையும் பாதுகாப்பாங்கன்னு நம்பறேன்.

அப்புறம் என்ன வேதனை, வலின்னு கேக்கறீங்களா?
இந்த பாழாப்போன ஊடங்களும், சில சுயநல அரசியல்வாதிகளும் தான்.

வடக்கே இந்த #SurgicalStrikes2 க்கு அமோக வரவேற்பு. ஒரு சில பாகிஸ்தான் ஆதரவு ஊடகவியலாளர்களும், சில எதிர்க்கட்சிகளும் என்னதான் உள்ளுக்குள் ஆத்திரம் இருந்தாலும் நவதுவாரங்களையும் மூடிகொண்டு #IAF பாராட்டினர்.

ஆனால் .. எழுத
முடியவில்லை. மனம் குமறுகிறது.

என்ன தான் கெஜ்ரிவால் போன்ற சில அரசியல்வாதிகள் வெறுமனே கண்துடைப்பு உண்ணாவிரத நாடகம் நடத்தினாலும்

அவர்களுக்கும் மக்களின் உணர்ச்சிக்கு பணிய வேண்டிய நிலமை.

நாட்டுப்பற்றுக்கு சற்றும் குறைவில்லாத தெற்கில்?

1. அரசியல் ஆதாயம் வேண்டி நடந்ததா?
2. இதற்கு என்ன ஆதாரம்?

3. ஏன் உயிர் இழப்புகளை கணக்கெடுக்கவில்லை.

4. பாகிஸ்தான் தான் சொல்லுகிறதே, இப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று? அப்புறம் எப்படி நம்புவது.

ஊர்ப்பக்கம் சொல்லுவாங்க, அறிவு ஜாஸ்தி என்றால் மூளை காதுவழியே வரும்ன்னு

அப்படி தான் ஆகிடுச்சு.
தாக்குதல் நடந்த அடுத்த நாள், இங்கே திமுகல இருக்கிற @asaravanan21 சரவணன் அண்ணாதுரை என்னும் கோட் போட்ட கோமான் பாகிஸ்தான்ல அப்படி குண்டு போடவே இல்லே, அப்படியே போட்டாலும் ஏன் எவ்வளோ பேர் செத்தானுகன்னு ஏன் எண்ணி பாத்திட்டு வரலேன்னு ஆரம்பிச்சார்.

இவங்களுக்கு எல்லாத்துக்கும் கணக்கு
வேணும். தப்பே இல்லே. ஆனா துணைக்கு அவரோட பாகிஸ்தான் நண்பர்ன்னு ஒரு மொன்னை ஸ்க்ரீன் ஷாட் தூக்கிட்டு வர்றார்.

இந்திய அரசாங்கத்துக்கு இப்படி முன்னமே கணக்கு கேப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா இவங்கள மாதிரி ஒரு நாலு பேர அங்கே கொண்டு இறக்கி விட்டுட்டு எண்ண சொல்லிருக்கலாம்.

பரவால்ல அடுத்த
தடவ பாஸ்போர்ட் விசா எல்லாம் ரெடி பண்ணி வைங்க @asaravanan21, உங்க நணபரோட போய் சுத்தி பாருங்க.

நடந்ததே சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், கண்ணிமைக்கும் நேரத்தில மின்னல் வேக தாக்குதல். துல்லியமா இங்கே தான் தீவிரவாதிக இருக்காங்கன்னு தெரிஞ்சு நடந்த தாக்குதல்.

300 பேர் இறந்தாங்களா, 30 பேர்
இறந்தாங்களான்னு எனக்கு தெரிய வேண்டியது இல்லே. ஒரே ஒரு தீவிரவாதி செத்தா கூட போதும்.

அப்புறம் அரசு வேணும்னா என்ன வேணா சொல்லலாம். ஆனா நம்ம பாதுகாப்பு படை சொல்றத நம்பாமா, நீங்க யாரோ ஒரு பாகிஸ்தான் மொன்னை சொல்றதை நம்ப சொல்றீங்க. இது எப்படி இருக்குன்னா, இது தான் உங்கப்பான்னு
உங்கம்மா சொல்றதை நம்பாத மாதிரி இருக்கு.

எவ்வளவு விஷம் உங்க மனசுல? அவ்வளோ கேவலாமாவாட இருக்கீங்க. நீங்க எந்த கட்சி சார்ந்தவனா இருந்தாலும் பொதுவா நாம எல்லாருமே இந்தியன், தமிழன் தானேடா?

ஒரு துப்பாக்கி குண்டுக்கே போலீஸ்ல கணக்கு சொல்ல வேண்டிய சட்டம் இருக்கையிலே, 1000கிலோ குண்டுக்கு
எப்படி பொய் சொல்ல முடியும் நம்ம படைக்கு.

அப்புறம் அவ்வளோ பெரிய தாக்குதல் நடந்தா அந்த ஏரியாவே மண்மேடா தான் இருக்கும். அதுல எப்படி தலை கணக்கு எடுப்பாங்கன்னு கொஞ்சம் யோசிக்க வேண்டாம்.

350 கிலோ வெடிகுண்டுல செத்து போன என்னோட 44 சொந்தங்களையும் பீஸ் பீஸா பார்சல் பண்ணி தான்டா
அவங்க குடும்பத்துக்கு குடுக்க வேண்டி இருந்தது. அது எவ்வளவு பெரிய வலி?

ஆனா கொஞ்சம் கூட கூச்சமே படாம தீவிரவாதிகள் யாரும் சாகலேன்னு வக்காலத்து வாங்கறீங்களே

நாளைக்கு நீயோ நானோ கட்சி மாறலாம், புடிச்ச தலைவர் பின்னாடி போகலாம்.

