My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺 (6)

உதாரணமாக, ராம சேதுப் பாலம்:

German History Researcher Prof. Klaus D. Rauhl and
Indian History Researcher Prof. Vishad Tripathi

ஆகியோர் ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள ராமர் சேதுப் பாலம் இருப்பதை ஆய்வுப் பூர்வமாக நிரூபித்து உள்ளனர்.
இதை NASA 2007- ல் வெளியிட்டது. மேலும் இந்த ஆய்வாளர்கள், அவ்வாண்டில் நடந்த
*World Ramayan Conference* ல்
*ராம சேது உண்மை என்பதையும், ஆய்வின்படியும், வேதக் கணிதப் படியும் இது கண்டிப்பாக *த்ரேதாயுகம்* எனப்படும் காலத்தில் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதையும்
எங்கும் நிரூபிக்க நாங்கள் தயார்* என்று அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.

References:
1)Satellite View of Rama Setu – By NASA
ஆனால், ஆய்வின் படி நிரூபிக்க ஸமஸ்கிருதத்தில் உள்ள வால்மீகியின் எழுத்தைத் தவிர, வேறு எழுத்துருக்கள் அவர்களிடமும் இல்லை என்பது உண்மையே!

நம் கையில் தற்போது உள்ள நூல்களில், நம் ஆதி மொழிகள் பற்றிய தெளிவான விவரங்கள் மொத்தமாக கிடைக்கப் பெறவில்லை. எனவே கிடைத்ததை வைத்துத்தான்
நாம் இவற்றில் எந்த ஒரு விஷயத்தைப் பற்றிய முடிவுக்கு வருகின்றோம்.

அந்தக் காலங்களில், அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் குருகுலக் கல்வி பயின்றனர் என்கையில், அனைவரும் சமஸ்க்ருதம் மற்றும் தமிழ் இரண்டும் அறிந்திருந்தனர் என்பதே உண்மை.
ராமருக்கும் இரு மொழிகளும் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் உறுதியுடன் கூறுகின்றனர்.

ஏனெனில், அவர்களது தின்னமான கருத்தின் படி, பேச்சு வழக்கு மொழியாகிய தமிழில் தான் அவர் வாலி, சுக்ரீவன், ஹனுமன் போன்றவர்களுடன் பேசியிருப்பார் என்கின்றனர்.
சரி. ராமர் ஒரு ராஜ குமாரன், என்ன வேண்டுமானாலும் கற்பார். ஆனால், நம் போன்ற பொது ஜனங்களுக்கு இரண்டு மொழிகளும் தெரியும் என்பதற்கான நிரூபணம் உள்ளதா? என்று கேட்பவர்களுக்கும் இதோ...

1) வியாஸர் மீனவப் பெண்ணான சத்யவதிக்குப் பிறந்தவர்.
2) வால்மீகி தனது ஆதி காலத்தில் ஒரு திருடன்.
3) அகஸ்தியர் பாரதத்தின் வடக்கில் இருந்து தெற்கே வந்த ப்ராமணர்.
4) நம்மாழ்வார் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
5) திருப்பாணாழ்வார் பாணன் எனும் இசை வேளாளர்.
6) நீலன் எனும் திருமங்கையாழ்வார் கள்ளர் குலம்.
7) பொய்கை ஆழ்வார் (அயோநிஜர்) காஞ்சிப் பொய்கையில் கண்டெடுக்கப் பட்டவர்.
8) பூதத்தாழ்வார் (அயோநிஜர்) மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவில் மண்டபத்தில் கண்டெடுக்கப்பட்டவர்.
9) பேயாழ்வார் (அயோநிஜர்) திருமயிலை (மயிலப்பூர்) கிணற்றின் செவ்வல்லி மலரில் கண்டெடுக்கப்பட்டவர்,
10) கோதை (அயோநிஜர்) பெரியாழ்வாரின் கொல்லைத் துளசிமாடத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டவர்.
11) தேசிகர் சைவ வேளாளர்.

இவர்கள் அனைவரும் காவியமும், இலக்கியமும், ப்ரபந்தமும், தேவாரப் பாடலும் இயற்றிய மனிதர்கள் தானே? இவர்களில் 6 – 11 இருப்பவர்கள் தமிழகம் தந்த பெரியோர்கள். இரு மொழியும் அறிந்திருந்தனர்.

