My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

ஒரு அதர்மம் நடந்தது என்று கூறினால், அது அதர்மமா இல்லையா என்பது அந்த நிகழ்வின் அடிப்படையில் தான் பார்க்கப்படும். இரு புறத்தின் நிகழ்வுகளும் கேட்டறியப்பட்டு, இதில் முதலில் அதர்மச் செயல் நடந்தது எங்கே என்பது கண்டறியப்படும்.
பின்னர் தான், அது மன்னிக்கக் கூடியதா, கண்டிக்கக் கூடியதா, சிறு தண்டனைக்கானதா அல்லது பெரும் தண்டனைக்கு உரியாதா என முடிவெடுக்கப்படும்.

மேற்கூறப்பட்ட அதே பெண்ணின் வழக்கு, தர்மத்தின் அடிப்படையில் பார்க்கப்பட்டால், அந்த ஆண்கள் குற்றமிழைத்தனர் என ஊர்ஜிதமானவுடன்,
பொதுவெளியில் கழுமரத்தில் ஏற்றி விடுவார்கள். கழுமரம் என்பது, உயரமாகவும், வழவழவெனவும், கீழே அகலமாகவும், மேலே போகப் போகக் குறுகிக் கூர்மையாகவும் முடியும்.

தண்டனைக்குரிய குற்றவாளிகளை இருபுறமும், கைகள் மற்றும் கால்களில் தனித்தனிக் கயிற்றைக் கட்டி,
அதனை இருபுறமும் மேலும் கீழும் தனித்தனியாகக் கட்டிவிட்டு, அவரை கழுமர நுணியில் ஆசனவாய் இருக்கும்படி அமர வைத்திருப்பார்கள்.

இரு தோள்களையும் ஒரு கயிற்றில் பிணைத்து, அதனை மேலே உள்ள கட்டையில் கட்டி இருப்பார்கள். அரசன் ஆணை பிறப்பித்ததும், பொது வெளியில் மக்கள் முன்னிலையில்,
மேலே இருக்கும் கயிற்றை மட்டும் அறுத்து விடுவார்கள். உடல் தனது பாரத்தால் கழுமரத்தில் மெதுவாகக் கீழே இறங்கும். இருபுறமும் கை, கால்கள் கட்டப்பட்டிருப்பதால் அவர்களால் அசையவோ, துள்ளவோ முடியாது.

கழுமரம் ஆசனவாய் வழியாக உடலுக்குள் மெதுவாக ஏறும்...
கொடுமையான வலியால் துடிப்பார்கள் குற்றம் செய்தவர்கள். அது சிறிது சிறிதாக மேலே செல்லச் செல்ல, மரம் கீழே அகலமாகிக் கொண்டு போவதால், கீழிருந்து உடல் மெதுவாகக் கிழிய ஆரம்பிக்கும்.

சிறிது சிறிதாக உடல் கிழிந்து குருதி கொட்டும். கொடூரமான சித்ரவதை அது. அதைப் பார்ப்பவர் யாரும்
அப்படிப்பட்ட ஒரு கொடுமையைச் செய்ய மனதில் நினைத்தாலே, குருதி உறந்து விடும். அப்படி இருக்கும் அந்த தண்டனை.

இதில் அப்பெண்ணைப் பெற்றவர் காப்பாற்றும் நோக்கில் குற்றவாளியில் யாரையேனும் கொன்றிருந்தால், அவர் மன்னிக்கப்படுவர். இதைத் தாண்டி, குற்றவாளியின் உறவினர் யாரேனும்,
பெண்ணின் பெற்றோரைப் பழிவாங்க நினைத்து ஏதேனும் துண்புறுத்தினால், அவர்களது சொந்தம், பந்தம், தூரத்து உறவுகள் வரை அனைவரையும் நாடு கடத்தி விடுவார்கள். எனவே, அவர்களும் தவறு செய்ய மாட்டார்கள்.

இங்கே பெண்ணின் பெற்றோருக்கு தண்டனை அளிக்காதது நீதியைப் பொறுத்தவரை தவறு.
ஏனெனில், நீதியைப் பொறுத்த மட்டில், கொலை என்பது எக்காரணத்தை முன்னிட்டும் தண்டனைக்கு உரியது. தண்டனை குறைக்கப்படுமே ஒழிய மன்னிக்கப்பட மாட்டாது.

ஆனால் தர்மத்தைப் பொறுத்தவரை, குற்றவாளிகள் அதர்மம் செய்து ஒரு பெண் உயிரைப் பெற்றோர் முன் கொடூரமாகப் பறித்ததுவே,
அவர்களால் தாங்க முடியாத துயர். அங்கே அந்தக் குற்றவாளியை அவர்கள் கொன்றது அதர்மத்தின் எதிர்வினையாகத்தான் கொள்ளப்படுமே ஒழிய, அது கொலை ஆகாது.

எனவே, அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும். ஆம், மகளின் கொடூர மரணத்தைக் கண்களால் கண்டது விடவா வாழ்வில் மிகப்பெரிய தண்டனை ஒருவருக்கு
நாம் தர முடியும்? இதுதான் தர்மம் என்பது… ஏனெனில், தர்மம் என்பது மனஸாக்ஷியினால் முடிவு செய்யப் படுவது… அது முன்பே கூறியபடி, நாம் வகுக்காத ஸாஸ்வத தர்மம்...

இதே பரசுராமரின் தாயார் ரேணுகா தேவி. அவரின் மற்றொரு பெயர் சீலவதி என்பதாகும். கணவனையே தெய்வமாகப் போற்றி வாழ்ந்தவர்.
அவர் தினமும் குளத்துக்குச் சென்று, ஈரமான களிமண்ணால் குடம் செய்து, அதைத் தன் கற்பின் சூட்டால் சுட்ட மண்குடமாக்கி, அதில் நீர் எடுத்து வருவார்.

அந்த அளவுக்குப் பத்தினித் தன்மை கொண்டவர். அந்நீரைக் கொண்டு தான் ஜமதக்னி முனிவர் பூஜைகள் செய்வார். அப்படி ஒரு நாள் குடம் செய்கையில்
வானில் ஒரு கந்தர்வன் பறந்து சென்றதை, அவனது உருவத்தை நீரில் கண்டு அறிந்தார் ரேணுகா தேவி. இவ்வளவு அழகானவனா என அவன் உருவை நீரில் கண்டதும் நினைத்தாள்.

அந்த எண்ணப்பிழையால், அவளது கற்பின் தன்மை போனது. அவள் செய்த குடம் சுட்டமண்ணாக ஆகவில்லை.
எனவே கணவரின் பூஜைக்கு, நீர் எடுத்துப் போக முடியவில்லை. நேரமாகியும் மனைவி வராததைக் கண்ட முனிவர், நடந்ததை தனது தவவலிமையால் உணர்ந்தார்.

நீர்க்குடமின்றித் திரும்பி வந்த மனைவியைக் கண்டுக் கோபமுற்று, அவளைக் கொல்லும்படி மகனிடம் கூறினார். பிற மகன்கள் தயங்குகையில்,
பார்க்கவ ராமர் தனது *பரசு* என்னும் கோடரியைக் கொண்டு தாயின் சிரத்தைக் கொய்தார்.

அமைதி காத்த மகன்களையும் கொல்லச் சொன்னதும், அவர்கள் தலையும் தரையில் உருண்டன. கோபம் ஆறிய முனிவர் பரசுராமரிடம் வேண்டிய வரத்தைக் கேட்கச் சொன்னார்.
“தாயும் தமையன்மார்களும் செய்த தவறை மன்னித்து, மீண்டும் உயிரளிக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு நடந்தது நினைவில் இருக்கக் கூடாது, மனம் குன்றி இறப்பர்… எனவே அவர்களை மன்னித்து ரக்ஷிக்க வேண்டும்…” என்றார்.
அதன்படியே அவர்கள் தூங்கி எழுவது போல் எழுந்தனர். என்ன நடந்ததென்பது நினைவில் இல்லை.

Source : rajadesh.page/article/aaj-bh…
Known as the Parasu, which Parasuraamar got from Shiva. This is in Thanginath, Jharkhand. Still it’s a myth for archaeologists, how Parasuraamar handled this as his weapon, still which is not able to be lifted by 3-3 crane.

பார்க்கவராமர் சிவ பெருமானை நோக்கித் தவம் செய்து,
*பரசு* என்ற கோடரியைப் பெற்ற காரணத்தால் இவருக்குப் பரசுராமன் என்ற பெயர் ஏற்பட்டது.

“தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்னும் வார்த்தைக்கு ஏற்ப, பெற்றவர்களிடத்து அன்பும், அவர்கள் வார்த்தைக்கு மரியாதையும் கொண்டிருந்தார் பரசுராமர்.
கார்த்த வீர்யார்ஜுனனின் மகன்கள், தந்தை இறந்த கோபத்தில் பரசுராமரையும், ஜமதக்னி முனிவரையும் பழிதீர்க்க எண்ணி வந்தனர்.

