நன்றி : ஸ்டான்லி ராஜன் பதிவு.
முழுமையாக படியுங்கள்

திமுகவின் மதசார்பற்ற தன்மை என்பது கிறிஸ்துவத்திடமும் இஸ்லாமியடமும் குலாவி அப்பட்ட இந்து வெறுப்பினை வெளிபடுத்துவது, இதுதான் அவர்களின் பகுத்தறிவு திராவிட கொள்கை.
இதில் தந்தை கருணாநிதியினை விட பன்மடங்கு வெறிபிடித்து நிற்கின்றார் ஸ்டாலினார்.
அவர் பங்கெடுத்த, அவர் பாஷையில் சொல்வதென்றால் கிஸ்மிஸ் விழா எனும் கிறிஸ்மஸ் விழாவில் இந்து விரோத கோஷ்டிகள் கடும் மட்டமான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கின்றது அதை ரசித்து சிரித்து அப்படியே மகிழ்ந்து வந்திருக்கின்றார் ஸ்டாலினார்
"இந்து எனும் பெயரை கேட்டாலே எரிகின்றது" என ஒரு குரல் எழும்ப ஸ்டாலினார் சிரிக்கின்றார், இதுவே இந்து மேடையில் இவரை வைத்து பிறமதம் பெயர் சொன்னால் எரிகின்றது என்றால் ரசிப்பாரா?

இவரா வருங்கால முதல்வர்? இவரா? தமிழ்நாட்டில் மதசார்பற்ற அணி தலைவர்?
அதே மேடையில் தமிழர்கள் சைவர்கள் என்றொரு பெண்மணி பேசுகின்றார், அவர் நெற்றி முழுக்க விபூதி மின்னுகின்றது

அம்மணி உண்மையிலே தமிழ் சைவர் என்றால் ஏ ஸ்டாலினே நீனும் தமிழன் அதனால் சைவன், ஏ சற்குணமே நீயும் தமிழன் அதனால் சைவன் என திருநீறை பூசிவிட்டிருக்க வேண்டும்
ஆனால் கூலிக்கு பாடவந்த அந்த கள்ள சைவ அம்மணி அதை எப்படி செய்யும்?

இந்த குழப்பவாத அம்மணியிடம் ஒரு கேள்விதான்

அம்மணியே கிறிஸ்மஸ் கேக்கினை நீ உண்டுவிட்டாய், அதில் முட்டை கலந்திருந்தாலும் நாகரீகம் கருதி உண்டுவிட்டாய் நல்லது
சரி, தமிழர்கள் சைவர்கள் அல்லவா? சிவலிங்கத்துக்கு படைக்கபட்ட உணவினை முருகன் கோவில் பொங்கலை அந்த தமிழ் சைவ கிறிஸ்தவ கோஷ்டியினை உண்ண சொல் பார்க்கலாம்?

சொல்லம்மா? உண்பார்களா? நடக்குமா? இது கூட சிந்திக்க தெரியாத உங்களுக்கெல்லாம் ஒரு திறுநீறு...
திமுக ஒரு ரகசிய ஆட்டத்தை ஆடுகின்றது, சைவம் என்பது ஏதோ ஒரு இனம் போலவும் அதில் இருந்து ஆளாளுக்கு வெளிவந்தது போலவும் பசப்புகின்றது
சைவம் என்றால் சிவவழி, சைவம் என்றால் உயிரை கொல்லா சாத்வீக உணவு வழி மாட்டுகறியும் மீனும் ஆட்டுகறியும் உண்பவன் எப்படி சைவம் என சொல்லி கொள்ளமுடியும்? அடிப்படையே அடிபடுகின்றது
சைவம் என்பது மதம், சைவம் என்பது இந்தியாவின் காஷ்மீர் பனிலிங்கம் முதல் கன்னியாகுமரி லிங்கம் வரை இருக்கும் ஒரு மதத்தின் பெயர்

அதை எப்படி தமிழன் என சுருக்க முடியும்?
தமிழர்கள் ரிஷிகேஷமும் கைலாசமும் செல்வதும், வட இந்தியர்கள் ராமேஸ்வரம் வருதும் எதற்கு அந்த லிங்கத்தை காணவே, அதை வழிபடவே

