@Jeba_here தவறான பார்வை.
பாஜவை எதிர்கொள்ள சரியான வழி இருவேறு தத்துவங்களை தமிழ்நாடு முன்னிறுத்துவதே. அதாவது திராவிடம், தமிழ்த்தேசியம். பாஜகவை திராவிட, தமிழ்த்தேசிய கட்சிகள் சேர்ந்து முதல் எதிரியாக இந்த தேர்தலில் எதிர்ப்பதால் அவர்கள் ஓடி போய்விடுவார்களா? 1/n
அடுத்த தேர்தலில் பணத்தை கொண்டு அடித்து இன்னும் பிரபலமான முகங்களை அழைத்து வரத்தான் போகிறார்கள். அதிகாரம், பணம் இருக்கும் வரை அவர்களை தவிர்க்க முடியாது. இனமாக, மதநல்லிணக்கம் பேசி, அனைவரின் ஆன்மீகத்தை ஏற்றுக்கொண்டு ஒன்றிணைவதே பாஜகவை வீழ்த்தும் கொள்கை. (2/n)
ஆரியத்தை முதன்மையாக எதிர்க்கவேண்டும் என்று திமுக நினைத்தால், திமுக மோதவேண்டியது தமிழ்த்தேசியத்துடன். தமிழ்த்தேசியத்தை புறக்கணித்து அதை விட வெகு சிலரே ஆதரிக்கும் ஆரியத்தை முதன்மையாக காட்டினால், ஆரியம் தான் வளரும். திமுக தமிழ்த்தேசியத்தை புறக்கணிப்பது ஆரியத்தை தான் வளர்க்கும்.(3/n)
இரண்டு சதவிகிதத்துக்கும் கீழே இருக்கும் பாஜகவை எதிரியாக காட்டிக்கொண்டு, ஆரிய vs திராவிட போர் எனும் திமுக, பாஜகவை விட அதிகமாக ஓட்டுக்களை பெற்ற நாம்தமிழரை எதிரியாக காட்டாமல், திராவிடம் vs தமிழ்த்தேசியம் என்று பேசாமல் இருப்பது, தமிழ்த்தேசியத்தை வளரவிடாமல் தடுத்து ஆரியத்தை வளர்க்கவே.
திராவிடம் தமிழ்த்தேசியத்தை எதிரியாக காட்டாமல் தவிர்ப்பது அவர்கள் வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கே. ஆரிய, திராவிட கட்சிகளுக்குள் அடித்துக்கொள்வது, தமிழ்த்தேசிய கட்சியின் வளர்ச்சியை தடுக்கவே, அதுவே அவர்களது நோக்கம். பாஜக ராமசாமி நாயக்கனை நோண்டும், திமுக விசிகவை வைத்து பாஜகவை நோண்டும்.
தமிழ்த்தேசியர்கள் ