வணக்கம்.
புதிய நாணயம் கண்டுபிடிப்பு: தமிழகத்தை‘களப்பிரர்கள்’நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை!
களப்பிரர்கள் காலபுதிய நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை களப்பிரர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை என்பதை அறிய முடிகிறது.
wix.to/VcAjDFE
புதிய நாணயம்-2/15
என்று தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழக தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.இது குறித்து தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழக தலைவரும், தினமலர் செய்தி ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

wix.to/VcAjDFE
புதிய நாணயம்-3/15
களப்பிரர் என்ற இனக்குழு:
சங்க கால இறுதியில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசுகளை ‘களப்பிரர்’ என்ற பெயர் கொண்ட ஒரு இனக்குழு படையெடுத்து, மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறி வந்தனர்.

wix.to/VcAjDFE
புதிய நாணயம்-4/15
அவர்கள் ஆண்ட காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று எழுதி உள்ளனர்.அந்த இனக்குழுவினர் எங்கு இருந்து வந்தனர், அவர்களின் மதம், மொழி இவை எதையும் சரியாக அறிய முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர்களை பற்றிய கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரங்களோ கிடைக்கவில்லை.
புதிய நாணயம்-5/15
8-ம் நூற்றாண்டை சேர்ந்த வேள்விக்குடி ‘செப்பேட்டில்’ களப்பிரர்களை பற்றிய செய்தி உள்ளது. ஜடாவர்மன் பராந்தக பாண்டிய மன்னரால் அது வெளியிடப்பட்டது.

‘களப்பிரர் நாணயங்கள்’ என எல். ராமையா 1973-ம் ஆண்டு ஒரு கட்டுரை வெளியிட்டார்.

wix.to/VcAjDFE
புதிய நாணயம்-6/15
1986-ம் ஆண்டு களப்பிரர் நாணயம் பற்றிய படத்துடன் கூடிய கட்டுரை ஒன்றை நான் வெளியிட்டேன். வரலாற்று ஆசிரியர்கள் நாணயத்தில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக இல்லை என்று ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

வித்தியாசமான நாணயம்:

அந்த கட்டுரை வெளியாகி 30 வருடங்களுக்கு பின் இங்கு..
புதிய நாணயம்-7/15
வெளியிடப்பட்டிருக்கும் நாணயம், எனக்கு சற்று எதிர்பார்க்காத சூழலில் கிடைத்தது. கடந்த மாதம் எனது பல்லவர் நாணயங்களின் தொகுப்பை சுத்தம் செய்தபோது இதுவரை நான் கண்டிராத வித்தியாசமான நாணயம் இருப்பதை கண்டேன். அந்த நாணயத்தை வைத்திருந்த சிறிய காகித கூட்டின் மேல் கரூர்..
புதிய நாணயம்-8/15
அருகே உள்ள அமராவதி ஆற்றில் 1986-ம் ஆண்டு கிடைத்ததாக குறிப்பிட்டு இருக்கிறேன்.அந்த நாணயத்தை பற்றிய குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளேன். நாணயம் பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. இந்த நாணயம் செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
wix.to/VcAjDFE
புதிய நாணயம்-9/15
எடை 3.20 கிராம். இதன் குறுக்களவு 1.7 சென்டி மீட்டர்.

