#பருப்பு_சாதமும் #வெத்த_குழம்பும்

Odd-man out

This is only a small episode of a big story.

பயப்பட வேண்டாம். நான் எந்தவிதமான செய்முறை விளக்கமும் எழுத மாட்டேன்.

நான் ஒரு #சாப்பாட்டு_ராமனே தவிர #போஜன_நளமகராஜன் இல்லை

சமூகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்த கதை போல சொல்லப் போகிறேன்.
#யார்_மிகச்சிறந்த_பக்திமான் என்ற கதையில் நாரதரின் செருக்கை அழித்த திருமாலின் திருவிளையாடலை தற்போதைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் கொஞ்சம் மாற்றம் செய்து அதை I won't go to the temple என்ற தலைப்பில் Englishல் எழுதி இங்கே பதிவு செய்து இருந்தேன்.

ஒரே நாளில் இதைப்படித்து ரசித்தவர்கள்
300க்கும் மேற்பட்டோர். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் (Englishல் எழுதியதாலோ என்னவோ) தமிழர் அல்லாதவர்களும் படித்து நேர்மறை எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

சரி... அதற்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்?
அந்த கதையை படித்துவிட்டு திரு.ஶ்ரீதர் சீனிவாசன் @sridhar88839783 அவர்கள் "கதை நன்றாக உள்ளது. நோக்கத்தையும் தெளிவு படுத்தி உள்ளீர்கள். நடைமுறையில் மக்கள் அசிங்கமாக உள்ளார்கள். #உங்களையே_ஒருத்தரு_உற்றுப்பார்த்தால்_உங்களுக்கு_கஷ்டமாக_தான்_இருக்கும்" என்று அவரது ஆதங்கத்தை
வெளிப்படுத்தி இருந்தார்.

இதில் highlight செய்திருந்த வாசகத்தை படித்ததும் தான் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஞாபகம் வந்தது.

அந்த ஞாபகம் தான் இந்த கதை.

2010ம் ஆண்டு ஆவணி மாதம். அன்று அமாவாசை தினம்.

என் பால்ய சிநேகிதன் (Late) Ignatius Deepamன் மகள் Claraவுக்கு சென்னை சாந்தோம்
சர்ச்சில் திருமணம்.

இந்த க்ளாரா பிறந்ததிலிருந்தே அவர்கள் வீட்டில் இருந்ததை விட எங்கள் #ஆத்தில் (அகத்தில்) (I've given this to show that my friend & myself followed different religions - obviously) அதிகநேரம் இருப்பாள்.

கிட்டத்தட்ட அவளுக்கு ஒரு வயது இருந்தபோது அவளுக்கு எங்கள்
வீட்டில் என் மனைவி பருப்பு சாதம் மையமாக பிசைந்து ஊட்டி விடுவார். நாளாக நாளாக அந்த க்ளாரா அவர்கள் வீட்டு சமையலை விட எங்கள் வீட்டு சமையலையே விரும்பி சாப்பிடுவாள்.

இதனால்... என் நண்பனின் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக அசைவ உணவுகளை தவிர்த்து அவளுக்கு ஐந்து வயதான போது முழுமையான சைவ
உணவிற்கு மனப்பூர்வமாக மாறி விட்டனர்.

அதன்பின் எனக்கு என் மகள் பிறந்த பின்னரும் க்ளாரா என் மகளுக்கு அக்கா போன்றே இருந்தாள். இன்றும் அப்படித்தான் இருக்கிறாள்.

அந்த காலத்தில் நம் வீட்டில் குழந்தைகளோடு விளையாடும் #கிச்சு_கிச்சு விளையாட்டு...
குழந்தையின் உள்ளங்கையை பிடித்து ... அதில்...

சாதம் போட்டு...
நெய் ஊத்தி...
பருப்பு போட்டு...
நன்னா பெசஞ்சு...
காக்காவுக்கு ஒரு வாய்...
உனக்கொரு வாய்...
எனக்கொரு வாய்...
அம்மாக்கு ஒரு வாய்...
அப்பாக்கு ஒரு வாய்...
தாத்தாவுக்கு ஒரு வாய்...
பாட்டிக்கு ஒரு வாய்....
கையை நன்னா
அலம்பிட்டு...
நண்டூறுது... நரியூறுது... நண்டூறுது... நரியூறுது... என்று கிச்சு கிச்சு மூட்டும் போது குழந்தைகளின் குதூகலச் சிரிப்பு மிகவும் ஏகாந்தமானது.

Enough of flashback என்று நினைக்கிறேன்.

