myck Profile picture
3 Nov, 12 tweets, 2 min read
001#நேர்மறையும்_எதிர்மறையும்

**************************************************

ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் போதைப் பழக்கமுள்ளவன் எப்போதும் குடும்பத்தில் இருப்பவர்களை நையப்புடைத்து - மிரட்டி - பணம் வாங்கிக் குடித்துக் கொண்டே இருப்பான்.
002பிறருக்குத் தொல்லைகொடுத்து இன்பம் பெறும் ஸாடிஸ்ட் அவன்.

மற்றவன் நல்லவனாக சமூகத்தில் மதிக்கப்படுபவனாக - நல்ல குடும்பத்தலைவனாக இருந்தான். அருமையாக குடும்பத்தைப் பராமரித்து வந்தான். ஊரில் உள்ளவர்களுக்கு வியப்பு.
003"ஒரே தகப்பனுக்குப் பிறந்த ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இரு குழந்தைகளில் ஒன்று ஊர்போற்றும் நல்லவனாகவும், மற்றொன்று ஊர் தூற்றும் கொடியவனாகவும் இருக்கக் காரணம் என்ன", என ஊரில் இருப்பவர்களுக்கு வியப்பு.
004ஒரு பெரியவர் குடிகாரமகனையும், நல்லகுடும்பவானாகி வனையும் இப்படிக்கேட்டார். "உன் நடத்தைக்கு யாரப்பா காரணம்?".

இருவரும் ஒரே பதில்தான் சொன்னார்கள், "என்னுடைய நடத்தைக்குக் காரணம் என்னுடைய அப்பாதான்".
005"உன் அப்பா என்ன செய்தார்", என்று குடிகாரனைக் கேட்டபோது சொன்னான். "அவர் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பகலிலும், இரவுகளிலும் குடித்துக் கொண்டே இருப்பார். குடும்பத்தினரைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பார்.
006அடிகளுக்குப் பஞ்சமில்லை. அவரின் மகனாகிய நான் வேறு எப்படி இருப்பேன். அதனாலே நானும் குடிகாரனாகிவிட்டேன்.மோசமான தகப்பனின் மகனான நான் மோசமாகிவிட்டேன். என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம்", என்றான்.
007"உன் அப்பா என்ன செய்தார்", என்று நற்கணவானைக் கேட்டபோது சொன்னான். "அவர் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பகலிலும், இரவுகளிலும் குடித்துக் கொண்டே இருப்பார். குடும்பத்தினரைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பார். அடிகளுக்குப் பஞ்சமில்லை.
008அதனாலே நான் குடிக்ககூடாது, குடிகாரனாகிவிடக்கூடாது. மோசமான தகப்பனின் மகனான நான் மோசக்காரனாக இராமல் - என்னுடைய பிள்ளைகளுக்கு நல்லவனாக இருக்க எண்ணினேன். என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம்", என்றான்.
009எந்த ஒருவரின் நடத்தையிலும் நேர்மறை நிகழ்வுகளும் உண்டு. எதிர்மறை நிகழ்வுகளும் உண்டு. அன்னப்பறவை போல நேர்மறையான கருத்துக்களையே நாம் எதிர்நோக்குவோமாக.
10பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
11தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!
12முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
#அன்பானஇனியநற்காலைப்பொழுதுவணக்கம்நட்பே.

#வாழ்க_வளமுடன்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with myck

myck Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @smbsultan

3 Nov
001உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

"சார் பின்னாடி போய் உட்காருங்க.
002நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது"....

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!!
003பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!

சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...
Read 9 tweets
2 Nov
001இவர்களை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்! ஒரு அப்பா,மகள்!!

இவர்கள் வாழ்க்கையில் ஒரு கதை இருக்கிறது.
கதைக்குள் போவோமா?
சுமார் 22 வருடங்கள் பின்னோக்கி போக வேண்டும்.
002அஸ்ஸாம் மாநிலத்தில், கிராமம் என்றும் சொல்ல முடியாது. நகரம் என்றும் சொல்ல முடியாத ஒரு சிற்றூர். அங்கே சோபரன் என்ற பெயருடைய காய்கறி தள்ளு வண்டி வியாபாரி, தனிக்கட்டை.
அன்றன்றைக்கு கிடைப்பதை வைத்து அவருடைய வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.பெரிய கனவெல்லாம் கிடையாது.
003ஒரு நாள் அந்தி சாயும் நேரம், வியாபாரம் முடித்து தன் குடிசைக்கு வந்து கொண்டிருக்கிறார். பக்கத்து புதர் ஒன்றிலிருந்து ஏதோ சத்தம்,போய் பார்க்கிறார். புதரில் ஒரு அழகான பச்சிளம் பெண் குழந்தை. சுற்றும் முற்றும் பார்க்கிறார். ஆள் அரவமே இல்லை.
Read 12 tweets
2 Nov
001தினம் ஒரு குட்டிக்கதை .

ஒரு விமானத்தில்,,, தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம்.......,

" தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை"....,

அந்த சிறுமியிடம் கேட்டார்,,..!!
002"உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா".....? என்றார்.

படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,

"என்ன மாதிரி கேள்விகள்".....?
என்று சிறுமி கேட்டாள்.....!!

"கடவுள் பற்றியது".....!!
003ஆனால்...,
💛கடவுள்,
💛நரகம்,
💛சொர்க்கம்,
💛புண்ணியம்,
💛பாவம் என
எதுவும் கிடையாது....!!

"உடலோடு இருக்கும் வரை உயிர் "......!!
"இறந்த பிறகு என்ன"......?

தெரியுமா என்றார்....!!
Read 10 tweets
1 Nov
001இறந்துவிட்டான் சேகர்.....
ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு தான்.....
இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர் சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான்.
002சித்ரகுப்தன் : சொர்க்கத்திற்குள் போகணும்னா நீங்க ஒரு வார்த்தைக்கு spelling சொல்லணும்.
சேகர் : சாமி... என்ன வார்த்தைங்க ?
சித்ரகுப்தன் : லவ்
சேகர் : L O V E
சித்ரகுப்தன்: சரியான விடை உள்ளே வாங்க.
சேகரையும் கூட்டிக்கொண்டு உள்ளே போகும்போது சித்ரகுப்தனின் போன் ரிங் அடித்தது?..
003சித்ரகுப்தன் : கடவுள் என்ன ஏதோவொரு காரியத்திற்காக அர்ஜென்டா கூப்டுகிறார்....நான் திரும்பிவரும் வரை நீ இந்த கேட்டுக்கு காவல் நிற்க வேண்டும்
. .
சேகர் : சரிங்க சாமி !!
சித்ரகுப்தன் : நான் திரும்பி வருவதற்குள் யாராவது வந்தால் இதே கேள்வியை
Read 8 tweets
1 Nov
001🐦 குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு
சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது

இலையுதிர்கால இறுதிக் கட்டம்
நெருங்கியபோது

மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமாயின

ஆனால்
🐦002இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடாதெனத்
தீர்மானித்துவிட்டது

குளிர்காலம் வந்தது

குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குறுவி கலங்கிவிட்டது

கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது

அந்த குளிரின் கடுமையில் பறந்தால்
🐦003மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது

அதன் இறக்கைகளில் பனி படர்ந்து

அதனை பறக்கவிடாமல் செய்ததோடு

அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது

அந்த முற்றத்தில் சென்று
கொண்டிருந்த பசு ஒன்று
Read 6 tweets
1 Nov
001தினம் ஒரு குட்டிக்கதை .

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.
002மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.
003குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!