My Authors
Read all threads
🌺இன்றைய உண்மைத் துளி...🌺

*"நீ பெரிய லார்டு லபக்குதாஸா?"*
அப்படின்னு யாராவது இனிமேல் கேட்டால், சந்தோஷமா *ஆமாம்* என்று சொல்லுங்கள்....😃

"என்ன நக்கலா??" என்று முறைக்கிறீர்கள்..... சரி.... சரி.... விஷயதுக்கு வருவோம்.

கோவிந்த் தாஸ் கிரிதர் தாஸ் & கோ கம்பெனியில்
பங்குதாரர்களாக இருந்தவர்கள் லாட் கிருஷ்ண தாஸ் லாட் முகுந்த் தாஸ். இவர்கள் 19ம் நூற்றாண்டில் குஜராத்திலிருந்து வந்த வியாபாரப் பரம்பரையைச் செர்ந்தவர்கள்.

இவர்கள் St. George Town ல் இருக்கையில் எல்லோருக்கும் இலவசமாக லட்டு வினியோகித்து வந்ததால், அவர்கள் குடும்பத்தினருக்கு
அடையாளப் பெயராக *லாட்* எனும் வார்த்தை பெயருக்கு முன் ஒட்டிக் கொண்டது. தற்போது *பேட்டர் தோட்டம்* என்று அழைக்கப்படும் *ஜெனரல் பேட்டர்ஸ் ரோட்* எனுமிடத்தில் மிகப்பெரிய இடத்துக்குச் சொந்தமானவர்கள்.

இங்கு ஓவியர் ராஜா ரவிவர்மா, காந்தி, ஸ்வாமி விவேகானந்தர் ஆகியோர் விருந்தாளிகளாய்
தங்கியுள்ளனர். மேலும் 1937 ல் நடந்த *மியூசிக் அகாடமி*யின் ஆண்டு விழா இங்கேதான் நடை பெற்றது. பின்னர் இவ்விடம் பங்கு பிரிக்கப்பட்டது. இன்னும் சிலர் பரம்பரையாக அங்கே வாழ்ந்து வருகின்றனர்.

சிலர் அவற்றை சொந்தமாக வீடுகள் கட்டி விற்றனர். 19030 ல் L (Lodd) G (Govindoss) N(Nagar) Road,
V(Vijaya) N(Narayana) Doss Road, Gopal Doss Road, என்று குடும்பத்தவர்களின் பெயரால் தெருக்கள் பெயரிடப்பட்டு விற்கப்பட்டன. லாட் கோவிந்த் தாஸ் தானமாகத் தந்த இடத்தில் தான் *சத்தியமூர்த்தி பவன்* *காங்கிரஸ் அலுவலகம்* இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. இவர்கள் தலைமுறையில் வந்தவர் தான்
*லாட் லபோக் தாஸ்.* இவர் மிகப்பெரிய அறிவாளியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்துள்ளார்.

அவர் எந்த ஒரு புத்தகத்தையும் ஒரே முறை படித்துப் பார்ப்பார். அதன் பின் அதிலிருந்து எதைக் கேட்டாலும் சரியான பதிலைத் தருவார்.

இது மட்டும் அல்லாது, பொது அறிவிலும் எந்தத் துறையைப் பற்றி
என்ன கேட்டாலும், உடன் சரியான பதில் தருவார். அவரது இந்த அறிவுத் திறமைக்காகப் போற்றப்பட்டே, யாரேனும் புத்திசாலியாக இருந்தால் "*லாட் லபக்தாஸ்* போல இருக்கான்" என்று சொல்ல ஆரம்பித்தது, தற்போது கேலிக்காக சொல்லுமளவு ஆகிவிட்டது....

இதில் உணர வேண்டிய ஒரு உண்மை... எதையுமே நாம்
கண்மூடித்தனமாய் பின்பற்றுகிறோம்; உண்மையை ஆய்ந்தறிந்து பேச முற்படுவதில்லை என்பது தான்.

அது போல்தான், நமது முன்னோர்கள் தந்த வாழ்க்கை முறைகளை, காரணமறிய முற்படாது பின்பற்றினோம். மூத்தோர் சொல் நன்மைக்கே என நாமிருந்தாலும், காரணம் அறிய இயலாது போனதற்கு தொடர் படையெடுப்பும் ஒரு காரணம்.
ஆனால், அதன்பின் பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு ஒரு கும்பல் வந்தது. அதுவாவது நம் செய்கைகளின் காரணத்தை ஆராய்ந்ததோ?? இல்லை....

அது நம் மடமையை, தன் அரசியல் பிழைப்புக்கு நன்கு பயன்படுத்திக் கொண்டு, தன் குடும்பத்தோடு தழைத்தோங்கி வாழ்கிறது...

