My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

தற்போது நாம் வாழும் பூமி மற்றும் நிலப்பகுதிகள் பற்றி ஓரளவிற்கு ஆதாரங்களுடன் தெரிந்து கொண்டோம்.

அடுத்ததாக நாம் பார்க்கப் போவது, சிலர் சற்று உணர்ச்சி வயப்படக் கூடிய ஒரு விஷயம் பற்றிய பகுதி.
இதைப் பார்ப்பதற்கு முன், நாம் சில விஷயங்களை கண்டிப்பாக மனதில் கொள்ளவேண்டும்.

1) இத்தொடரின் ஆரம்பத்தில் சொன்னது போல், இந்த தொடர், நமது தேசம், மொழி, ஆன்மீகம் பற்றிய தொன்மை விஷயங்களை நாம் அறிந்து கொள்ளத்தான். இதை அறிந்தால் மட்டும் தான், கால மாற்றத்தாலும், இன்ன பிற இன்னல்களாலும்,
நம் வாழ்க்கை முறை மாறியுள்ளது என்பத உணர முடியும். இதனை உணர்ந்தாலே, நமக்குள் இருக்கும் பல குழப்பங்கள் தீர்ந்து, ஒற்றுமை வளர வாய்ப்புகள் அதிகம் உண்டு.

எனவே இதில் வருபவை எல்லாவற்றையும் வேத காலத்தின் வாழ்க்கை முறை கொண்டு தான் பார்க்க வேண்டும்.
2) இதில் கொடுக்கப்படும் பல தகவல்கள், பல பழைய நூல்களிலிருந்தும், பண்டிதர்களின் வாக்கிலிருந்தும் குறிப்பெடுக்கப்பட்டு, சேகரிக்கப் பட்டவை.

எனவே சில இடங்களில் ஆதாரத்திற்கான பெயர் குறிப்பிட இயலவில்லை. (கிடைக்கக் கிடைக்க, தொடரில் அவற்றை எதற்கானது என குறிப்பிட்டுக் கொடுத்து வர இயலும்)
3) இத்தலைப்பைப் பற்றிய விஷயங்கள் எல்லாம், சிதறி இருப்பவை ஓரளவு தங்களிடத்து தொகுத்துக் காட்டப்பட்டதே தவிர, இதில் யாருடைய தனிப்பட்ட கருத்துக்களும் இல்லை.

4) இதில் உயர்வு – தாழ்வு என்ற எண்ணம் ஆரம்பத்திலேயே நம் மனதில் இருந்து அகற்றப்பட்டு, பின் படிக்கப்பட வேண்டும்.
அதாவது, நம் மனதை காலி பாத்திரம் போல் வைத்துக் கொண்டு படிக்க வேண்டும்.

நமது எண்ணங்களை மனம் எனும் குடத்தில் நிரப்பி வைத்துக் கொண்டு இதைப் படித்தால், நமக்குப் பிடிக்காத கருத்துக்கள் எல்லாம், நிரம்பிய குடத்தில் இட்ட நீராய் வீணாய் தான் போகும். அது நம்மை மேலும் கற்று முன்னேற விடாது.
5) இதை எழுதும் என்னை ஒரு பாரத வர்ஷத்தைச் சேர்ந்த, பரத கண்டத்தில் இருக்கும், திரிவடுகப் பகுதியில் வாழும், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட, ஆய்வுகளில் ஈடுபடும் ஒரு பெண்ணாகத்தான் பார்க்க வேண்டும்.

6) **இதில் தெய்வீகம்/இறை சக்தி எனக் குறிப்பிடப் படுவதை, அந்த நம்பிக்கை இல்லாதவர்கள்,
நம்மை மீறி உள்ள இயற்கையின் சக்தி என்பது குறிப்பிடப் படுகின்றது என்பதைப் புரிந்து படியுங்கள்**.

இயன்ற வரை இத்தொடரில், எமக்கு இறைவன் கண்ணில் காட்டிய எல்லா ஆதாரங்களையும் தங்கள் முன் கொடுத்து வருகிறேன். எனவே இதனை ஒரு ஆய்வாளரின் பார்வை என்று பார்ப்பது நல்லது.
இங்கே, கல்வி என்னும் அத்தியாயத்தில் திருவள்ளுவர் சொன்னதைப் பார்ப்போம்.

கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றை யவை ;

தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றணைத் தூறும் அறிவு ;

இங்கே நம் தெய்வப் புலவராம் திருவள்ளுவர், மொழி பேதம் பற்றி எங்கும் பேசவில்லை.
கல்வி மட்டுமே உயர்ந்த செல்வம் என்று தான் கூறுகின்றார்.

அந்தக் கல்வி எவ்விதமாகினும், அதனை மேலும் மேலும் கற்றால் ஊறும் கேணி போல் அறிவு வளரும் என்கிறார்.