உதாரணம் & Reference: ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்
ஸமஸ்க்ருதத்தில் தேசிகர் இயற்றிய பாதுகா ஸஹஸ்ரம்

முதல் ஸ்லோகம்:

“ஸந்த: ஸ்ரீரங்க ப்ருத்வீச சரணத்ரான சேகரா:
ஜயந்தி புவநத்ராண பதபங்கஜ ரேணவ:”

“ஸ்ரீ ரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் மென்மையான திருவடிகளை எப்போதும் பாதுகாக்கும் அவனுடைய பாதுகைகளைச் சிலர் தங்கள் தலையின் மீது
ஆபரணம் போன்று, அலங்காரமாகவும் ஏற்கின்றனர். அப்போது, அனைத்து உலகங்களையும் காத்து நிற்கும், மென்மையான தாமரை போன்று சிவந்த திருவடிகளின் தூசிகள், அவர்களது தலையின் மீது படிகின்றன. இதன் காரணமாக அவர்கள் அனைத்திலும் வெற்றியுடன் உள்ளனர்.
அதைப் பாடிய ஆழ்வார்கள் பொருள் உணர்ந்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்தோர்.

இவர்கள் தமிழின் மேலுள்ள காதலாலும், தமிழே பேச்சு மொழியாக (த்;ரிஷ்யா) இருந்தமையாலும், அதிலேயே தமது இறையைப் பாடினர். அவ்வாறு இருக்க, ஒரு மொழியை விரும்பியதால்,
அவர்கள் இன்னொன்றை வெறுத்தார்கள் அல்லது அறியார்கள் என்று பேசுதல் விதண்டாவாதம் தான். அறிவை வளர்க்க அது தேவை அற்றது.

அடுத்ததாக, வட இந்திய ப்ராமணரான, தமிழ் முனி என அழைக்கப்படும் அகஸ்தியர்!!

(கீழே இருப்பது அவரது தொன்மையான உருவச்சிற்பம். இதற்கான ஆண்டு இன்னும்
சரியாகக் கணக்கிடப்படவில்லை.)

Reference; jstor.org/stable/3250034…
அகத்தியர் தமிழில் எழுதிய நூல்கள்

1) அகத்தியம் ( தமிழ் எழுத்துரு, இலக்கணம்)
2) அகத்திய ரஸவாதம் (வேதியியல் பற்றிய
விஞ்ஞானப் பாடல்கள்)
3) தக்ஷ்ணாமூர்த்தி கலை ஞானம் 1200 (யோகம்)
4) அகத்தியம் களங்கு அறுபது (வைத்தியம்)
5) அகத்தியர் ஸூத்ரம் (மருத்துவம்)
6) அகத்தியர் ஞான காவியம் (ஞானம்)
7) அகத்தியர் தீட்சை விதி (சைவம்)
8) அகத்தியர் பஞ்ச பட்ச சூத்திரம் ; கேரள
ஜோதிடம் (ஜோதிடம்)
9) அகத்தியர் பட்சிணி (மந்திரம்)
10) அகத்தியர் புராண காவியம்
11) அகத்தியர் பூஜா விதி
12) அகத்தியர் மாந்த்ரீக நிகண்டு (மாயாஜாலம்)
13) சடக்கரந்தாதி (காவியம்)
14) அகத்தியர் வைத்திய ஸூத்ரம்
15) அகத்தியர் வைத்திய பரிபூரணம்
16) புருஷ ஸாமுத்ரிகா லக்ஷணம்

ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒரு ஆதாரம் மேலே கொடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு நமக்குக் கிடைத்தது 147 நூல்கள். ஆனால் பல நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.
இவற்றில் பெரும்பாலும் மருத்துவம், யோகம் போன்ற நூல்களே இயற்றப் பட்டுள்ளன.

தமிழுக்கு இலக்கணம் எழுதிய அகத்தியர் ஸமஸ்க்ருதத்திலும் வல்லவர்.

அப்படியா??? என்று ஆச்சரியப் படுவோர்க்கு, அவர் ஸமஸ்க்ருதத்தில் எழுதிய நூல்கள் பற்றியும் பார்த்தால், சிறிது மனம் ஏற்றுக் கொள்ளும்.
1) ராமர் ஸீதையைத் தேடிச் செல்கையில், செல்லும் காரியம் வெற்றி பெற *ஆதித்ய ஹ்ருதயம்* என்னும் சூர்ய பகவானை வழிபடுவதற்கான ஸ்லோகத்தை ராமருக்கே சொல்லித் தந்தவர்.

2) அகஸ்தியர், அவரது மனைவி லோபமுத்ரா இருவரும் ரிக் வேதத்தில் 1:165 முதல் 1:191 வரையான ஸ்தோத்திரங்களை இயற்றினார்கள்.
3) இவர் குருகுலம் நடத்தியது ரிக் வேதம் 1:179 ல் இருக்கின்றது.

