என்னது? வ்யாஸ பகவான், விநாயகரைக் குட்டினாரா? என வியக்கிறீர்களா? இதைப் படித்துப் பாருங்கள்.
மஹாபாரதம் எழுதுவதற்கு வ்யாஸர் ஆயத்தமாகி விட்டார். விநாயகர், ஓலைச்சுவடியில் எழுத தனது தந்தத்தை உடைத்து கையில் வைத்துக் கொண்டு தயாராகி விட்டார்.
“நான் ஸ்லோகங்களைக் கடகடவெனச் சொல்லிக் கொண்டே போய்விடுவேன். அதன் வேகத்துக்கு எழுத வேண்டும். திரும்பக் கேட்கக் கூடாது; தாமதித்தால் எனது ஸ்லோகத்தின் ஆக்க வேகம் கெட்டுப் போய்விடும்.
அதற்கு விநாயகர், “நான் எழுத ஆரம்பித்தால் எனது கை விறுவிறுவென வேகமாக எழுதிக் கொண்டு போகும். அது தடைபடாதபடி, வேகமாகக் கூறத் தங்களால் முடியுமா?” என பதில் சவால் விட்டார்.
மஹாபாரதம் ஆரம்பித்தது. ஆயிரம் ஸ்லோகம் முடிந்தது. வ்யாஸ பகவானால் சொல்ல முடியவில்லை; மூச்சுமுட்ட ஆரம்பித்து விட்டது. விநாயகர் வேகத்துக்கு ஈடுதருவதற்குள் ஓய்ந்து விட்டார்.
“நீ வெறுமனே எழுதிக்கொண்டு போகக்கூடாது. அர்த்தம் புரிந்து எழுத வேண்டும். அப்போது தானே தவறு இருக்காது?” என்றார்.
இதை ஏன் வ்யாஸ பகவான் சொன்னார் எனப் பார்க்க வேண்டும். ஸமஸ்க்ருதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளைச் சேர்த்து ஸ்லோகம் சொல்லுகையில் சில சமயம்,
இதைப் பேசுவதற்குள் சில க்ஷணங்கள் அவர் சிறிது ஓய்வெடுத்துவிட்டார். மீண்டும் தொடர்ந்தார். இவ்வாறாக 1000 ஸ்லோகங்களுக்கு ஒன்று வீதம்,
விநாயகர் அதைப் பிரித்துப் பார்த்து, சரியான பதம் புரிந்து கொள்ள அரை க்ஷணம் எடுப்பார். அந்த அரை க்ஷணத்தில் வ்யாஸரும் ஓய்வெடுத்து விடுவார்.
அதில் உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று பார்ப்போம்.
விராட தேசத்தில் அவர்கள் இருக்கக்கூடும் என சந்தேகித்த துரியோதனன்
இதற்கு ”கோஷ யாத்ரா” என்று பெயர். இதை அறிந்த விராடனின் மகன் உத்ர குமாரன்,
அங்கே ஸைரந்த்ரியாக இருந்த த்ரௌபதி, சாரதியாக ப்ருஹந்நளையைக் கூட்டிச் செல்லுமாறும், அவள் தேரோட்டுவதில் கைதேர்ந்தவள் என்றும் கூறி, உத்ரகுமாரனை ப்ருஹந்நளையோடு அனுப்பி வைத்தாள்.
காண்டீபம் ஏந்தி ப்ருஹந்நளை *சர வர்ஷம்* (அம்பு மழை) பொழிவதைக் கண்ட பீஷ்மர்,
அர்ஜூனன் எப்படி அடையாளம் காண முடியாதபடி இருக்கிறானோ, அதேபோல த்ரோணர் பீஷ்மரிடம் “போரிடுவது அர்ஜுனன்” எனக்கூறும் ஸ்லோகமும் மறைபொருள் கொண்டே கொடுத்தார் வ்யாஸ பகவான்.
ஏஷாங்கநா வேஷதர: கிரீடி ஜித்வா வயம் நேஷ்யதி சாத்ய காவ: ||
இதை அப்படியே மொழி பெயர்த்தால் வரும் அர்த்தம்,
”நதீ+ஜலம் = ஆற்று நீர்;
கேசவ+நாரி + கேது: = கேசவனின் ஸ்த்ரீ அடையாளம்;
நகாஹ்வயோ+நாம = நகம்/மலை/மரம் பெயருள்ள;
ஏஷ+அங்கநா = இந்தப் பெண்;
வேஷதர:+கிரீடி =வேஷமிட்ட கிரீடம் கொண்ட; ஜித்வா = ஜெயித்து; வயம் = நாங்கள்;
நேஷ்யதி = கொண்டு போகிறான்;
சாத்ய = மேலும் இப்போது;
காவ: = பசுக்களை ||
மொத்தமாகப் பாருங்கள்; ”கேசவனின் ஸ்த்ரீ அடையாளம் பெயருள்ள
அர்த்தமே இல்லாமல் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறதா??
உண்மை அர்த்தம் சரியாகப் பிரித்துப் பார்த்தால் வரும்.
லங்கேச = லங்கேஸ்வரனின்;
வநாரி = வனத்தை அழித்த சத்ரு;
கேது: = கொடி;
கங்கா புத்ரரே, லங்கேஸ்வரனின் வனத்தை அழிழ்த்த ஹநுமனின் கொடியைக் கொண்டவனும்,
நகா: = மரம்;
அவ்யோ = வெண்மையான;
நாம = பெயருடைய;
நகாரி = மலையின் விரோதிக்கு;
ஸூநு: = பிள்ளை |
”இந்த்ரனின் மகனுமான அர்ஜுணன் என்னும் பெயருடைய” என்பது பொருள்.
ஏஷ = இந்த;
அங்கநா = பெண்;
வேஷதர: = வேடமிட்ட;
கிரீடி = அர்ஜுணன்;
அதாவது, இந்த்ரன் அர்ஜுணனுடைய அவீரத்தை மெச்சி, அவனுக்கு “கிரீடி” என்னும் பட்டம் வழங்கினான்.
“பெண் வேடமிட்ட இந்த அர்ஜுணன்” என்பது பொருள்.
ஜித்வா = ஜெயித்து;
(அ)வ = உங்களுடைய;
யம் = எவனை;
நேஷ்யதி = ஓட்டிச்செல்லப் போகிறானோ;
ச அத்ய = மேலும் இப்போது;
கா: = பசுக்களை;
வ: = காப்பாற்றுங்கள் ||
இங்கு எவனை “யம்” என வந்ததால், அவனை என்று குறிக்கும் ”தம்” என்பதை நாம் உருவகப் படுத்திக்கொள்ள
“கங்கா புத்திரரே! ராவணனின் அசோகவனத்தை அழித்த ஆஞ்ஜநேய ஸ்வாமியைக் கொடியில் கொண்டவனும், அர்ஜுனமரப் பெயருள்ளவனும், மலையின் சத்ருவான இந்திரனுக்குப் புத்திரனும், ஸ்திரீ வேஷதாரியுமான, இந்தக் கிரீடியாகிய அர்ஜுனன்;
என்று த்ரோணர் சொல்வதாக வ்யாஸர் ஸ்லோகம் கூறினார். இவ்வாறு 100 பின்னல் ஸ்லோகங்கள் உள்ளன மஹாபாரதத்தில்.
இதை தமிழே சரியாகத் தெரியாத திராவிடனும், பிற மதத்தினனும் மொழியாக்கம் செய்கிறானாம்... இதைப் படித்துவிட்டு, நம் திராவிடக் குழந்தைகள் குதிக்கிறது;
“நிறை குடம் தளும்பலில்...”
அதாவது, குறை குடம் கூத்தாடும்....
புரிகிறதா சகோதரர்களே???
🍁வாஸவி நாராயணன்🍁