, 30 tweets, 4 min read
My Authors
Read all threads
பீமா கோரேகான் வரலாற்று நினைவும்--தலித் படையின் தணியாத வெற்றியும்.

ஜனவரி 1

இந்தியளவில் பட்டியல் இன மக்களின் வரலாற்றை அறியாதவர்கள் இம்மக்களை,
நிலமில்லாதவர்களெனவும் வரலாறு இல்லாதவர்களெனவும்,போர்குணமில்லாதவர்கள்,என்றெல்லாம் குறிப்பிடுவார்கள்.
ஆனால் பட்டியல் இன மக்கள் இந்நாட்டின்
சமத்துவத்திற்க்காவும்,இந்நாட்டின் சுதந்திரத்திற்க்காகவும்,
இம்மக்களின் தியாகமும்,உழைப்பும் அளவிட முடியாததாகவும்
அவற்றை சாதி இந்துக்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் இந்தியாவை ஆக்கிரமைத்த இந்து மத பார்ப்பணர்கள் நிகழ்த்திய தீண்டாமை
கொடுரங்களுக்கு எதிராக மாபெரும் போரட்டத்தையே அதாவது போரையே பட்டியல் இன மக்கள் நிகழ்த்திருக்கிறார்கள். என்ற வரலாற்றை அறியும்போது நம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்துகிறது.

அந்த வியப்புக்குறிய வரலாறான
பீமா கோரேகானின் வீர நினைவுகளை 1927 ஆம் ஆண்டு பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் மீட்டெடுத்த
வீரமிகு வரலாற்றை அறிவோம்.

சத்ரபதி சிவாஜியும் அவரது வழிவந்த போன்ஸ்லே மன்னர்களும் தமது மராட்டிய அரசின் தலைமை அமைச்சர்களாக
முதலில் தேஷாஷ்ட பார்ப்பனர்களையும்,
பிறகு சித்பவன பார்ப்பனர்களையும் பணியமர்த்தினர்.

நாளடைவில் இந்த பேஷ்வா பார்ப்பணர்கள் போன்ஸ்லேக்களை பெயரளவில் ஒப்புக்கு
மன்னர்களாக வைத்துக்கொண்டு ஆட்சியதிகாரத்தை தம் பொறுப்பில் முழுமையாக எடுத்துக்கொண்டனர்.

முதலாம் பாஜிராவ் என்கின்ற சித்பவன பார்ப்பனர் பேஷ்வாவாக இருந்த காலத்தில் புனே நகரத்தில் ‘ஷனிவார்வாடா’ என்கிற அரண்மனையைக் கட்டி அங்கிருந்து ஆட்சி நடத்தினார்.
இவர்கள் கொங்கன் பகுதியில் ஜோதிடம்,
புரோகிதம் ஆகியவற்றை பரம்பரைத் தொழிலாக செய்துவந்த தமது சாதியினர் ஆயிரக்கணக்கானவர்களை சனிவார்வாடாவிற்கு அழைத்துவந்து குடியேற்றினார்.

இவரும் இவருக்கு அடுத்து வந்தவர்களும் நிர்வாகம், நீதி, சட்ட அமலாக்கம், ராணுவம் போன்றவற்றின் தலைமைப்பொறுப்புகள் அனைத்தையும்
இந்த பேஷ்வாக்கள் தமது சித்பவனப் பார்ப்பனச் சாதியினரைக் கொண்டே நிரப்பினர்.
இந்த சித்பவனப் பார்ப்பனச் சாதியிலிருந்து வழிவந்தவர்கள் தான் சாவர்க்கர், ஹெட்கேவார் போன்றவர்கள் பேஷ்வா பார்ப்பண பகவத்ஜம் என்கிற காவிக்கொடியையே தங்களது வணக்கத்திற்குரிய கொடியாக ஏற்றுக்கொண்டனர்.
இந்தக் கொடியைத்தான் ஆர்.எஸ்.எஸ் இன்றும் தனது கொடியாகக் கொண்டுள்ளது.
வர்ணாசிரமக் கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றிய பேஷ்வாக்களின் ஆட்சிக்காலத்தில் மகர், மாங் போன்ற பூர்வீககுடிகள் மீது அரசுரீதியாகவும் சமூகரீதியாகவும் கடும் ஒடுக்குமுறையும் தீண்டாமையும் கடைபிடிக்கப்பட்டன.
*புதிய கட்டிடங்களுக்கு தோண்டப்படும் கடைக்காலில் இந்தச் சாதிகளைச் சேர்ந்தோரை உயிரோடு புதைத்து காவு கொடுக்கும் வழக்கம் பெருகியது.