4) அகஸ்த்ய ஸம்ஹிதா (அகஸ்த்யர் அறிவியல் கருவிகள் பற்றிய ஆக்கம் இயக்கம் பற்றி எழுதியது)
5) அகஸ்திமதா (நவரத்தினங்கள் பற்றியும், அவற்றில் ஆபரணங்கள் செய்யும் சூத்திரங்கள் பற்றியும் கூறும் Gemology and Jewel making நூல்)
6) த்:வைத நிர்ணயா
7) லக்ஷ்மி ஸ்தோத்ரம்
8) ஸரஸ்வதி ஸ்தோத்ரம்

இவை தவிர பல ஸ்லோகங்களும், விஞ்ஞான நூல்களும் எழுதி இருக்கின்றார். இவை எல்லாம் எழுதிய அகத்திய முனிவரே தமிழ் எழுத்து இலக்கணமும் கொடுத்திருக்கின்றார். இவ்வாறு, இரு மொழிகளிலும் வல்லமை கொண்ட அகத்தியரை நாம் ஏற்கையில்,
அவர் அனுசரித்த மற்ற ஒரு மொழியை மட்டும் கேவலம் என்று நாம் கருதுவது தவறல்லவா??

அந்தக் காலங்களில், அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் குருகுலக் கல்வி பயின்றனர். இது அகஸ்தியர் குருகுலம் நடத்திய விளக்கத்தில் தெரிகின்றது. அங்கே, ஆரம்பத்தில் அனைவருக்கும் சமஸ்க்ருதம் மற்றும் தமிழ்
இரண்டும் போதிக்கப் பட்டுள்ளன. பிறகு, மாணவனின் விருப்பத்திற்கேற்ற பாடத்தில் நிபுணத்துவம் பெற பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.

அனைவரும் அதனை ஸ்லோகங்கள், மந்த்ரங்கள், ஸூத்ரங்கள் இவற்றின் வாயிலாக மனனம் செய்து கற்றறிந்தனர். எனவே, அவர்களுக்கும் குறிப்பேடு தேவைப்படவில்லை.
சொல்லப் போனால், துல்லிய நுட்பத்துடன் ஒரு வேலையைச் செய்வதற்கான அநுபவ அறிவை அங்கே கற்ற வேலைகள் மூலமாகவும், அதற்கான ஸூத்ரம், மந்த்ரம் போன்றவற்றை மனனம் மூலமாகவும் அறிந்திருந்தனர் என்பதே உண்மை.

இதை எளிதில் நாம் ஏற்கும்படி சொல்வதென்றால், நம் முன்னோர் சிறு வயதில் இருந்து
கனிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என எல்லா வாய்ப்பாடுகளும் மனனம் செய்து வைத்திருந்தனர். அதனால், எவ்வித கணக்கும் மனதிலேயே போட்டு, விடை மட்டும் சொல்வர். வாய்ப்பாடு புத்தகம் தேவைப்படவில்லை.
அது போலத்தான் இதுவும். ஆனால் தற்போது கால்குலேட்டர் அதிகம் உபயோகத்தில் வந்ததும், வாய்ப்பாடுகள் மனனம் குறந்து விட்டன. அதனால், வாய்ப்பாடு புத்தகத்தில் இருப்பது கொண்டு, "வாய்ப்பாடு கண்டுபிடித்து 200 – 250 வருடங்கள் தான் ஆனது, அதையும் ஆங்கிலேயர்கள் தான் கண்டறிந்தனர் என்றால் அது சரியோ?
இப்போது இதே கூற்றை நம் மொழி ஆய்வுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்! நமக்கே உண்மை புரிய ஆரம்பிக்கும்.

சரி. இதுவரை நாம் பார்த்த விளக்கத்தின் மூலம், நாம் எண்ணுகிற அல்லது கேட்ட கருத்துக்கள் முற்றிலும் உண்மையில்லை என்பது புரிந்திருக்கும். எனவே இனி உயர்வு – தாழ்வு என்ற எண்ணமும்
அதன் சண்டையும் தவறு என்பது உணர்ந்து, அதைக் கைவிடுவோம்!!

அடுத்ததாக, அதிகம் கேட்கப்படும் கேள்வியைப் பார்ப்போம்.

கே : 2

“ராமாயணம், மஹாபாரதம் போன்ற காவியங்களையும், வேதங்களையும் ஏன் சமஸ்க்ருதத்தில் மட்டுமே எழுத வேண்டும்? தமிழில் எழுதக் கூடாதா? அப்படி என்றால் தமிழ் கேவலமான மொழியா?”
என்பதே. இதற்கும் ஒரு விளக்கம் கட்டாயம் தந்தாக வேண்டும். அந்த விளக்கத்தைச் சந்தேகித்தால், சந்தேகிப்பவர்கள் ஸமஸ்க்ருதம் கற்று ஆராய்ந்து மட்டும் தான் தெளிய வேண்டும். வேறு வழி இல்லை.