ஆனா தாய்நாடு ஒன்னு தானே?

இப்படி தாய்நாட்டை சந்தேகப்பட்டா
எப்படி உன்கூட கைகுலுக்க முடியும்.
அண்ணன் தம்பியா பழக முடியும்?

இப்படி உன்ன மாதிரி ஆளுகளை தூண்டிவிட்டுட்டு கண்டுக்காம இருக்கிற @mkstalin எல்லாம் என்ன மாதிரி தலைவர்.

காசுக்கு ஆசைப்படுங்க, வேசிக்கு ஆசைப்படுங்க,

ஆனா தயவு செஞ்சு தின்ன சோற்றுக்கு நன்றி மறக்காதீங்க
சொந்த நாட்டுக்கு துரோகம் செய்ய ஆசைப்படாதீங்க.

ஏன் தின்ன சோறு பத்தி சொல்றேன்னா?
இன்னைக்கு நீ திங்கிற சாப்பாடு, போடற கோட் எல்லாதலயும், என்னோட வரி பணம் கலந்து இருக்கு. ஒவ்வொரு இந்தியனோட வியர்வையும் கலந்து இருக்கு.

கொஞ்சம் பெருசா போய்டுச்சு.
அடுத்து இதா வர்றேன், ஊடங்கங்கள்.

யாரோ மகான் முன்னாடி சொல்லிட்டு போய்ட்டார், ஜனநாயகத்தின் நாலாவது தூண் பத்திரிக்கைகாரன் பேனான்னு

இன்னைக்கு பேனாவே இல்லே, எல்லாம் கம்புயூட்டர்ல டைப் பண்ணிக்கிறாங்க.

அதனால தானோ என்னமோ, காலத்துக்கு தகுந்த மாதிரி நாக்குல நரம்பு இல்லாம பேசறாங்க
கைக்கு வந்த மாதிரி எழுதறாங்க.

தினத்தந்தி பேப்பர் ரொம்ப வருஷமா இருக்கு, சிந்துபாத் கதை மாதிரி.

ஆனா அந்த தொன்மையை அழிக்கிற வேலையை இன்னைக்கு அவங்களே ஆரம்பிச்சிட்டாங்க.

இந்தியாலயே முதல்ல துல்லிய தாக்குதல் அரசியலுக்கு வேண்டி நடந்ததான்னு அறிவாளிதனமா கேள்வி கேட்டது @ThanthiTV தான்.
கர்னல் ஹரிஹரன் கிட்ட இது உண்மையா, அரசியலுக்கு நடந்ததான்னு கேக்க போக மனுஷன் மூஞ்சிலயே காறி துப்பிட்டார்.

TRP எத்திக்க நான் தான் கிடைச்சனான்னு கொந்தளிச்சு போய்ட்டார் மனுஷன்.

ஆனா அப்பவும் கொஞ்சமும் கூச்சப்படாம அதே கேள்வியை திரும்ப கேட்டது தந்திடிவியின் தரத்தை நல்லா காட்டுச்சு.
இப்போ தான் தெரியுது @RangarajPandeyR ஏன் அங்கிருந்து வெளியேறினார்ன்னு

ஆயுத எழுத்துல நெறியாளர் ஹரிஹரன் அதைவிட ஒரு படி மேல, எப்படி இப்படி கூசாம பேச முடியுது, கேக்க முடியுது.

பத்திரிக்கையாளர்களே உங்களுக்கு அறிவு அதிகம் தான். ஆனா இப்படி எல்லா விஷயத்திலயும் உங்க திறமையை காண்பிக்க
வேண்டாம்.

இன்னும் ஒரு சில ஊடகவியலாளர்கள், நம் ராணுவம், நமது வீரர்கள்ன்னு சொல்லத்தீங்கன்னு சொல்றது எல்லாம் வேற லெவல். ஏன்னா இவங்க பொதுவானாவங்காலாம்.

நாம நம்பனுமாம். உங்க மோடி எதிர்ப்பு இப்படி சொந்த நாட்டையே வேண்டாம் சொல்ற அளவுக்கு வந்திருச்சே.

வெட்கமா இருக்கு.
வாங்கிற சம்பளம், போட்ற ட்ரெஸ், இருக்கிற வீடு எல்லாம் இந்த நாட்டோடது.

பாகிஸ்தான் நாளைக்கு குண்டு போட்டா உன் வீட்டுக்கு மட்டும் சேதாரம் இல்லாம போட போறதில்லை.

அதே மாதிரி நமது வீரர்கள் உயிரை குடுத்து காப்பாத்தறது உனக்கும் சேர்த்தி தான்.
நீங்க பாகிஸ்தான் பிரதமர் பாத்து உணர்ச்சிவசபடாதீங்க,

நாங்க பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்களை பாத்து பொறாமை படறோம். இவ்வளோ நடந்தாலும் அவங்க நாட்டை விட்டு குடுக்கமா பேசறாங்க பாருங்க.
எவ்வளவோ விஷயத்தில தமிழனா பெருமை அடைஞ்சிருக்கேன்.

இன்னைக்கு ரெண்டு நாளா இங்கே நடக்கிறத பார்த்து வேதனை படறேன்.

இனியும் பேசணும், அபினந்தன் பத்தியும், அதுக்கு பின்னாடி இருக்கிற அரசியல் சாணக்கியதனம் பற்றியும்.

அதை விட அதிகமா இந்த பிரிவினைவாதிகள் பத்தியும்.

திரும்ப வர்றேன்
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Mugundan 🍁 முகுந்தன் 🇮🇳
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!