மாநில அரசுகளிடமிருந்து வரி வசூலிப்பதை ஒன்றிய அரசு பிடுங்கிக் கொள்ளும் போக்கு ஒரே அரசியல் கட்சி எல்லா இடங்களிலும் ஆண்ட போது சரியானதாக இருக்கலாம்.👇
இப்போழுது பல கட்சிகள் வெவ்வேறு மாநிலங்களில் ஆளுவதால், அக்கருத்து சரியானதாக இருக்காது.
சிலர் "யார் வரி வசூலித்தால் என்ன? அந்தப் பணம் இந்தியாவுக்குள் தானே இருக்கிறது?" என்று விசித்திர வாதம் புரிகிறார்கள்.👇
அப்படிப்பட்ட வாதத்திற்கு முன்பு கைதட்டல் கிடைத்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் காலத்திற்குச் சொல்லி வைத்துத்தான் கைதட்டல் பெற முடியும்.👇
இன்னுஞ் சில ஆண்டுகள் சென்ற பிறகு, சொல்லி வைத்தாலும் கைதட்ட மாட்டார்கள். அதன் பின்னும் மேலுஞ் சில ஆண்டுகள் சென்றால் கைத்தட்டுபவர்களையே சந்தேகிப்பார்கள்.👇
"திருநெல்வேலியில் களவாடியது திருச்செந்தூரில் இருக்கலாம், திருச்செந்தூரில் களவாடியது திருவல்லிக்கேணியில் இருக்கலாம். களவாடப்பட்ட பொருள் கூட, இந்த நாட்டிலே தான் இருக்கிறது.👇
ஆகவே, களவாடப்பட்டது பற்றிக் கவலைப் படவேண்டாம்" என்று எவரும் கூறத் துணிய மாட்டார்கள்.
ஒருவருக்குரிய பொருளை எடுத்தாலும் ஒருவருக்குரிய உரிமையை எடுத்துக் கொண்டாலும், திருட்டு திருட்டுதான்.👇
ஆகையால், உரிமைகளை மதித்து மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் ஒன்றுப்பட்டுப் பணியாற்ற வேண்டும், ஒன்றுப்பட்டுப் பணியாற்ற வேண்டுமே தவிர, ஒன்றாக்கப்பட்டு விடக்கூடாது.
24 - 04 - 1967 அன்று அண்ணா திருவல்லிக்கேணி பன்பாட்டு கழகத்தின் கருத்தரங்கில் பேசிய தலைமை உரையில் இருந்து.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நாலு தலைச் சாமிகள்,
மூன்று கண் சாமிகள்,
மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறுதலைச் சாமி,
ஆனை முகச்சாமி, ஆழிவாய்ச்சாமி,
பருந்தேறும் சாமி,
காளை ஏறும் கடவுள்,
காக்கை மீது பறக்கும் கடவுள்,
தலை மீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம்,
🔥🔥🔥
ரிஷி பத்தினிகளிடம் சுகமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணை களிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக் கொண்டால், இவைகளை நமது தெய்வங்கள் என்று ஒப்புக் கொண்டு தொழ வேண்டுமே.
🔥🔥🔥
இந்தச் சேதியைக் கேட்டால், உலக நாகரிக மக்கள் நம்மை கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே! இந்தக் கண்ணறாவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக் கொள்ள, நமக்கு மனம் எப்படித் துணியும்? ஆகவேதான், நாம் இந்து அல்லவென்று கூறுகிறோம்.
🔥🔥🔥
இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது."இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்' என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான்
அதாவது வடமொழி ராமாயணத்தில்தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவதுதான் இந்தியின் தத்துவம். எனவேதான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு போர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால்,
இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும்.
ஆனால் ஒருவர் கூட ஒரு சாதனையும் குறிப்பிடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது... எம்ஜிஆர் சாதனைகளே செய்யவில்லையா? அவரும் சில சாதனைகள் புரிந்துள்ளார், 1. ஒவ்வொரு குடிசைக்கும் மின் விளக்கு 2. இலவச வேட்டி சேலை திட்டம் வருடத்தில் 2 3. குழந்தைகளுக்கான சத்துணவு திட்டம்