தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் சிறப்புகள் பல. கல்வெட்டுக் குறிப்புகளும் அவற்றுள் ஒன்று. கல்வெட்டுகள் மூலம் கோயிலைப் பற்றிய பல தகவல்களை நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.
குறிப்பாக, நாம் காணவிருக்கும்
கல்வெட்டானது மண்டபத்தின் வடசுவற்றில் உள்ள பல கல்வெட்டுகளுள் ஒன்று. இவற்றை ‘தளிச்சேரி கல்வெட்டுகள்’ என்பர்.
இக்கோயிலின் மூலவரை ‘ஆடவல்லான்’ என்றே அழைக்கிறது இக் கல்வெட்டு. ஆடவல்லான் திருமுன் ஓயாது நடனம் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில், 400 நடனமங்கையர் இக்கோயிலுக்காக
வரவழைக்கப்பட்டனர் என்று வேறு ஒரு அக்கல்வெட்டு கூறுகிறது.
கோயிலின் அமைப்பு, கட்டுமானப் பணி விவரங்கள், குடமுழுக்கு நடத்தப்பட்ட நாள், பணியில் ஈடுபடுத்தப் பட்டவர்கள் என முழுமையானதொரு ஆவணத்தையே நமக்கு இராசராச சோழன் விட்டுச் சென்றிருக்கிறார் எனக் கூறலாம்.
இராசராசனின் 19ஆம் ஆண்டில் தொடங்கிய கட்டுமானப் பணி அவரது 25ஆம் ஆட்சியாண்டின் 275ஆம் நாள் கோவிலின் குடமுழுக்குடன் நிறைவு பெற்றது. கோயில் கட்டும் பணியினைத் தலைமை ஏற்று நடத்திய சிற்பியின் பெயர் ‘குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன்’ என்பதுவும் கல்வெட்டு தரும் செய்தி.
பிற்காலச் சோழ அரசைத் தோற்றுவித்த விசயாலனின் மகன் ஆதித்தசோழன் காலத்திலிருந்தே கல்வெட்டுகள் சமற்கிருதத்திலும் தமிழிலும் எழுதி வரப்பட்டன. இதில் தமிழ் எழுத்துகள், பல்லவக் கிரந்தத்திலிருந்து சற்றே மாறுபட்டு விளங்கியதால், தொல்லாய்வலர்கள் இவற்றைச் ‘சோழக்கிரந்தம்’ என்று பகுத்துள்ளனர்.
இனி, சோழர்களது தொல்லெழுத்துகளை வாசிப்போம்!
இங்கே தரப்பட்டுள்ள நான்கு ஒளிப்படங்களும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் மண்டபத்தின் வட சுவற்றில் உள்ளவை.
ஒவ்வொரு படத்திலும் எட்டு வரிகள் உள்ளன.
இந் நான்கு கல்வெட்டுகளும் இடமிருந்து வலமாக நெருக்கி ஒன்றிற்கு அடுத்து ஒன்று என உள்ளது.
இவற்றைப் படிக்கும்போது 1வது, 2வது, 3வது மற்றும் 4வது படங்கள் ஒவ்வொன்றின் முதல் வரிகளை நீளவாக்கில் இருப்பதாகக் கொண்டு ஒரே வரியாக எழுதிப் படிக்க வேண்டும். இப்படியே மீதி ஏழு வரிகளும் படிக்க வேண்டும்.
சரியான பாடம் கீழே தரப்பட்டுள்ளது.
(படத்தெளிவு வேண்டி நான்கு படங்களும் ஒன்றுக்குள் ஒன்றாக எடுக்கப்பட்டுள்ளன. தேவையெனில், கையெழுத்துப் படங்களையும் ஒப்பிட்டுக் கொள்க)
வரி 1 :
உடையார் ஸ்ரீராஜராஜதேவர் சேரமானையும் பாண்டியர்களையும் மலைநாட்டு எறிந்துகொண்ட பண்டாரங்களில் யாண்டு இருபத்தாறாவது நாள் முன்
வரி 2 :
னூற்று ஒருபத்தொன்பதினால் ஸ்ரீராஜராஜஈஸ்வரமுடைய பரமஸ்வாமிக்குக் குடுத்த பொன்னின் சின்னங்கள் ஆடவல்லான் என்னும் கல்லா
வரி 3 :
ல் நிறையெடுத்து கல்லில் வெட்டினபடி காளாஞ்சி ஒன்று பொன் ஐஞ்ஞூற்று எண்பத்து அறுகழஞ்சு – காளாஞ்சி ஒன்று பொன் அறுநூ
வரி 4 :
ற்று ஒருபத்து இரு கழஞ்சரை குடம் ஒன்று பொன் முன்னூற்று எண்பத்து இரு கழஞ்சரை குடம் ஒன்று பொன் முன்னூற்று அறுபத்து எழு
வரி 5 :
கழஞ்சு குடம் ஒன்று பொன் முன்னூற்று ஐம்பத்து இஎரு கழஞ்சு – குடம் ஒன்று பொன் இருநூற்றுத் தொண்ணூற்று நாற்கழஞ்சு – கரண்டிகைச்
வரி 6 :
செப்பு ஒன்று அடியும் மூழலும் உட்பட பொன் நூற்று இருபத்து ஒரு கழஞ்சரை இலைச்செப்பு ஒன்று யாளிக்கால் நாலும் மூழலும் உட்பட பொ
