My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

தற்போது ”நாங்கள் தமிழர்கள், தமிழ் மட்டுமே உயர்ந்தது என்று சொல்லிக் கொண்டு இருக்கும் மக்கள், நம் பொது மக்கள் முன் வைக்கும் மிகப் பெரிய கேள்வி ஒன்று:

”உலகின் பல இடங்களில் அகழ்வாய்வு செய்ததில் தொல்லியல் ஆய்வாளர்கள்,
தமிழின் பண்டைய கால எழுத்துக்களுக்கான பல ஆதாரங்களை எடுத்திருக்கிறார்கள். கல்வெட்டில் எழுத்து, பானையில் எழுத்து, மரத்தில் எழுத்து, உலோகத்தில் எழுத்து என்று பல விதங்களில் அவை கிடைத்துள்ளன.

இவற்றின் காலக் கணக்கை ஆய்ந்ததில் தமிழ் எழுத்துக்கள் கிட்டத்தட்ட 4000 வருஷங்களுக்கு முந்தையது
என்ற முடிவினை வெளிப்படுத்தி உள்ளனர்.

அவற்றுள் தற்போது கீழடி என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களை வைத்து, நம் தமிழர் நாகரிகம் கிட்டத்தட்ட 4000 வருஷங்களுக்கும் முற்பட்டது என்பது கூறப்பட்டுள்ளது. அப்போதே தமிழர்கள், பண்பட்ட நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கான அடையாளங்களும் உள்ளது.
எனவே தமிழ் மொழி தான் உலகில் தொண்மையானது. ஆதாரப் பூர்வமாக, இங்கே தமிழ் தான் தொன்மை வடிவில் இருக்கின்றது. ஸமஸ்க்ருதம் இல்லை. நமது தாய் மொழியாம் தமிழ் தான் உலகின் மூத்த மொழியாக முடிவாகி உள்ளது.

1) அப்படியானால், தமிழ் தானே முதலில் வந்தது என்று அர்த்தம்?
2) இது போல் தொல்பொருள் ஆதாரங்கள் ஸமஸ்க்ருதத்திற்கு இல்லையே?
3) அப்படி இருக்கையில் ஸமஸ்க்ருதமும் இதற்கு இணயானது என எப்படி ஏற்போம்?”

என்பது தான்.

இந்தக் கேள்வி 100 % நியாயமானது தான். இதில் நாம் ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் தான் முதலில் எழுத்துருக் கொண்டது என்பது உண்மையாக இருக்கலாம். அப்படி இருக்க ஸமஸ்க்ருதத்திற்கும் ஏன் தமிழுக்கு இணையான முக்கியத்துவம்? அதையும் பார்ப்போம்!!

1) “ஸமஸ்க்ருதம்” என்பதற்கு, ”செம்மையான வடிவம் பெற்ற மொழி” (Completely edited / well formed according to accurate rules)
என்று பொருள். அம்மொழி ஆதி முதல், கேள்வி ஞானத்திலேயே தான் வளர்ந்தது.

பின்னர், குரு - சிஷ்யன் என்ற உறவில் ஸம்பாஷணையாகவும், மந்திரம், ஸ்லோகம், வேதம் போன்றவற்றில் ஒலி வடிவிலும், *செவி வழியாக மட்டும்* தான் தொடர்ந்து இருந்து வந்தது. இவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதன் மூலமும்,
பேசுவதாலும் மனனம் ஆகி, அம்மொழி உயிர்ப்புடன் உருக்குலையாது நிலைத்து இருக்கின்றது.

2) எந்த ஒரு விஷயமும் நம் மனதில் பதிந்துவிட்டால் நினைவில் நின்றுவிடும். அது எத்தனை காலம் ஆனாலும் நமது ஞாபகத்தில் இருந்து அழியாது.

எந்தவித உப கருவிகளும் இன்றி, எங்கும், எப்போதும்
உபயோகப் படுத்திக் கொள்ளலாம். அதற்காகவே குருகுலக் கல்வியில், அவற்றை மீண்டும் மீண்டும் ஓதி, அவற்றை முழுவதுமாக Mind Record செய்து வைத்திருந்தனர்.

அதனால், அப்போது இதற்கான எழுத்து வடிவம் முக்கியத்துவம் பெறவில்லை என்பது இந்த வழக்கத்தில் இருந்து புரிகின்றது.
3) வால்மீகி முனிவர், * ராமாயணம் இயற்றிய ஆண்டு கி.மு - 5 ம் நூற்றாண்டு* என்று இன்றைய வரலாற்று மற்றும் மொழியியல் ஆய்வாளர்களால் *யூகிக்கப் படுகின்றது*. இதற்கான நிரூபணம் இல்லை.

