#BharathVruksh
🌱ராமரின் பயணம்🌱
அயோத்தி திரும்பிய பரதன், அண்ணனுக்கு இணையாக அவரது பாதரக்ஷைகளை சிம்ஹாஸனத்தில் இருத்தி, தான் ஒரு சிறு குடிலில் தங்கி, மரவுரி தரித்து, காய், கனிகளை உண்டு, தரையில் படுத்து,
சித்ரகூடத்தில் ராமர் இருப்பதை அறிந்த, ராவணனுடைய தமையன் கரன் என்பவன், அவர் மேல் கொண்ட வெறுப்பால், அங்கிருந்த முனிவர்களை யக்ஞம் செய்ய விடாது தொந்திரவு செய்து வந்தான். இதனால் கவலை அடைந்த அவர்கள், ராமரிடம் இது பற்றிக் கூறி,
என்றனர். முனிவர்களின் வார்த்தை ஒருபுறம் இருக்க, அங்கே பரதனைச் சந்தித்ததால், குடும்ப எண்ணம் அதிகமாவது உணர்ந்த ராமரும்,
”உனது திருமணம் பற்றிக் கேள்வியுற்றேன்…. ஆயினும் ராமனின் கரம்பற்றியது பற்றி உன் வாயால் சொல்…”
பலப்பல மன்னர்கள் அதை நகர்த்தக்கூட இயலாது தோற்றதையும், விஸ்வாமித்ரருடன் சிவதனுஸைப் பார்க்க வந்த ராமர்,
மேலும், ஜனகர் உடனே மணமுடிக்க யத்தனித்தும், தந்தை வாய்ச்சொல் ஆணையின்றி, தான் எதையும் ஏற்க இயலாது எனக்கூறி ராமன் பணிந்ததையும், பின்னர் தஸரதர் வந்து நான்கு மகன்களுக்கும்
“என்னதான் வனவாசம் சென்றாலும், திருமணமான பெண் ஆபரணமின்றி இருக்கக் கூடாது! எனது முன்னோர் அளித்த ஆபரணங்களைத் தருகிறேன்… இனி எப்போதும் அணிந்து கொள்…”
எனக் கூறி, நெற்றிச்சூட்டி, வளையல், ஆரம்,
பின்னர் அங்கிருந்து கிளம்பியவர்கள் தண்டகாரண்யம் (தண்டக+ஆரண்யம்) என்னும் காட்டினுள் ப்ரவேசித்தனர். அவர்கள் நடந்து போகையில், திடீரென ஒரு அரக்கன், ராம-லக்ஷ்மணர்களைத் தள்ளிவிட்டு,
“நான் ஜதன் – சதஹ்ரதையின் புதல்வன் விராதன். ஆயுதங்களால் வெல்லப்படாத வரம் வாங்கியுள்ளேன். நான் முனிவர்களின் மாமிஸம் உண்டு வாழ்பவன். உங்களுக்கெதுக்கு ஆயுதமும் மனைவியும்?
எனச் சிரித்தான். ராமர், தாங்கள் வனத்திற்கு வந்திருக்கும் க்ஷத்ரியர்கள் எனக்கூறி, அவன்மீது அம்புகள் தொடுத்தும், அவை அவனைக் காயப்படுத்தவில்லை. கோபம் கொண்ட விராதன், ஸீதையைக் கீழே விட்டுவிட்டு,
லக்ஷ்மணன் செய்து முடித்தான். விராதன் ராமனிடம்,
“இந்திரனைப் போல் பலமானவன் நீ என அறிந்தேன்.
நன்றி ராமா… எனை அக்குழியில் புதைத்து விமோசனம் அளித்துவிடு. நீயும் சரபங்க முனிவரைத் தேடிச் செல். உனக்கு நலம் பயக்கும்…”
என வேண்டினான்.
ராமரும் ஆஸ்ரமம் வந்தடைந்து, முனிவரை வணங்கி ஆஸி பெற்றார்.
“மந்தாகினி நதியின் நீரோட்டத்திற்கு எதிர்திசையில் சென்றால், ஸுதீக்ஷ்ண முனிவர் ஆஸ்ரமம் வரும். அங்கே சென்று, அவரது ஆஸி பெறு. நான் அக்னி ஸமாதி அடைய வேண்டும்…”
மந்தாகினி, பம்பை நதிக்கரைகளிலும், சித்ரகூடத்திலும் வாழும் முனிவர்களை அங்கிருக்கும் அரக்கர்கள் துண்புறுத்துவதைக் கூறிய ரிஷிகள், தங்களைக் காக்கும்படி ராமரிடம் வேண்டினர்.
பின்னர் அவர்கள் மேலும் தென்திசையில் அகஸ்த்ய முனிவரின் ஆஸ்ரமம் நோக்கிச் சென்றனர். அவரை வணங்கி, ஸுதீக்ஷணரைக் கண்டதையும்,
அவரின் வார்த்தைப்படி பஞ்சவடியில் குடில் அமைத்துத் தங்கினர். அழகிய அந்த இடத்தை ஸீதை மிகவும் விரும்பினாள். மான்களும், பறவைகளும், நிறைய விதமான
ஒரு நாள் ராமர், லக்ஷ்மணன், ஸீதாதேவி ஆகியோர் அவர்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.