நாணயத்தின் முன்புறம்

நாணயத்தின் முன்புறத்தில் யானை ஒன்று வலப்பக்கம் நோக்கி உள்ளது. யானையின் முன்பு 3 மரத்தூண்களை கொண்ட ஒரு இலச்சினை இருக்கிறது. கிளைகளுடைய ஒரு மரச்சின்னம் யானையின் பின்னே இருக்கிறது.
புதிய நாணயம்-10/15
யானையின் மேல் பகுதியின் இடமிருந்து வலப்பக்கமாக 4 பிராமி எழுத்துக்களை பார்க்க முடிகிறது. அதை ஆங்கிலத்தில் ga-l-a-p-a-ra என்று படித்துள்ளேன். தமிழ் எழுத்தில் ga என்ற எழுத்து வடிவம் இல்லாததால் ga லபர என்று எழுதவேண்டி உள்ளது.
wix.to/VcAjDFE
புதிய நாணயம்-11/15
ga என்ற எழுத்து ஆரம்பத்திலும் அதை அடுத்து ‘ல’ எழுத்தும் அதைதொடர்ந்து ‘ப’ எழுத்தும், அதன் தனியாக வலப்பக்கத்தில் ‘ர’ என்ற எழுத்து தனியாக மேல் பகுதியிலும் உள்ளது. இந்த எழுத்து தொடரை அடுத்து 4 சின்னங்கள் உள்ளன.

wix.to/VcAjDFE
புதிய நாணயம்-12/15
முதல் சின்னம் சுவஸ்திகை 2-வது திருவஸ்தா என்று அழைக்கப்படும் சின்னங்கள் இரண்டும் அடுத்தடுத்து உள்ளன. கடைசியாக உள்ள சின்னம் 5 கால்களுடைய சக்கரம்.

அச்சு முறை:

நாணயத்தின் முழுமையான இடத்தை 5 கிளைகளுடைய மரச்சின்னம் அடைத்து உள்ளது.
wix.to/VcAjDFE
புதிய நாணயம்-13/15
அழகான அச்சு முறையில் நாணயம் தயார் செய்யப்பட்டு உள்ளது. வார்ப்பு முறையில் அல்ல. இந்த நாணயத்தின் குறுக்களவு, எடை போன்றவைகளை வைத்து ரோமானிய செம்பு நாணயங்களுடன் ஒத்திருக்கிறதா என்று ஆய்வு செய்தேன். அதில் எனக்கு வியப்பு அளிக்கும் தகவல் கிடைத்தது.
புதிய நாணயம்-14/15
லண்டன் அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள முக்கியமான ரோமன் நாணயங்களை பற்றிய தொகுப்பு நூலில் இதே குறுக்களவு இதே எடை கொண்ட நாணயம் இருப்பதை கண்டேன். பேரரசர் விக்டோரியஸ் வெளியிட்ட செம்பு நாணயத்தை இது ஒத்திருக்கிறது.

ரோமானியர்களுடன் தமிழர்கள் பல நூற்றாண்டு வாணிப தொடர்பு
புதிய நாணயம்-15/15
வைத்திருந்தனர். இந்த செம்பு ரோமன் நாணயத்தை ‘அன்டோனியனஸ்’ என்று அழைக்கின்றனர். கி.பி.269-ம் ஆண்டு வெளியிடப்பட்டது என்றும் அறிந்து கொண்டேன்.

ஆய்வின் முடிவு

இந்த நாணயத்தின் முன்புறம் யானையையும், பின்புறம் கிளைகளுடைய மரச்சின்னத்தையும் காண்கிறோம்.
புதிய நாணயம்-16/15
அதேபோல சின்னங்களை கொண்ட நாணயங்களை தக்காணத்தில் கி.பி. 1-ம் நூற்றாண்டிலிருந்து 3-ம் நூற்றாண்டுவரை ஆட்சி செய்த பெரும் வல்லமை பொருந்திய சாதவாகனர்களும் வெளியிட்டுள்ளனர். அவர்கள் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்துள்ளனர். சாதவாகனப்பேரரசர் வீழ்ச்சியுற்ற பின்னர் அவர்கள்
புதிய நாணயம்-17/15
கட்டுப்பாட்டில் இருந்த பழங்குடி அரசுகள் விடுதலை பெற்று தனி அரசுகளாக செயல்பட்டன.தமிழ்நாட்டில் வட எல்லையை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில் இருந்த ஒரு மலைவாழ் மக்களின் தலைவன், தன் படையுடன் சங்க கால சேரர்களின் தலைநகரான கரூரை கைப்பற்றி இருக்கவேண்டும்.
புதிய நாணயம்-18/15
சங்க காலத்தில் சேரர்கள் செல்வ செழிப்புடன் இருந்திருக்க வேண்டும். சங்க கால சேரர்கள் ரோமானியர்களுடன் 300 ஆண்டுகாலம் வாணிபம் செய்துள்ளனர்.

