My Authors
Read all threads
🌺விநாயகருக்கு வேதவ்யாஸர் வைத்த குட்டு...🌺

என்னது? வ்யாஸ பகவான், விநாயகரைக் குட்டினாரா? என வியக்கிறீர்களா? இதைப் படித்துப் பாருங்கள்.

மஹாபாரதம் எழுதுவதற்கு வ்யாஸர் ஆயத்தமாகி விட்டார். விநாயகர், ஓலைச்சுவடியில் எழுத தனது தந்தத்தை உடைத்து கையில் வைத்துக் கொண்டு தயாராகி விட்டார்.
மேருமலையில் அமர்ந்தாகி விட்டது. வ்யாஸ பகவான் விநாயகரைப் பார்த்து,

“நான் ஸ்லோகங்களைக் கடகடவெனச் சொல்லிக் கொண்டே போய்விடுவேன். அதன் வேகத்துக்கு எழுத வேண்டும். திரும்பக் கேட்கக் கூடாது; தாமதித்தால் எனது ஸ்லோகத்தின் ஆக்க வேகம் கெட்டுப் போய்விடும்.
ஆகையால், எனது வேகத்துக்கு எழுத முடிந்தால் மட்டுமே சொல்லுவேன்” என நிபந்தனை விதித்தார்.

அதற்கு விநாயகர், “நான் எழுத ஆரம்பித்தால் எனது கை விறுவிறுவென வேகமாக எழுதிக் கொண்டு போகும். அது தடைபடாதபடி, வேகமாகக் கூறத் தங்களால் முடியுமா?” என பதில் சவால் விட்டார்.
மனித ஞானிகளுக்கே போட்டி என்றால் பலாப்பழம் போல் இனிக்கும். அவர்களுக்குக் கேட்க வேண்டுமா?

மஹாபாரதம் ஆரம்பித்தது. ஆயிரம் ஸ்லோகம் முடிந்தது. வ்யாஸ பகவானால் சொல்ல முடியவில்லை; மூச்சுமுட்ட ஆரம்பித்து விட்டது. விநாயகர் வேகத்துக்கு ஈடுதருவதற்குள் ஓய்ந்து விட்டார்.
விநாயகரை விட்டால் தனது வேகத்துக்கு ஈடுதந்து எழுக்த யாருமில்லை; எனவே அவரையும் விடக்கூடாது, தனக்கும் சில க்ஷண ஓய்வு தேவை.... என்ன செய்தார்? விநாயகரிடம்,

“நீ வெறுமனே எழுதிக்கொண்டு போகக்கூடாது. அர்த்தம் புரிந்து எழுத வேண்டும். அப்போது தானே தவறு இருக்காது?” என்றார்.
விநாயகரும், “பேஷாக எழுதலாமே... நீங்கள் கேட்கும் போது, கேட்டதைச் சொல்கிறேன்” என பதில் தந்தார்.

இதை ஏன் வ்யாஸ பகவான் சொன்னார் எனப் பார்க்க வேண்டும். ஸமஸ்க்ருதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளைச் சேர்த்து ஸ்லோகம் சொல்லுகையில் சில சமயம்,
ஒரே வார்த்தையானது சேர்த்துப் பார்க்கையில் ஒரு பொருளும், பிரித்துப் பார்க்கையில் ஒரு பொருளும் தரும். எனவே தான் இந்த நிபந்தனையை வ்யாஸ பகவான் சொன்னார்.

இதைப் பேசுவதற்குள் சில க்ஷணங்கள் அவர் சிறிது ஓய்வெடுத்துவிட்டார். மீண்டும் தொடர்ந்தார். இவ்வாறாக 1000 ஸ்லோகங்களுக்கு ஒன்று வீதம்,
சற்று சிக்கலாக வார்த்தைகளைப் பிண்ணிப் பிணந்து ஒரு ஸ்லோகத்தைச் சொல்லிவிடுவார்.

விநாயகர் அதைப் பிரித்துப் பார்த்து, சரியான பதம் புரிந்து கொள்ள அரை க்ஷணம் எடுப்பார். அந்த அரை க்ஷணத்தில் வ்யாஸரும் ஓய்வெடுத்து விடுவார்.
இவ்வாறு லக்ஷம் க்ரந்தம் கொண்ட மஹாபாரதத்தில், ஆயிரத்தில் ஒரு ஸ்லோகம் எளிதாக அர்த்தம் புரிந்து கொள்ள இயலாமல், மண்டையை உடைத்துக் கொள்ள வைக்கும். இவற்றுக்கு *பாரதக் குட்டு* என்றே பெயர்.

