My Authors
Read all threads
வணக்கம்
ஈழத் தமிழர்கள் மலையக மக்கள் மற்றும் தமிழக மக்கள் ஒன்று கூடி அதிகமாக வாழும் "கட்சல் தீவு"!1,600 கி.மீ தொலைவில்.நம் உறவுகள் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!!கி.பி 1059-கல்வெட்டின்படி இத்தீவும் சோழர்களின் ஆளுமைக்கு உட்பட்டு கடற்படைதளமாக இயங்கியது
wix.to/MECSBrc
கட்சல் தீவு-2
கட்சால் தீவு (Katchal) நிக்கோபாரி என்பது இந்தியாவின் நிக்கோபாரி தீவுகளைச் சேர்ந்த ஒரு தீவாகும். இதன் பரப்பளவு 174.4 கி.மீ. 2 (67.3 சதுர மைல்) ஆகும். இது தோராயமாக இந்திய முதன்மை நிலப்பரப்பில் இருந்து 1,600 கி.மீ (990 மைல்) தொலைவில் உள்ளது.
கட்சல் தீவு-3
தலைநகரான போர்ட்பிளேரில் இருந்து, தெற்கில் 305 கி.மீ. (190 மைல்) தொலைவில் உள்ளது. இத்தீவு முன்பு துனியு ( Tihnyu ) என அழைக்கப்பட்டது. இத்தீவில்பழங்குடிமக்கள்மற்றும் குடியேறிகள் எனஇரு தரப்பினரும்வாழ்கின்றனர். இத்தீவு 2004 ஆண்டையஆழிப்பேரலையில் கடுமையாக பாதிப்புக்கு
கட்சல்-4
ஆளானது.இப்பகுதி இந்திய ஒன்றிய ஆட்சிக்குட்பட்ட நிக்கோபார் மாவட்டஆட்சி எல்லைக்கு உட்பட்டதாக உள்ளது. இத்தீவில் நிக்கோபர் பழங்குடியின மக்களும்,தமிழக மற்றும் ஈழத் தமிழர்கள்குறிப்பாக மலையகத் தமிழரும்வாழ்கின்றனர். ( சிரிமாவோ சாஸ்திரி உடன்பாட்டின்படி 1964 மறுகுடியமர்த்தப்பட்ட
கட்சல்தீவு-5
மலையகத் தமிழர்கள்). இத்தீவுக்கு போர்ட்பிளேயரில் சிறப்பு அனுமதிபெற்ற சுற்றுலா பயணிகளைத் தவிர பிறரை அனுமதிப்பதில்லை.2000 சனவரி 1 அன்று துவங்கிய புத்தாயிரம் ஆண்டைய முதல் சூரிய உதயத்தைக் காண, உலகம் முழுவதும் இருந்து பல புகழ்பெற்ற பணக்கார மக்கள் இத்தீவில் கூடினர்.
கட்சல்-6
2004 திசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது தீவின் சமூக பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது, 5,000 மக்கள் அதிகாரப்பூர்வமாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் காணாமல் போயினர் ஆனால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இதைவிடக் கூடுதலாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கட்சல்-7
இந்தத் தீவிலிருந்து காணாமல் போனவர்கள் 1,549 பேராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.ஆழிப்பேரலைக்குப் பின்னர் தீவில் இருந்த பழங்குடிகள்பெரும்பாலானவர்கள் இறந்தனர். ஆரம்ப மதிப்பீடுகளின்படி. தீவில் உள்ள நிலத்தில் 112 ஹெக்டேர் (277 ஏக்கர்) உவர் நிலமாக மாறியது.

படம்-நம் உறவு
கட்சல் தீவு-8
மேலும் 3.54 லட்சம் தென்னை அதற்கு இணையான அளவு பாக்கு மரங்கள் அழிந்தன.
இதன் அருகில் உள்ள தீவான டிரிங்கிட் தீவு 2004 திசம்பர் 26 அன்றைய ஆழிப்பேரலையின்போது கடல் நீரால் மூன்றாக பிரிக்கப்பட்டு, பல நாட்கள் நீரில் மூழ்கி இருந்தது. இதில் டிரிங்கிட் மற்றும்
படம்-சூரிய உதயம்
கட்சல்-9
சாப்டு பாலு ஆகிய இரண்டு கிராமங்கள் இருந்தன.இதன் தோராய மக்கள் தொகை 475 ஆகும். இதில் இறந்தஅல்லது காணாமல்போனவர்கள் எண்ணிக்கை 102, தப்பியவர்கள் 374 பேர்ஆவர்.தற்போதுவரை இத்தீவு வாழப் பாதுகாப்பற்றதாகக்கருதப்பட்டு, மக்கள் அருகில் உள்ள கமோர்ட்டா தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கட்சல்-10
நிக்கோபார் தீவுகளை மூன்று குழுக்களாக பிரிக்கலாம்; அவை வடக்கு, நடு.தெற்கு என்பதாகும். கட்சால் தீவு நடுக்குழுவில் உள்ள பெரிய தீவாகும். இது 35 கிராமங்களை உள்ளடக்கியது. (இதில் ஆறுகிராமங்கள் முதன்மையானவை).ஆழிப்பேரலைக்குப் பின்,பூர்வீக மக்களின் கிராமங்களாக நான்கு கிராமங்களாக
கட்சல்-11
அமைக்கப்பட்டன. அவை ஈ-வோல், மீனாட்சி ராம் நகர், சப்பான் டிக்ரி, மேல் கட்சால். மில்டெரா ஆகும்.தீவில் உள்ள இன்னொரு கிராமம் பழங்குடியினர் அல்லாத மக்களுக்கானது (மறுகுடியமர்ம்ம்ப்பட்டதமிழர்கள் மற்றும் ராஞ்சி மக்கள்).தீவின் உயரமான இடம் 835 அடி ஆகும்.

