My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌿3 : 4 : 2 : 3🌿

🌱வர்ணாஸ்ரம தர்மம்🌱

(வர்ணாஸ்ரம தர்மம் பற்றி முதலில் ஒரு விஷயம் சொல்லிவிட விரும்புகின்றேன். இன்றைய கண்ணோட்டத்தையோ, அல்லது இன்றைய வாழ்க்கை முறையையோ வைத்து, முந்தைய யுகங்களின் வாழ்க்கை முறையைப்
படித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்கக் கூடாது. இது மூடத்தனம் ஆகும்.

மேலும், த்ரேதாயுகத்தின் ஆரம்பத்தில் இருந்த வாழ்க்கை முறையின்படி பார்க்கையில், தொழில் நுட்பம் நவீனம் அடைந்தது என்று கூறப்படும் இன்றைய காலத்தை விட, வேலை வகைகள் மிகவும் குறைவாகவே இருந்திருக்கும்.
எனவே, அதை மனதில் கொண்டு, இதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.)

மனிதர்களது வேலையை வைத்து, அவர்கள் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்திருக்க வேண்டும் என்பதையும், எந்த மனிதனும் எதை விரும்புகிறானோ அதைக் கற்கத் தடையின்றி இருந்தது என்பதையும் வாழ்க்கை முறை தோன்ற ஆரம்பித்ததில் பார்த்தோம்.
இதனை அடிப்படையில் கொண்டு, வாழ்க்கை முறையை நான்கு வர்ணங்களாகப் பிரித்தார்கள் ரிஷிமார்கள். அவற்றின் வகைகளும் அதன் வழிகளும் பற்றி இப்போது பார்ப்போம்.

🌿3 : 4 : 2 : 3 : 1🌿

🌱வர்ணத்தின் நான்கு வகைகளாவன🌱

1) ப்ராமண
2) க்ஷத்ரிய
3) வைஷ்ய
4) ஸூத்ர
🌱ப்ராமண🌱

ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள், ஆச்சார்யர் எனப்படும் ஆசிரியர்கள் / குருமார்கள் போன்றவர்கள், புத்தியை முன்னோடியாக இருத்தி வேலைகள் செய்தார்கள். எப்படி என்று பார்ப்போம்…

இவர்கள் ஸநாதன தர்மம் கற்று / உணர்ந்து, வாழ்க்கைக்குத் தேவையான புதிய விஷயங்களைக் கண்டறிந்து,
செயல்முறைப்படுத்தி சரிபார்த்து, அதை நடைமுறைக்குக் கொண்டு வருபவர்கள் ஞானிகள்! அதாவது, இன்றைய வார்த்தைப்படி விஞ்ஞானிகள் எனக் கொள்ளலாம்.

த்யானங்கள் மூலம் தவவலிமை பெருக்கி, அதன் மூலம் சக்தியை ஈட்டி, தனிமனிதன் வாழ்க்கைச் சக்திகளை மேம்படுத்திக் கொள்ள, உடல், மனம் இவற்றுக்குத் தேவையான
யோகம், த்யானம், ஆன்மீகம், அதற்கான வழிமுறைகள் எல்லாம் சாமான்ய மனிதர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவர்கள் ரிஷிகள்/முனிவர்கள்!

சமூக வாழ்வின் மேம்பாட்டிற்குத் தேவையான தர்மங்கள், தர்ம வழிகளைக் கையாளும் முறைகள், தனிமனித தொழில்களுக்கான சூத்திரங்கள், அவற்றில் மேம்படும் யுக்திகள்
போன்றவற்றைக் கற்றுத் தந்தவர்கள் ஆச்சார்யர்கள்!

ப்ரபஞ்ஜத்திலிருந்து வேதங்கள் எப்படி மந்த்ருத்ரஷ்டாக்கள் மூலம் கண்டறியப்பட்டனவோ, அதனை அவர்கள் வெறும் ஸ்லோகமாக மட்டும் இல்லாமல் விளக்கங்களோடும் கொடுத்தார்கள். அந்த விளக்கங்கங்களுக்குத் தான் *ப்ராமணம்* என்று பெயர்.
அந்த ப்ராமணங்களைக் மேற்கூறிய வகைகளில் கற்றுத் தந்தவர்களுக்கு *ப்ராமணர்கள்* என்று பெயர். இவற்றை முழுதும் அறிந்தவர்கள் ப்ராமணர்கள் எனப்பட்டனர்.

அதாவது புத்திர்பலத்தால் வேலை செய்தவன்.
”இதைத்தான் ப்ராமணன் பகவானின் தலையில் இருந்து உதித்தான் எனக் கூறினார்கள்.”
🌱க்ஷத்ரிய🌱

அடுத்தது, ஆரம்பக் கட்டத்தில் காடுகள் அதிகம் இருந்திருக்கையில், வன விலங்குகளிடம் இருந்து தனது சமூகத்தைக் காக்க முன்வந்தவர்கள், அதற்கான வழிமுறைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு இடரிலும் எவ்வாறு முன்னின்று அதை தகர்ப்பது என்பதைக் கற்றிருக்க வேண்டும்.
அன்றைய காலகட்டத்தில், பகல் இரவு எனப் பாராமல் எந்த நேரத்தில் வேன்டுமானாலும் காவலுக்குச் செல்ல வேண்டும். எப்போது வேண்டுமானாலும், அவர்கள் உயிருக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருந்திருக்கும்.

எனவே, ஒரு நாளின் அநேக நேரத்தில், தனது சமூகத்தைக் காக்க வேண்டியவற்றைக் கற்று, அவற்றைப் பழகி,
அதையே தினத் தொழிலாகச் செய்திருக்க வேண்டும். மேலும், ஆரம்பக் காலங்களில் இரு க்ராமங்களுக்கு இடையே போர் என்பது இருந்திருக்காது அவர்களது வாழ்க்கை முறையில்.

எனவே, அதற்கான அமைப்புகள் த்ரேதாயுகத்தின் ஆரம்பத்தில் இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்றே தோன்றுகின்றது.
தனது கைகளில் ஆளுமை கொண்டு, அதன் மூலம் சமூகத்துக்கு இன்னல் வராமல் காப்பதற்கு க்ஷத்ரிய என்று பெயர்.எனவே, அத்தகைய சமூகக் காவலைத் தொழிலாகச் செய்தவர்கள் க்ஷத்ரியர்கள் எனப்பட்டனர்.

இவர்களுக்கு புஜபலம் அதிகம் வேண்டும். அப்போது தான், அவர்கள் எதையும் போரிட்டு வெல்ல முடியும்.
”இதைத்தான் க்ஷத்ரியன் பகவானின் தோளில் இருந்து உதித்தான் எனக் கூறினார்கள்.”

🌱வைஷ்ய🌱

அடுத்ததாக, வாழ்க்கை மாறுகையில் மனிதனின் தேவையும் அதிகமாகின்றது. எனவே, அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் எங்கு இருக்கின்றதோ, அதைத் தேடிச் சென்றிருக்க வேண்டும். அவ்வாறு தேடிச் சென்று,
எங்கே தங்கள் சமூகத்திற்குத் தேவையான விஷயங்கள் கிடைக்கின்றதோ, அங்கே சென்று அவற்றை வாங்குவதும், அவர்களுக்குத் தேவையானது தங்களிடம் இருந்தால், அதைக் கொடுப்பதும் போன்ற செயலைச் செய்திருப்பார்கள்.

ஏனெனில் தனது சமூகத்தில் சில பொருட்களைச் செய்வது போல, பிற சமூகத்தினரும் வேறு சில பொருட்கள்
செய்திருக்கலாம் என்று யூகித்தோ அல்லது, அவைகளைச் செய்வதை கவனித்தோ, அவற்றை வைத்துத் தனது சமூகத்தில் மேம்பாடுகளைச் செய்யலாமே என்ற எண்ணத்தில் அவர்கள் இந்தச் செயலைத் தேர்வு செய்திருப்பார்கள்.

ஆரம்பத்தில் அருகில், அக்கம் பக்கங்களில் இருந்து கொடுத்து-பெற ஆரம்பித்தவர்கள்,
பின்னர் தேடுதலினால், அண்டை க்ராமங்களுக்குச் செல்ல ஆரம்பித்திருப்பார்கள். இதில் பெரும்பாலும் உணவு சம்மந்தப்பட்ட பொருட்களே பரிமாற்றத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.

வைஷ்ய என்பதற்கு விவசாயி, உழைப்பவன் எனப் பொருள். எனவே, தனது க்ராம மக்களின் தேவைக்காக,
பிற க்ராமங்களுக்குச் சென்று உணவும் பொருட்களும் கொண்டு வர ஆரம்பித்தவர்கள் வைஷ்யர்கள் எனப்பட்டனர்.