இவள் ராவணன் எனும் அஸுரனின் தங்கை. ராமரின் அழகில் மயங்கிப் போனாள். தன்னை ஒரு அழகிய பெண்ணுருவில் மாற்றிக் கொண்டு அவரிடம் வந்து,
கம்பன் இவள் வருகையை ஸூர்ப்பனகை படலத்தில் அழகாக வர்ணித்திருப்பார்!
"பஞ்சியொளி விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடி பெயர்ப்பாள்
அஞ்சொல் இளமஞ்சையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்".
“பெண்ணே, நான் ஏகபத்னி விரதன். என மனைவியும் அருகில் இருக்கிறாள். இதோ எனது தம்பி லக்ஷ்மணன் எத்தனை அழகாக இருக்கிறான்... அவனை வேண்டுமானாலும் கேட்டுப்பார்...” எனக்கூறினார்.
அவர் லக்ஷ்மணனின் குணம் அறிந்து சூசகமாக அவளை அவனிடம் அனுப்பினார். லக்ஷ்மணனிடமும் அவள் தன்னை
ஆத்திரம் தாங்க முடியாதவளாக, தனது அண்ணன் ராவணனிடம் சென்று முறையிட்டாள். ஆனால், தான் செய்த தவறை மறைத்துவிட்டு,
“அண்ணா, கானகத்தில் ஒரு பேரழகியை நான் கண்டேன்.
அங்கிருந்த ஆடவன் என் காது, மூக்கினை அறுத்து, அங்கஹீனம் செய்து, என்னை அவமானப் படுத்திவிட்டான்.
எனக்கூறி, அவன் மனதில் முதலில் கோபத்தைக் கிளப்பி விட்டாள்.
பிறகு, ஸீதையின் அழகை அதி அற்புதமாக வர்ணித்து, ராவணன் மனதில் காமத்தீயை மூட்டினாள்.
அவள் வர்ணித்த அழகை கம்பர் இன்னும் அழகாகக் கூறியிருப்பார்.
வாளையே சொல்லுகேனோ ; வல்அவை வழுத்துகேனோ
மீளவும் திகப்பதல்லால் ; தனித்தனி விளம்பலாற்றேன்
நாளையே காண்டியன்றே ; நானுனக்கு உரைப்பதென்னா"
அவளது தோள் அழகை வர்ணிப்பேனா, முகத்தில் அங்கும் இங்குமாக அலையும் கருமையான கண்களை வர்ணிப்பேனா,
நீதான் அவளை நாளையே பார்க்கப் போகிறாயே, பிறகு நான் அதைப்பற்றிச் சொல்லுவானேன்?
என்கிறாள். அதன்படி, ராவணன் ஸீதையை அடைந்து விட்டால்,
மாரீசன் என்னும் அஸுரனை ஸீதையைக் கவர்ந்து வர உதவும்படி கேட்டான். அதற்குள் அவனது தமையனான விபீஷணன் ராவணனிடம்,
ராமர் – லக்ஷ்மணர் – ஸீதை மூவரும் குடிலில் இருக்கும் போது, அவர்களது நந்தவனத்தில், மாரீசன் ஒரு பொன்மான் போல
ஆனால், லக்ஷ்மணர் மனதில் ஏதோ சந்தேகம் தோன்றியது. எனவே அவர் ராமரிடம்,
“அது ஏதோ மாயம் போல் தோன்றுகிறது அண்ணா…..
எனக் கேட்டுக் கொண்டார். ஆனால், ஸீதை அதன் அழகில் ஈர்க்கப்பட்டு, அது வேண்டும் எனப் பிடிவாதம் செய்தாள்.
அதனால் ராமர், லக்ஷ்மணரிடம் ஸீதைக்குப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லிக் கூறிவிட்டு, அப்பொன் மானைப் பிடிக்கப் போனார்.
“லக்ஷ்மணா….. என்னைக் காப்பாற்று…..”
என ராமரின் குரலில் பெரிதாகக் கூவினான். குரல் கேட்ட ஸீதை, ராமர் ஆபத்தில் உள்ளார் என நினைத்து, லக்ஷ்மணரைச் சென்று அண்ணனைக் காக்கும்படிக் கூறினாள்.
“அண்ணன் இறந்ததும் என்னை அடைய நினைக்கிறாயா? அதனால் தான் போக மறுக்கிறாயா?”
எனக் கோபத்தில் லக்ஷ்மணரிடம் கேட்டாள்.
”தாங்கள் இதைத் தாண்டி எக்காரணம் கொண்டும் வரக்கூடாது…. இது உங்கள் பாதுகாப்பிற்காக நான் இட்ட கோடு”
எனக் கூறிச் சென்றார். அதைத் தான் லக்ஷ்மண் ரேகா (லக்ஷ்மணனிட்ட கோடு) எனக் கூறுகின்றோம்.
அதனால் அவன் வெளியில் நின்று ஒரு துறவி பிக்ஷை கேட்பது போலக் கேட்டான். அந்தனரைக் கண்டதும், ஸீதை தன்னிடம் இருந்த அன்னத்தை எடுத்துக் கொண்டு
“அந்தனரே… பிக்ஷை ஏற்க வாருங்கள்….”
என அழைத்தாள். ஆனால் ராவணனோ,
“நான் மிகவும் களைத்துள்ளதால் எழ முடியவில்லை அம்மா. எனது இந்த பாத்திரத்தில் நீயே வந்து பிக்ஷையை இட்டுவிடு” என்று வேண்டினான்.
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