Coming to the crux of the matter.

அன்று அமாவாசை என்பதால் காலையிலேயே மைலாப்பூர்
சித்ரகுளம் அருகே உள்ள சங்கர மடத்திற்கு சென்று அமாவாசை தர்ப்பணம் மற்றும் ப்ரம்மயக்ஞம் முடித்துவிட்டு ஆத்திற்கு வந்த போது...

என் மனைவி... என் நண்பன் மகள் க்ளாராவின் திருமணத்திற்கு செல்ல தயாராக இருந்தார்.

அதுமட்டுமில்லை... முகூர்த்த நேரம் நெருங்கி விட்டதால் உடனே கிளம்ப வேண்டும்
என்று என்னை அவசரப் படுத்தினாள்.

சரியென்று நானும் என் மனைவி கொடுத்த சட்டையை போட்டு கொண்டு அவளையும் அழைத்து கொண்டு சாந்தோம் சர்ச் சென்றேன்.

எதிர்புறம் இருந்த சிறிய மண்டபத்தில் தான் திருமணம். ஆனால் அதற்கு முன் சாந்தோம் main churchல் அவர்கள் மத சடங்குகள் நடைபெற இருந்தன.
நானும் என் மனைவியும் வந்த பிறகு தான் எந்தவொரு சடங்கும் நடக்க வேண்டும் என்று க்ளாரா மட்டுமின்றி அவள் அம்மாவும் (2008ல் என் நண்பன் ஒரு விபத்தில் காலமாகிவிட்டார்) உறுதியாக இருந்தார்கள் போலிருந்தது.

அதனால் தான் எங்கள் வருகைக்காக பலரிடம் இருந்து phonecalls வந்த வண்ணம் இருந்தது என்று
என் மனைவி சொன்னதால் உடனடியாக சென்றோம்.

மண்டபத்தை அடைந்தபோது க்ளாராவின் சிநேகிதி ஒருத்தி எங்களை அழைத்து கொண்டு சாலையை கடந்து சர்ச்சுக்குள் அழைத்து சென்றாள்

அங்கிருந்த நீளமான பெஞ்ச்களில் எல்லோரும் உட்கார்ந்தது போக பலர் நின்று கொண்டும் இருந்தனர்.

எங்களை அழைத்து கொண்டு அந்த
க்ளாராவின் சிநேகிதி திருமண சடங்குகளுக்கு தயாராக இருந்த க்ளாரா அமர்ந்திருந்த முதல் வரிசையை நோக்கி எங்களை அழைத்து கொண்டு போனாள்.

அப்படிப் போகும் போது ஏதோ ஒன்று எனக்கு கொஞ்சம் நெருடலாகவே தோன்றியது. அங்கிருந்த எல்லோரும் எங்களையே... குறிப்பாக... என்னையே பார்த்த வண்ணம்... ஏதோ
தங்களுக்குள் ரகசியமாக பேசிக் கொண்டனர்.

எனக்கு என்ன என்று சொல்லத் தெரியவில்லை. சங்கடமாகவும் இருந்தது.

அதற்குள் திருமணத்தை நடத்துவதற்கு பாதிரியார் ஒருவரும் உள்ளிருந்து வந்தார்.

அதற்குள் நாங்களும் க்ளாராவை நெருங்கி விட்டோம்.

அந்த பாதிரியார் எங்களை ஒருமுறை ஏற இறங்க பார்த்தார்.
கண்களில் நிறைய ஆச்சரியம் இருந்தது.

க்ளாரா அந்த பாதிரியாரிடம் எங்களை அறிமுகம் செய்து வைத்தாள்.

Father, they're my foster parents. I want all our traditions to take place in their presence. That's why I'd to keep you all waiting. Sorry Father என்றாள்.

சங்கடம் ஜாஸ்தி ஆயிற்று.
எங்களை அறிமுகப்படுத்தியதை பார்த்த கல்யாண மாப்பிள்ளை எங்கள் அருகே வந்து என்னிடம், "அப்பா என்னையும் ஆசிர்வாதம் பண்ணுங்க" என்று சொல்லியபடி சாஷ்டாங்கமாக வீழ்ந்து எங்களை நமஸ்கரித்தான்.

I felt awkward & self-conscious. இருந்தாலும் டக்கென்று சுதாரித்து கொண்டு மனதார அவனை
#தீர்க_ஆயூஷ்மான்_பவ என்று வாழ்த்தினேன்.

ஒரு அரைமணி நேரம் அவர்கள் சம்பிரதாயப்படி சடங்குகள் நடைபெற்று முடிவில் மோதிரம் மாற்றி கொண்டனர்.