இவ்வாறு சென்று வருபவர்களுக்குத் தொலை தூரம் நடப்பதற்கு, தொடையில் பலம் இருக்க வேண்டும். ”இதைத்தான் வைஷ்யன் பகவானின் தொடையில் இருந்து தோன்றினான் எனக் கூறினார்கள்.”
🌱ஸூத்ர🌱

இறுதியாக, ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறைக்கு, அத்தியாவஸ்யத் தேவையான;

(உதாரணமாக - குடில் அமைத்தல், கிணறு தோண்டுதல், தொழிற்கருவிகள் செய்தல், ஆடைகள் நெய்தல், உணவுப் பொருட்கள் தயாரித்தல், கூடைகள் முடைதல், பாத்திரங்கள் செய்தல் போன்றவை. இவை போன்றவை தான்…
இவை மட்டும் என்று அல்ல)

அனைத்துப் பொருட்களையும், தேவையான செயல்களையும் செய்திருப்பார்கள். இவர்களுக்கு, இவர்கள் செய்யும் செயல்களின் தொழில் நுட்பங்கள் கண்டிப்பாகத் தெரிந்திருந்தால் மட்டுமே, இவர்கள் செய்யும் செயலைச் சிறப்பாகச் செய்து சமூகத்திற்கு அளிக்க இயலும்.
அவ்வாறு செய்வதற்கான (Technology) தொழில்நுட்பம், அதற்கான (Formula) ஸூத்ரம், போன்றவற்றை அவர்கள் முழுமையாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு அறிந்தவற்றைப் பயன்படுத்தி இவர்கள் தயாரிக்கும் பொருட்களையே அவர்களது சமூக மக்களுக்கும் வழங்கியிருக்க வேண்டும்.
மேலும், வைஷ்யர்கள் அண்டை க்ராமங்களுக்குக் கொண்டு செல்லத் தயாரிக்கப்படும் பொருட்களும் இதே சூத்திரங்கள் கொண்ட தொழில்நுட்பத்தில் வந்தவையே. *ஸூத்ரம்* என்பதற்கு, *Formula, விதிமுறை* என்று பொருள்.

“ஸூத்ரம் அறிந்தவன் ஸூத்ரன்” என்ற முதுமொழி நமது தமிழிலும் இருக்கின்றது…
இவ்வாறான செயலையே தனது தினத் தொழிலாகக் கொண்டவர்கள் ஸூத்ரர்கள் எனப்பட்டனர். இவ்வுண்மை தற்போது பலரால் மறைக்கப்பட்டு, அதனால் மக்களால் மறக்கப்பட்டும் வருகின்றது.

இவ்வாறான ஸூத்ரன் தனது தொழிலைச் செய்வதற்கு, அவர்கள் அநேகமாக வெகுநேரம் நின்று வேலை செய்ய வேண்டும்.
அதற்கு அவர்களுக்குக் காலில் / பாதத்தில் அதிகம் (தாங்கும் சக்தி) பலம் வேண்டும். இதைத்தான் ”ஸூத்ரன் பகவானின் பாதத்தில் இருந்து தோன்றினான் எனக் கூறினார்கள்.”

இவை தான் நான்கு வகை வர்ணங்கள். ”இவை நான்கு வகை தானே ஒழிய, நான்கு படிகள் அல்ல” என்பதை மனதில் இருத்திக் கொண்டால்,
நமக்கே இப்போது பேசப்படுபவை தவறு எனப் புரியும். ஏனெனில், யோசித்துப் பாருங்கள்….

கண்டிப்பாக ஒவ்வொரு வர்ணமும் மற்றொன்றைச் சார்ந்து தான் வாழ வேண்டும். கற்றுத் தருபவர் இன்றி ஏதும் அறிய முடியாது; காப்பவர் இன்றி நிம்மதியாக இருக்க முடியாது; வேண்டியவற்றைத் தேடித் தருபவர் இன்றி
வாழ்வு முறை மேம்பட்டிருக்க முடியாது; வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களும் காரியங்களும் செய்பவர்கள் இன்றி இயல்பு வாழ்க்கை நடத்த முடியாது.

அதைச் செய்பவர்கள் கல்லாமல், பாதுகாப்பின்றி, கொடுக்கல் வாங்கல் இன்றி ஒன்றும் செய்திருக்க முடியாது. எனவே ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்த இவற்றை
நம் முன்னோர்கள், பிரித்துக் காட்டினார்களே ஒழிய, ஏற்ற இறக்கம் பார்க்கவில்லை என்பது நிதர்சணமாகப் புரியும்.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!