அந்த மதம் தான் சைவம், அந்த நீறு பூசிய இணைப்புத்தான் சைவம்
அந்த சைவத்தைதான் இந்து என்பார்கள், இந்து குடும்பம் என்பார்கள்.
இந்து என்றால் எரியுமாம் சைவம் என்றால் கசக்குமாம்

தமிழன் சைவம் என்றால் சிவலிங்கம் தரிசித்து வணங்கி நீறு பூசி நிற்க ஸ்டாலினும் அவர் கோஷ்டியும் தயாரா? இல்லை அல்லவா?

பின் ஏன் இந்த நாடகம்?
தமிழர் சைவர்களாம் ஆனால் திமுக கட்சி திருநீறு பூசாதாம் சைவ பண்டிகைகளை வாழ்த்தாதாம், இதெலலம் என்ன வகை தர்மம்?

இதெல்லாம் அசிங்கம், அவமானம், தேர்தலில் சில வாக்குக்காக கோவணத்துடன் நிற்கும் மகா மகா கேவலம்

காட்சியின் அடுத்த மோசடி எஸ்ரா சற்குணம் , இல்லை அவர் துர்குணம்
சற்குணம் ஒரு பாதிரி என்றே அறியபடமுடியா அளவு மோசமான மதவெறி பிடித்த நபராகிவிட்டார்.

இயேசுவின் வாழ்விலும் இஸ்ரேலில் பல போராட்டங்கள் இருந்தன, ரோமையரையோ சீசரையோ ஏற்க முடியாது என பல கோஷ்டி ஊளையிட்டது
இயேசுவோ சீசரை தலைவனாக ஏற்று வரிகட்டினார், ரோமை உத்தரவுக்கு அடிபணிந்தே சாகவும் செய்தார்

அதுதான் தாழ்ச்சி,அதுதான் ஆன்மீகம், அதுதான் துறவு. ரோமையரை எதிர்த்தாரா? குதித்தாரா?

தன் கடமை எது என சரியாக செய்தார் இயேசு, அவர் பெயரை சொல்லவும் துர்குணத்துக்கு தகுதி இல்லை
இந்து ஆலயங்களின் வருமானம் அரசுக்கு செல்கின்றது, கிறிஸ்தவர் வருமானம் எங்கே செல்கின்றது, துர்குணமோ அவரின் சபையோ நாட்டின் வருமானத்துக்கு சல்லி காசு கொடுத்த இயக்கமா?

எந்த தைரியத்தில் அவரெல்லாம் பேசுகின்றாரோ தெரியவில்லை
துர்குணத்தின் வெள்ளை ஆடையினை நோக்கி இயேசு சொன்னதையே சொல்லலாம்

"ஏ வெள்ளையடிக்கபட்ட கல்லறைகளே, வெளியே அழகாக தெரிகின்றீர்கள் ஆனால் உங்கள் உள்ளுக்குள் பூச்சியும் பாம்பும் மாசும் அருவெருப்பும் துர்நாற்றமும் நிறைந்திருகின்றது" என வெளிவேடக்காரரை சாடினார் இயேசு
அந்த வரி இப்பொழுது துர்குணத்துக்கும் பொருந்தும்

அவர் மனமெல்லாம் இந்து வெறுப்பும், தேச வெறுப்பும், மோடி மேல் அப்பட்டமான வன்மமும் கொண்டு திரிகின்றார், இவர் இயேசுவுக்கும் தொண்டர் அல்ல நாட்டுக்கும் நல்ல குடிமகன் அல்ல‌
போலி துறவி, பிழைப்புவாத கிறிஸ்தவர் அவர் பேராயர் அல்ல‌ பேய் ஆயர்.