**மைக்கேல் டானினோ** என்ற ஆய்வாளர் தமது நூலில், வேத சாஸ்திரங்கள் கி.மு. 4,000த்தில் இயற்றப்பட்டிருக்கலாம்
எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது பற்றிய மொழியியல், ஆராய்ச்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

அதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிடுவது; *ஸரஸ்வதி நதி பற்றிய குறிப்புகளைக் கொண்ட ரிக் வேதம், மஹாபாரதம் முதலிய வேத இலக்கியங்கள் யாவும்,
ஸரஸ்வதி நதி காய்ந்ததாக அறியப்படும் கி.மு. 4000-த்திற்கு முன்பாகவே இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதே.

4) அடுத்ததாக, ராமர் பிறந்ததைப் பற்றிய ஆய்வில், அவரது ஜாதகத்தைக் கொண்டு பிரபல ஆராய்ச்சியாளர் **புஷ்கர் பட்நாகர் (Pushkar Bhatnakar)** என்பவர்,
ராமரது பிறந்த வருஷமும், நாளும் கணித்துப் பார்த்தார்.

**The Institute for Scientific Research on Veda** என்ற ஆய்வு நிறுவனம், *Modern program of Astrological Science* என்னும் மென்பொருள் (Software) ஒன்றை ப்ரத்யேகமாக இதற்கெனத் தயாரித்து, அவரது முயற்சிக்கு முழு உதவி செய்தது.
அதன் மூலம் அவர், ”ராமர் இன்றிலிருந்து 5121 ஆண்டுகளுக்கு முன், ஜனவரி 10 -ம் தேதி பிறந்திருக்கலாம்” என்று யூகித்தார்.

ஆனால், இதில் ஒரு சிக்கல் எழுந்தது. இதே ஜாதகத்தை, கிரக நிலைகளின் சுழற்சி அடிப்படையிலும், மேலும் வால்மீகி தன் காவியத்தில், ராமருடன் சம்மந்தப்பட்டவை என்று எழுதிய
இடங்கள், மற்றும் அங்கே நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளுக்கான ஆதாரங்கள் உள்ள பொருட்கள், நடந்த இடங்கள் மற்றும் அவற்றின் காலம் முதலியவற்றைக் கணக்கெடுத்து பொருட்களை ஆய்ந்து ஒப்பிட்டால், அதன் காலத்தை இவர்கள் கண்டறிந்த காலத்துடன் ஒப்பிட முடியவில்லை.
ஏனெனில், ஆய்வுகள் மூலம் ராமாயணம் தொடர்பாக உறுதிப்படுத்தப் பட்டுள்ள தலங்கள் எல்லாம் இவரது கணிப்பிற்கு அருகில் கூட இல்லாமல் பல லட்சம் வருஷங்களுக்கு முற்பட்டு உள்ளன. இதை மேலை ஆய்வாளர்கள் மறுக்காமல் ஏற்கின்றனர்.

மேலும், இதே ஜாதகத்தின் நிலை இது போல பல ஆயிரம் வருஷங்களுக்கு ஒரு முறை
கண்டிப்பாக கோள் சுழற்சியின் அடிப்படையில் வரும். ஆனால் அதன் காலம், தொல்லியல் ஆய்வின் காலத்தோடு ஒத்துப் போகவில்லை….

எனவே ராமரது பிறந்த தினம் இதுதான் என்று துல்லியமாக இன்றைய அறிவியலால் சொல்ல முடியவில்லை. அவை எப்படியும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகத்தான் இருக்கும்
என்று ஏற்று, ஆய்வறிக்கையும் வேதத்தின் காலக் கணக்கைத் தான் ஏற்பானது என்று சொல்கின்றது.

5) வேத சாஸ்திரப்படி, இம்மொழிகள் இரண்டும் த்ரேதாயுகத்தில் பிறந்ததாகத் தெரிகின்றது. அதாவது, *த்:ரிஷ்யா என்ற தமிழும், ஷ்ரவ்யா என்ற சமஸ்க்ருதமும் பிறந்தது த்ரேதாயுகத்தில்*.
இதற்கான ஆதாரத் தரவுகளும், மேலும் சில நிரூபணங்களும் பார்ப்போம்.

