My Authors
Read all threads
🌺எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்???🌺

என்னவாயிற்று தமிழர்களுக்கு?
பணப்புழக்கம் ஏனிங்கு இல்லை?

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில், பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு காரணம் எது?

பல நன்பர்கள் மோடி தான் காரணம் என்று சொல்கிறார்கள்.
ஆனால், தமிழர்களுக்குத் திமிர் அதிகம் ஆகிவிட்டது. அதனால் உடல் உழைப்பை அவர்கள் தற்போது விரும்புவதில்லை!!

அதோடு சாராயம் மற்றும் சோம்பேறித்தனம்! லேசான வேலையை செய்ய, உழைக்காமல் தினமும் இரு நூரு ரூபாய் கிடைத்தால் போதும் என்ற மன நிலை. அரசியல், கட்ட பஞ்சாயத்து அல்லது
போராட்டத்தில் மூன்று மணி நேரத்தில் சம்பாத்தியம், அரசியல்வாதிகளைப் போல் கொள்ளையடித்து ஏமாற்றி பொய் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல் ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன்அதில் பல ஆயிரம் பேர்களுக்கு
வேலை கொடுத்து, வேலை வாங்கி உள்ளேன்!! வண்டி வாகனங்கள் இதை எல்லாம் வைத்து வேலை வாங்கி, அதில் வேலை செய்த தமிழர்கள், இப்பொழுது வேலை செய்வது இல்லை!!

முழுவதும் வட நாட்டு மக்கள் தான் வேலைக்கு வருகிறார்கள்! தமிழர்கள் இப்பொழுது கிடைப்பது இல்லை!! அதனால் வெளிமாநிலத்தவர்கள் இங்கே
உடல் உழைப்பு தந்து தனது பொருளாதாரத்தை வலிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்... விரைவில் தமிழன் பிச்சை எடுப்பான்.... அன்று புரியும்!!!

ஹார்டுவேர்ஸ், பெயின்டர்கள் கார்பெண்டர்,பெரிய ஆள் ஹெல்பர்கள் ,பிட்டர்கள், டெயிலர்கள் , மேஸ்திரிகள். முக்கிய தொழிலாக ஹோட்டல்கள்,
ஹோட்டல்களில் வேலை செய்யும் மாஸ்டர்களே இப்பொழுது வட நாட்டவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தாம்பரத்தில் முக்கிய ஹோட்டலில் தோசை மாஸ்டர் வட நாட்டவர். அவரிடம் பேசினோம். அவர் சொன்ன விவரங்களுக்கு தலை கிறுகிறுத்தது,

மாதம் 10.000(பத்தாயிரம்) அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்து
தொழிலாளி சொன்னார். அப்படியா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்...

வந்தபின்தான் யோசித்தேன்! இந்த ஒருவர் மட்டுமே மாதம் 10.000 அனுப்புகிறார். இப்படி 10.பேர் அனுப்பினால் #ஒருலட்சம்
நூறுபேர் அனுப்பினால் #ஒருகோடி ஆயிரம் பேர் அனுப்பினால் #பத்துகோடி
ஒரு லட்சம் பேர் அனுப்பினால் #ஆயிரம்கோடி

மனம் அதிர்ச்சி அடைந்தது! முதலில் இவரின் கூட்டம் தமிழகத்தில் எவ்வளவு இருக்கிறது என குத்துமதிப்பாய் கணக்கு எடுப்போம் என பலரிடம் கேட்டேன். தொழில் நகரங்களான பெரும் நகரங்களில் மாவட்ட அளவில் உதாரணத்திற்கு #திருப்பூரில் மூனுலட்சம் பேரும்
#கோவையில்_ஏழுலட்சம் பேரும் #சென்னையில்_இருபது லட்சம் பேரும் இருப்பார்கள் என சொன்னார்கள்! அப்போ சேலம், ஈரோடு போன்ற இன்ன பிற மாவடங்களில் எவ்வளவோ தெரியாது என்றார்கள்... அதிர்ச்சியில் உறைந்துபோன நான், சென்னை, கோவை, திருப்பூர் மட்டும் கனக்கில் எடுத்துக் கொள்வோம் என முடிவெடுத்து,
கணக்கு பார்த்தேன்... மொத்தம் முப்பது லட்சம்பேர்! ஒருவர் மாதம் மாதம் பத்தாயிரம் என்றால் 30.லட்சம் பேர்க்கு கணக்கு போட்டேன் #மூனாயிரம்கோடி எனக் காட்டி விட்டு கால்குட்டரே தன்னை காலாவதியாக்கிக் கொண்டது