உலகின் முதல் காவியம் எழுத்து மூலமாக வந்த ராமாயண காவியம் என்பதைப் பார்த்தோம்.
*தமிழில் 2000 வரியில் கூறும் அதே விஷயத்தை, ஸமஸ்க்ருதத்தில் 20-25 வரியில் எல்லாம் சொல்லாம் என்பதாலும், எளிமை மற்றும் ஸ்லோக சப்தங்கள் மூலம் கருத்துக்கள் மாறாதிருக்கவுமே அவ்வாறு எழுதப்பட்டது.*

என்பது ஸமஸ்க்ருதத்தை நன்கு கற்றோரது கூற்று.
இதற்குக் ஆதாரமாக அவர்கள் கூறும் தகவல்களை முடிந்த வரை சான்றுடன், ஆதி முதல் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1:1

ஆதி வடிவங்கள் கண்டெடுப்பு:

தமிழ் மற்றும் ஸமஸ்க்ருதம் இரு மொழிகளுக்குமான சில தொன்மை வடிவங்களைப் பார்ப்போம். எழுத்துருவிற்கு முன் இவ்விரு மொழிகளும் இருந்த வடிவங்கள் தற்போது,
பழந்தமிழ்ப் பேச்சு வடிவம் என்றும் பழம் ஸம்ஸ்க்ருத பேச்சு வடிவம் என்றும் சில பழைய ஏடுகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும் இது வரை நமக்குக் கிடைக்கப் பெறும் தொன்மைக் கல்வெட்டுக்களில் எல்லாம், பழந்தமிழ்/பழம் ஸம்ஸ்க்ருத பேச்சு வடிவமே எழுத்தாக உள்ளது.
இதனைப் படித்தாலே அதைப் புரிந்து கொள்ள முடியும். இதற்கு ஆதாரமாக, கி.மு விற்கு மிகச் சமீபத்திய காலக் கல்வெட்டுகளைப் பார்ப்போம்.

Source:
வரலாற்று உண்மைகள் - பக்கம் 120.

Author:
கல்வெட்டு ஆய்வாளர் தமிழ் புகழேந்தி.
1) ”கி.மு. 2ம் நூற்றாண்டின் மதுரை மாவட்டம் மாங்குளம் – தமிழ்-பிராமி கல்வெட்டு”. அதில்

”கணிய் நந்த அஸிரிய்இ குவ் அன்கே தம்மம்
இத்தா அ நெடிஞ்சழியன் பணான் கடல்அன்
வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்”

“கணியநந்த ஆஸிரிய் இகுவ் என்பவனுக்கு தர்மமாக (பாண்டிய மன்னன்) நெடிஞ்செழியனின்
அலுவலராக விளங்கிய கடலன்வழுதி என்பவன் இப்பள்ளியை உருவாக்கிக் கொடுத்தான்”

2) ”கி.மு. 3ம் நூற்றாண்டின் தேனி மாவட்டம் புலிமான்கொம்பை நடு கல்வெட்டுகள் 3”. அவற்றில்

“கல்
பேடுதீயன் அந்தவன்
கடல் ஊர் ஆகோன்”

”வேள் ஊர் அவ்வன்
பதவன்”

“…அன் ஊர் அதான்
….ன் அன் கல்”

என்று உள்ளது.
இவை யாவுமே பழந்தமிழ் பேச்சு மொழியின் எழுத்துரு ஆகும்.

தமிழ் எழுத்துக்களின் ஆதி வடிவம் கல்வெட்டுகளில்
பராமி எனப்படும் ஆதி வடிவம் பானை எழுத்துக்களில்
பழந்தமிழ் எழுத்துக்களில் இருந்த எழுத்துக்கள்.
தமிழ் எழுத்தின் ஆதி வடிவம் *ப்ராமி - தமிழி எழுத்து வடிவம்* என்று சொல்லப் படுகின்றது.

இவ்வெழுத்து வடிவத்தைப் பொறுத்தவரை ஒலியின் அடிப்படை கொண்டே இருந்ததனால், இவற்றில் ”ஜ, ஸ, ஹ, ஷ, க்ஷ,” போன்ற எழுத்துக்களும், மேலும் ”வரு” இரண்டும் இணந்த வருடத்தைக் குறிக்கும் எழுத்தும்,
மற்றும் தற்போது முழுதும் வழக்கத்தில் அழிந்த பல எழுத்துக்களும் கூட இருந்திருக்கின்றன. இதற்கான சிறு ஆதாரம், மேற்கண்ட கல்வெட்டில் ”அஸிரிய்” என்ற வார்த்தையில் ”ஸ” என்ற எழுத்தைப் பார்க்கலாம்.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!