My Authors
Read all threads
🌺நாம் கண்டிப்பாக அறிய வேண்டியது....🌺

மின்சாரத்தை, மித்ரவருனசக்தி எனும் பெயரில் கண்டுபிடித்தது இந்தியர்களே!

மின்கலத்தை கண்டுபிடித்தவர் வோல்ரா என்று நினைத்து கொண்டிருக்கும் தமிழரே சற்று விழியுங்கள்…

மின்சாரத்தை கண்டுபிடித்தது ஒரு இந்தியனே. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே
நாம் மின்கலத்தை கண்டுபிடித்து விட்டோம்!

சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கும் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது நாம் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.
“சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்”

புரியவில்லை அல்லவா…, நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய
அகத்திய சம்ஹிதை என்ற அறிவியல் பொக்கிஷத்தின் ஒரு பகுதி.

இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

“ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி,
இரண்டு தாமிரக் கம்பிகளை இணைத்தால் மித்ரவருன சக்தியைப் பெறலாம்”

மித்ரவருன சக்தியா? அப்படினா என்ன என்று யோசிக்கிறீர்களா?
மித்ரவருன சக்தி என்றால் மின்சாரம் என்பது பொருள்.

வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே
அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மித்ரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது.
அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா?
தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி [Baghdad Battery] என்று ஆங்கிலத்தில்.

நம்ம பாட்டன் இதோடு நிறுத்தி விடவில்லை. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லியிருக்கிறார்கள்.

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால்
அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார்.

இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால “electroplating” என்று சொல்லக் கூடிய
அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து, செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1891 ஆம் ஆண்டு Rao Saheb Krishnaji Vajhe என்பவர், புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, வேறு சில மேதாவிகளுடன் சேர்ந்து இதனை செய்து பார்த்தனர்.
அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்!

எப்படி இருக்கிறது இந்தியனின் அறிவியல்??
குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு கால கட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.

மேலும் அகத்தியர் என்ற பெயரில், மூன்று ஔவைகள் இருந்தது போல்,
மூன்று வித அகத்தியர் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிஷம் நிச்சயம் 9000 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டது என்று நிச்சயம் கூறலாம்.

அகத்தியர் தமிழன் என்கிறார்கள்! ஆனால் அவர் ஏன் சமஸ்கிருதத்தில் எழுதினார்?? என்பது இங்கு பலரது கேள்வி!
உங்களுக்கும் கூட இது எழலாம். நான் பலமுறை கூறியுள்ளேன்....

தமிழில் நாம் நான்கு பக்கங்களுக்கு எழுதுவதை சமஸ்கிருதத்தில் பத்து வரிகளில் எழுதி விடலாம். எனவே தான் அக்காலங்களில் அறிவியல் சம்மந்தப்பட்ட எல்லா முக்கிய ஓலைச் சுவடிகளும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன.
மேலும் நாம் ஆன்மீக ஆகமக் காரியங்களில் சமஸ்கிருத மந்த்ரம் உபயோகிக்கும் காரணமும் இதுதான்.

சமஸ்கிருதத்தில் ஐந்து மணி நேரத்தில் சொல்லும் ஆகம மந்நிரங்களைத் தமிழில் சொல்ல, ஐந்துக்கும் மேற்பட்ட நாட்கள் ஆகும். எனவே தான் அதனை க்ரியா பாஷா என்று ஆகமத்துக்கும், அழகிய இனிய தமிழை பாராயண பாஷா
என்று பாராயணத்துக்கும் வைத்தார்கள். அன்று எல்லோரும் இரு மொழியும் அறிந்திருந்தனர். (இன்று நீங்கள் தமிழும் ஆங்கிலமும் அறிந்து வைத்திருப்பது போல).

நமக்கே தமிழில் எழுதும் ஒன்றை ஆங்கிலத்தில் இன்னும் சிறிதாகவும் சீக்கிரமாகவும் எழுத முடிகிறதல்லவா? அதே கணக்குத் தான்.
எனவே, மொழிவெறி இன்றி, நம் முன்னோர் அறிந்த அனைத்தும் நாமும் கற்றறிவோம்!

சுருக்கமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால், தமிழும் சமஸ்கிருதமும் பாரதம் முழுவதும் பரவியிருந்த மொழிகள் என்பதை நாம் உணர வேண்டும்!!

நன்றினை உரைத்து விட்டேன்!! இனி உன் விருப்பம் மனிதா! !

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!