*மின்வாரிய தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்! – #சீமான்_வலியுறுத்தல்



தமிழக அரசின் மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை, காலி பணியிடங்களை நிரப்புதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி - 1/10
நீண்ட நாட்களாகப் போராடிவரும் நிலையில் அரசு அவர்களது கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாது அலட்சியம் செய்துவருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

புயல், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட காலங்களிலும், தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், இரவுப்பகல் கண் துஞ்சாது கடமை - 2/10
தவறாது அர்ப்பணிப்பு உணர்வோடு மக்கள் பணியாற்றிய மின்வாரிய ஊழியர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக அரசிடம் கையேந்தி நிற்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

மின்சாரத்துறை முற்று முழுதாகத் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுவிடுமோ என்ற மின்சார வாரிய ஊழியர்களின் அச்சம் மிகமிக - 3/10
நியாயமானது. உப்பூர், உடன்குடி, எண்ணூர் உள்ளிட்ட புதிய மின் உற்பத்தித் திட்டங்களில் பணியாற்றி வந்த பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்துவிட்டு அந்தப் பதவி இடங்கள் நீக்கப்பட்டுள்ளன. துணை மின் நிலையங்களை, ஓய்வுபெற்ற மின்வாரியப் பணியாளர்களைப் கொண்டு இயக்க நடவடிக்கை - 4/10
எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கள்ளக்குறிச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் 3 இடங்களில் துணை மின் நிலையங்களை இயக்கவும், பராமரிக்கவும் 2 ஆண்டுகளுக்குத் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உயர்அழுத்த மின் பாதையைப் பராமரிக்கத் தனியாரிடம் ஒப்பந்தப் புள்ளிக் - 5/10
கோரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இவை யாவுமே மின்சாரத்துறையை மெல்ல மெல்ல தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கான முன்முயற்சியாகும். பலகோடி மதிப்புள்ள துணை மின் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பது அரசுத்துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் பறிபோக வாய்பளிப்பதுடன் கட்டுப்பாடற்ற மின்கட்டண - 6/10
உயர்வுக்கும் வழிவகுக்கும்

எனவே மின்வாரிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்வைக்ககூடிய கோரிக்கைகளான தமிழக அரசின் மின் உற்பத்தித் திட்டங்கள், மின் பகிர்மானம் மற்றும் பராமரிப்பில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.
மேலும் மின்வாரியத்தில் - 7/10
காலியாக உள்ள 42000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப ஆவணச் செய்ய வேண்டும் எனவும், மின்வாரிய ஊழியர்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பணிக்கால அடிப்படையிலான ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம், விடுமுறை நாட்களுக்கான ஊதியம் ஆகியவற்றை இனியும் காலதாமதம் செய்யாமல் - 8/10
உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தோடு, தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் களப்பணியாளர்களாகப் பணிபுரிந்து வரும் ஏறக்குறைய 10000 ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு ஏற்கனவே அரசு ஒப்புதல் - 9/10
அளித்தபடி ஒருநாள் ஊதியமாக ரூ.350-ம், விழாக்கால ஊக்கத்தொகையையும் முறையாக வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

#செந்தமிழன்_சீமான்
#தலைமை_ஒருங்கிணைப்பாளர்
#நாம்_தமிழர்_கட்சி - 10/10
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

6 Nov
🇰🇬🇰🇬🇰🇬 #நாம்_தமிழர்_கட்சி 🇰🇬🇰🇬🇰🇬
🇰🇬🇰🇬 #சிவகங்கை_மாவட்டம் 🇰🇬🇰🇬
#காரைக்குடி_சட்டமன்றத்_தொகுதி

இன்று 05-11-2020 வியாழக்கிழமை,
காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட,_
டி டி நகர்,
சர்ச் 5வது வீதியில்,
நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 80 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர் 1/7
இவ்வாறு வசித்துவரும் மக்கள் அவர்களின், இருப்பிடம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு ஆவணங்களான ரேசன் அட்டை முதல் ஆதார் அட்டை வரை அனைத்தும் பெற்றிருக்கும் நிலையிலும்கூட நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடமெனும் அடிப்படையில், வீட்டு ரசீது வழங்க மறுத்ததோடு அவர்களுக்கு - 2/7
அதனால் கிடைக்கக்கூடிய மின்சார வசதி முற்றிலும பெற இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையை அறிந்து நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட முயற்சியில் முதற்கட்டமாக ஒரு குடும்பத்திற்கு மட்டும் மின்வசதி பெற்றிருந்த நிலையில் இன்று நகராட்சி நிர்வாகத்தின் தூண்டுதலின்பேரில் - மின்சார - 3/7 Image
Read 8 tweets
5 Nov
இன மானம் பார்த்த, இனமானம் காத்த புலிக்கொடி பறக்கட்டும் 🔥🔥🔥
இனியேனும் எம்மண்ணில்