அதில் உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று பார்ப்போம்.
பாண்டவர்களின் அஞ்ஞாத வாஸத்தின் போது, துரியோதனன் பல இடங்களில் தேடியும் பாண்டவர்கள் அவன் கண்களில் அகப்படவில்லை. யக்ஷன் யுதிஷ்ட்ரனுக்கு அளித்த வரத்தினால், அவர்களை யாராலும் அடையாளம் காண முடியவில்லை.

விராட தேசத்தில் அவர்கள் இருக்கக்கூடும் என சந்தேகித்த துரியோதனன்
அவர்களை வெளிப்படுத்த திட்டம் தீட்டினான். எங்கு அதர்மம் நடந்தாலும், அங்கே அவர்கள் இருந்தால் உடன் ரக்ஷிக்க வருவார்கள் என்பதை அறிந்த சகுனி, விராட தேசத்தின் பசுக்களை எல்லாம் கன்றுகளோடு ஓட்டி வந்துவிட்டான்.

இதற்கு ”கோஷ யாத்ரா” என்று பெயர். இதை அறிந்த விராடனின் மகன் உத்ர குமாரன்,
தானே போரிட்டு, அவற்றைத் திரும்பக் கொண்டுவருவதாகக் கூறினான்.

அங்கே ஸைரந்த்ரியாக இருந்த த்ரௌபதி, சாரதியாக ப்ருஹந்நளையைக் கூட்டிச் செல்லுமாறும், அவள் தேரோட்டுவதில் கைதேர்ந்தவள் என்றும் கூறி, உத்ரகுமாரனை ப்ருஹந்நளையோடு அனுப்பி வைத்தாள்.
வீரத்தோடு வந்த உத்ரகுமாரனுக்கு, எதிரில் பீஷ்மரையும், குரு த்ரோணரையும் கண்டதும் கை, கால்கள் நடுங்கின. அவனது பயத்தைக் கண்ட ப்ருஹந்நளை அவனுக்கு தைரியம் சொல்லி, தானே போரிடுவதாகக் கூறினாள்.

காண்டீபம் ஏந்தி ப்ருஹந்நளை *சர வர்ஷம்* (அம்பு மழை) பொழிவதைக் கண்ட பீஷ்மர்,
”யாரிந்தப் பெண்? இப்படி ஆஸ்சர்யப் படும்படி அஸ்த்ரம் ஏவுகிறாளே?” என அதிசயித்து வினவினார்.

அர்ஜூனன் எப்படி அடையாளம் காண முடியாதபடி இருக்கிறானோ, அதேபோல த்ரோணர் பீஷ்மரிடம் “போரிடுவது அர்ஜுனன்” எனக்கூறும் ஸ்லோகமும் மறைபொருள் கொண்டே கொடுத்தார் வ்யாஸ பகவான்.
நதீஜலம் கேசவநாரி கேது: நகாஹ்வயோ நாம நகாரிஸூநு: |
ஏஷாங்கநா வேஷதர: கிரீடி ஜித்வா வயம் நேஷ்யதி சாத்ய காவ: ||

இதை அப்படியே மொழி பெயர்த்தால் வரும் அர்த்தம்,
”நதீ+ஜலம் = ஆற்று நீர்;
கேசவ+நாரி + கேது: = கேசவனின் ஸ்த்ரீ அடையாளம்;
நகாஹ்வயோ+நாம = நகம்/மலை/மரம் பெயருள்ள;
நகா+ரிஸூநு: = நகத்திற்கு விரோதியின் பிள்ளை |

ஏஷ+அங்கநா = இந்தப் பெண்;
வேஷதர:+கிரீடி =வேஷமிட்ட கிரீடம் கொண்ட; ஜித்வா = ஜெயித்து; வயம் = நாங்கள்;
நேஷ்யதி = கொண்டு போகிறான்;
சாத்ய = மேலும் இப்போது;
காவ: = பசுக்களை ||

மொத்தமாகப் பாருங்கள்; ”கேசவனின் ஸ்த்ரீ அடையாளம் பெயருள்ள
நகத்திற்கு விரோதியின் பிள்ளை; வேஷமிட்ட கிரீடம் கொண்ட நாங்கள்; மேலும் இப்போது பசுக்களைக் கொண்டு போகிறான்” என வரும்....

அர்த்தமே இல்லாமல் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறதா??

உண்மை அர்த்தம் சரியாகப் பிரித்துப் பார்த்தால் வரும்.
நதீஜ = நதிக்குப் பிறந்தவரே;
லங்கேச = லங்கேஸ்வரனின்;
வநாரி = வனத்தை அழித்த சத்ரு;
கேது: = கொடி;

கங்கா புத்ரரே, லங்கேஸ்வரனின் வனத்தை அழிழ்த்த ஹநுமனின் கொடியைக் கொண்டவனும்,

நகா: = மரம்;
அவ்யோ = வெண்மையான;
நாம = பெயருடைய;
நகாரி = மலையின் விரோதிக்கு;
ஸூநு: = பிள்ளை |
வெண்மைக்கு அர்ஜுணம் எனப் பெயருண்டு. உதாரணமாக, *ஸ்ரீ ஸைலத்திற்கு = மல்லிகார்ஜுணம் எனும் பெயருண்டு.* மலையின் விரோதி இந்த்ரன். மலைகள் ஆரம்பத்தில் இறகுகள் கொண்டு, நினைத்த இடமெல்லாம் பறந்து அமர்ந்து தொல்லை தந்தன. இதனால் இந்த்ரன் மலைகளின் இறக்கையை வெட்டி அசலமாக ஆக்கினான்.
எனவே அவற்றின் எதிரி இந்த்ரன்; அவன் மகன் அர்ஜுணன். அதாவது,

”இந்த்ரனின் மகனுமான அர்ஜுணன் என்னும் பெயருடைய” என்பது பொருள்.

ஏஷ = இந்த;
அங்கநா = பெண்;
வேஷதர: = வேடமிட்ட;
கிரீடி = அர்ஜுணன்;

அதாவது, இந்த்ரன் அர்ஜுணனுடைய அவீரத்தை மெச்சி, அவனுக்கு “கிரீடி” என்னும் பட்டம் வழங்கினான்.
எனவே கிரீடி என்பதைப் புரிந்து கொண்டால், அர்ஜுணன் என அறியலாம்.

“பெண் வேடமிட்ட இந்த அர்ஜுணன்” என்பது பொருள்.

ஜித்வா = ஜெயித்து;
(அ)வ = உங்களுடைய;
யம் = எவனை;
நேஷ்யதி = ஓட்டிச்செல்லப் போகிறானோ;
ச அத்ய = மேலும் இப்போது;
கா: = பசுக்களை;
வ: = காப்பாற்றுங்கள் ||
அதாவது, ”மேலும் இப்போது எவனை (துரியோதனன் சார்பாக பீஷ்மர் வந்ததால், இது துரியோதனைக் குறிக்கும்) ஜெயித்து உங்களுடைய பசுக்களை ஓட்டிச் செல்லப் போகிறானோ, அவனைக் காப்பாற்றுங்கள்”.

இங்கு எவனை “யம்” என வந்ததால், அவனை என்று குறிக்கும் ”தம்” என்பதை நாம் உருவகப் படுத்திக்கொள்ள
இலக்கணம் இடம் தருகிறது. மொத்தத்தில்,

“கங்கா புத்திரரே! ராவணனின் அசோகவனத்தை அழித்த ஆஞ்ஜநேய ஸ்வாமியைக் கொடியில் கொண்டவனும், அர்ஜுனமரப் பெயருள்ளவனும், மலையின் சத்ருவான இந்திரனுக்குப் புத்திரனும், ஸ்திரீ வேஷதாரியுமான, இந்தக் கிரீடியாகிய அர்ஜுனன்;
இப்போது எந்த துர்யோதனனை மேலும் ஜயித்து நீங்கள் பிடித்துள்ள பசுக்களை மீட்டு ஓட்டிக் கொண்டு போக வந்திருக்கிறானோ, அந்த துரியோதனனை ரக்ஷியுங்கள்”

என்று த்ரோணர் சொல்வதாக வ்யாஸர் ஸ்லோகம் கூறினார். இவ்வாறு 100 பின்னல் ஸ்லோகங்கள் உள்ளன மஹாபாரதத்தில்.
ஒன்றிற்கே இத்தனை தலை சுற்றுகிறது. ஸமஸ்க்ருத ஸ்லோகங்கள் அநேகமாக இப்படி மறைபொருள் கொண்டுதான் இருக்கின்றன...

இதை தமிழே சரியாகத் தெரியாத திராவிடனும், பிற மதத்தினனும் மொழியாக்கம் செய்கிறானாம்... இதைப் படித்துவிட்டு, நம் திராவிடக் குழந்தைகள் குதிக்கிறது;
நமது ஸநாதன தர்மத்தைக் குறை கூறிச் சிரித்தும், இதிஹாஸங்களைக் கிண்டல் செய்தும் களிக்கிறது. இவர்கள் நினைவுறுத்துவது ஒரு பழமொழியைத்தான்.

“நிறை குடம் தளும்பலில்...”

அதாவது, குறை குடம் கூத்தாடும்....

புரிகிறதா சகோதரர்களே???

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app pls compile
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!