தற்போது நாம் வாழும் பூமி மற்றும் நிலப்பகுதிகள் பற்றி ஓரளவிற்கு ஆதாரங்களுடன் தெரிந்து கொண்டோம்.
அடுத்ததாக நாம் பார்க்கப் போவது, சிலர் சற்று உணர்ச்சி வயப்படக் கூடிய ஒரு விஷயம் பற்றிய பகுதி.
1) இத்தொடரின் ஆரம்பத்தில் சொன்னது போல், இந்த தொடர், நமது தேசம், மொழி, ஆன்மீகம் பற்றிய தொன்மை விஷயங்களை நாம் அறிந்து கொள்ளத்தான். இதை அறிந்தால் மட்டும் தான், கால மாற்றத்தாலும், இன்ன பிற இன்னல்களாலும்,
எனவே இதில் வருபவை எல்லாவற்றையும் வேத காலத்தின் வாழ்க்கை முறை கொண்டு தான் பார்க்க வேண்டும்.
எனவே சில இடங்களில் ஆதாரத்திற்கான பெயர் குறிப்பிட இயலவில்லை. (கிடைக்கக் கிடைக்க, தொடரில் அவற்றை எதற்கானது என குறிப்பிட்டுக் கொடுத்து வர இயலும்)
4) இதில் உயர்வு – தாழ்வு என்ற எண்ணம் ஆரம்பத்திலேயே நம் மனதில் இருந்து அகற்றப்பட்டு, பின் படிக்கப்பட வேண்டும்.
நமது எண்ணங்களை மனம் எனும் குடத்தில் நிரப்பி வைத்துக் கொண்டு இதைப் படித்தால், நமக்குப் பிடிக்காத கருத்துக்கள் எல்லாம், நிரம்பிய குடத்தில் இட்ட நீராய் வீணாய் தான் போகும். அது நம்மை மேலும் கற்று முன்னேற விடாது.
6) **இதில் தெய்வீகம்/இறை சக்தி எனக் குறிப்பிடப் படுவதை, அந்த நம்பிக்கை இல்லாதவர்கள்,
இயன்ற வரை இத்தொடரில், எமக்கு இறைவன் கண்ணில் காட்டிய எல்லா ஆதாரங்களையும் தங்கள் முன் கொடுத்து வருகிறேன். எனவே இதனை ஒரு ஆய்வாளரின் பார்வை என்று பார்ப்பது நல்லது.
கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றை யவை ;
தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றணைத் தூறும் அறிவு ;
இங்கே நம் தெய்வப் புலவராம் திருவள்ளுவர், மொழி பேதம் பற்றி எங்கும் பேசவில்லை.
அந்தக் கல்வி எவ்விதமாகினும், அதனை மேலும் மேலும் கற்றால் ஊறும் கேணி போல் அறிவு வளரும் என்கிறார்.
எனவே மொழி பேதத்தைத் தூக்கி எறிந்து, நம் மூத்தோரின் முதுமொழி வாக்கின் படி வாழ்வில் முன்னேறுவோம் !
வார இறுதியில் கேள்விகளுக்கான பதில்களை, முடிந்த வரை ஆதாரத்துடன் தருகிறேன். அதை மீறி வெறுப்பு தோன்றினால், தயவு செய்து, இதைப் படிப்பதை விட்டுவிடுங்கள்.
🌿பாகம் : 2 🌿
🌷பாஷை / மொழி🌷
பாரதத்தில் வேத காலம் தொட்டு இருந்த மொழிகள் இரண்டு. அம்மொழிகள் இரண்டும் சிவபெருமான் கை உடுக்கையின் இருபுறம் இருந்தும் வந்தவை என்று சொல்லப் படுகின்றன. அவை
1)தமிழ்
2)சமஸ்க்ருதம்.
ரிக் வேதம் (10 : 71 : 4) ம் பாகத்தில் மட்டும் இது பற்றிய குறிப்பு உள்ளது. அதில், மனிதர்கள் உபயோகப்படுத்தும் பாஷை இரண்டு வகைப்படும் என்று சொல்லப் பட்டுள்ளது.