நாம் அனைவரும் *தமிழ் மாமுனி என்று போற்றும் அகஸ்திய முனிவருக்கு*, சிவபெருமான் தான் தமிழின் எழுத்தும் இலக்கணமும் போதித்தார். ”அகஸ்திய முனிவருக்கு தமிழின் முக்கியத்துவத்தைக் கூறி, அதற்கான இலக்கணமும் பரமேஸ்வரன் போதிக்க,
அகத்தியர் அதனைக் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டு, தமிழின் எழுத்துரு இலக்கணத்தை எழுதி வைத்தார்” என நமது *கம்ப நாட்டாழ்வார்* எழுதிய *ராமாயணத்தில்* குறிப்பு உள்ளது.

எனவே நமது தமிழ் வழி ராமாயணத்திலும் அகஸ்தியர் த்ரேதாயுகத்தில் இலக்கணம் இயற்றியதற்கான ஆதாரம் உள்ளது.
கம்ப நாடனும், தனது காவியத்தில்

”உழக்கும் மறை நாலினும், உயர்ந்த துலகம் ஓதும்
வழக்கினும் மதிக் கவியினும் மரபின் நாடி
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் செங்கண்
தழல்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் – தந்தான்”

நான்கு வேதங்களின் அடிப்படையில், கல்வி ஞானம் கேள்வியில் சிறந்து தழைத்தது
வழக்கமான போதில், மாமுனி அகத்தியனுக்கு நற்றமிழ் இலக்கணத்தை, நெருப்பு வடிவானவனும், முக்கண்ணனுமாகிய இறைவன் தந்தான் (போதித்தான்).

முக்கண்ணன் சிவ பெருமான் என்பதை நாம் நன்கு அறிவோம். மேலும், தமிழ் எழுத்துருவில் இலக்கணம் காணும் போது, நான்கு வேதங்களும் தழைத்தோங்கி இருந்தன.
அப்படி என்றால், தமிழும் சமஸ்க்ருதமும் ஒன்றாகவே ஆதி முதல் வந்திருக்கின்றன என்பது புரிகின்றது.

நம் *தேசக் கவிஞன் பாரதி*யும்,

”ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்”

என்று பாடுகின்றான்.
அடுத்ததாக, நாம் இன்று வரை படிக்கும் தொல்காப்பியரின் இலக்கணம்!!

மதுரை தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம், தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு. ”தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில்; ”எழுத்து, சொல், பொருள்”
ஆகிய மூன்று அதிகாரங்களிலும் எக்குற்றமும் இல்லை என அறுதியிட்டுக் கூறினார் அதங்கோட்டாசான்” என்கிறார் பணம்பாரர்*.

தொல்கபியப் பாயிரத்திற்கு உரை எழுதிய பணம்பாரன் என்னும் தமிழ்ப் புலவர், தனது சிறப்புப் பாயிரத்தில்
”நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அரங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து”

இதன் விளக்கம் யாதெனில்
”நிலத்தை தன் கீழ் வாழ்வார்க்கு கொண்டு கொடுக்கும் மன்னன் (நிலந்தரு திருவிற் பாண்டியன்) மாகீர்த்தியது, அவையின் கண் நான்கு மறைகளையும் அதாவது ரிக், யஜூர்,
ஸாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்களையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது” என விரிவாக எழுதி இருக்கிறார்.

தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணம் என்னும் தமிழ்ப்புலவர்;
நான்கு மறைகளையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று எழுதியிருக்கிறார்.

இதன் மூலம், அகத்தியர் தான் முதலில் தமிழ் இலக்கணம் எழுதினார் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
அவரது மாணாக்கர்களில் தொல்காப்பியரும் ஒருவர் என்பது, இம்மாணாக்கர் பெயர்த் தகவலில் உள்ளது.

1)செம்பூண்சேய் 2)வையாபிகன் 3)அதங்கோட்டாசான் 4)அபிநயனன் 5)காக்கை பாடினி 6)தொல்காப்பியர் 7)வையாபிகன் 8)பனம்பாரனார் 9)கழாகரம்பர் 10)நத்தத்தன் 11)வாமனன் 12)துராலிங்கன்.
தொல்காப்பியர் காலம் பற்றிப் பல குறிப்புகள் உள்ளது. நாம் அறிந்து ஸமஸ்க்ருதத்துக்கு இலக்கணம் இயற்றியவர் *பாணினி* என்னும் புலவர். பாணினி இலக்கணத்துக்கு முன்னர் இலக்கணம் இருந்திருக்கலாம்! அது இன்று நம்மிடையே இல்லை என்பது பெரிய குறையே!