எனவே மொழி பேதத்தைத் தூக்கி எறிந்து, நம் மூத்தோரின் முதுமொழி வாக்கின் படி வாழ்வில் முன்னேறுவோம் !
இதற்கு மேல் படிக்கையில் ஏதேனும் கருத்து வேறுபாடுகளோ, சந்தேகங்களோ இருந்தால், அவற்றை எனது தகவல் பெட்டியில் அனுப்புங்கள்.

வார இறுதியில் கேள்விகளுக்கான பதில்களை, முடிந்த வரை ஆதாரத்துடன் தருகிறேன். அதை மீறி வெறுப்பு தோன்றினால், தயவு செய்து, இதைப் படிப்பதை விட்டுவிடுங்கள்.
இத்தொடர் சண்டைக்கோ வீண் சச்சரவுக்கோ அல்ல. நன்றி நண்பர்களே!! 🙏🙏

🌿பாகம் : 2 🌿

🌷பாஷை / மொழி🌷

பாரதத்தில் வேத காலம் தொட்டு இருந்த மொழிகள் இரண்டு. அம்மொழிகள் இரண்டும் சிவபெருமான் கை உடுக்கையின் இருபுறம் இருந்தும் வந்தவை என்று சொல்லப் படுகின்றன. அவை

1)தமிழ்
2)சமஸ்க்ருதம்.
இவ்விரு மொழிகளில் எந்தவித பேதமோ, உயர்வு - தாழ்வோ இல்லை. வேதங்களும் அவ்வாறு எதையும் பற்றிக் குறிப்பிடவில்லை.

ரிக் வேதம் (10 : 71 : 4) ம் பாகத்தில் மட்டும் இது பற்றிய குறிப்பு உள்ளது. அதில், மனிதர்கள் உபயோகப்படுத்தும் பாஷை இரண்டு வகைப்படும் என்று சொல்லப் பட்டுள்ளது.
1) ஷ்ரவ்யா – கேட்டு அறியும் பாஷை
2) த்:ரிஷ்யா – பார்த்து அறியும் பாஷை

இவ்விரு மொழிகளையும் இரு காரணங்களுக்காக இறைவன் உருவாக்கித் தந்தார் என்று வேதகாலம் தொட்டு கூறப்பட்டுள்ளது.

அவை மனிதர்களுக்காக ஒன்றும் தெய்வத்துக்காக ஒன்றும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
1) மனிதன் பிற மனிதர்களோடு சம்பாஷணை (Interact/Converse) செய்ய அருளப்பட்டதே *த்:ரிஷ்யா* என்னும் நம் அமிழ்தினும் இனிய *தமிழ்* மொழி.

2) மனிதன் இயற்கை மற்றும் இயற்கையைக் கடந்த (அ) தெய்வீக சக்திகளைத் தொடர்பு கொள்ள அருளப்பட்டதே *ஷ்ரவ்யா* என்னும் *சமஸ்க்ருதம்* மொழி.
இதில் ஷ்ரவ்யா எனும் பாஷை, தெய்வ சக்தியுடன் தொடர்பு கொள்ள உபயோகப் படுத்தப்படும் மொழி ஆதலால், அதனை தேவ பாஷை என்றனர். (தெய்வீகத்துக்கான மொழி).

இறைவன் தானே படைத்த இவ்விரு மொழிகளில் பேதம் இல்லை என்பதற்கான நிரூபணமாக, அவர் தேவிக்கு இவற்றை அருளியதைப் பற்றிய குறிப்பை,
திருமந்திரத்தில் திருமூலரே கொடுத்துள்ளார்.

**மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழுமுடனே சொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே!!**

மழையோ வெய்யிலோ இல்லாத, பனி நிறைந்த ஏரிகள் இருக்கின்ற இடத்தில்,
சமஸ்க்ருதமும் தமிழும் அன்னை பார்வதி தேவிக்கு (காரிகை – பெண்) சொல்லித் தந்தான் என அர்த்தம் கூறும் இதன் மூலம், இமயத்தில் தேவிக்கு சிவன் இம்மொழிகளை சொல்லித் தந்தார் என்று கூறியுள்ளார்.

நமது தமிழ் நூலிலும் இவை இரண்டுமே முதலில் தோன்றிய மொழிகள் என்பது குறிப்பிடப் பட்டுள்ளது.
எனவே நாம் இவை இரண்டும் தெய்வம் அருளியது என்பதை முதலில் ஏற்போம்.

