அறிக்கை: *கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி மீதான மத்திய அரசின் ஒடுக்குமுறை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும்! – சீமான் எச்சரிக்கை* | நாம் தமிழர் கட்சி bit.ly/2IEtSCv

மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியத்தால் நடத்தப்படும் கேந்திரிய - 1/16
வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பதற்குக் கடும் விதிகளை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு வகுப்பிலுள்ள 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் கற்பிக்கப்படும் எனவும், அதுவும் பகுதிநேர ஆசிரியர்தான் நியமிக்கப்படுவார் எனவும், வாரத்திற்கு இரண்டு அல்லது - 2/16
மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் எனவும் தமிழ் கற்பதற்கு பல தடைகளைக் கொண்டு வந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது இது மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ் மீதும் தமிழர் மீதும் கொண்டுள்ள விரோதப்போக்கை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

விடுதலைபெற்ற இந்தியாவில் - 3/16
தமிழ்மொழிக்கு எதிரான நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் அரசுகள் தொடர்ந்து எடுத்து வந்ததுள்ளன. ஆனால், விடுதலைபெறுவதற்கு முன்பிருந்தே அந்நிய மொழி ஆதிக்கத்தைத் தமிழகம் எதிர்க்கத் தொடங்கி விட்டது. ஒவ்வொரு முறையும் தாய்த்தமிழுக்குத் தீங்கு நேரும் போதெல்லாம் தமிழகம் காட்டிய கடுமையான - 4/16
எதிர்வினையால் அவ்வப்போது மத்திய அரசு அடங்கிப்போனாலும், நீறுபூத்த நெருப்பாக கனன்று அவை மீண்டும் மீண்டும் தமிழர்களைச் சீண்டிப்பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. அதிலும், முந்தைய காங்கிரசு அரசைவிடப் பன்மடங்கு கூடுதலாகத் தமிழ்மொழி அழிப்பு வேலைகளில் நேரடியாகவும், மறைமுகவும் - 5/16
ஈடுபட்டுவருகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.

இந்தி நாள் கொண்டாடக் கட்டாயப்படுத்துவது, சமஸ்கிருத வார விழா எடுக்க வற்புறுத்துவது, செம்மொழிகள் வளர்ச்சிக்கான நிதியில் தமிழைவிட சம்ஸ்கிருதத்திற்கு 20 மடங்கு அதிகமான நிதியினை ஒதுக்கீடு செய்வது, மும்மொழிக் கொள்கையை மறைமுகமாகத் - 6/16
தமிழகத்தில் திணிக்க முயல்வது, மத்திய அரசு அதிகாரிகள் மூலம் மொழித்திணிப்பையும், இன விரோதத்தையும் தமிழர்கள் மீது வெளிப்படுத்துவது, தமிழக அதிகாரிகளுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்புவது எனத் தமிழ்மொழியை இழிவுப்படுத்தும் மத்திய அரசின் செயல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது - 7/16
அந்த வரிசையில் தற்போது தமிழ்நாட்டிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் தமிழ் குழந்தைகள் தாய்மொழியான தமிழைக் கற்பதற்குக் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது மோடி அரசு. இவையெல்லாம் தமிழ்ப்பிள்ளைகள் தாய்மொழிக் கற்பதைத் தடுத்து அவர்கள் மீது இந்தி மற்றும் - 8/16
சம்ஸ்கிருதத்தைத் திணிக்க முனையும் மத்திய அரசின் சதிச்செயலன்றி வேறில்லை.

தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களிடம் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்க விருப்பமா? என்ற கேள்வியைத் திட்டமிட்டு திணிக்கும் மத்திய அரசு, தமிழைக் கற்பிக்க மட்டும் - 9/16
மாணவர்களின் எண்ணிக்கையைக் கோருவது எவ்வகையில் நியாயமாகும்? எட்டாம் வகுப்பு வரை முழுக்க முழுக்கத் தாய்மொழி வழிக்கல்வி கற்பிக்கப்படுமெனப் புதிய கல்விக்கொள்கையில் அறிவித்த மத்திய அரசு, தற்போது கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தாய்மொழியான தமிழை ஒரு பாடமாகக் கற்பிக்கக்கூடக் கடும் - 10/ 16
நிபந்தனைகளை விதிப்பதும், அதுவுஆறாம் வகுப்பு முதலேதான் தமிழ் கற்பிக்கப்படும் என அறிவித்திருப்பதும் தற்சார்புப் பொருளாதாரக் கொள்கைபோல போல தாய்மொழிவழிக் கல்விக் கொள்கையும் மத்திய அரசின் மற்றுமொரு ஏமாற்றும் வேலை என்பதையே காட்டுகிறது. ஆனால், இதே கேந்திர வித்யாலயா பள்ளிகளில் - 11/16
சமஸ்கிருதம் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாயப்பாடமாகவும், 9 ஆம்வகு்பபு முதல் 12 ஆம் வகுப்பு வரை விருப்ப பாடமாகவும் உள்ளது. இவையெல்லாம் மேடைக்கு மேடை திருக்குறளையும், தமிழின் பெருமையும் பிரதமர் மோடி பேசுவதெல்லாம் தமிழர்களை ஏமாற்ற நடத்தும் நாடகம் என்பதையே - 12/16
உணர்த்துகிறது.
ஏற்கனவே, ஐம்பதாண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் தமிழ்நாட்டில் தமிழ் மாணவர்கள் தமிழ் வழியில் பயிலாமலேயே பட்டப்படிப்புவரை படிக்கும் இழிநிலையுள்ளது. மேலும் அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களிடமும் ஆங்கில வழிக்கல்வியைப் புகுத்தி - 13/16
தாய்மொழிக் வழிக்கல்வியே முற்றாக அற்றுபோகும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் தமிழர்கள், தமிழை ஒரு பாடமொழியாகக்கூடத் தமிழ்நாட்டில் படிக்க முடியாத ஒரு நிலையை உருவாக்க முயல்கிறது மத்திய அரசின் இந்த புதிய நிபந்தனைகள்.

ஆகவே, தமிழர்களின் பிறப்புரிமையான - 14/16
தாய்மொழிக் கல்வியைப் பெறுவதில் தடையை ஏற்படுத்தும் விதிகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பபெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இல்லையெனில், தமிழர்களின் கடுமையான எதிர்ப்பினைச் சந்திக்க நேரிட்டு, தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்குமென - 15/16
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

15 Nov
இன்றைய உறுப்பினர் சேர்கை நிகழ்வு 10 _ 1pm
இந்த வருடம் 2020 முதல் 5 மாதம் ஜனவரி முதல் ஜூன் வரை இணைந்த புது உறவுகள் 1270.
அடுத்த 5 மாதம் ஜுலை முதல் அக்டோபர் வரை இணைத்த உறவுகள் 3992.

அதற்காக வேலை செய்த அனைத்து உறுப்பினர்கள், தனிநபர் முன்னெடுப்பாளர்கள், அனைத்து இதர - 1/3 Image
பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகளுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

வரும் தேர்தலை கருத்தில் கொண்டு நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் மேலான ஆதரவை நமது தலைமை அறிவித்து இருக்கும் வேட்பாளர்கள் பொறுப்பாளர்கள் - 2/3 Image
அனைவருடனும் இணைந்து முன்னெடுத்து தமிழ் தேசிய அரசியல் களத்தை வென்று முடிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

#நாம்_தமிழர்_கட்சி தமிழர்
#குமரி_மாவட்டம் - 3/3 Image
Read 4 tweets
15 Nov
*மனவலியுடன் நீண்ட பதிவு*
பொருத்துகொள்ளுங்கள் உறவுகளே...
நாம் தமிழர் அரசியல் பயணத்தை வேடிக்கை பார்க்கும் என் உறவுகளே!
நண்பர்களே!!
நீங்கள் கை கொடுக்கவில்லையென்றாலும்கூட சிறிது விரலையாவது கொடுங்கள்...
உயரைகொடுக்கவேண்டாம் சிறிது உணர்வை கொடுங்கள்..
இரத்தம்கூட கொடுக்க வேண்டாம் - 1/4
கொஞ்சம் பித்தம் தெளிந்து நில்லுங்கள்...
காசுக்காக நிற்க்காமல் நல்ல கருத்தியலுக்காக நில்லுங்கள்...
பணத்திற்காக நிற்க்காமல் தமிழர் இனத்திற்க்காக நில்லுங்கள்...
ஓட்டை விற்க்க நிற்க்காமல் தமிழர் நாட்டை விற்ப்பதை தடுக்க நில்லுங்கள்...
ஓட்டுக்காக நிற்க்கமல் தமிழர் நாட்டுக்காக - 2/4
நில்லுங்கள்...
வாக்கை விற்க்க நிற்க்காமல் நல்ல வாழ்க்கையை பெறுவதற்க்காக நில்லுங்கள்....
மதத்திற்காக நிற்க்காமல் தமிழர் மண்ணிற்காக நில்லுங்கள்...
சாமிக்காக நிற்க்காமல் பூமிக்காக நில்லுங்கள்....
போதைகளுக்காக நிற்க்காமல் நல்ல பாதைகளுக்காக நில்லுங்கள் ....
நாம் தமிழர் - 3/4
Read 5 tweets
13 Nov
What is the difference between an Ordinary Thief (OT) and a Political Thief (PT)?...

