, 19 tweets, 4 min read Read on Twitter
#தமிழ்ஹிந்து #இலக்கியம் #திருமால்
எதையெடுத்தாலும் சமணம்,பெளத்தம்,ஆஜீவகம் என்று அடித்துவிடும் கும்பலுக்கு எந்த ஆய்வு முறையை பற்றியும் கவலையில்லை.கண்ணை மூடிக் கொண்டு இந்து மத வெறுப்பை கொடுவதற்கு அந்த வார்த்தைகள் பயன்படும் கருவி அவ்வளவுதான்.(1)
பெளத்தம்,சமணத்தை பற்றி இவர்களுக்கு எள் முனையளவு கூட தெரியாது.

அத்திவரதர் புத்தர் சிலையாம் ஏனென்றால் படுத்திருக்கிறாராம் இப்படியெல்லாம் மல்லாந்து படுத்துக் கொண்டு சிந்திக்க நம்மவர்களால்தான் முடியும்.(2)
இனிமேல் காற்று வரவில்லை என்று திண்ணையில் படுத்திருப்பவரை புத்தர் என்று சொற்பொழிவு கேட்காமல் இருந்தால் சரி.சிலப்பதிகாரம் ஒரு சமண நூல் ஆனால் அது தமிழகத்தின் இந்து மத தொன்மத்தையும்,சான்றுகளையும் மிக நேர்மையாக பதிய வைக்கிறது.ஆயர்களிடம் மகாபாரதம் இருந்ததை சொல்கிறது.(3)
"திருஅமர்மார்பன் கிடந்த வண்ணமும்" "செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற வந்தேன்"

திரு அமர் மார்பன் என்றால் ஸ்ரீநிவாஸன் என்பதன் தமிழ் வடிவம்.அவர் படுத்திருக்கும் திருவரங்கத்தையும்,அவர் நின்று அருள்புரியும் திருப்பதியையும் காண வந்தேன்(4)👇
👆என மாங்காட்டு மறையவன் ஏன் தான் தமிழகம் வந்தேன் என்று கோவலனிடம் சொல்கிறான்.

"ஏந்தல் சான்ற இடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
மாய வண்ணனை மனன் உறப்பெற்று" - #பதிற்றுப்பத்து(5)
அகன்ற இடத்தில் வேள்விச்சாலை அமைத்து வேள்வி செய்த போது கருமை வண்ணம் கொண்ட திருமாலை மனத்திலே நினைத்துக் கொண்டான் என்று பதிற்றுப்பத்தில் வேதவேள்வியில் திருமாலை நினைத்துக் கொண்டதை பற்றி குறிப்பிடுகிறார் கபிலர்.(6)
"பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்
நீல் நிற உருவின் நேமியோனும் என்று இருபெருந்தெய்வம்" - #புறம்58

வெள்ளை நிறத்தவனும் பனைக்கொடியை உடைய பலராமனும்,நீல நிறத்தையும் சக்கரத்தையும் உடைய திருமாலும் இரண்டு பெரும் தெய்வம் என்று காரிக்கண்ணனார் புகழ்கிறார் சோழனையும்,பாண்டியனையும்.(7)
"மண்ணுறு திருமேனி புரையும் மேனி
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்" - #புறம்56

மாசற்ற அழகிய நீலநிற உடல் அழகும்,வானுயற பறக்கும் கருடக் கொடியை உடையவனும் என்று நக்கீரர் பாண்டியனை திருமாலோடு ஒப்பிட்டு புகழ்கிறார்.(8)
"வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன" - #புறம்57

அறிவற்றோர் ஆயினும்,அறிவில் வல்லவராயினும் போற்றிப் புகழ்பவர்களை காத்தருள்வதில் திருமாலை ஒத்தவன் என்று பாண்டியன் நன்மாறனை புகழ்கிறார் காரிக்கண்ணனார்.(9)
அடுத்தது மிக முக்கியமான ஒரு சங்கப்பாடல் உள்ளது.

