, 25 tweets, 3 min read Read on Twitter
நாடு முழுக்க அமுல்படுத்தப்பட்ட "ஜல்சக்தி அபியான்" திட்டம் தமிழக மாவட்டங்களில் முடுக்கிவிடப்பட்டுள்ளதை பார்க்கிறேன்.அதாவது ஆற்றில் வருகிற நீர்,மழை நீர் என எல்லாவற்றையும் முடிந்த வரை சேமித்து பூமிக்குள் கொண்டு செல்லும் முயற்சியை எடுத்துள்ளது மத்திய அரசு(1)

#jalshakthi #janshakthi
மழைநீர் சேகரிப்பு என்று அன்றைய முதல்வர் செல்வி.ஜெ கொண்டு வந்த திட்டம்தான் ஆனால் அது தேங்கிப் போய்விட்டது.இப்போது அதனை முறையாக அரசு முடுக்கிவிட்டுள்ளது.களிப்புகள் அதிகமாக குளங்களிலும்,வாய்க்கால்,
குட்டைகளிலும் இருக்கும் எனவே இதைத் தாண்டி நீர் கீழே இறங்குவது கடினம்(2)
நிறைய குளங்களை சுத்தப்படுத்தி அதில் உறைகிணறுகளை புதைத்து.வரும் காலங்களில் மழை நீரும்,வருகிற ஆற்று நீரும் பூமிக்கு செல்லும் வண்ணம் செய்திருக்கிறார்கள்.(3)
தமிழக மாவட்டம் தோறும் இரண்டு அதிகாரிகள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.நாளை அவர்கள் விவசாயம்,நீர்மேலாண்மை எல்லாவற்றிற்கும் ஆலோசனை வழங்கும் வகையில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.இது கட்சி கடந்து அனைவரும் பாராட்ட வேண்டிய பணி.(4)
எடப்பாடி அரசு முன்பெல்லோரையும் விட சிறப்பாகவே நீர்மேலாண்மை விஷயங்களை கையாள்கிறது.நிறைய குளம்,வாய்க்கால் நீர்வழி பாதைகளை சுத்தம் செய்து மீட்பதை கண் முன்னால் பார்க்க முடிகிறது.இத்தனை ஆண்டுகளில் கட்டாத பகுதிகளிலெல்லாம் தடுபணைகள் கட்டி முடித்திருக்கிறது.(5)
பல இடங்களில் வாய்க்கால்களை மையப்படுத்தி கல்வெர்ட்டுகள் கட்டப்படுகின்றன.எனவே மிகச்சிறந்த பணி.வாழ்த்துகள்.நிற்க.(6)
அடுத்தது நரேந்திர மோடியை யாரென்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.அவர் ஏதோ சீட்டை தேய்த்து ஆட்சியை காப்பாற்றிவிட்டு,தன் பிம்பத்தை நட்டுவிட்டு போகிறவர் அல்ல.தன் பணிகளின் மூலம் மக்கள் மத்தியில் விஸ்வரூபமெடுக்க வேண்டும் என்று நினைக்கும் தலைவன்.(7)
அவர் குஜராத்தில் முதல்வராக பணியாற்றிய நேரம் ஒன்றும் ஏதோ பொற்காலத்தை தொடருகிற மணிமகுட மாற்றமல்ல.பூகம்பம்,தீவிரவாத தாக்குதல்,மோசமான மத கலவரங்கள்,மிகப்பெரிய வெள்ளம்,தொடர் குண்டு வெடிப்பு என மக்களும்,உள்ளூர் வர்த்தகமும் தொலைந்து போன ஒரு மாநிலத்தை நிர்வகித்தவர்.(8)
ஆனால் அதே மாநிலத்தை பற்றி "குஜராத்தில் முதலீடு செய்யவில்லை என்றால் நீங்கள் ஒரு முட்டாள்" என்று ரத்தன் டாடாவை சொல்ல வைத்தார்.இது ஏதோ சாதரணமாக நடந்தது அல்ல அதற்கும் பின்னால் மோடியின் உழைப்பும்,அந்த மக்களின் பங்களிப்பும் மிகப்பெரிது.(9)
நிலநடுக்கம்,குண்டுவெடிப்பு,வெள்ளம் என்று மக்களின் துயரங்களுக்கு உரிய நீதியும்,மறுவாழ்வும் வழங்க அதிக சிரத்தை எடுத்துக் கொண்டார் நரேந்திர மோடி.(10)
மோடி பதவியேற்ற போது கிராமங்கள் முழுக்க பெரும்பாலும் டேங்கர் நீரை நம்பியே இருந்தன.விவசாயம் புறக்கணிக்கப்பட்டு சீர்குலைந்து கிடந்தது.அப்போதுதான் மழைநீர் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார்கள்,குஜாரத் மக்களை அதில் ஈடுபடுத்தினார்கள்.(11)
மழைநீர் சேகரிப்பிற்கு தடுப்பணைகள் கட்டுவதற்கு 60% அரசு தருவதாகவும்,மக்கள் 40% பங்களிப்பை தரும்படியும் வெளிப்படையாக கேட்டுக் கொண்டார்கள்.6 லட்சம் தடுப்பணைகளும்,மழைநீர் சேகரிப்பு குளங்களும் கட்டப்பட்டன இதன் வழியாகத்தான் நீர்மட்டம் உயர்ந்தது.(12)
மோசமான செளராஷ்டிர வறட்சிப் பகுதிகளில் கூட நீர்மட்டம் உயர்ந்தது சாதனை.தடுப்பணைகளை கவனித்துக் கொள்ள மக்களுக்கு பயிற்சி அளித்தார்கள்.(13)
"பஞ்சாமிர்த யோஜனா" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.அறிவு வளம்,ஆற்றல் வளம்,
மனித வளம்,ஆரோக்கிய வளம்,சமூக பொருளாதார வளம்,என இந்த வளங்களை உயர்த்துவதே அடிப்படை தேவை என்று கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை தகுதிக்கு ஏற்ப செயல்பட தொடங்கியது.(14)
அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும் இணைத்து நிர்வாகத்தை வெளிப்படையாக இயக்கினார்.அதற்கு "ஸ்வாகத்" என்றொரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.அதில் குடிமக்களும் மக்களும் துறை அதிகாரிகளும் நேரடியாக தொடர்புகொள்ளும் ஒரு முறைமையை கொண்டு வந்தார்.(15)
அதாவது மாதத்தின் 4 வது வியாழக் கிழமை சாதரண மக்கள் உயர் அதிகாரிகளிடம் தங்கள் பிரச்சனையை சொல்ல வேண்டும்.அந்த புகார்களை உடனே எடுத்து அதை கவனிக்கும் அதிகார மட்டங்களுக்கு உடனே மெயில் செய்து வைக்கப்பட்டு,அதற்கு மூன்று மணி நேரத்தில் உரிய பதிலை சொல்ல வேண்டும்.(16)
அந்த வியாழன் முதலமைச்சர் மாவட்ட அதிகாரிகளிடம் வீடியோ கான்பிரன்ஸில் வருவார்.சில பிரச்சனைகளுக்கான தீர்வை விசாரித்துவிட்டு அந்த விண்ணப்பதை மக்களிடமும் பேசுவார்.இப்படி முதலமைச்சர் நேரடியாக பங்கேற்பதால் பல குறைகள் உடனுக்குடன் நேர்மையாக அதிகாரிகளால் நிவர்த்தி செய்யப்பட்டது.(17)
அதைத்தாண்டி அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்தது.ஒவ்வொரு திட்டங்களை துவங்கும் முன் ஒரு விழாவாக முன்னெடுத்தது அரசு.'க்ருஷி உத்சவ்' என்று கடும் கோடைகளில் விவசாய விழாவை தொடங்கியது அரசு.அந்த மாதத்தில் அரசு அதிகாரிகள் மக்களை சந்தித்து பருவ காலத்திற்கு செய்ய வேண்டியதை விவாதிப்பர்-18
அதில் கல்லூரி மாணவர்களையும் ஈடுபடுத்தி நல்ல மண்,உரம்,விதைகளை பற்றிய பாரம்பரிய அறிவை விவசாயிகளிடம் இருந்து மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டது.பள்ளி மாணவர்களை வைத்து மண்வள அட்டை திட்டத்தை விரிவுபடுத்தியது அரசு.அதற்கு அவர்களுக்கு அளவான சம்பளம் கொடுத்தது.(19)
தங்கள் மண்ணின் வளம் எப்படிப்பட்டது என்று ஒவ்வொரு விவசாயியையும் உணர வைத்து Smart work செய்ய வைக்க உதவியது இந்த பணி.கால்நடைகளுக்கு அடிக்கடி முகாம் நடத்தியது இதன் மூலம் கால்நடைகளை விசேஷ வியாதிகள் கண்டறியப்பட்டு அவற்றை நீக்கியது.இது எல்லா மாநிலத்துக்கும் முன் மாதிரியான செயல்.(20)
"ஜோதி கிராம யோஜனா" என்ற திட்டத்தின் மூலம் 18 ஆயிரத்து 65 கிராமங்களுக்கு 24 நேரமும் 3 Phase மின்சார இணைப்பில் மின்சாரம் கொண்டு வரப்பட்டது.9 ஆயிரத்து 680 புறநகர் பகுதிகளுக்கும் இந்த திட்டத்தின் வழி மின்சாரம் வழங்கப்பட்டது இது அத்தனையும் மோடி பதவியேற்ற பிறகு நடந்தது(21)
இதன் பிறகு மிக முக்கியமாக ஒரு தகவல் கிடைத்தது.அதாவது நீர்மேலாண்மை,விவசாயம்,மின்சாரம் இவற்றின் பற்றாக்குறை குறைந்த பின்னர் கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களை நோக்கி குடிபெயர்தல் குறைந்தது என்பதுதான்.(22)
அப்போது மோடி சொன்னது "மக்களின் பங்களிப்புடன் அரசு நடப்பதுதான் நல்ல நிர்வாகத்தின் ரகசியமாகும்.மாநிலத்து மேம்பாட்டுப் பணியை நாங்கள் மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறோம்.வளர்ச்சி என்பது அரசின் திட்டமோ,குறிக்கோளோ மட்டுமல்ல அது மக்களின் இயக்கமாகும்." என்றார்.(23)
அதே போல சமூகத்தில் உள்ள விஷத்தை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் அதுதான் வளர்ச்சியை எல்லா விதத்திலும் சாத்தியமாக்கும் என்றார்.இதை தமிழர்கள் உணர வேண்டும்.நமக்கு ஒரு நல்ல பிரதமர் கிடைத்திருக்கிறார்.இந்தியாவின் வளர்சியை மாநிலங்களின் பங்களிப்புடன் கட்டியெழுப்ப நினைக்கிறார்.(24)
இதை நாம் பயன்படுத்திக் கொள்ள தவறி வெட்டி பேச்சும்,வீண் சவடாலும் விட்டுக் கொண்டிருந்தால் விடிமோட்சமே இல்லை.எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 10 வருடத்தில் ஆந்திராவும்,தெலங்கானாவும் தமிழகத்தை விட பலமடங்கு உயரத்திற்கு சென்றுவிடும்.(25)
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to sundarrajacholan
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!