#தமிழ்_குடி_சிறக்கட்டும் 🔥🔥🔥 - 1/3
இன மானம் பார்த்த, இனமானம் காத்த புலிக்கொடி பறக்கட்டும் 🔥🔥🔥
இனியேனும் எம்மண்ணில்

#தமிழ்_குடி_சிறக்கட்டும் 🔥🔥🔥 - 2/3
இன மானம் பார்த்த, இனமானம் காத்த புலிக்கொடி பறக்கட்டும் 🔥🔥🔥
இனியேனும் எம்மண்ணில்

#தமிழ்_குடி_சிறக்கட்டும் 🔥🔥🔥 - 3/3
Read 4 tweets
5 Nov
👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈

#கனிம_வளப்_பாதுகாப்பு_பகுதி 1

#மக்களுக்கே_சொந்தம்

ஒன்றுபட்ட சென்னை ராஜதானியாக இருந்த தமிழகம் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் என மொழிவாரி மாநிலமாக பிரித்த போது நமது நீர்வளங்கள் பறிபோனது. மீதமிருக்கும் நிலவளத்தை - 1/4
நாசகார நச்சு தொழிற்சாலைகள் சீரழித்து வருகின்றன. பொன் விளையும் பூமியாக இருந்த தமிழகத்தை நஞ்சு விளையும் பூமியாக மாற திராவிட கட்சிகளின் அக்கறையற்ற ஆட்சி முறையே காரணம்!!!

இந்த மண்ணின் கனிம வளங்கள் அனைத்தும் மக்களுக்கே சொந்தம். அதை பணத்திற்காகவும் பெரும் கையூட்டிற்க்காகவும் - 2/4
தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்தது திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான்!!!
அரசே ஏற்று நடத்த வேண்டிய கனிமவள தொழிலை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்கள். அரசுக்கு வர வேண்டிய பல ஆயிரம் கோடிகளை தனியார் முதலாளிகளுக்கு தூக்கி கொடுத்ததும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான். இந்த - 3/4
Read 5 tweets
4 Nov
தமிழர்களே!! சங்கிகள்,பார்ப்பனர்களிடம் கோரிக்கை வைப்போம் :
முருகனுக்கு பூணூல் போட்டு வேல் சாத்தி யாத்திரை வழிபாடு மட்டும் போதுமா?
தீ மீதித்தல்,அலகு குத்துதல்,
ஆணி செருப்பில் நடத்தல்/கத்தி மீது நிற்பது,
காவடி எடுப்பது,தீச்சட்டி,பாத யாத்திரை செல்வது,
தலையில் தேங்காய் உடைத்து - 1/5
உடைத்து நேர்த்திக்கடன்
கிடா விருந்து படைத்தல் ,அலகு குத்தி பால் காவடி, சர்ப்பக் காவடி எல்லாம் தூக்கனுமே? நீங்க தயாரா?

ஒரு பார்ப்பனர்கள் (ஆரியன்) ஆவது தீ மீதித்தல்,அலகு குத்துதல்,
ஆணி செருப்பில் நடத்தல்/கத்தி மீது நிற்பது,
காவடி எடுப்பது,தீச்சட்டி,பாத யாத்திரை செல்வது - 2/5
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
கிடா விருந்து படைத்தல் ,அலகு குத்தி பால் காவடி, சர்ப்பக் காவடி எடுப்பது யாராவது தமிழர்கள் பார்த்தது உண்டா?

வேல் யாத்திரை செய்ய சொன்னீங்க சரி, ஏன் இந்தியா முழுவதும் என்று முழங்கவில்லை?வேல் தமிழர்களின் அடையாளம். இந்துக்களின் அடையாளமல்ல - 3/5
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!