சேரர்களின் செல்வம்:

ரோமானிய பேரரசர்களின் தங்கம், வெள்ளி, நாணய புதையல்கள் 19-ம் நூற்றாண்டிலும், 20-ம் நூற்றாண்டிலும்,
புதிய நாணயம்-19/15
கோவை மாவட்டத்தில் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. சேரர்களின் செல்வத்தை இந்த புதையல்களில் இருந்து மதிப்பிடலாம்.கலபர நாணயத்தின் முன் பக்கம் உள்ள 4 இலச்சினைகள், சங்க கால நாணயங்களில் காணப்படும் இலச்சினைகளை ஒத்திருக்கின்றன.
wix.to/VcAjDFE
புதிய நாணயம்-20/15
அக்காலத்தின் இறுதி கட்டத்தில் இந்த கலபர நாணயம் வெளியிடப்பட்டிருக்கவேண்டும்.

கலபரர் ஆட்சி நூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. சாதவாகனர்களிடம் தளபதிகளாக இருக்க பல்லவர்கள் சாதவாகனர்கள் வீழ்ச்சி அடைந்த பின்னர் தங்கள் அரசை உருவாக்கி கொண்டு..
புதிய நாணயம்-21/15
தமிழகத்தின் வட பகுதிகளை கைப்பற்றினர்.கலபரர் ஆட்சியை கி.மு. நான்காம் நூற்றாண்டின் நடுவில் வீழ்த்தியிருக்கவேண்டும். ஆய்வின் முடிவு களப்பிரர்கள் நீண்டகாலம் ஆட்சி செய்தனர் என்று கூறுவது தவறு என்றுஎண்ணத்தோன்றுகிறது.இவ்வாறு இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நன்றி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathavan Venugopal

Mathavan Venugopal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MVenukopal

1 Nov
வணக்கம்.
சிலப்பதிகார கண்ணகி மதுரையை எரித்த பொழுது மதுரையில் எரிகல் விழுந்தது என தகவல் கேள்விப்பட்டேன். அது உண்மையா?சிலப்பதிகாரத்திற்கு வருவோம். பொதுப் புத்தியிலுள்ள செய்தி என்னவெனில் கண்ணகி மதுரையினை முற்றாக எரித்தாள் என்பதே.

wix.to/wcAbDFQ?ref=2_… ImageImageImageImage
சிலப்பதிகார கண்ணகி-2/13
முதலில் மதுரை முற்றாக எரிக்கப்படவில்லை.மொத்த மதுரையும் எரிந்து போயிருந்தால்,எப்படி மறு நாளே, நெடுஞ்செழியன் மன்னனின் தம்பியான வெற்றிவேற் செழியன் முடி சூடியிருப்பான்? மொத்த மதுரையும் எரிந்திருந்தால் அடுத்த நாளே முடிசூட்டு விழா நடைபெற்றிருக்காது. ImageImageImageImage
சிலப்பதிகார கண்ணகி-3/13
எனவே மதுரை முற்றாக எரியவில்லை. அடுத்ததாக, ஒரு பெண்ணின் சினத்தால் ஒரு நாடு எரியுமா? அவரின் உள்ளம் வேண்டுமானால் எரியலாம்.
அவ்வாறாயின் என்னதான் நடந்தது?
சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் ஒரு உத்தியினைக் கையாளுவார்.