பாணினிக்கு முன்னர் இருந்த இலக்கண வித்தகர்களின்
நீண்ட பட்டியலை, பாணினியும் பலரும் தந்திருக்கின்றார். அவைகளும் *அகத்தியம் போல மறைந்துவிட்டன*. நாம் எப்படித் தொல்காப்பியருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த *பவனந்தி முனிவரின் நன்னூலை*ப் பயன்படுத்துகிறோமோ, அதுபோல ஸமஸ்கிருத மக்களும் பாணினியைப் பயன்படுத்துகின்றனர்.
பாணினிக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வேத கால ஸமஸ்க்ருத இலக்கணமே வேறு.

ஆனால், உண்மையில் உற்று நோக்கிடின், பல ஆய்வாளர்கள் தொல்காப்பியரின் காலம் பற்றி கூறிய கருத்துக்கள்; முதல் சங்கக் காலத்தைக் கணக்கிற் கொண்டே பெரும்பாலும் கணிக்கப்பட்டவையாகத் தோன்றுகின்றன.
அவர்களில் முக்கியமான சிலரின் கருத்துக்களை மட்டும் பார்ப்போம்.

Source:

1) திரு. கே. எஸ். சீனிவாசப்பிள்ளை - தமிழ் வரலாறு நூல் 26 ஆம் பக்கம் - தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்திலும் முற்பட்டவர்.
2) டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் - சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் நூல் 13-14 ஆம் பக்கங்கள் - 'தொல்காப்பியம்' வியாச முனிவர் வேதத்தைப் பகுத்ததற்கு முன் எழுந்தது'.

3)எம். சீனிவாச ஐயங்கார் - Tamil Studies நூல் 8 ஆம் பக்கம் - தொல்காப்பியனார் கி. மு. 4 ம் நூற்றாண்டினர்.
4) மறைமலை அடிகளார் - கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர்

5) வித்வான் க. வெள்ளைவாரணன் - 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' நூல் 127 ஆம் பக்கம் - "தொல்காப்பியனார் கி. மு. 1500 ஆண்டுகளுக்குப்பிற்பட்டவராதல் இயலாது".
இவை யாவும் சங்க இலக்கியக் காலக் கணக்கெடுப்பினைக் கொண்டு ஆய்ந்ததாகவே வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தொல்காப்பியர் காலம் பற்றியும், திருக்குறள், சங்கப்பாடல்கள் பற்றியும், இரட்டைக் காப்பியங்கள் பற்றியும், கால ஆராய்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே இருந்து வந்துள்ளது.
இப்பழந்தமிழ் நூல்கள் பற்றிய ஆய்வு, தமிழ் மொழியுடன் தொடர்புடையது. தமிழ் மொழி ஆய்வு, சிந்துவெளி நாகரிக ஆய்வுடனும் தெற்கிலிருந்து மறைந்த குமரிக் கண்ட ஆய்வுடனும் தொடர்புகொண்டது.

இந்தச் சிந்துவெளிக்கு முற்பட்டது ஸரஸ்வதி நதியின் மறைவு. ஸரஸ்வதியின் மறைவு, மஹாபாரதத்திற்கு முற்பட்டது.
நமது *வேத காலத்தின் கணக்குப்படி பார்த்தாலும், கலி ஆரம்பித்து 5121 வருடம் ஆகின்றது*. மஹாபாரதக் காலத்திலேயே வால்மீகியின் ராமாயணம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

*த்வாபரயுகம் 8,64,000 வருஷங்கள்*. அதற்கு முற்பட்ட க்ருதயுகத்தில் நடந்த ராமாயணத்தை,
அவர் காலத்திலேயே வால்மீகி ராமாயணம் இயற்றி, அவர் பிள்ளைகள் **லவ-குசன்** மூலம் அரங்கேற்றியும் விட்டார்.

அப்படியானால் **8,64,000+5121 = 8,69,121* வருடங்கள், த்வாபர யுகமும் சேர்த்து, நாம் அறிந்து முடிந்துள்ளது. அதற்கு முன்பே இருந்திருக்கின்றது ஸமஸ்க்ருதம் என்பது நிரூபணமாகி விட்டது.
ஸமஸ்க்ருதமும் தமிழும் ஒன்றாகப் பயணித்தது என்பதும், அவை ஒன்றாகப் படைக்கப் பட்டது என்பதும் திருமந்திரம் ”மாரியும் கோடையும்” எனும் பாடலில் நாம் பார்த்தோம். இப்போது மேலும் சில ஆய்வுகளையும், அதன் அடிப்படைகளையும் பார்ப்போம்.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!