கல்வெட்டில் நீரிழிவு நோய் பற்றிய குறிப்பு!

தமிழ்நாட்டில் கிடைக்கப்பெறும் கல்வெட்டுகள் வாயிலாகப் பல்வேறு வரலாற்றுச் செய்திகளையும் எண்ணற்ற சமுதாயச் செய்திகளையும் அறிந்து வருகிறோம்! குறிப்பாக கல்வெட்டுக்கள் மூலம் மன்னர்களின் வெற்றி, ஆட்சிமுறை, கோவில் வழிபாடு, இறைவன் பெயர்கள் cont.
வரிகள், காசுகள் போன்ற பொருளாதார மற்றும் சமூக செய்திகள் அறியப்படுகின்றன!

நன்கு ஆய்வு செய்யும்போது மருத்துவம் மற்றும் நோய்கள் பற்றிய செய்திகளும் கிடைப்பது குறிப்பிடத்தக்கதாகும்!

தற்போது உலக அளவில் #நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் மனித இனத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது!
இந்நோய் பல நூற்றாண்டுகளாக மக்களை மிகவும் துன்புறுத்தி வருகிறது!

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு நாட்டு ஒரு அரசியல் தலைவன் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறையருளால் நலம் பெற்ற செய்தியை #கோவை மாவட்டம் #கடத்தூர் கல்வெட்டால் அறிகிறோம்!
கொங்கு #விக்கிரமசோழன் ஆட்சியின்போது (கி.பி 1302) #திருபுவனசிங்கன் என்பவன் #கடத்தூர் இறைவன் அருளால் #பிரமேகம் என்னும் நோய் நீங்கியதற்காக நிலம் தானம் அளித்துள்ளார்!
இச்செய்தியினை தெரிவிக்கும் கல்வெட்டு #கோவை மாவட்டம் #உடுமலை வட்டம் #கடத்தூர் மருதீசர் கோயிலில் மகா மண்டபத்தின் கிழக்குச் சுவரின் இடப்புற வாசலில் உள்ளது!

இக்கல்வெட்டு கொங்குச் சோழன் விக்கிரம சோழனின் 29ஆம் (கி.பி 1302) ஆட்சியாண்டைச் சேர்ந்தது

இக்கல்வெட்டு வாசகம் பின்வருமாறு...
கொங்கு #விக்கிரமசோழன் ஆட்சியின் போது #திரிபுவனசிங்கன் என்பவனுக்கு #பிரமேகம் என்ற #சர்க்கரைநோய் வந்து #கடத்தூர் இறைவன் அருளால் நீங்கியமையும், அதற்காக அவ்விறைவனுக்கு இரவு வழிபாட்டிற்கான அரிசிக்காக இவன் நிலம் தாரைவார்த்துக் கொடுத்துள்ளான்!
இந்நிலம் உதயாதிச்ச சோழ தேவன் என்பவன் அரசிற்குத் துரோகியாய் மாறியதால் அரசால் கைப்பற்றப்பட்ட நிலமாகும்!

இந்நிலம் கண்ணாடிப்புத்தூரில் ஆறுகலம் விதைக்கக்கூடிய அளவு பரப்புடையதாகும்!

மேலும் இந்நிலத்திற்கான எல்லைகளும், வரிவிதிப்பு, வரிச்சலுகை ஆகியவையும் இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன!
இந்நிலம் #வீரசிங்கன் மற்றும் அவனது பரம்பரையினருக்கும் அரசால் முழுமையுடன் (விற்றல், ஒற்றிவைத்தல், சீதனமாகக் கொடுத்தல்) கொடையாக அளித்ததாகும்!

இவ்வெல்லா உரிமைகளையும் சேர்த்து அரசின் ஆணைப்படி #திருமுகதிருவிள்ளம் இறைவனுக்குக் கொடுத்துள்ளான்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

Jun 14, 2023
அரசரும், தூதுவரும்...!

ஒற்றரைப் போலவே அரசர்க்கு இன்றியமையாத உதவியாளர் #தூதுவர் எனப்பட்டனர். தூதுவரைப் பற்றியும் #திருவள்ளுவர் பத்துப் பாக்களில் கூறியுள்ளார்.