wix.to/wcAbDFQ?ref=2_… ImageImageImageImage
Read 13 tweets
31 Oct
வணக்கம்.
ஈழத்தின் வன்னி நிலப்பரப்பை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்!ஆட்சி:1785 -1803
இவரின் போர் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என்பது 1782இல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூல் வாயிலாகத் தெரியவருகிறது. wix.to/PMDGDFI?ref=2_… ImageImageImageImage
ஈழத்தின்-2/3
அதில் லூயி டச்சுக்காரர்களான நாங்கள் உலகில் எங்கெங்கெல்லாமோ போரிட்டோம் ஆனால் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து வேறொரு அரசனிடமும் கண்டதில்லை என எழுதி இருந்தார்.

இறப்பு31 அக்டோபர் 1803 (லெப். வொன் டிரிபெர்க்கினால் தோற்கடிக்கப்பட்டார்)
கற்சிலைமடு. ImageImageImageImage
ஈழத்தின்-3/3

பண்டாரவன்னியனின் கூட்டணி படையைின் முல்லைத்தீவு கோட்டை வெற்றி கொண்டு பீரங்கிகளை கைப்பற்றிய வரைபடம்,ஒல்லாந்தர்கள் சதி மூலம் பண்டாரவன்னியனை,தங்கள் படை மூலம் வெற்றி கொண்ட இடத்தை காட்டும் வரைபடம்.

wix.to/PMDGDFI?ref=2_… ImageImage
Read 5 tweets
31 Oct
வணக்கம்.
தாரசுரதில் உள்ள ஐராவடேஸ்வரர் கோயில் இரண்டாம் இராசராச சோழன் கட்டியது.900 வருடங்களை கடந்த ஆலயம்!கி.பி 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. உலக பிராதன சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்ப்பட்டது.அதன் அழகான புகைப்படங்கள்!

wix.to/tMCpDFI?ref=2_… ImageImageImageImage
தாரசுரத்தில்-2/5
யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்தலங்கள் மூன்று!
1-தஞ்சாவூர் பெரிய கோவில்,
2-கங்கைகொண்ட சோழபுரம் கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்,
3-தராசுரம் ஐராவடேஸ்வரர் கோயில்

தராசுரம் ஐராவடேஸ்வரர் கோயில் இந்த மூன்றிலும் பிரம்மாண்டங்களின் உச்சம்.

wix.to/tMCpDFI?ref=2_… ImageImageImageImage
தராசுரத்தில்-3/5
விரல் அளவு இடத்தினுள் ஒரு கருத்தை பிரம்மாண்டமாக பதிய வைத்திருக்கும் சிலை வடிப்பாளனின் கலைநுணுக்கங்கள் உலகில் வேறு எங்கும் காணாதவை.
ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளை பார்த்து வாய்ப்பிளக்கும் இந்த தலைமுறை கண்டிப்பாக பார்க்க வேண்டியவை நம் மண்ணில் ஏராளம். ImageImageImageImage
Read 11 tweets
30 Oct
வணக்கம்.
பாலஸ்தீனம் 1947 முன்பு 100% நிலப்பகுதியாக இருந்து,பின்பு இஸ்ரேலால் 1947 - ல் ஆக்கிரமிக்கப்பட்டு 2020 ஆண்டு 15% நிலப்பதியே அங்கு இருக்கிறது!அது போல்,ஈழம் எல்லாளன் காலம் கி.மு 130 ஆண்டில 100% இருந்த தமிழர் நிலப்பகுதி தற்போது 20%வீதமே(படம் பார்க்க)!
wix.to/CcDzDFA
பாலஸ்தீனம் 1947-2/5
படிபாபடியாக நாம் இழந்ந பறி கொடுத்த பகுதிகள் இன்று, சிங்கள பௌத்த பிரதேசம்!2009 இறுதி போரில் பல இலட்சம் தமிழர்கள் கொள்ளப்பட்டு நிலப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இன சுத்திகரிப்பு மூலம் 2012 ஆண்டு ஈழத்தில் தமிர்களின் மக்கள் தொகையை காட்டி ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள்!
பாலஸ்தீனம் 1947-3/5
(கடைசி வரைபடம்).ஈழத்தில் தமிழர்கள் கிழக்கை ஏற்கனவே பறி கொடுத்து விட்டோம்!தற்போது,ஈழத்தில் தமிழர் பிரதேசம் எஞ்சி இருப்பது வெறும் 15% நிலப்பகுதியே!பாலஸதீனர்களுக்கு நடந்த அதே ஆக்கிரமிப்புதான் இங்கும் நடக்கிறது!உலகில் வாழும் 10 அதிகமான தமிழர்களே!
Read 5 tweets
29 Oct
வணக்கம்.
அசோகர் தனது 99 சகோதரர்களை கொன்று விட்டு அரசன் ஆனார் என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தேன். அது உண்மையா?
இது உண்மை என்று வரலாற்றில் சில பதிவுகள் சொல்கின்றன. இதனால்தான் அவர் தனது ஆட்சிப் பீடத்தில் நன்றாக அமர நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