2) த்:ரிஷ்யா – பார்த்து அறியும் பாஷை
இவ்விரு மொழிகளையும் இரு காரணங்களுக்காக இறைவன் உருவாக்கித் தந்தார் என்று வேதகாலம் தொட்டு கூறப்பட்டுள்ளது.
அவை மனிதர்களுக்காக ஒன்றும் தெய்வத்துக்காக ஒன்றும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
2) மனிதன் இயற்கை மற்றும் இயற்கையைக் கடந்த (அ) தெய்வீக சக்திகளைத் தொடர்பு கொள்ள அருளப்பட்டதே *ஷ்ரவ்யா* என்னும் *சமஸ்க்ருதம்* மொழி.
இறைவன் தானே படைத்த இவ்விரு மொழிகளில் பேதம் இல்லை என்பதற்கான நிரூபணமாக, அவர் தேவிக்கு இவற்றை அருளியதைப் பற்றிய குறிப்பை,
**மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழுமுடனே சொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே!!**
மழையோ வெய்யிலோ இல்லாத, பனி நிறைந்த ஏரிகள் இருக்கின்ற இடத்தில்,
நமது தமிழ் நூலிலும் இவை இரண்டுமே முதலில் தோன்றிய மொழிகள் என்பது குறிப்பிடப் பட்டுள்ளது.
இதில் தமிழ் தான் உயர்ந்தது என்று சொன்னால், நாம் இயற்கையைக் கடந்த சக்தியினை உபயோகிக்க அனுசரித்து வந்த மொழியைக் குறைத்து மதிப்பிடுவது போல் ஆகும். அப்படியெனில் நாம் லட்சக்கணக்கான ஏடுகளை உதாசீனப்படுத்தி இழக்க நேரிடும்.
இல்லை! சமஸ்க்ருதம் தான் உயர்ந்தது என்றால், மனிதர்களுடனான சம்பாஷணை என்பதே இல்லாமல் போய்விடும். மனிதர்களுக்கு உள்ளேயே சம்பாஷணை என்று ஒன்று இல்லாத போது,
இவற்றை, தற்போதைய கனினி உலகில் புரியும்படிக் கூறினால்,
மனிதர்களுக்கான பாஷை, நாம் கனினியில் *தட்டச்சு செய்யும் மொழி* போல.
தட்டச்சு இன்றி, நாம் சொல்ல வருவதை கனினிக்குக் கொடுக்க முடியாது. அப்போது பைனரி தேவையற்றது ஆகிவிடும்.
அதே போல் பைனரி இல்லை எனில், நம் தட்டச்சு மொழி இருந்தும்,
அது போல, தற்போது நாம் பேசும் பாஷைகள் பல இருந்தாலும், இறையுடன் தொடர்பு கொள்ளும் மொழி ஒன்று தான். இவற்றில் உயர்வு - தாழ்வு பார்த்தால் நாம் தான் முட்டாள் ஆவோம்.
“எனக்குத் தமிழ் தான் தெரியும். தமிழில் பாடி, பக்தர்கள் இறையைக் கண்டது இல்லையா? இல்லையேல், சமஸ்க்ருதம் அறியாவிடில் இறையக் காண முடியாதா?
அப்படியானால் இதுவரை வாழ்ந்த பக்தர்களும், அவர்கள் இயற்றிய நூல்களும் பொய்யா?”
இவ்விரு மொழிகளுக்கும் ஒலி அலைகளில் வலிமை உண்டு. அதை யாராலும் மறுக்க முடியாது.
பேசுவதற்கு தமிழ் போல் இனிமையான மொழி கண்டிப்பாக சமஸ்க்ருதம் இல்லை. தமிழ் போல அழகு அதில் இல்லை.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்”
என்ற வாக்கியத்தை யாரும் மறுக்க இயலாது.
எனவே இயற்கை மற்றும் இயற்கைக்கு மீறிய சக்திகளுடன் நாம் சம்பாஷணை செய்யவே, அதனை நமக்கான நேர்மறைத் தன்மையில்
இப்போது, இதில் உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்று எதையும் கூற முடியாது!! கூறவும் கூடாது!!!
எனவே நம் இரு கண்களைப் பற்றிய உணர்வினை நாம் கொள்ளுவது போலே தான் இம்மொழிகளை நாம் நோக்குதல் வேண்டும்!!
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