நற்குடிப் பிறப்பும், அரச பக்தியும், ஆவன அறியும் அறிவுடமையையும், ஆராய்ந்த சொல்வன்மையும், நீதி நூல் அறிவும் தூதர்… twitter.com/i/web/status/1…
சங்ககாலத்தில் #ஒளவையார் என்ற பெண்பாற்புலவர் அதியமானிடமிருந்து காஞ்சி அரசனான தொண்டைமானிடம் அரசியல் தூதராகச் சென்றார்.

தமது பேச்சுத் திறமையால் அதியமானது போர்த்திறனை விளக்கினார். நடக்க இருந்த போரைத் தடுத்தார் என்பன புறநானூற்றுப் பாடல் ஒன்றால் தெரிகின்றன.

சேரன் செங்குட்டுவன்… twitter.com/i/web/status/1…
சங்ககாலத்தில் #பாண்டியன், உரோமப் பேரரசனான #அகஸ்டஸ் என்பவரிடம் தூதுக்குழுவை அனுப்பினான்.

#பல்லவர் காலத்தில் 'இராசசிம்ம பல்லவன்' ஒரு தூதுவனை சீனத்திற்கு அனுப்பினான். சீனப் பேரரசன் அவனை அன்போடு வரவேற்றான். அவனை மிகுந்த கவனத்துடன் உபசரிக்கும்படித் தன் அதிகாரிகளுக்கு ஆணையிட்டான்.… twitter.com/i/web/status/1…
Read 4 tweets
Apr 19, 2023
தமிழ் இலக்கியங்களில் வேளாண்மைத் தொழில்நுட்பங்கள்...!

தமிழ் இலக்கியங்கள் தொன்மைச் சிறப்புடையது. நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கது. மக்களின் வாழ்க்கை முறைகளை எடுத்துக்கூறும் கருத்துக் கருவூலமாகவும் உள்ளது.

தமிழ் இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதற்கும்,… twitter.com/i/web/status/1… Image
▪︎ உழவியல் நுட்பங்கள்:

உழவன் தன் நிலத்தை நன்கு உழவு செய்து பின் நடவு செய்வான். அந்த நிலத்தை எவ்வாறு உழுது பண்படுத்த வேண்டும் என்பதை இலக்கியங்கள் விளக்குகின்றன.

'அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழுவதே மேல்' என்பது பழமொழி.

ஆழமாக உழும்போது கீழ்மண் மேல்மண்ணாகவும் மேல்மண்… twitter.com/i/web/status/1… Image
ஆழமாக உழவேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்த உழவர் பெருமக்கள், எத்தனை முறை உழவேண்டும் என்பதிலும் கவனமாக இருந்துள்ளார்கள்.

உழவு செம்மைப்படுவதற்கு இடத்திற்கிடம் உழவின் எண்ணிக்கை மாறினாலும் கூட, பொதுவாக நான்கு உழவோடு பயிர்த்தொழில் செய்வது என்பது இன்றும் நடைமுறையில்… twitter.com/i/web/status/1… ImageImage
Read 9 tweets
Feb 22, 2023
மங்கையர் வணங்கும் மயில் பண்டிகை...!

இன்றைய நாகரிகத்தின் தாக்குதலினால் நம்முடைய பண்டையப் பண்பாடுகளும், சிறப்புகளும் அதிகமாக அழிந்துவிடாமல்,

இன்றைய தினம் தமிழகத்தில் எஞ்சி உள்ள பகுதிகளில் #தருமபுரி மாவட்டம் ஒன்றாகும். Image
அம்மாவட்ட மகளிர்களால் கொண்டாடப்பட்டு, சிறுகச் சிறுகச் செல்வாக்கிழந்துவரும் ஓர் அறிய பண்டிகையாகும்.

இப்பண்டிகை, உழவர் திருநாளை உவகையுடன் தை மாதம் கொண்டாடி முடித்து உடன் நடக்கும் ஓர் பண்டிகை.

தை மாதம் ஆறாம் தேதி இரவே இப்பண்டிகை ஆரம்பித்துவிடும்.
அன்று இரவே பெண்கள் அனைவரும் விரதம் இருக்கத் தொடங்கிடுவர்.

தை ஏழாம் தேதி காலை மகளிர் தங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்தி குளித்து முடித்து மயில் பண்டிகையினை துவக்கிவிடுவர்.