wix.to/U8C9DE8
அசோகர் தனது-2/5
ஒரேயொரு சகோதரரை மட்டும் விட்டு விட்டார். அவரால் தனக்கு எந்தவிதப் பாதிப்புமில்லை என்று அசோகர் நினைத்திருக்கலாம்.
மனிதன் தவறு செய்வது, பின்னர் தன்னைச் சரி செய்து கொள்வது என்பதெல்லாம் வழக்கமானதுதோனே..? அக்காலத்தில் அரசுரிமைக்காகச் சண்டை போட்டுக் கொள்வது,
அசோகர் தனது-3/5
உடன்பிறந்தவர்களைக் கொல்வது, மாமனார்களைக் கொல்வது போன்றவை வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்கள்தானே..?? அசோகர் செய்ததை சரி என்று சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால், அதை வைத்து மட்டும் அசோகரை எடை போட வேண்டியதில்லை.

wix.to/U8C9DE8
Read 5 tweets
28 Oct
வணக்கம்.
நம் முன்னோர்கள் கையாண்ட போர் வியூகங்கள்!சோழர்,பாண்டியர்களின் வரலாறு என்பது முற்கால மற்றும் பிற்கால மிக நீண்ட வரலாற்றினை கொண்டது!கி.மு 6 நூற்றாண்டு முதல் தொடங்குகிறது.
படத்தில்:1-மீன் வியூகம்,2-சக்கர வியூகம்,3-மின்னல் வடிவ வியூகம்.
4-வண்டி சக்கர வியூகம். ImageImageImageImage
நம் முன்னோர்கள்-2/5
மாமன்னர் முதல் சிற்றரசர் வரை போர்களில் பல வகையான வியூகங்களை கொண்டே எதிரிகளை வெற்றி கொண்டனர்!இந்த வியூகங்களே கிமு 5-ம் நூற்றாணடில் நடந்த மகாபாரப் போரிலும் பிரதானமாக பயன்படுத்தப்பட்டது.
5-மண்டல வியூகம்.
6-பறவை வியூகம்.
7-அரைவட்ட வியூகம்.

wix.to/HMAEDE0 ImageImageImage
நம் முன்னோர்கள்-3/5
என் ஆய்வில் அறிந்த சங்ககால வியூகங்களை தந்தள்ளேன்.இந்த வியூகங்களின் அடிப்படையாக கொண்டே ஈழப் போரில் கூட ஈழப் போராளிகளால் பயன்படுத்தப்பட்டது."பெடியல் இலங்கை இராணுவத்தை box(பெட்டி வடிவ வியூகம்)மற்றும் அரைவட்ட வியூகம் அடித்து வெற்றி கொண்ட வரலாறு நிறயவே உண்டு! ImageImage
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!