இன்றைய இளையோருக்கு அஞ்சல் துறையுடன் இணைந்திருந்த தந்தித் துறையைப் பற்றியும் அது காணாமல் போன வரலாறு பற்றியும் தெரிய வாய்ப்பில்லை. அதில் பணியாற்றி ஓய்வு பெற்ற எனது நினைவலைகளில் சில . .
பதினோராம் வகுப்புத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பித்தேன். செலவு ரூ5/
நேர் காணலுக்கு ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையை அதிகாரி வாசித்தார். தவறின்றி எழுதினேன் . அவ்வளவுதான். வேலை கிடைத்து விட்டது. சென்னையில் ஒன்பது மாதப் பயிற்சி. சிட்டுக் குருவிகள் போல் ஆணும் பெண்ணுமாய் தொண்ணூறு‌ பேர். மோர்ஸ் கோட் எனும் தந்தி மொழி, டெலிபிரிண்டர் எனும் தட்டச்சுக் கருவி.
இவற்றில் தேர்ந்து நாகர்கோவிலில் 1980ம் வருடம் பணியில் சேர்ந்தேன். பெரிய நகரங்கள் டெலிபிரிண்டருடன், சிறு ஊர்கள் அஞ்சல் அலுவலகத்தில் மோர்ஸ் கருவியுடன் இணைந்திருக்கும். என்னை அறிந்த மக்கள் தந்தி கொடுக்கவோ தொலைபேசவோ வரும்போது பெருமையாயிருக்கும். அந்நாளில் தொலைபேசுபவர்கள் தந்தி
அலுவலகம் வந்து இணைப்புக் கிடைக்கும் வரை காத்துக் கிடக்க வேண்டும். வெளிநாட்டில் வாழ்பவரிடம் பேச மணிக்கணக்கில் காத்திருப்பர். கண்ணீருடன் பேசி, இறுதியில் பணம் அனுப்பு என்றே முடிப்பர்.
மோர்ஸில் தந்தி அடிக்கும்போது கெத்தாக இருக்கும். அதுபோல் டெலிபிரிண்டரில் தந்தி அடிக்கும்போது
கைகளும் கண்களும் தாளகதியில் இயங்கும். நாம் அடிப்பது நேரே destination சென்று விழும். நாம் பார்க்க இயலாது. ஆனால் தவறுகள் இராது. அங்கிருந்து சிறிய நீண்ட ரிப்பன்போல் தந்தி வந்து கொண்டேயிருக்கும். அதைக் கத்தரித்து ஒட்டி முகவரிதாரரிடம் சேர்க்க‌ வேண்டும். பிறப்பு , இறப்பு ,பயணம்,
இனிய நிகழ்வுகள் அனைத்தையும் சுடச் சுடத் தெரிவிக்க தந்தி அலுவலகம் 7x24x365 என எல்லா ஊர்களிலும்‌ இயங்கியது. சுழற்சி முறையில் அதிகளவு பணியாளருடன்‌ நாடெங்கும் இயங்கியது. சென்னை தலைமை அலுவலகம் மாபெரும் தொழிற்சாலை போல் இயங்கும். ஆங்கிலோ இந்தியர் அச்சமயம் அங்கு பணியாற்றினர்.
அதிக தந்திகள் அடித்தாலோ வாங்கினாலோ incentive, மேலும் overtime , latefee எனப் பார்த்து சம்பளத்தை விட அதிகம் ஈட்டினர்
வீட்டுக்கு வீடு தொலைபேசி இணைப்பு வந்தது. பயன்பாடு குறைந்தாலும் தந்தி உயிர் வாழ்ந்தது. தந்தியும் மிண்ணியலுக்குள் வந்தது. அலைபேசுவது கைப் பேசியிலென்றானதும்
தந்தி வலுவிழந்து படுத்தது. 2013 ம் ஆண்டிற்குப் பின் எழவேயில்லை. எஞ்சிய பணியாளர் தொலைத் தொடர்பு சார்ந்த பணிகளில் இணைந்தோம். ஒரு மாபெரும் கட்டமைப்பு சுவடேயின்றி மறைந்தது. நினைவுகளுடன் நாங்கள்..
அந்தக் காலம் அது அது வசந்தகாலம் . இந்தக் காலம் இதுவும் வசந்த காலமே.
கட் கட (dots & dashes) என்ற ஒலிகளை அடிப்படை‌யாகக் கொண்டு திரு . சாமுவேல் மோர்ஸால் வடிவமைக்கப்‌பட்டது Morse code .