மன்மருற் கறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன் றரிதினின் முடித்த வேள்வி
கயிறரை யாத்த காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல ” - #அகம்220 (10)👇
பரசுராமன் இம்மண்ணுலகிலேயே ஷத்திரிய அரசத் தரப்பினர் ஒருவர்கூட இல்லாமல் பூண்டோடு ஒழிப்பேன்” என்று சபதம் செய்து, மிக்க முயற்சியோடு ஓர் பெரிய வேள்வியைச் செய்து முடித்தான் என்ற புராணத்தை தொட்டு செல்கிறது இந்தப் பாடல்.அவர் திருமாலின் அம்சம் என்பதாலே மழுவாள் நெடியோன் என்கிறது.(11)
"உருவின் நெடியோன்கொப்பூழ், நான்முகன் ஒருவற் பயந்தபல்
இதழ்த் தாமரைப் பொகுட்டின்” - பெரும்பாணாற்றுப்படை (402-405)

பத்மநாபன் என்ற பதத்திற்கான விளக்கத்தை பெரும்பாணாற்றுபடையே கொடுத்துவிட்டது திருமாலின் தொப்புளில் இருந்து பிரம்மா வந்த புராணத்தை குறிப்பதன் மூலம்(12)
"வடா அது வண்புனல் தொழுதை  
வார்மணல் அகன்றுறை அண்டர்மகளிர்
மரஞ்செல மிதித்த மாஅல் போல  ” - #அகம்59

பலராமனை கண்ட கிருஷ்ணன் ஆயர் மகளிர் ஆடையில்லாமல் இருப்பதை மறைக்க குருந்த மலை கிளையை அழுத்திய தொன்மத்தை சொல்கிறது.(13)
"நீடு குலைக்
காந்தள் அம்சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்" பெரும்பாணாற்றுப்படை 371- 373)

அதாவது மலையில் அமர்ந்த யானைபோல் பாம்பனைமீது பள்ளி கொள்பவன் என்று புகழ்கின்றது! இதன்மூலம் திருவெஃகா(காஞ்சிபுரத்தின்) பழமை புரியும் (14)
இதையெல்லாம் ஏமாற்றி தனித்தமிழ் வரலாறு எழுத நினைக்கும் அயோக்கியர்களின் நோக்கம் என்ன என்று நமக்குத் தெரியும் ஆனால் இதற்கு தமிழர்கள் இணங்கிப் போகக்கூடாது என்பதுதான் நமது வேண்டுகோள்.(15)
திருமால் தமிழ் நிலத்தின் பெருந்தெய்வம் அவருக்கு கோவில் இருக்காதாம் ஆனால் புத்தருக்கு மூலைக்கு மூலை இருந்ததாம் அதை நமது திராவிட ஆய்வாளர்கள் பார்த்தார்களாம்😁(16)
"சார்பில் தோற்றமும் சார்பறுத் துய்தியும்
ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு" - மணிமேகலை

மணிமேகலை நூல் ஆரியன் அதாவது மேம்பட்ட குரு என்ற பொருளில் புத்தரை சொல்கிறது.இதை என்றாவது படித்துப் பார்த்துள்ளார்களா நமது போலி ஆய்வாளர்கள் என்று தெரியவில்லை.(17)
தமிழ் இலக்கியங்களை ஒழுங்காக வாசிக்கும் ஒருவன் இந்து மத வெறுப்பு,தனித்தமிழ் கலாச்சாரம்,திராவிட நாகரீகம் என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கமாட்டான்.பாரத கலாச்சாரம் ஒத்தமைய நோக்கு கொண்டது என்பதை எளிமையாக புரிந்துகொள்வான்.(18)
கலித்தொகை,பரிபாடலில் இருந்து நான் பாடல்களை குறிப்பிடவில்லை.தயவு செய்து அதை வாசிக்காதவர்கள் வாசித்துப் பாருங்கள் ஒருமுறை.பிறகு தமிழர்களின் மதம் எதுவென்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.(19)
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to sundarrajacholan
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!