தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பான் பீஜப்பூர் சுல்தானின் படைத் தலைவர் வெங்காஜி என்பானை வேண்டினான்.

வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான்.👇
அவன் படை எடுத்து வந்த சமயமானது ஆயுதபூஜை சமய மாகும். படை வீரர்களது படைக் கலங்கள் எல்லாம் ஆயுத பூஜைக்காக கொலுவில் வைக்கப்பட்டிருந்தன.

மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வ தென்றே புரியவில்லை.👇
மனக்கலக்கம் அடைந்த வனாய் பார்ப்பன மந்திரிகளையும் பார்ப்பனக் குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான்.

அதற்கு அந்தப் பார்ப்பனர்கள், "மன்னா! கவலைப்படாதீர்கள். ஆயுத பூஜையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம்.👇
நம் நாட்டின் மீது படை எடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜி யாவான். அவனோ ஓர் இந்து, மேலும் பரம வைணவன்.

ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத் துழாய்களை (துளசி செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவிவிட்டால்,👇
அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட்டான்" என்று சொன்னார்கள்.

மன்னனும் அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தான் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரிபஜனை செய்து கொண்டிருந்தான்.👇
வெங்காஜியின் படைகளின் குதிரைகளோ, குவித்திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதி விரை வாகவும் அனாயசமாகவும் துளசிச் செடிகளை வாயில் கவ்விக்கொண்டு நகருக்குள் புகுந்தன.

இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமலதாசன், "வெங்காஜி சத்தியம் கெட்டவன்; திருமாலின் திருத்துழாயினை மதிக்கவில்லை.👇
ஆகவே அவனுடன் போர் செய்தல் கூடாது" என்று கூறி யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டான்.

வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்காமலும் எளிதில் தஞ்சையினைக் கைப்பற்றின.👇
இதனால்தானே "பார்ப்புப் பெருத்தல்லோ நாயக்கத் துரைத்தனம் கெட்டது" என்ற பழமொழி ஏற்பட்டது போலும்.

ஆயுத பூஜையால் ஆட்சியும் அரண்மனையும் அழிந்த கொடுமையைப் பார்த்தீர்களா?

பெரியாரின் 'இந்துமத பண்டிகைகள்' நூலிலிருந்து...

#ஆயுதபூஜை

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ராஜ்ராஜே

ராஜ்ராஜே Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @macblaze2020

19 Oct
GST - அறிஞர் அண்ணா அன்றே சொன்னது 👇👇👇

மாநில அரசுகளிடமிருந்து வரி வசூலிப்பதை ஒன்றிய அரசு பிடுங்கிக் கொள்ளும் போக்கு ஒரே அரசியல் கட்சி எல்லா இடங்களிலும் ஆண்ட போது சரியானதாக இருக்கலாம்.👇 Image
இப்போழுது பல கட்சிகள் வெவ்வேறு மாநிலங்களில் ஆளுவதால், அக்கருத்து சரியானதாக இருக்காது.

சிலர் "யார் வரி வசூலித்தால் என்ன? அந்தப் பணம் இந்தியாவுக்குள் தானே இருக்கிறது?" என்று விசித்திர வாதம் புரிகிறார்கள்.👇
அப்படிப்பட்ட வாதத்திற்கு முன்பு கைதட்டல் கிடைத்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் காலத்திற்குச் சொல்லி வைத்துத்தான் கைதட்டல் பெற முடியும்.👇 Image
Read 8 tweets
1 Oct 18
தோழர்களே இது ஒரு நீண்ட பதிவு திரி நேரம் ஒதுக்கி படிக்கவும்!

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிறைவு நாளன்று நான் ஒரு ட்வீட் செய்து பின் வருமாறு கேட்டேன்...
ஆனால் ஒருவர் கூட ஒரு சாதனையும் குறிப்பிடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது... எம்ஜிஆர் சாதனைகளே செய்யவில்லையா? அவரும் சில சாதனைகள் புரிந்துள்ளார்,
1. ஒவ்வொரு குடிசைக்கும் மின் விளக்கு
2. இலவச வேட்டி சேலை திட்டம் வருடத்தில் 2
3. குழந்தைகளுக்கான சத்துணவு திட்டம்
Read 28 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!