மறுபடியும் தம்பதி சமேதராக எங்கள் காலில் விழுந்து நமஸ்கரித்தனர்

இந்த முறை சுற்றியுள்ளவரை மறந்து விட்டு எங்களோடு மூத்த பெண்(ணான) க்ளாராவையும்
எங்கள் மூத்த மாப்பிள்ளையையும் அக்ஷதை தூவி மனதார ஆசிர்வதித்தோம்.

இப்போதும் மக்களின் பார்வைகள் எங்கள் மீது தான் இருந்தது.

அப்போது க்ளாரா, "அப்பா... வாப்பா... எதிர்ல மண்டபத்துக்கு போலாம்" என்று சொல்லி எங்களை கையோடு அழைத்து சென்றாள்

அடுத்தது மண்டபத்தில் சாப்பாடு தான்
என்று நினைத்தேன். ஆனால் அங்கே நான் எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கிருந்த மேடையில் நடுவில் ஒரு இருவர் அமரும் reception chair போடப்பட்டிருந்தது.

க்ளாரா எங்களை அழைத்து சென்று அந்த chairல் உட்கார வைத்தாள்.
அதற்குள் க்ளாராவின் அம்மா என்னிடம் வந்து, "அண்ணே... இப்போ தாலி கட்டும் வைபவம் நடக்க போகுது அண்ணே. அதனால் நீங்களும் அண்ணியும் சேர்ந்து க்ளாராவை கன்னிகாதானம் பண்ணனும்ணே" என்று சொல்லி அவளும் காலில் விழுந்து நமஸ்கரித்தாள்.

நான் சங்கடத்தின் உச்சத்தில் இருந்தேன். என் மனைவியை
பார்த்த போது அவள் தன் கண்களால் பச்சைக்கொடி காட்டினாள். சரி.... அவர்கள் சம்பிரதாயப்படி தாலி எடுத்து கொடுக்க வேண்டும் போல இருக்கு. செய்து விடலாமே என்று எண்ணியிருந்த போது, க்ளாரா என்னிடம், "அப்பா... நீங்களும் அம்மாவும் (என் மனைவி) இந்த chairல் சேர்ந்து உக்காருங்க.
என்னை உங்க மடியில் உட்கார வைத்து உங்கள் மகளாக என்னை கன்னிகாதானம் பண்ணனும்பா" என்று கேட்டாள்.

இது என்னை வெலவெலக்க செய்து விட்டது. என் மனைவி என் முழங்கையை பிடித்து பாந்தமாக அழுத்தினாள். அவளின் ஒப்புதலை தெரிந்து கொண்டதால்....
குன்னியூர் நாராயணஸ்வாமி ஐயரின் பேரனும் மன்னார்குடி சுந்தரம் ஐயரின் புத்ரனுமான ஶ்ரீனிவாச ஐயரின் வளர்ப்பு மகள் சௌபாக்யவதி. க்ளாரா (D/o. Ignatius Deepam & Jesintha Joseph)வை சுற்றமும் நட்பும் சூழ கன்னிகாதானம் செய்து கொடுத்தேன்.

இன்னும் முடியவில்லை... Climax இனிமேல் தான்
சந்தோஷ சூழ்நிலையில் திருமணத்தை நடத்தி கொடுத்து விட்டு நானும் என் மனைவியும் ஆத்திற்கு வந்தவுடன்... என் மனைவியிடம் கேட்டேன்:

"ருக்கு... அங்கே சர்ச்சிலும் சரி... மண்டபத்திலும் சரி... எல்லோரும் நம்மையே ஒரு மாதிரி பார்த்தாங்களே. நீ note பண்ணினாயா?"
அவங்க எல்லாரும் நம்பளை பார்க்கலை. உங்களைத் தான் பாத்தாங்க

என்னையா... என்னை எதுக்கு பாக்கணும்.

பின்ன... தர்ப்பணம் பண்ணின கையோட.... பஞ்சகச்சம் கட்டிண்டு... நெத்தியில பட்டை பட்டையா விபூதியை பூசிண்டு சர்ச்சுக்குள் போனா... எல்லாரும் அப்படித்தானே பாப்பாங்க....
அட.... இதுதான் காரணமா.... நான் என்னென்னவோ நெனச்சு... வீணாக... என்னோட BPயை ஜாஸ்தி பண்ணிகிட்டேனே

என்று என்னை நானே அலுத்து கொண்டேன்.