*மனிதநிழல் நீண்டுவிழும் பொழுதுகளில் இவர்களது நிழல் நீண்டு வீட்டுக்கூரைகளின் மீது பட்டு வீடே தீட்டாகிவிடும்
அபாயமிருப்பதாகக் கூறி குறிப்பிட்ட தெருக்களில் இவர்களது நடமாட்டம் தடைசெய்யப்பட்டிருந்தது.
* அனுமதிக்கப்பட்ட தெருக்களிலும்கூட இவர்கள் நடப்பதால் ஏற்படும் தீட்டினைப் போக்குவதற்காக, தங்களது பாதச்சுவடுகளை தாங்களே அழித்து சுத்தப்படுத்திக் கொண்டு செல்லும்விதமாக இடுப்பிலே
துடைப்பத்தைக் கட்டிக்கொண்டு நடக்கும்படியாக பணிக்கப்பட்டனர்.

*இவர்களது எச்சில் பட்டு பூமி தீட்டாகிவிடும் அபாயத்தை தடுப்பதற்காக கழுத்தில் கலயம் ஒன்றைக் கட்டி தொங்கவிட்டபடிதான் பொதுஇடங்களில் நடமாட இவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.
*பார்த்த உடனே தீண்டத்தகாதவர் என எளிதில் அடையாளம் காணத் தோதாக கழுத்திலோ கையிலோ கருப்புக்கயிறை கட்டிக்கொள்ளும்படி விதிக்கப்பட்டனர்.
மராத்திய சாம்ராஜ்யத்தை உருவாக்கவும் நிலைநிறுத்தவும் சிவாஜியின் காலம்தொட்டு போர்முனைகளில் தீரமுடன் பங்காற்றி வந்த மகர்கள் பேஷ்வாக்களின் காலத்தில்
படையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மனுவாதத்தின்படி ஆயுதம் ஏந்த அனுமதிக்கப்படாத சாதியினர் ராணுவத்தில் இருக்கக்கூடாது என்கிற அடிப்படையில் இவர்கள் ராணுவத்தில் சேர தடைவிதிக்கப்பட்டது.

இரண்டாம் பாஜிராவின் ஆட்சிக்காலமான 1817ஆம் ஆண்டுவரை இதுதான் நிலை.
பேஷ்வாக்களின் பிடியிலிருந்த மராட்டியப்பகுதியை கைப்பற்ற பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பனி தொடர்ச்சியாக முயற்சித்துவந்தது. ஏற்கனவே இரண்டு யுத்தங்களை மராத்தியப் படைகளோடு நடத்தி எதிர்பார்த்த வெற்றியை அடையமுடியாதிருந்த நிலையில் கிழக்கிந்தியக் கம்பனி மற்றுமொரு வலுவான யுத்தத்திற்கு
உள்ளூரில் படைதிரட்டத் தொடங்கியது.
மராத்தியப் படையிலிருந்து பேஷ்வாக்களால் நீக்கப்பட்ட போர்த்திறம் வாய்ந்த மகர் சமூகத்தவரை தனது படையில் சேர்த்துக் கொள்ள கிழக்கிந்தியக் கம்பனி விருப்பம் தெரிவித்தது.
மகர் சமூகத்தவரின் தலைவர்களில் ஒருவரான சத்நாத் இவ்விசயத்தை பாஜிராவ் பேஷ்வாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், மராட்டிய மைந்தர்களான தாங்கள் கிழக்கிந்தியக் கம்பனியின் படையில் சேர விரும்பவில்லை என்றும், தங்களை மராத்தியப் படையில் மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும்
என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் பேஷ்வா மகர்களின் கோரிக்கையை உதாசீனம் செய்தார். தீட்டின் காரணமாக மராத்தியப்படையில் சேர்க்கமுடியாதென பேஷ்வா பிடிவாதம் காட்டிய நிலையில், புறக்கணிக்கப்பட்ட மகர்கள் கிழக்கிந்தியக் கம்பனியின் படையில் சேர்ந்து மராத்தியப் படைக்கு
எதிராக போரிடும் நிலை உருவானது.
1818 ஜனவரி 1 அன்று புனே நகருக்கருகில் பீமா நதியின் கரையிலுள்ள கோரேகவான் என்கிற சிற்றூரில் நடந்தப் போரில் பேஷ்வா படையினரை கிழக்கிந்தியக் கம்பனியின் படை வீழ்த்தி வெற்றிகண்டது.
இதில் 20,000 குதிரைப்படைகளும்,8,000 காலப்படைகளும்,மொத்தம் 28,000 பேரைக்கொண்ட பேஷ்வா படையினரை பாம்பாய் காலப்படையும்,புனே தற்காலிக குதிரைப்படையும்,
சென்னை பீரிங்கிப் படையை சார்ந்த ஐரோப்பா பீரிங்கிபடையும்,சார்ந்த வெறும் 834 பேரைக் கொண்ட கம்பனி படை கேப்டன் எப்.எப்.ஸ்டாவுன்டன்
அவர்களின் தலைமையில் அவர்களை வீழ்த்தியதற்கு காரணம், இந்த 834 பேரில் 500 பேர் மகர்களாக இருந்ததே காரணம். கிழக்கிந்தியக் கம்பனியினரை வெற்றிபெறச் செய்வதைவிட, தங்களை சாதிரீதியாக ஒடுக்கி அவமதித்து வந்த பேஷ்வாக்களை வீழ்த்தியாக வேண்டும் என்று மகர்களுக்குள் கனன்றிருந்த குமுறல்தான்
இவ்வெற்றியின் உள்ளுறையாக இருந்தது என்றொரு கருத்து உருவாகிருக்கிறது.