சூரியனை வணங்குதல், பசுவினை காளையினை வணங்குதல் என்பதே இந்து தர்மம், இந்துக்கள்தான் அதை செய்கின்றனர்
அதையெல்லாம் மறைத்து சூரியனையும் பசுவினையும் வணங்காதவனையும், பசுவினை வெட்டி கொன்று தின்பவனையும் தமிழன் என சொல்வது மாபெரும் புரட்டு

பசுவினை வணங்கும் பண்டிகையில் அதை வெட்டி தின்பவன் நானும் தமிழன் என எப்படி வரமுடியும்? பொருந்தவே பொருந்தாது
பொங்கல் என்பது இந்து பண்டிகை, இந்து கலாச்சார பண்டிகை

இந்த கூட்டத்தில் இது கிஸ்மிஸ் விழா என கலந்து கொண்ட முந்திரி கொட்டை ஸ்டாலினாரிடம் ஒன்றை கேட்கலாம்

இந்து பண்டிகைகள் கதையாம் கிறிஸ்தவ பண்டிகைகள் நடந்த சம்பவமாம் இதனால் கிறிஸ்தவ பண்டிகைக்கு வாழ்த்துவார்களாம்
இயேசு டிசம்பர் 25ல் பிறந்தார் என்ற ஆவணம் எங்கே உள்ளது? அது பைபிளிலும் இல்லை ரோமையர் கிரேக்கர் குறிப்பிலும் இல்லை

டிசம்பர் என்பது இந்துக்களுக்கு மார்கழி மாதம் போல ஐரோப்பியருக்கும் ஒரு கொண்டாட்ட காலமாக கிறிஸ்துவத்துக்கு முன்பு இருந்தது
அதை கிறிஸ்துபிறப்பு மாதமாக மாற்றி குழப்பி அவர்கள் அடையாளத்தை அழித்தது கிறிஸ்தவம்

மற்றபடி இயேசு பிறந்த சரியான நாளோ, குறிப்போ எங்கு உண்டு? நட்சத்திர நாள் கூட இல்லை

நாம் ஒரு கிறிஸ்தவர், மிக சரியான கேள்வியினை கேட்கின்றோம், முடிந்தால் பகுத்தறிவில் பதிலளிக்கவும்
தேவமாதா கருவுற்ற நாள் என ஒன்று உண்டு அது டிசம்பரில்தான் வரும், இயேசுவும் டிசம்பரில்தான் பிறந்தார்

ஒன்று இயேசு 10 நாளில் பிறந்த குழந்தையாய் இருக்க வேண்டும் இல்லை 12 மாதம் கருவில் இருந்த குழந்தையாய் இருக்க வேண்டும் இரண்டுமே பகுத்தறிவுக்கு முரண்பட்ட விஷயம் அல்லவா?
கொண்டாடுவதாக இருந்தால் சரியான நாளை சரியான ஆதாரங்களுடன் சொல்லி நிறுவிவிட்டு கொண்டாடினால்தானே அது பகுத்தறிவு, இல்லையேல் அது பல்லிளிக்கும் அறிவு

கண்ணன் பிறந்தால் ஆதாரமில்லை என்கின்றீர்கள், இந்துக்களிடமாவது ஆவணி அஷ்டமி ரோகினி என்றொரு அடையாள குறிப்பு உண்டு, இயேசுவுக்கு என்ன உண்டு?
இயேசு பிறந்த உண்மையான நாளை பகுத்தறிவில் கண்டறிந்து கேக் வெட்டி கிஸ்மிஸ் கொண்டாடுங்கள், இந்த பல்லிளித்த அறிவு எல்லாம் நன்றாக இல்லை

இயேசு மொழியில் சொல்வதென்றால்

"ஏ திருட்டு பொய்கார திமுகவே உனக்கு ஐயோ கேடு...

ஏ வெள்ளை அடிக்கபட்ட கல்லறையான துர்குணமே உனக்கு அய்யயோ கேடு.."
உங்களுக்கெல்லாம் என்ன தைரியம் என்றால் "இந்து என்றால் எரிகின்றது" என அந்த கடும் சொல்லை கேட்டு கொண்டும் திமுகவில் பிழைப்புக்காக அமர்ந்திருக்கும் சில நரி இந்துக்களின் அமைதி, அந்த புல்லுருவிகளின் நாவு உங்கள் காலில் பட்டு கொண்டிருக்கும் அந்த தைரியம்
ஆனால் அந்த சிறு கூட்டத்தை விட பெரும் கூட்டம் வெளியில் இருக்கின்றது, அவர்கள் என்ன சொல்கின்றார்கள் தெரியுமா?