அதன் பின்னால் போக ஆரம்பித்தவராவது,
மூடப் பழக்கம் என்கிறாயே, எப்படி எனக் கேள்வி கேட்டு, *எதை ஆதாரமாய் வைத்து முன்னோர் சொன்னதைத் தவறு என்கிறாய்?* எனக் கேட்டாரோ? அதுவும் கேட்கவே இல்லை!!

மொத்தத்தில் கண்மூடித்தனமாக நம் பழக்க வழக்கங்களை எதிர்த்து விட்டு சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமூகம். ஆனால் அயல் நாட்டில்..
இந்தியர்களின் ஒவ்வொரு செயலிலும் ஆழமான காரணம் உண்டு என்பதை உணர்ந்து ஆராய்ந்து, அவன் இன்று நம்மைப் பற்றிப் புத்தகம் புத்தகமாக வெளியிடுகிறான்... நம் வழக்கங்களைப் பின்பற்றுகிறான்....

*Cardiac Coherence Breathing Exercise* என்று பிராணாயாமத்தை கட்டாயம் ஆக்கிக் கொண்டு வருகிறான்.
ஏற்கனவே யோகா அநேகமாக அங்கே எல்லோரும் தினம் செய்யும் ஒன்றாகி விட்டது. மஞ்சள், மிளகு எல்லாவற்றுக்கும் பேடண்டை தாரை வார்த்தாகி விட்டது!!

ஒரு பக்கம் மெதுவாக நம் கலாச்சாரம் வழியாக கிறித்துவம் ஊடுருவுகிறது. இன்று தைரியமாக வள்ளுவர் கிறித்துவர் என்கிறான்.
நாளை நம் கலாச்சாரம் முழுதையும் ஆராய்ந்து,

*இங்கே ஒரு அறிவியல் திருடன் நம் பணத்தை எல்லாம் திருடியது போல்*

அவன் முழு கலாச்சாரத்தையும் திருடப் போகிறான். அதன் அடித்தளதை நன்கே இட்டு வருகிறான்...

நீங்கள் இன்னும் *தமிழைத் தவிர வேறேதும் படிக்க மாட்டேன், கோவிலில் தமிழ் தான் வேண்டும்,
தமிழன்டா....* என்று வெத்துச் சண்டைகளும் கூப்பாடுகளும் மட்டுமே போட்டுக்கொண்டு இருங்கள்! தமிழ் மற்றும் சமஸ்கிருத ஓலைச்சுவடிகளில் உள்ள அறிவியல் எல்லாம் அங்கே நடைமுறைக்கு கொண்டுவரப் படுகின்றன. அவர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்று உளறிக்கொண்டு, அதையும் பேடண்டோடு தானம் செய்யுங்கள்!!
மொத்தத்தில் உண்மை அறியும் தன்மை இழந்து, மேலை நாகரிகம், மது, சினிமா, பார்ப்பன துவேஷம் என இந்தச் சாக்கடையிலே மட்டுமே உழன்று உருப்பிடாமல் போகலாம்.... சௌக்கியமாக இருக்கும் சந்ததிகள்...

நான் மனம் வலிக்க எழுதும் இந்த உண்மைகள் கசக்கும், உனக்குக் கோபத்தைத் தரும்.
ஆனால் ஒரு நிமிடம் உன் கோபத்தை ஓரம்கட்டி வைத்துவிட்டு சிந்தித்துப் பார்!!

இனியாவது மாறவில்லை எனில் நம் தலைமுறையைக் குழிதோண்டிப் புதைத்த பெருமைக்கு மட்டுமே ஆளாவோம்...

நம் தேசம் சீரழியாது தடுக்க, உன் பகுத்தறிவை ஆய்வுகளில் தந்து ஊக்கப்படுத்து. வெறுப்பு இன்றி, எதையும் அதன்
உண்மைத் தன்மையோடு ஏற்றுக் கொள். நல்லது எதுவாகினும், முன்னோர் வார்த்தையை பின்பற்றப் பழகு. பாரபட்சம் இன்றி இதைத் துவங்கினால், இனி வரும் காலத்திலாவது,

*எங்க தமிழன் தான் கண்டுபிடிச்சான், அந்த நூல் எழுதினான், இந்த அறிவியல் கண்டுபிடிச்சான், தமிழ் தான் முதல் மொழி... தெரியுமா??*
என்று வெறும் பழம்பெருமை மட்டும் பேசாமல், அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாய், அவர்களின் சொல்வழி நடந்து, புத்திசாலியாக வாழ்ந்து காண்பிக்கலாம்....

இதில் எழுதியிருக்கும் உண்மையை உணராமல் இன்னும் என்னிடம் சண்டை போடத்தான் வருவாய் என்றால்...
*வாழ்க உன் தொண்டு! வளர்க உன் சமூகம்!!*

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!