மாதம் மாதம் 3.000 கோடி என்றால் வருடத்திற்கு 36.000.கோடி
இது அனைத்தும் #தமிழ்நாட்டில் #புழக்கத்தில் இருந்தால் அந்த சிறு பணபுழக்கம் கொண்டு தமிழக மக்களையும் சிறுகுறு பெரும் வியாபாரிகளையும் வளமாக வாழ வைக்க வேண்டிய பணம் #வடமாநிலங்களில் புழங்கிக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் மக்களையும் வியாபாரிகளையும் வாழவைத்துக் கொண்டுருக்கிறது!!
இது வெறும் தமிழகத்தின் மூனு மாவட்டக் கணக்கு!! மீதம் இருக்கும் 36 மாவட்டத்திலும். வடமாநில தொழிலாளிகளை குத்துமதிப்பாய் கணக்கெடுத்து கூட்டிப் பார்த்தால் தலை சுத்தி மயக்கம் வந்து மூர்ச்சையாகி இறந்தாலும் இறந்து விடுவோம்!!

இது வட மாநிலத் தொழிலாளர்கள் கணக்கு!
இன்னும் வடமாநில சுய தொழில் செய்யும் வியாபாரிகள், முதலாளிகள் போன்றோர்களை கனக்கெடுத்து, அவர்கள் ஈட்டும் வருமானங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால்.... நினைத்து பார்க்க முடியவில்லை.

இன்னொரு பிரச்சினை! பணப்புழக்கம் இல்லாமல் இருக்கும் காரணம் கைத்தொழில்!
எல்லாவகையான சிறு பொருட்களும் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிறது. அதனால் லட்சக்கணக்கான பொருட்கள்.. அதாவது உளி, சுத்தியல் ஆரம்பித்து மருத்துவர் போடும் ஊசி வரை... அப்போது ஏற்கெனவே இங்கு இருந்த இந்த தொழில்?? அது ஒரு தனி கதை.

சத்தமின்றி யுத்தமின்றி தமிழன் சாராயத்தாலும் உழைப்பில்லாமலும்
இந்த மாபெரும் பொருளாதார போராட்டத்தில் தமிழன் அழிந்து கொண்டு இருக்கிறான் என்பதை மட்டும் உணர முடிகிறது!! இதை தமிழர்களாகிய நீங்கள் எப்போது உணர்வது.?

மிகவும் கொடுமையானது! ஆனால் நம்பி ஆகவேண்டிய உண்மை விவரம். பயிர் தொழில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வட நாட்டவர்கைகளில் சென்று கொண்டுள்ளது!
களை எடுத்தல், அறுப்பு அறூத்தல், மருந்து அடித்தல் என வர ஆரம்பித்து விட்டார்கள்!! இனி என்னாகும் யோசியுங்கள்.

பட்டாலும்... கெட்டாலும்... வருந்தாத... திருந்தாத... தமிழன் இருக்கும் வரை தமிழனுக்கு இந்தப் #பொருளாதாரப் #போராட்டம் தொடர்ந்து, கடைசியில் பிச்சைக்காரர்கள் மாதிரி வாழ வேண்டும்
இதையெல்லாம் நீ உணர்ந்து விழிக்கும் போது உன் பொருளாதார வளம் வறண்டு இருக்கும் அல்லது மாண்டு இருக்கும்!!!

(ந.தேவசேனாபதி. பதிவிலிருந்து.)

இந்த லட்சனத்தில் வடநாட்டவருக்கு வேலை தரக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் வேறு..
ஒரு TNPSC Exam ஐ படித்து யோக்கியமாக எழுதத் துப்பில்லை. அதில் ஊழல்.
எல்லாரும் டாக்டர் அல்லது இஞ்ஜினியராகத்தான் ஆவோம். உடலால் உழைக்கும் கலைகள் கற்று தொழில் துவங்க மாட்டோம். கஷ்டப்பட்டு உழைக்கிற நேரத்தில் 4 மீட்டிங்கில் கூவி கலாட்டா செய்தால் 500-1000 பணம் சோறு, சாராயத்தோடு. அதுதான் செய்வோம்....

