அதிர்ந்து நின்றார் யுதிஷ்டிரர். மகாரௌரவம், கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம், அந்தகூபம்,கிருமி போஜனம் முதலான நரகக் காட்சிகளைக் கண்டு உறைந்து போனார் அவர்.
"அவலக் குரல்கள்,அதிபயங்கர தண்டனைகள்,சித்ரவதைகள் என்று நரகத்தின் கொடுமையைக் காணும் துர்பாக்கியம் எனக்கு வாய்த்தது எப்படி?
அதுவும் சொர்க்கம் செல்லும் வழியிலா இந்த அனுபவம் நேர வேண்டும்", மனம் வேதனையில் வாட, நரகத்தின் கொடுமையைக் காணமுடியாமல் கண்களை மூடிக்கொண்டார் யுதிஷ்டிரர்.
அப்போது "தருமபுத்திரா!" என்று எவரோ தன்னை அழைக்கும் குரல் கேட்டுக் கண்விழித்தார். எதிரில் எமதருமன்!
"தருமா! நீ செய்த பாவத்தின் காரணமாகவே நரகக் காட்சிகளை காண நேரிட்டது." எமதருமன் கூறியது கேட்டு ஆடிப்போனார் தர்மர். "கிருஷ்ணரின் வழியி்ல் தர்மத்தை சிரமேற்கொண்டு வாழ்ந்த நானா பாவம் செய்தேன்?” என்று கேட்டார். "ஆமாம்.உனது ஒரு வார்த்தையால் விளைந்த பாவம்" என்ற எமதருமர் தொடர்ந்தார்.
போர்களத்தில் ஆசார்யர் துரோணரை வீழ்த்த,நீ கூறிய சிறு பொய்யால் விளைந்த பாவம்". துரோணாச்சாரியரின் பெயரைக் கேட்டதும் தருமரின் கண்களில் தாரை தாரையாக நீர். அவரின் மனதில் அன்று நடந்த போர்க்களக் காட்சிகள்!
குருசேத்திரம்!