#தீமுக__
என்றாலே_
இந்துக்களுக்கு_எரிகின்றது
🔥🔥🔥
(இது ஸ்டேன்லி ராஜன் என்ற கிருத்தவரின் பதிவு. நடுநிலை இந்துக்கள் சிந்திக்கவும்)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

23 Dec
திருவெள்ளியங்குடி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில்அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும். இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. 🙏🇮🇳1
வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம். பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் இத்தலம் குறித்த ஏராளம் தகவல்களைத் தெரிவிக்கின்றன.
🙏🇮🇳2
மூலவர்:
கோலவில்லி ராமன்

உற்சவர்:
சிருங்கார சுந்தரன்

தாயார்:
மரகதவல்லி

தல விருட்சம்:
கதலி வாழை

🙏🇮🇳3
Read 8 tweets
23 Dec
*கும்பகோணம் திருக்கோயில்கள் கரு முதல் சதாபிஷேகம் வரை*

1. கரு உருவாக (புத்திர பாக்கியம்) -
*கருவளர்ச்சேரி*

2. கரு பாதுகாத்து சுக பிரசவம் பெற -
*திருக்கருகாவூர்*

3. நோயற்ற வாழ்வு பெறுவதற்கு -
*ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயில்*

4. ஞானம் பெற -
*சுவாமிமலை*
5. கல்வி, கலைகள் வளர்ச்சிக்கு -
*கூத்தனூர்*

6. எடுத்த காரியம் வெற்றி பெற மன தைரியம் கிட்ட -
*பட்டீஸ்வரம்*

7. உயர் பதவி அடைய (வேலை வேண்டி) -
*கும்பகோணம் பிரம்மன் கோயில்*

8. செல்வம், பெறுவதற்கு -
*ஒப்பிலியப்பன் கோயில்*
9. கடன் நிவர்த்தி பெற -
*திருச்சேறை சரபரமேஸ்வரர்*

10. இழந்த செல்வத்தை மீண்டும் பெற -
*திருவிடைமருதூர் - மகாலிங்க சுவாமி*

11. பெண்கள் நற்சமயத்தில் ருது
ஆவதற்கும், ருது பிரச்சனைகள் தீரவும் -
*கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் - நவ கன்னிகை*
Read 6 tweets
23 Dec
🙏 அதிசய ஆஞ்சநேயர் அறிவோம்

அனுமானும் பள்ளிகொண்ட நிலையில், ஒரு கால் மேல் இன்னொரு காலைப் போட்டபடி சேவை சாதிக்கும் இடம்,

'பள்ளிகொண்ட அனுமான்' கோயில்.​

🇮🇳🙏1
இது தமிழ்நாட்டில் இல்லை. இந்த வித்தியாசமான அனுமானைத் தரிசிக்க நாம் மகாராஷ்டிராவில் இருக்கும்
நாக்பூர் வரை செல்ல வேண்டும்.

பின், ஏறத்தாழ 2 மணி நேரம் மேலே பயணிக்க 'சாம்வலி' எனும் கிராமம் காணலாம். அங்கு ஓர் உயரமான மலையின்
மேல் இந்த அனுமார் கோயில் இருக்கிறது.

🇮🇳🙏2
இங்கு அனுமார் களைப்பாறும் நிலையில் படுத்திருக்கிறார்! இராம - இராவண யுத்தம் முடிந்து எல்லோரும் நாடு திரும்ப, வரும் வழியில் அனுமார்
இந்த மலையில் சயனித்தபடி இளைப்பாறினாராம்!