1.The #Ordinary_Thief steals your money,
bag,
watch,
gold chain etc.
But,
The #Political_Thief steals your future,
career,
education,
health and business!!! - 1/3
2. The hilarious part is: ..
The #Ordinary_Thief will choose whom to rob.
But, you yourself choose the #Political_Thief to rob you.

3. The most ironic one: ..
Police will chase and nab the #Ordinary_Thief.

But,
Police will look after and protect the #Political_Thief!!! - 2/3
That’s the travesty and irony of our current society!
And,
we blindly say we are not blind!!!

4. The stupid part of the whole issue is that we insult and fight the #Ordinary_Thief but we Fight each other for the #Political_Thief - 3/3
Read 4 tweets
12 Nov
தமிழர் அல்லாதோர் இங்கு வசதியாக வாழ்வதற்கும் ஆள்வதற்கும் உருவாக்கப்பட்ட பெயர் தான் #திராவிடம்

இங்கு தன்னை திராவிடர் என்று சொல்லிக்கொள்ளும் எவரும் அவர்கள் சொந்த மாநிலத்தில் தன்னை திராவிடன் என்று சொல்லிக்கொள்வதில்லை...

தமிழர்களை முட்டாளாக்கி பிழைப்பு நடத்துவதாலேயே - 1/3
#திருட்டு_திராவிடம் என்கிறோம்..

நம் மொழி காக்க, இனம் காக்க, இயற்கை வளங்களை காக்க, தமிழர் வழிபாட்டு முறையை மீட்டெடுக்க, நமக்கான அரசியல் அதிகாரத்தை நாமே உருவாக்க ஒன்றிணைவோம் தமிழராக...

சாதியாக, மதமாக நின்றால் பிளவுபடுத்தப்படுவோம்,
இனமாக நின்றால் வலிமைபெருவோம் என்பதை - 2/3
கருத்தில் கொண்டு சாதி,மதம் கடந்து தமிழர்களாக ஒன்றிணைவோம்.....

பிறமாநிலங்களை போல் இங்கு எவரும் வரலாம் வாழலாம் ஆனால் ஆள்வது தமிழராகா மட்டுமே இருக்க வேண்டும்.

இனம் ஒன்றாவோம்!!!
இலக்கை வென்றாவோம்!!!
#நாம்_தமிழர் 💪💪💪 - 3/3
Read 4 tweets
12 Nov
அந்த வடுக தலைவரின் ஆட்சியில் சிறப்பான தமிழர் அடையாள கட்டடங்களை, கல்வி நிறுவனங்களை எல்லாம் வடுகர்கள் பெயர்களை வைத்து மாற்றிக் கொண்டு வந்தார்.

இந்த அடாத செயலைக் கண்டித்து எந்த ஒரு தமிழர் தலைவனும், தமிழ் அறிஞனும் அன்று தனது சுட்டுவிரலைக் கூட நீட்டவில்லை - 1/3
அப்போது தனியொரு மனிதனாக சென்னை முழுவதும் இதனை கண்டித்தும், புதிய தலைமை செயலகத்திற்கு ஒரு #தமிழன் பெயரையே வைக்க வேண்டும் எனவும் தனது சொந்த செலவில் ஒரு மாவீரனாக பெரிய பெரிய சுவரொட்டிகளை தனது பெயரிலேயே ஒட்டிய #பேராண்மைத்தமிழன்
திரு. மு.கிருஷ்ண பறையனார் - 2/3
அவர் யார் எவரென்று தெரியவில்லை. ஆனால் அவரை நேரடியாக சந்தித்து பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் - 3/3
Read 4 tweets
11 Nov
கோவை மாவட்டம் சிங்கை தொகுதிக்கு உட்பட்ட 84வது வார்டில் ஜீஎம் நகர்,கோட்டைபுதூர்,வைரம் நகர்,காந்தி நகர் சாக்கடை வசதிகள் குடிநீர் பிரச்சனை சாலைகள் குண்டும் குழியுமாக சேராக உள்ளது.அங்கு உள்ள சாக்கடைகள் சரி செய்யாததால் தொற்று நோய் பரவும் அவலம் இது தொடர்பாக மாநகராட்சியிலும் - 1/3
தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் அவர்களிடமும் முறையிட்டும் எந்தவித பலனும் இல்லை என்பதால் மக்களின் பிரச்சனைகளை கண்டு கொள்ளாத மாநகராட்சியை கண்டித்தும்,சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் அவர்களின் மெத்தன போக்கை கண்டித்தும் இன்று புதன் கிழமை காலை 10 மணிக்கு கண்டன - 2/3
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நாம்தமிழர் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
#தகவல்_தொழில்நுட்ப_பாசறை #கோவை_மாவட்டம் - 3/3
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!