குலத் தொழிலைக் கற்க மாட்டோம். அதைத் தெரிந்து
வைத்திருந்தால் நாமே தொழில் தொடங்கி, நாலு பேருக்கு வேலை தரலாமே... அது முடியாது! ஏனெனில் திராவிட சிந்தனை அதைக் கீழ்த்தரமான விஷயம் என்று மனதில் ஆணி அடித்து விட்டது.

மார்க் வாங்கிட்டா டாக்டர், இஞ்ஜினியர், மற்றவை.....

ஆனால் எத்தனை பேர் உண்மையில் முழுதாகக் கற்றிருக்கிறார்கள்??
**Interview வரும் பலருக்கு, அவர்கள் படிப்பு சம்மந்தப்பட்ட சாதாரண கேள்விக்கே பதில் தெரியவில்லை... இதுங்களை எப்படி வேலைக்கு எடுக்குறது??**

என்று பல தொழில் அதிபர்கள் வருத்தப்படுகிறார்கள்... இதில் எல்லோருக்கும் அரசு வேலை வேறு தரலையாம் இந்த மோடி அரசு...

ஒழுங்காக படித்து, பிடித்த ஒரு
துறையைத் தேர்வு செய்து, அதில் உன் அறிவை நன்கு கற்று வளர்த்துக் கொண்டு, மேலும் முன்னேற உடலாலும் உழைக்க வேண்டும்.

நீங்கள் கிண்டல் பேசிய #செருப்புத்தொழிலாளி தான் BATA என்ற கம்பெனி கோடியில் சம்பாதிக்கிறது. #சமையக்காரன் தான் Swiggy வரை கொண்டு வந்து சம்பாதிக்கிறான்.
#தையக்காரன் தான் இன்று உங்களை எல்லா இடத்திலும் அழகாய் நிற்க வைக்கிறான். #கூத்தாடி தான் உங்களை பைத்தியமாக அலையவிட்டுக் கோடியில் புரளுகிறான்.

#அம்மட்டன் என்று நீங்கள் இவாத்துப் பேசியவன் தான், அதில் தொழில் நுட்பத்தை முன்னேற்றி, உன்னை வெயிட்டிங்கில் நிற்க வைத்துள்ளான்...
இவர்கள் எல்லோரும் கௌரவம் அந்தஸ்து என்று பேசவில்லை. வாழ்க்கையை நடத்த பணம் வேண்டும். அதை தனக்குத் தெரிந்த துறையில் இன்றைக்கு ஏற்றாற் போல் முன்னேற்றித் தந்தார்கள். அவ்வளவே!

இப்போது உங்களுக்கு அங்கே குலத்தொழில் தெரியவில்லையா? இவை இழிதொழில் என்று நீங்கள்தானே வெறுத்து ஒதுக்கினீர்கள்?
பார்ப்பான் என்று அலறினீர்கள்... அவனும் தனக்கு கிடைக்கும் இடம் சென்று தன்னை முன்னேற்றிக் கொண்டு வாழ ஆரம்பித்து விட்டான். இப்போது உங்கள் பிழைப்பைக் கெடுப்பது யார்?

நன்றாக வறட்டு கௌரவம் பேசி, உடல் உழைக்க மறுத்து, பதவி, பணம் என்று மோகம் கொண்டு அலைபவனுக்குக் கைக்கூலியாகி,
உங்களை நீங்களே அடிமைப் படுத்திக் கொண்டு, அடுத்து வடநாட்டவரைக் கைகாமித்து, கத்திக் கொண்டே இருங்கள்...
நன்கு முன்னேறுவீர்கள்....

முதலில் உன் தவறைத் திருத்திக் கொண்டு, விட்ட தொழில்களை நவீனமாகத் தொடங்க வழியைப் பார்த்து, நம் தலைமுறைக்கும் அதைக் கற்றுத் தந்து வளர்த்தால்
நமக்கும் நன்று. சந்ததியும் உருப்படும்... இல்லை குலத்தொழில் என்று மீண்டும் கொடிபிடிக்க ஆரம்பித்தால்....**(யாரும் எதுவேண்டுமானாலும் கற்கட்டும். நான் ஜாதிபற்றிப் பேசவில்லை)**

வாழ்க தமிழா!! வளர்க தமிழகம்!!

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app pls compile
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!