🇮🇳🙏3
Read 12 tweets
22 Dec
🏵 ஞானக் கதைகள் 🏵

💐 ஒரு மனிதன் கடவுளிடம் பிரார்த்தனை செய்தான்

"நான் உலகிலேயே அதிக துயரமுடையவனாக இருக்கிறேன்

என் வாழ்நாள் முழுவதும் பிரார்த்திக்கிறேன்

எனக்கு அதிகமாக ஒன்றும் வேண்டாம்
"என் துயரங்களை நீங்கள் யாரிடமாவது மாற்றிக் கொடுத்து
அவருடையதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும்

ஏனெனில்

மற்ற அனைவரும் மகிழ்வுடன் உள்ளனர்

நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள். "

அன்றிரவு அவன் ஒரு கனவு கண்டான்

வானிலிருந்து இடி போன்ற குரல் ஒலித்தது
"அனைவரும் அவரவர் துயரங்களை ஒரு பையில் எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கி விரைந்து வாருங்கள் "

தன் பிரார்த்தனைக்குக் கடவுள் காது கொடுத்துவிட்டார் என்று அவன் நினைத்தான்

உடனே அவன் தன் துயரங்களை ஒரு பையில் நிறைத்துக்கொண்டு சாலையில் வந்தான்
Read 10 tweets
22 Dec
சீன ஆக்டோபஸின் கொடிய நச்சுக் கரங்களில் உலகமே சிக்கியுள்ளதா?

சீன ஆக்டோபஸின் கொடிய நச்சுக் கரங்களில் உலகமே சிக்கியுள்ளதா? இந்தக் கேள்விக்கு பதில் ‘ஆம்’ என்று தான் தோன்றுகிறது.

கடந்த ஓராண்டாக உலகையே முடக்கிப் போட்டிருக்கும் சீன வைரஸ் என்பது வூஹான் வைரஸ் மட்டுமல்ல.
மற்ற நாடுகளின் தகவல் திருட்டில் ஈடுபடும் கணினி மற்றும் மென்பொருள் வைரஸ் மட்டுமல்ல. 

அதற்கும் மேலாக மனித வைரஸ்களும் சீனாவில் இருந்து உலக நாடுகள் அனைத்திலும் ஊடுருவியுள்ள செய்தி திடுக்கிடவைக்கிறது.
உலகளாவிய நிறுவனங்களுக்குள் சீன குடிமக்கள் மேற்கொண்டுள்ள ஊடுருவலின் அளவை ‘தி ஆஸ்திரேலியன்’ என்கிற சஞ்சிகை மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டிய விவரங்கள் உலகின் பிற பகுதிகளுக்கு ஒரு புதிய அச்சுறுத்தல் உணர்வை உருவாக்கியுள்ளது.
Read 34 tweets
22 Dec
இதுவும் கடந்து போகும்

ஐம்பது வருடம், நூறு வருடம் எல்லாம் அந்த கால கட்டத்தில் வாழும் நமக்கு நீண்ட நாட்களாக தெரியலாம். ஆனால் மனித குல வரலாற்றில் பார்த்தால் இதெல்லாம் மிக மிக சொற்ப காலம்.
ராவணன் பல்லாண்டு காலம் ஆட்சி செய்தான். தேவர்களை, முனிவர்களை, ஸாதுக்களை கொடுமைப்படுத்தினான். எத்தனையோ பெண்களை பலவந்தமாக கவர்ந்து வந்து துன்புறுத்தினான். இவன் கொடுமை எல்லாம் தீரவே தீராது, காலா காலத்துக்கும் நிலைத்து இருக்குமோ என்று தான் அன்று பலரும் நினைத்து இருப்பர்.
ஆனால் அவனுக்கும் அழிவு வந்தது. அவன் குலத்துக்கும் அழிவு வந்தது. அந்த கொடுமையான காலகட்டமும் முடிவடைந்தது.

கலியுகத்தில் ஔரங்கசீப். நீண்ட நெடுங்காலம் இம்மண்ணில் கொடுங்கோல் ஆட்சி புரிந்தானே? சத்ரபதி சிவாஜி காலம் முடிந்த பின்னரும் அந்த கொடுமை இம்மண்ணில் நிகழ்ந்ததா இல்லையா?
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!