படம்:சுனாமி வந்த பொழுது
கட்சல்-12
தீவில் பேசப்படும் மொழிகள் நிக்கோபாரி, இந்தி, தமிழ், தெலுங்கு, சந்தாளி ஆகும். இத்தீவு தொலைவாகவும், ஏனைய பகுதிகளில் இருந்து தனிமைபடுத்தப்பட்டதாகவும் உள்ளதால், பழங்குடிகளை வெளியாட்கள் பொருளாதார்ரீதியாக சுரண்டுவதைத் தடுக்க, நிக்கோபார் தீவுகளை 1957 ஏப்ரல் 2 அன்று தொன்மையான
கட்சல்-13
பழங்குடி ரிசர்வ்பகுதி (ATRA) என இந்திய அரசுஅறிவித்தது.இதன் மூலமாகஇந்த நிக்கோபார் தீவுகளுக்குச்செல்ல வெளியாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.தற்போது கூட இந்தியாவில்இருந்துஇங்கு வரவேண்டுமானால் சிறப்பு அனுமதி பெறவேண்டும். தீவுகளில் தங்கும் வெளியாட்கள்
wix.to/MECSBrc
கட்சல்-14

தீவுகளில் தங்கும் வெளியாட்கள் அரசு ஊழியர்கள் மட்டுமே ஆவர்.நிக்கோபார் தீவுகள் பலவகையான வெளிப்புறத் தாக்கங்களுக்கு பல நூற்றாண்டுகளாக உட்பட்டுள்ளது. ஏனென்றால் இத்தீவுகள் பழங்கால பன்னாட்டு கடல் வணிகப் பாதையில் அமைந்துள்ளதே காரணம். இத்தீவுவாசிகளின் பண்பாடு, அடையாளம் போன்றவை
கட்சல்-15

வெளி ஆட்களால் நூற்றாண்டுகளாகப் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.கி.பி 1059 ஆண்டைய கல்வெட்டின்படிநிக்கோபார்தீவுகள் தமிழ் ஆட்சியாளர்களான தஞ்சைசோழர்களின்ஆளுகைக்கு உட்டப்படிருந்தது.1869 ஆண்டு, பிரித்தானியர்கள்இத்தீவுகளை டேனிஷ்காரர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
படம்-சுனாமி பாதிப்பு
கட்சல்-16
இத்தீவு மலைகள் நிறைந்ததாக உள்ளது. சுண்ணாம்பு, மணற்கற்கள், பளிங்கு கற்கள் போன்றவற்றுடன் அழகான வெப்பமண்டல காடுகளைக் கொண்டுள்ளது. இத்தீவுகளில் மலைப்பாம்புகள், கருங்குரங்குகள், பன்றிகள் ஆகியவை உள்ளன. இங்கு இயற்கை அழகு நிறைந்துள்ளது. கண்கவர் கடற்கரைகள், காடுகள், சூரிய உதயம்
கட்சல்-17

மற்றும் மறைவு போன்றவை சிறப்பானவை. தீவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தேங்காய், பாக்கு போன்றவை இடம்பிடித்துள்ளன. 1968 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரப்பர் தோட்டங்கள், சிவப்பு எண்ணெய் பனை தோட்டங்கள் இங்கே நிறுவப்பட்டன.

நீண்ட பதிவுLinkபயன்படுத்தவும்

wix.to/MECSBrc
கட்சல்-18

இந்தியாவைவிட நான்கு லட்சம் சதுர கி.மீ நிலப்பரப்பைஆட்சி புரிந்ததமிழ் பேரரசன் #ராஜேந்திரசோழன் பிறந்ததினம் இன்று.அவன்ஆதிக்கத்தில் இருந்த கட்சல் தீவை பதிவிடுவதில் மகிழ்வடைகிறேன்உலகெங்கும் தமிழர் ஆதிக்கம் ஏற்படுத்துவதே என் நோக்கமும்,விரும்பமும்
wix.to/MECSBrc
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Mathavan Venukopal

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!