பீமா கோரேகவான் போர் எனப்படும் இப்போரின் தொடர்ச்சியில் மராட்டியத்தில் பேஷ்வாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. மராட்டிய சாம்ராஜ்யம் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதியாக மாறியது.
ஆனால் அவர்கள் 8000க்கும் மேற்பட்ட படைவீரர்களுடன் தப்பியோடி தலைமறைவாக இருந்தபடியே கெளரவமாக சரணடைவது பற்றி பிரிட்டிஷ் அதிகாரி சர் ஜான் மால்கம் என்பவருடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை தூதர்கள் மூலமாக நடத்தினார்.
கடைசியில் 1818 ஜூன் 3ஆம் தேதி பல்வேறு நிபந்தனைகளுடன் சரணடைந்தார். ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு தன்நாட்டுக்கு வெளியே உயிர்வாழும் முதலாவது இந்திய ஆட்சியாளர் என்று பிரிட்டிஷ் ஆவணங்களில் அவர் குறிப்பிடப்படுகிறார். இப்போதைய உத்திரபிரதேச மாநிலம் கான்பூருக்கு அருகிலுள்ள பிதூர்
என்கிற சிற்றூரில் குடியேறிய பாஜிராவ் ஆண்டுக்கு 8இலட்சம் ரூபாய் ஓய்வூதியத்துடன் 33ஆண்டுகாலம் உயிரோடிருந்தார்.
இந்த காலகட்டத்தில் அவருக்கு ஒருமுறைகூட தேசபக்தி பொங்கியதாக தகவலேதுமில்லை.
கொண்டாடத்தக்க மராத்தா வெற்றியை போற்றும் விதமாக கோரேகானில் முதல் குண்டு சுடப்பட்ட இடத்தில் 65 அடி உயர வெற்றித்தூண் ஒன்றை நிறுவிட 1821 மார்ச் 26 ஆம் நாள் கிழக்கிந்தியக் கம்பனி அடிக்கல் நாட்டியது.
இத்தூண் 1824 ஆம் ஆண்டே கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் எனத்
தெரியவருகிறது.
இப்போரில் இறந்த, காயமடைந்த 49 படைவீரர்களின் பெயர்கள் இந்த வெற்றித்தூணில் பொறிக்கப்பட்டுள்ளன.
அதில் 23 மகர்கள் மட்டும் உயிழந்துள்ளார்கள் அவர்களின் பெயர்

1.சோமனாக் கமலநாக் நாயக்
2.கோடானக் கோனோக்
3.போகனாக் ஹர்னாக்
4.கண்ணாக் பாலனாக்
5.ரூபனாக் லாகனார்
6.விட்னாக் தாம்னாக்
7.வேப்னாக் ஹர்னாக்
8.கோபால்னாக் பால்னாக்
9.கஜனாக் தர்மானாக்
10.ஜேட்னாக் தர்மானாக்
11.இராம் னாக் ஏமனாக் நாயக்
12.இராம் னாக் யேசனாக்
13.அம்பானாக் கண்ணாக்
14.பால்னாக் கோண்டனாக்
15.வேப்னாக் கிராம்னாக்
16.ராங்னாக் கண்ணாக்
17.இராய்னாக் வான்னாக்
18.தியோனாக் ஆன்னாக்
19.கண்ணாக் லாக்னாக்
20.ஹர்னாக் ஹிர்னாக்

போரில் காயமடைந்தவர்கள் மகர்கள்

1.ஜனனாக் ஹர்னாக்
2.இரத்தன்னாக் ஹிர்னாக்
3.பாய்னாக் இரத்தன்னாக்

இவர்களது குடும்பத்தினரும் வழித்தோன்றல்களும், பேஷ்வாக்களை மகர்கள் வெற்றி கொண்ட வரலாற்றின் அடையாளத்தை ஆண்டுதோறும்
ஜனவரி 1 அன்று பெருந்திரளாக பீமா கோரேகாவன் வந்து இந்த வெற்றித்தூணை வணங்கி மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

1927 ஜனவரி 1 அன்று அண்ணல் அம்பேத்கர் இங்கு வந்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து...
பீமா கோரேகாவன் தலித்துகளின் எழுச்சிமிகு இடங்களில் ஒன்று என்கிற முக்கியத்துவத்தை எட்டியது. ஆண்டுதோறும் இருபது இலட்சம் தலித்துகள் கூடி இந்த வரலாற்று நினைவு தூணை வணங்கி தலித்துகளின் வீரத்தினை பறைசாற்றுவார்கள்..

ஜெய்பீம்......
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with sivagsk

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!