கட்கட்கட - G
கட்கட்கட் - O
கட்கட்கட் - O
கட்கடகட - D

கட்கடகட - D
கடகட் - A
கட்கடகட்கட்- Y

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mansura Beebi

Mansura Beebi Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @BeebiMansura

24 May
பிறை பாத்தாச்சு...

ஊரடங்கு இன்னும் முடியவில்லை. நாளை பெருநாளா நாளைக்கழிச்சுப் பெருநாளா தெரியவில்லை.

மாலை ஆறு மணிக்கு வீட்டிலுள்ள பிள்ளைகள் மொட்டை‌ மாடியேறி பிறை‌ தெரிகிறதா எனப் பார்த்தார்கள். இது‌வரை‌‌ தெரியவில்லை. நோன்பு இருபத்தி ஒன்பது முடிந்து விட்டது.
பெரியவர்களும் பிள்ளைகளும் எங்காவது பிறை தென்படுகிறதா என்று மேற்குப்‌ பக்கம் நின்று கழுத்தைத் திருப்பியும் அண்ணாந்தும் பார்த்துக்கொண்டு நின்றனர்.
அந்த சிற்றூரின் ஐந்தாவது தெருவிலுள்ள மூன்றாவது வீட்டின் பாரூக் மட்டும் இன்று பிறை தெரியக்கூடாது என்று துவா செய்து கொண்டிருந்தான்.
'மோனே பாரூக்கு' என உம்மா கீழிருந்து விளித்தாள். அது பக்கத்து தட்டில் நின்றிருந்த மம்மதுக்கு கேட்டது . இவன் காதில் விழவில்லை. 'அல்லா .பெற நாளைக்குத் தெரியட்டும். அப்பதான் அன்சருக்குப்‌ பெருநா கொண்டாட முடியும். அல்லா
என் துவாவைக் கேளு'. என்று மனத்தினுள் வேண்டிக் கொண்டிருந்தான்‌.
Read 46 tweets
10 May
உம்மா

அது நடந்து ஐம்பத்தைந்து வருடம் ஆகி விட்டது. ஒரு இளங்காலை நேரம். நாகர்கோவில் நகரின் முதன்மையான ஒரு தெருவில் வசிக்கும் பெண்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். தண்ணீரெடுக்க தெருமுக்கிற்கு வர வேண்டும்.
அந்த‌ நீண்ட குறுகிய தெருவின்‌கடைசியில்‌ இடப்பக்கம்‌ ஒரு வளவு.
பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த வளவு.
அந்த வளசலிலிருந்து வந்த பெண்ணிடம் ஒருத்தி கேட்டாள்.
'ஏட்டி தாணம்ம ..
மாமி எப்படியிருக்கா?'
'மாமிக்கென்ன நல்லாத்தான் இருக்கா. உங்கம்ம அதத் தந்தாளா இந்தத் தந்தாளான்னு வந்ததிலயிருந்து ஒரே நொச்சரிப்பு:
போட்டி சவமே ஒங்கத்தையையா கேட்டேன்.
ஒங்க பக்கத்து வீட்டு மாமி .. அதான் அந்த சாய்ப்பு மாமா பொண்டாட்டி; அவளத்தான்..
ஒன் வீட்டு தொட்டடுத்த வீடுல்லா. அதாம்ட்டிக் கேட்டேன்'
'மாமிக்கு என்னக்கா ஆச்சிது? ராசம்மக்கா நீதான் சொல்லேன்.'
'ஓங்கத்த ஒண்ணும் சொல்லலியா?‌'
வெறும் குடத்தை இடுப்பிலிருந்து கையில் பிடித்தவாறு இல்லக்கா.
Read 27 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!