அதற்காக ஒருமுறை அவரது ஆஸ்ரமத்திற்கு வந்த போது, பரசுராமர் சகோதரர்களுடன் வெளியில் சென்றிருந்தார்கள். ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த த்யானத்தில் இருந்தார்.
அவர்கள் நேரே வந்து முனிவரின் சிரசைக் கொய்து தரையில் வீசினர். திரும்பி வந்த பரசுராமர் விஷயம் அறிந்து, கார்த்த வீர்யனின் புத்ரர்களையும் அவன் வம்ஸத்தையும் அழித்தார்.

ஆற்றாமையால், பூலோகத்தில் இருபத்தோரு க்ஷத்திரியப் பரம்பரையை வேரோடு அழித்தார்.
இறுதியில் மூலகன் என்னும் ஒரு மன்னன் மட்டும் உயிரோடு இருந்தான். அவனை, பெண்கள் புடைசூழ்ந்து நின்று பரசுராமர் கண்ணில் படாமல் காப்பாற்றினர்.

அதனால் அவனுக்கு *நாரிவசன்* (நாரி – பெண்; வச – அவர்களிடத்தில்) என்னும் பெயர் வந்தது. பரசுராமர் பின்னர் சிறிது சிறிதாகச் சமாதானம் ஆனார்;
தனது தவற்றை உணர்ந்தார்; இல்லறம் மேற்கொள்ளாது, முழுநேர தவத்தில் ஈடுபட்டு, ஈஸ்வரனிடம் தனது பாவத்தினை மன்னிக்கப் ப்ரார்த்தித்தார்.

மகனால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர், ஸப்தரிஷி மண்டலத்தில் ஏழாவது ரிஷியாக உள்ளார்.
பரசுராமர் தற்போதும் மகேந்த்ர பர்வதத்தில் சிரஞ்ஜீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார் என பாகவதம் கூறுகின்றது.

Thiruvallam Parasurama temple bestows peace on the living and the dead...

Source : travel.manoramaonline.com/travel/essenti…
பரசுராமர் வாழ்க்கையைப் படிக்கும் போதே, த்ரேதா யுகத்தில், குடும்பம், குலம், வம்ஸம் என்னும் வாழ்க்கை முறை நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது நமக்குப் புரிந்திருக்கும்.

அத்தோடு, அன்று வாழ்க்கை முறை எப்படி வளர்ந்து இருந்தது என்பதையும் சிறிது விரிவாகப் பார்ப்போம்.
1) முதல் க்ஷத்ரியனின் வாரிசுகள் அடுத்த மன்னனாகத் தகுதி உடையவர்கள் ஆனார்கள். அதனால், பொதுவில் இருந்து ஒரு முதல் க்ஷத்ரியனைத் தேர்ந்தெடுத்த முறை முடிந்தது என்பது புரிகின்றது.

2) ஒரு குடும்பத்தினை முழுதுமாக ஒரு ஆடவன், குடும்பத் தலைவனாக நிர்வாகம் செய்ய ஆரம்பித்து விட்டான்.
3) ஒரு தந்தைக்கு, மனைவி மற்றும் குழந்தைகளிடத்தில் முழு அதிகாரம் இருந்தது.

4) மனைவியானவள், கணவனுக்கு எல்லா விதத்திலும் நிர்வாகத்திற்கு உதவியாக இருந்து குடும்பத்தை நடத்தும் துணையானாள்.

5) பிள்ளைகள் பெற்றோர் வாக்கினை மீறாமல் இருந்தனர்.
6) அனைவரும் அவரவர் தர்மத்தை விடவில்லை. தவறு செய்து விட்டால், அதற்கு தண்டனையை அவர்களே ஏற்றுக் கொண்டார்கள்; முக்கியமாக அந்தனர்கள் அதில் சிறிதும் தவறவில்லை.

7) தர்மத்தின் முன் உறவுகள் இரண்டாம் பக்ஷமாகவே இருந்தன.
8) அந்தனன் போர்க்கலை கற்றுத் தரலாமே ஒழிய போர் புரியக் கூடாது. அவன் தவறை மன்னித்து ரக்ஷிக்கவே வேண்டும்.

9) அதர்மங்கள் லேசாகத் தலை தூக்கத் துவங்கி இருந்தன.

10) சமுதாயத்தில் ப்ராமணரும் க்ஷத்ரியரும் இறைவனாகப் போற்றப் பட்டனர்.
தப்பிப் பிழைத்த மூலகனால் தான் மீண்டும் க்ஷத்ரிய வம்ஸம் தழைத்தது.

இந்த மூலனின் வம்ஸத்தில் வந்தவர்கள் தான் தசரதன், அளபடி, கட்டுவாள்கள், தீர்க்கபாடு, ரகு, அவன் மகன் அஜன்.
இந்த அஜனின் மகன் தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படித் தான் க்ஷத்திரய வர்ணம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile pls.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!