வரி 7 :
ன் நூற்று எண்பத்து ஐங்கழஞ்சே முக்கால் இலைச்செப்பு ஒன்று யாளிக்கால் நாலும் .... லும் உட்பட பொன் நூற்று நாற்பத்து எழு கழஞ்சு –
வரி 8 :
தளிகை ஒன்று அடியுட்பட (பொன்) ஆயிரத்து ஒருநூற்று முப்பத்து ஐங்கழஞ்சரை கல ...... நை ஒன்று மூக்கும் அடியும் உட்பட பொன் நானூற்று எ…
அருஞ்சொற்பொருள் :
உடையார் = அரசர்
எறிந்து = வென்று
பண்டாரங்கள் = கருவூலங்கள்
ஈஸ்வரம் = சிவன்கோயில்
பரமஸ்வாமி = இறைவன்
சின்னங்கள் = பொருள்கள்
ஆடவல்லான் என்னும் கல் = எடைக்கல்
காளாஞ்சி = தாம்பூலக்கலம்
கழஞ்சு = நகை எடைகளில் ஒன்று
கரண்டிகை = பானை போன்ற கலம்
இலைச்செப்பு = வெற்றிலைச்சிமிழ்
மூழல் = மூடி
தளிகை = தட்டு அல்லது உண்கலம்
கல்வெட்டின் செய்தி :
முதலாம் இராசராசன் சேர பாண்டியரை வென்று அவர்களின் கருவூலங்களிலிருந்து கொணர்ந்த செல்வங்களைக்கொண்டு தஞ்சைப்பெரியகோயிலுக்குப் பொன்னால் செய்யப்பட்ட பல பொருள்களைக் கொடையாக அளித்தான். கொடை அளிக்கப்பட்ட ஆண்டு இராசராசனின் இருபத்தாறாவது ஆட்சியாண்டு;
(கி.பி. 1011) அவ்வாண்டில் முன்னூற்றுப் பத்தொன்பதாவது நாளும் கூட.
இனி, இக் கல்வெட்டெழுத்துகளையும் வாசித்து அறியும் முறைகளையும் அடுத்த பாடத்தில் படிப்போம்.
- தொடரும்
திருத்தம் :
ஐம்பத்து இஎரு கழஞ்சு ×
ஐம்பத்து இரு கழஞ்சு √
பல்லவர்கள் வடநாட்டினர் என்பதால் பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளில் கல்வெட்டிலும் செப்பேட்டிலும் தொடக்கத்தில் எழுதிவந்தனர்.
பல்லவர்களின் தோற்றமாகக் கருதப்படும் குண்டூர்ப் பகுதியில் (1/9 )
மிகப் பரவலாக அறியப்படும் ‘பட்டிப்புரோலு’ புத்த தூபக் கல்வெட்டு உள்ளது. அது பிராகிருதமொழியில் ‘அசோகபிராமி அல்லாத எழுத்தில்’ உள்ளதையும் நாம் பின்னர் காண்போம்.
சோழர்களுக்கு முன்னரே பல்லவர்கள் தங்களது கல்வெட்டுகளைத் தமிழ் எழுத்துகளில் பொறிக்கத் தொடங்கிவிட்டனர். (2/9)
தமிழகத்தில் கிடைத்த காலத்தால் முந்திய தமிழ் எழுத்து 'பள்ளன்கோயில் செப்பேடு' எனச் சொல்லப்படுகிறது.
இச் செப்பேடு, பல்லவ அரசன் மூன்றாம் சிம்மவர்மன் தன் 6-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 550) பருத்திக்குன்றில் வாழ்ந்த வஜ்ரநந்திக் குரவர்க்குப் பள்ளிச்சந்தமாக அமண்சேர்க்கை என்னும்
அறுபது ஆண்டுகள் கொண்ட வட்டத்தை உருவாக்கியவர் யாவர்? எப்போது உருவாக்கப்பட்டது? உருவாக்கியதன் பின்னணி என்ன?
60 ஆண்டு வட்டம் (அ) வியாழ வட்டத்தை உருவாக்கியோர் தமிழர். உருவாக்கிய காலம் கலிகாலத்தின் தொடக்கம் எனக் கொள்ளலாம்.
கலிகாலத்தின் தொடக்கம் கிமு 3102 என்பதை மனதில் கொள்க.
இரவும் பகலும் நாள் ஆகியது. நிலவின் தேய்தலும் பெருகலும் மாதங்கள் ஆயின.
அதனைப் 12ஆல் பெருக்க ஆண்டுக் கணக்கின் நெருங்கிய நாட்கணக்கு தெரிந்தது. அதனைச் சரிசெய்ய பதினொரு நாட்கள் கூட்டி 365 ஆனது. அதிலும் ஒரு குறை, ¼ நாள். அதற்கு ஒரு தாண்டாண்டு (Leap) தேவைப்பட்டது.
இன்னும் மிகச்சரியாக ஆண்டுக் கணக்கைக் கண்டறிய முடியுமா என்ற கேள்விக்கு விடைதான் வியாழவட்டம். தமிழ் வள்ளுவக் கணியர்களின் கண்டுபிடிப்பு!
வியாழ வட்டத்திலும் 1 ஆண்டில் 14 நாழிகை, 53 விநாழிகள் குறைவு உண்டு. அதனால், 4 ஆண்டுக்கு ஒருமுறை சுறவம் (தை) மாதத்தில் ஒரு நாள் சேர்த்தனர். 12