இத்துவக்கத்தில் ஊரில் உள்ள அனைத்துப் பெண்களும் ஓர் இடத்தில் கூடி மயிலை வணங்கத் துவங்குவர்.
Read 13 tweets
Feb 21, 2023
சங்ககாலத்தில் மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள்; இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப்பற்றி இலக்கியங்கள்வழி ஆய்கிறது இக்கட்டுரை..! (2/2)

மேனாட்டார்க் குறிப்பு:

அராபியரான 'அல் இத்ரீஸ்' என்பவர் தென்னிந்தியாவில் மன்னர்கள் இறந்தால் எப்படி அடக்கம் செய்கிறார்கள்...
என்பதைப் படம் பிடித்துக்காட்டுகிறார். இவர் பொ.பி 1100- ல் பிறந்தவர்.

அல் புரூனிக்குப் பிறகு (பொ.பி 1048) தென்னிந்தியாவைப் பற்றித் தெளிவான குறிப்புக்களை வழங்கியவர்.

இவர் சிசிலிய மன்னன் ரோஜர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உலக வரலாற்றை எழுதியவர்.
இவர் உலகப் புவியியல் வரலாற்றை 70 பாகங்களாக எழுதினார்.

உலகநாடுகள் அனைத்தையும் 20 ஆண்டுகளுக்கு மேல் நேரில் சென்று ஒரு புதினத்தைப் போல் எழுதி வைத்துள்ளார்.

இந்நூல் அரபி மொழியில் 'கிதாப் நஸ்ஸகத்துல் முஸ்தாக் பி.இக்த தாகில் அபாக்' என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது.
Read 16 tweets
Feb 20, 2023
சங்ககாலத்தில் மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள்; இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப்பற்றி இலக்கியங்கள்வழி ஆய்கிறது இக்கட்டுரை..! (1/2)

மன்னர்கள் போரில் புண்பட்டு இறப்பதையே பெரும் பேறாகக் கருதினர். போரில் இறக்காது வீரக்கழலினையுடைய அரசர்கள் நோயினால் இறந்தால்...
வாளாற்படாத குற்றம் அவர்களிடம் இருந்து நீங்கவேண்டி, பிணத்தை வாளால் வெட்டிப்புதைத்தனர் (புறம்: 93).

பாடையைக் 'கால்கழி கட்டில்' என அக்காலத்தில் வழங்கி வந்தனர். இறந்தவர்களை இப்பாடையில் கிடத்தி, மிக வெண்மையான ஆடையைக் கொண்டு போர்த்தி விடுவார்கள் என #ஒளவையார் குறிக்கிறார் (புறம்: 286)
இதை 'தூவெள்ளறுவை போர்த்தல்' எனப் புறநானூறு 291-ஆம் பாடல் சுட்டும்.

#பறைகொட்டுதல் - சாவில் பண்டு தொட்டுப் பறைகொட்டும் மரபு இருந்ததென்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

#பெருந்தொகை 710-ஆம் பாடல் இதை 'பூசன் மயக்கம்' என்று குறிக்கிறது...
Read 13 tweets
Feb 12, 2023
உணவும் - சமூகமும் - பண்பாடும்! (3).

புலால் உண்ணாமை, உண்ணா நோன்பு ஆகிய வழக்கங்களைத் தமிழ்நாட்டிற்குள் சமணர்களே கொண்டுவந்தனர்.

அமாவாசை, பௌர்ணமி ஆகிய 'உவா', நாட்களில் பிச்சைக்கு வரும் சமண பௌத்தத் துறவிகளுக்கு முதல்நாள் உண்டு எஞ்சிய பழைய சோற்றை இடுவதில்லை.
இந்த இருநாட்களிலும் பழைய சோற்றை விலக்கும் வழக்கமும் இப்படித்தான் பிறந்தது.

இதுவே பௌத்தத் துறவிகளுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ந்தது.

நின்றுகொண்டுதான் உண்ண வேண்டும், உண்ணும்போது பேசக் கூடாது என்பன போன்ற சமணத் துறவியர்களின் வழக்கத்தை அப்பர் தம் தேவாரத்தில்...
கண்டித்திருக்கிறார்.

பழந்தமிழ்ச் சமூகம் பிற நாகரிகங்களிலிருந்து வந்த உணவு வகைகளை 'பிட்ஸாவும் கோக்கும்' போலப் போலித் தனமாக வரவு வைக்கவில்லை. மாறாகத் தன்மயமாக்கியே
எடுத்துக்கொண்டது.

புலாலை மையமிட்ட குஸ்கா, கைமா, பாயா, கோளா போன்ற உணவு வகைகள் உருது பேசிய நவாபின் படையினரோடு...
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(