இதில் தமிழ் தான் உயர்ந்தது என்று சொன்னால், நாம் இயற்கையைக் கடந்த சக்தியினை உபயோகிக்க அனுசரித்து வந்த மொழியைக் குறைத்து மதிப்பிடுவது போல் ஆகும். அப்படியெனில் நாம் லட்சக்கணக்கான ஏடுகளை உதாசீனப்படுத்தி இழக்க நேரிடும்.
நாம் அடையக்கூடிய பல சக்திகளை, ஸ்லோக மந்த்ரங்களைத் தவிர்ப்பதன் மூலம் இழக்க நேரிடும். அது நமக்குத் தான் ஒரு குறைபாடு. அது தவறு!

இல்லை! சமஸ்க்ருதம் தான் உயர்ந்தது என்றால், மனிதர்களுடனான சம்பாஷணை என்பதே இல்லாமல் போய்விடும். மனிதர்களுக்கு உள்ளேயே சம்பாஷணை என்று ஒன்று இல்லாத போது,
அவன் எவ்வாறு தன் எண்ணத்தை விளித்து, தெய்வீக சக்தியைத் தன் எண்ணத்திற்கு ஏற்ப அனுக முயற்சி செய்ய முடியும்? எனவே அதுவும் தவறு!!

இவற்றை, தற்போதைய கனினி உலகில் புரியும்படிக் கூறினால்,

மனிதர்களுக்கான பாஷை, நாம் கனினியில் *தட்டச்சு செய்யும் மொழி* போல.
தெய்வத்துக்கான (நம்மைத் தாண்டிய சக்திக்கான) பாஷை, அம்மொழியைத் தனது ப்ரொக்ராம் வடிவிற்கு மாற்றும் *பைனரி கோட்* மொழி போல.

தட்டச்சு இன்றி, நாம் சொல்ல வருவதை கனினிக்குக் கொடுக்க முடியாது. அப்போது பைனரி தேவையற்றது ஆகிவிடும்.

அதே போல் பைனரி இல்லை எனில், நம் தட்டச்சு மொழி இருந்தும்,
ப்ரொக்ராம் செய்யப் பயன்படாது. தட்டச்சு மொழி பல இருந்தாலும், பைனரி ஒன்று தான்.

அது போல, தற்போது நாம் பேசும் பாஷைகள் பல இருந்தாலும், இறையுடன் தொடர்பு கொள்ளும் மொழி ஒன்று தான். இவற்றில் உயர்வு - தாழ்வு பார்த்தால் நாம் தான் முட்டாள் ஆவோம்.
இதை விருப்பு - வெறுப்பு தாண்டி , நாம் ஏற்க வேண்டும். அதற்காக ,

“எனக்குத் தமிழ் தான் தெரியும். தமிழில் பாடி, பக்தர்கள் இறையைக் கண்டது இல்லையா? இல்லையேல், சமஸ்க்ருதம் அறியாவிடில் இறையக் காண முடியாதா?

அப்படியானால் இதுவரை வாழ்ந்த பக்தர்களும், அவர்கள் இயற்றிய நூல்களும் பொய்யா?”
எனத் தவறான அர்த்தம் கொண்டு வாதம் செய்யக் கூடாது. நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இரு மொழியும் தந்தது அந்த பரமனான சிவனே. அப்படி எனில் , தமிழையோ சமஸ்கிருதத்தையோ அவன் மறுப்பானா? அது அல்ல.

இவ்விரு மொழிகளுக்கும் ஒலி அலைகளில் வலிமை உண்டு. அதை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால், அது இரு மொழிகளிலும் மாறுபடுகின்றது. அதையும் நாம் ஏற்கத்தான் வேண்டும்.

பேசுவதற்கு தமிழ் போல் இனிமையான மொழி கண்டிப்பாக சமஸ்க்ருதம் இல்லை. தமிழ் போல அழகு அதில் இல்லை.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்”

என்ற வாக்கியத்தை யாரும் மறுக்க இயலாது.
அதே சமயத்தில், சமஸ்க்ருதத்தின் வார்த்தைப் பிரயோகமும், அதனால் ஏற்படும் ஒலி அலைகளும் பிரபஞ்ச சக்தியின் ஆற்றலுடன் ஒன்றினையும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளன.

எனவே இயற்கை மற்றும் இயற்கைக்கு மீறிய சக்திகளுடன் நாம் சம்பாஷணை செய்யவே, அதனை நமக்கான நேர்மறைத் தன்மையில்
உபயோகப் படுத்திக் கொள்ளவே சமஸ்க்ருதம் உருவாக்கப் பட்டது.

இப்போது, இதில் உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்று எதையும் கூற முடியாது!! கூறவும் கூடாது!!!

எனவே நம் இரு கண்களைப் பற்றிய உணர்வினை நாம் கொள்ளுவது போலே தான் இம்மொழிகளை நாம் நோக்குதல் வேண்டும்!!
(இதை மீறிப் பேசப்படும் குதர்க்கங்களுக்கு பதிலளிக்க இப்பதிவு இல்லை.)

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!