திரு.ஶ்ரீதர் சீனிவாசன் @sridhar88839783 அவர்களே இதுதான் நடந்தது.
மற்றவர்கள் நம்மை உற்று உற்று பார்ப்பது நாம் ஏதோ கொஞ்சம் வித்யாசமாக இருக்கிறோம் என்பதை புலப்படுத்தும்.

என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த உங்கள் பதிவிற்கு நன்றி

வாழ்க வளமுடன்
எல்லா நலமுடன்
இது ஒரு அனுபவத்தின் நீள்பதிவு.

@naturaize @VasaviNarayanan @par_the_nomad @Bhairavinachiya @iamSri_Sri @raaga31280 @aarjeekaykannan

& Others

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with srinivasan1904

srinivasan1904 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

28 Nov
ஒண்ணுமில்ல... சும்மா தான்

மனதோடு கடவுள் இருக்கிறானா என்று யோசித்ததின் விளைவு தான் இந்த பதிவு



சீனி... ஏன் படுத்தறே? ... இப்போ எதுக்கு மெட்ராஸ் போகணும்?

ரொம்ப 'போரா' இருக்கு. அதான்.... ஒண்ணுமில்ல... சும்மா மெட்ராஸ் போலாமானு...
ஒண்ணுமில்லே...ன்னா சும்மா இருக்க தான் இரேன்! இப்போ மெட்ராஸ்ல என்ன கொள்ள போறது?

ஊர் ஃபுல்லா மழையும் கொரானாவும் தான். மெனக்கெட்டு மெட்ராஸ் போய் வம்பை வெலைக்கு வாங்கிண்டு வரப்போறியா????

இல்லை... சும்மா தான்...
சீச்சி தாத்தா!.... எதுக்கு காலங்கார்த்தால குளிச்சிட்டு ரெடியா இருக்கே? இன்னிக்கு லீவு தானே?

ஒண்ணுமில்ல.... கொழந்த.. சும்மாதான்

அப்பா.... ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு... எதுக்கு ... அப்பா... சும்மா இருப்பா... படுத்தாதே.. கனமொடையா இப்போ என்ன மெட்ராஸ்ல?

ஒண்ணுமில்ல... சும்மா தான்
Read 9 tweets
28 Nov
நிலவில் அமெரிக்க கொடி எப்படி ஏற்றப்பட்டது மறைக்கப்பட்ட வரலாறு :

(ஆம்ஸ்ட்ராங் வீடு, அவரும் அவர் மனைவியும்)

ஆம்ஸ்ட்ராங் மனைவி - "ஏன்ங்க, நீங்க நிலாவுக்கு போய்ட்டு வர ரெம்ப நாளாகுமே, சாப்பாட்டுக்கு ப்ரட்டும்..ஜாமும் எடுத்து வச்சிரவா.?

ஆம்ஸ்ட்ராங் - "நம்மூர் ஃபுட் வேணாம், ....
கெட்டுப்போயிரும்.! எங்களுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, எக்காலமும் கெடாத புளியோதரை பொட்டலம் இருபது வருது.!!"

ஆ. மனைவி - "சைடிஷ்சுக்கு.?"

ஆம்ஸ்ட்ராங் - "அங்க வடை சுடுற பாட்டிக்கிட்ட, வடை வாங்குறதுக்கு காசு கொடுத்திருக்காங்க..! ,

ஆமா, எதுக்கு கயிறை நிலாவுக்கு துணிமணி
கொண்டுபோற என்னோட கட்டப்பையில வைக்கிற.?"

ஆ.மனைவி - " நிலாவுல நாளுநாள் தங்கப்போறீங்க.. அங்க குளிச்சிட்டு, தொவைச்ச துணியை காய போடுறதுக்கு கயிறு இருக்காதுல்ல அதான் கொடிக்கயிறு எடுத்து வைக்கிறேன்.."

ஆம்ஸ்ட்ராங் - "அப்ப சரி..அப்ப சரி.."
Read 7 tweets
27 Nov
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று செய்யும்

போன வருடம் ஒரு sentimentally emotional அனுபவம் எனக்கு ஏற்பட்டது.

நான் இப்போல்லாம் பெரும்பாலும் ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு போற போது (vice versa also)

#ஹரே_க்ருஷ்ண_ஹரே_க்ருஷ்ண
#க்ருஷ்ண_க்ருஷ்ண_ஹரே_ஹரே
#ஹரே_ராம_ஹரே_ராம
#ராம_ராம_ஹரே_ஹரே
என்று சொல்லி கொண்டே நடந்து செல்வது வழக்கம் (இது என் பெரிய அண்ணன் தீக்ஷை பெற்றவர் எனக்கு அறிவுறுத்தியது)

கொஞ்ச நாள் முன்னாடி அண்ணா ராமனின் அட்வைஸ் படி அந்த ஹரே க்ருஷ்ண மந்திரத்தை சொல்ல ஆரம்பிக்கும் முன் இந்த மந்திரத்தை இன்னாருக்கு dedicate பண்றேன்னு நினைச்சுண்டே சொல்லு.
அப்படி சொல்லும்போது நீ யாருக்கு டெடிகேட் பண்றயோ அவாளுக்கு அந்த புண்ணியம் போய் சேரும்.

இறந்தவர்களை நினைத்து சொன்னாலும் அந்த புண்ணியம் அந்த ஆத்மாவை போய் சேரும் என்று சொன்னான்.

அந்த மாதிரியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரை நினைத்து அந்த ஹரே க்ருஷ்ண மந்திரத்தை சொல்லி அவர்களுக்கு
Read 8 tweets
27 Nov
I Won’t Go To The Temple Again...

Just modified the Naradha Bhakthi story to the contemporary scene

A daughter went to her father and said... “I won't be going to temple anymore..”

The father said: “may I ask why?”
She said: “when I go there All I see is people on their mobile phones during service & bhajan, some are gossiping, some just are not living with integrity, they are all just hypocrites...”
Father became silent, and then said: “OK... can I ask you to do something for me before you make your final decision?”

She said: “Yes.. what's that?”

He said: “Please take a glass of water and walk around the temple 2 times; but you mustn’t let any water fall out the glass.”
Read 6 tweets
26 Nov
பிடித்தமையால் பகிர்ந்தது

*தப்புக்கும் தவறுக்கும்...*

தப்புக்கும் தவறுக்கும் இருக்கும்
வேறுபாடு புரியாததால் தான்

தப்புக்கான தண்டனையை தவறுக்கும்

தவறுக்கான மன்னிப்பை தப்புக்கும்

தப்புத் தப்பாய்த் தந்து

நாட்டில் தப்புக்களை
தாறுமாறாய் வளரவிட்டுக் கொண்டிருக்கிறோமா ?
நகத்தால் செய்து முடிக்க வேண்டியதை
கோடாலி கொண்டு பெயர்த்துக் கொண்டும்

கோடாலி கொண்டு வெட்டிச் சாய்க்கவேண்டியதை
நகத்தால் கீறிக் கொண்டும் இருக்கிறோமா ?

அதன் காரணமாகவே
நச்சு மரங்கள்இன்னும்
செழித்து வளர உரமிட்டுக் கொண்டிருக்கிறோமா ?

இல்லையெனில்
எங்கோ எவனோ ஒரு கயவன்
செய்துதொலைக்கும்
கயமைக்கு
அவனுக்கு எதிராய் ஒன்றுதிரளாது

கயமைக்கு எதிராய் கொதித் தெழாது
ஜாதி மதப் பூச்சுப் பூசி
நாட்டின் இறையாண்மைக்கு
ஊறு விளைவிப்போமா ?

இல்லையெனில்
நம்மை கொதி நிலையிலேயே
அன்றாடம் நிற்க வைத்து

போராட்டக் களத்தில் குதிக்க வைத்து
Read 5 tweets
26 Nov
மரணத்தை எண்ணி கலங்கிடும்.....



நம் அனுபவங்களை (நல்லனுபவமாக இருந்தாலும் வேறு அனுபவமாக இருந்தாலும்) பகிர்ந்து கொள்ள பரிந்துரைக்கும் கதை

அந்தகால ரங்காராவ் போன்ற ஆஜானுபாகுவான உடற்கட்டும் பெரிய மீசையும் கிரீடமும் கையில் கதாயுதமும் கொண்டு மூன்று கதவுகளும்
இறுக்கமாகப் பூட்டி இருந்தும் உள்ளே வந்ததை வைத்தே எனக்கு புரிந்து போயிற்று இவர் *"எமதர்மன்தான்"* என்று

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் எமன் புகுந்த வீடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.
இருந்தாலும் மரியாதை நிமித்தம் "வாங்க.... வாங்க... சௌக்யமா??? ... ஏன் இவ்வளவு லேட்??? ... நான் ரெடி போலாமா?" என்றேன்

எமன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்

"எத்தனை எத்தனை யுகங்களா எவர் எவர் உயிரையோ எடுத்திருக்கிறேன். இதுவரை யாரும் உன்போல நான் ரெடி போலாமா என யாருமே சொன்னதில்லை.
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!