பிதாமகர் பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு கௌரவ சேனையின் தலைமையை ஏற்றிருந்தார் ஆசார்ய புருஷர் துரோணர். இவரது போர் வியூகங்களால் பாண்டவப் படைகள் சின்னாபின்னமாகின.
மாவீரன் பீமனின் போர்த்திறனும், நகுல-சகாதேவர்களின் வாள்வீச்சும் எடுபடவில்லை.
அவ்வளவு ஏன் வில்லாளி அர்ஜுனனே தன் ஆசார்யரை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடினான். ‘என்ன செய்யலாம்?’ என கலந்தாலோசித்த பாண்டவர்கள், பரந்தாமனைச் சரணடைந்தனர்.
திருவாய் மலர்ந்தார் கண்ணன்."உண்மைதான்" துரோணரை வீழ்த்துவது சாதாரணம் அல்ல.அவரிடமிருந்து இந்த பதிலை பாண்டவர்கள் எதிர்பார்க்கவில்லை.
பீஷ்மரையே வீழ்த்த வழிவகுத்தவர், துரோணர் விஷயத்தில் யோசிக்கிறாரே என்று யுதிஷ்டிரரின் கலக்கம் அதிகமானது.அவரின் முகவாட்டத்தை உணர்ந்த கண்ணன்,அருகில் வந்து ஆறுதலாக அவரின் தோளைப் பற்றினார்."நீங்கள் நினைத்தால் துரோணரை எளிதில் வீழ்த்த முடியும்"என்றார்.
”என்ன சொல்கிறாய் கிருஷ்ணா?என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்?” என வினவினார் யுதிஷ்டிரர்."சிறு பொய் ஒன்று உரைத்தால் போதும்.அசுவத்தாமா களத்தில் இறந்துவிட்டான் என்று துரோணரின் செவிகளில் விழும்படி கூற வேண்டும்"என்றார்.
”முகுந்தா இதற்கு பதில் என் உயிரை விடச்சொல்லி இருக்கலாம்",
என ஆவேசப்பட்ட யுதிஷ்டிரரை கூர்ந்து நோக்கினார் கண்ணன். "யுதிஷ்டிரரே!சில தருணங்களில்,முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.ஆசாரியர் உத்தமர்தான்.ஆனால் அவரது ஆதரவு அதர்மத்தின் பக்கம் அல்லவா? சூழ்ச்சியின் பிறப்பிடமான கௌரவர்களை சூழ்ச்சியால்தான் வெல்ல முடியும்"
”கண்ணா! நீ என்ன கூறினாலும் சரி,பொய்யுரைப்பதை என் மனம் ஏற்காது!” என திட்டவட்டமாகக் கூறிய யுதிஷ்டிரரை ஏறிட்ட கண்ணன், ”சரி மைத்துனரே! தாங்கள் பொய்யுரைக்க வேண்டாம். ஓர் உண்மையைச் சொன்னால் போதும்"என்று புன்னகைத்தார்.
யுதிஷ்டிரருக்கு குழப்பம்.
பீமனை அருகில் அழைத்த பகவான்,"மாளவ தேசத்து அரசனின் யானையை நீ வீழ்த்த வேண்டும்"என்றார்.அதன்படியே நிகழ்ந்தது. போரில்,யானையைக் கொன்றான் பீமன்.உடன் யுதிஷ்டிரரை அழைத்த கண்ணன், ”அதோ பாருங்கள்! யானை அசுவத்தாமா இறந்து கிடப்பது உண்மைதானே? இந்தத் தகவலை உரக்கச் சொல்வதில் தயக்கம் இல்லையே?
”உண்மையைச் சொல்ல தயக்கம் என்ன?” என்ற யுதிஷ்டிரர், ‘அசுவத்தாமா ஹத: குஞ்சர:’ (அசுவத்தாமா என்ற யானை இறந்து விட்டது) என்று துரோணரின் காதில் விழும்படி உரக்கக் கூவினார். மிகச் சரியாக… அவர், ‘குஞ்சர:’ (யானை) என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது சங்கநாதம் எழுப்பினார் கண்ணன்.
முரசுகள் ஒலித்தன! இந்த சத்தத்தில், ‘குஞ்சர’ எனும் வார்த்தை மட்டும் துரோணரின் காதில் விழவில்லை. எனவே, தன் மகன் அசுவத்தாமா இறந்து விட்டதாக தவறாகப் புரிந்துகொண்டார்.
”அன்பு மகனே இறந்து விட்டாயா!” என்று துடித்தார். புத்திர சோகம் தலைதூக்க, விரக்தியுடன் ஆயுதங்களை தூர எறிந்தார்.
அப்படியே அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தார். இதை பயன்படுத்தி, பாண்டவப் படையின் சேனாதிபதியான திட்டத்துய்மன் அவரைக் கொன்றான்.இதையறிந்த கௌரவப்படை சிதறி ஓடியது. பின்பு யுத்தத்தின் போக்கே திசைமாறியது.
”யுதிஷ்டிரா!" பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த தருமரை உசுப்பியது எமதர்மனின் குரல். "என்ன?பாவச் சுவடுகளை ஆராய்கிறதா உன் மனம்?” எனக் கேட்டார் எமதர்மர்.
”ஆம் ஸ்வாமி… நீங்கள் சொல்வது சரிதான். துரோணரது மரணத்துக்குக் காரணமான நான், மகாபாவி!” என்று கதறினார் யுதிஷ்டிரர்.
அவரின் தோள் பற்றி எழுப்பி, ஆறுதல்படுத்தினார் எமதர்மன். "வருந்தாதே தருமபுத்திரா! இனி நீ அப்பழுக்கற்றவன். உன் மீது படிந்திருந்த சிறு பாவக்கறையும் அகன்றுவிட்டது. போர்க்களத்தில் நீ கூறிய வார்த்தைகளால் துரோணர் இறந்தார்.
அதன் மூலம் உன்னை பற்றிக் கொண்ட பாவத்தின் விளைவால், கொடுமையான நரகக் காட்சிகளை நீ காண நேரிட்டது!” என்றார்.
இந்த விளக்கத்தால் மனம் தெளிந்த யுதிஷ்டிரர், எமதர்மரை வணங்கி ஆசிபெற்று, சொர்க்கத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்தார்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

4 Dec
பக்தி உண்மை என்றால் எதுவும் சாத்தியமே:

ஒரு ஊரில் அநாதை ஏழைப்பெண் இருந்தாள். அவளிடமிருந்த மாடுகளிடமிருந்து பாலைக்கறந்து, அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.
ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள்தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை.
அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொண்ட அவர், அந்த பெண்ணிடம், “ஏன்மா!ஒழுங்கான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா, உன்னால எனக்கு எல்லாமே தாமதமாகுது” என்று கடிந்து கொண்டார்.“மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்?
Read 12 tweets
3 Dec
ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்துக் கொண்டிருந்தது. கிருஷ்ணர் அதைப் பார்த்தார். அதை அர்ஜுனனுக்கும் காட்டினார். "அர்ஜுனா,அது புறா தானே?" என்று கேட்டார் கிருஷ்ணர்.
ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்"என்றான் அர்ஜுனன். சில விநாடிகளுக்குப் பிறகு, "பார்த்தா,எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது" என்றார் கிருஷ்ணர். அடுத்த விநாடியே, "ஆமாம்...ஆமாம்...அது பருந்து தான்" என்று சொன்னான் அர்ஜுனன்.
மேலும் சில விநாடிகள் கழித்து, "அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால்,அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது" என்று
கிருஷ்ணர் சொல்ல, கொஞ்சமும் தாமதிக்காமல், "தாங்கள் சொல்வது சரிதான், அது கிளி தான்" என பதிலளித்தான் அர்ஜுனன்.
Read 7 tweets
2 Dec
கையில் செம்பு காப்பு அணிவதால் உடலில் ஏற்படும் அற்புத பலன்கள்:

செம்பு காப்பு அணிவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். செம்பு காப்பு அணிவது நமது சருமத்திற்கும், இரத்த ஓட்டத்திற்கும் மிகவும் அவசியமானது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
காப்பர்

தாமிரம் என்று அழைக்கப்படும் செம்பானது, உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். நட்ஸ், மீன் போன்ற உணவுகளில் தாமிரம் இயற்கையாகவே உள்ளது. அதிகளவு ஜிங்க் மற்றும் வைட்டமின் சி எடுத்துக்கொள்வது உங்கள் உடலில் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும்.
அதிகளவு மது அருந்துவதும் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும். செம்பு காப்பு அணிவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

ஆர்திரிடிஸ் :

ஆய்வுகளின் படி செம்பு காப்பு அணிவது உங்கள் சருமம், தாமிரத்தை உறிஞ்சும் அளவை அதிகரிக்கிறது.
Read 12 tweets
2 Dec
கர்ணனின் பெருமை:

பாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில், தேரிலிருந்தபடியே அர்ஜுனன் ஓர் அம்பை எடுத்து கர்ணனது தேர் மீது எய்தான்.
அந்த அம்பின் வீரியத்தால், கர்ணனது தேர் சற்று நிலைகுலைந்து, நான்கு அடி பின்னோக்கி நகர்ந்தது.
இதனால் கோபமுற்றான் கர்ணன். மறுகணம் அவன் ஆக்ரோஷத்துடன் அம்பு ஒன்றை எடுத்து அர்ஜுனனின் தேர்மீது எய்தான். அதனால் அர்ஜுனனின் தேர் ஓர் அடி பின்வாங்கியது.
அப்போது அர்ஜுனன் அருகிலிருந்த கண்ணனிடம் பெருமிதம் பொங்க,
"பார்த்தாயா கிருஷ்ணா! நான் எய்த ஒரே அம்பு, கர்ணனின் தேரை நான்கு அடி பின்னோக்கி நகர்த்தி விட்டது. ஆனால் பதிலுக்கு அவன் எய்த அம்பு, எனது தேரை ஒரே அடி மட்டுமே பின்னுக்கு நகர்த்தியது!’’ என்றான். அவனை இடைமறித்த கண்ணபிரான், ‘‘அர்ஜுனா! இதை நீ பெருமைக்குரிய செயலாகக் கருதாதே"
Read 6 tweets
1 Dec
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?

தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.
முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்.ஆனால் இப்போது டைனிங் டேபிள். முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதன் நோக்கமென்ன?சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால், ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.
Read 5 tweets
1 Dec
பழத்தோலில் சுவை கண்ட பரந்தாமன்:

பாண்டவர் தூதனாக கிருஷ்ணர், அஸ்தினாபுரம் சென்றான். பரந்தாமன் வருகை அறிந்த ஆன்றோர் அனைவரும் அவனை எதிர்கொண்டனர். கண்ணன் இராசவீதி வழியாக வந்து கொண்டிருந்தான். வீதியின் இருமருங்கிலும் வானளாவிய மாளிகைகள் கண்ணனை வரவேற்பதற்காக அலங்கரிக்கப்பட்டு விளங்கின.
முதல் மாளிகையைக்கண்ட கண்ணன் "இது யாருடையது?" என்றான். "என்னுடையது" என்று பதில் வந்தது. பதில் சொன்னவன் துரியோதனன். இப்படியே ஒவ்வொரு மாளிகையையும் கண்ணன் கேட்டுக் கொண்டே வந்தான். அவனைத் தொடர்ந்து எதிர் கொண்டவர்கள், தங்கள் மாளிகையை என்னுடையது என்னுடையது என்றே சுட்டிக் காட்டினர்.
துரோணர்,வீடுமர்,கிருபர்,துச்சாதனன்,கர்ணன் முதலியோர் அனைவரும் அவ்வாறு கூறியவருள் முக்கியமானவர்கள்.
கண்ணன் அவர்கள் வரவேற்பைப் பொருட்படுத்தாமல், சென்றுகொண்டேயிருந்தான். வீதியின் கடைசிப் பகுதிக்கு வந்தாகிவிட்டது. அங்கே ஒரு கூரைச் சிறுகுடில். தவக்குடில் போல விளங்கியது.
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!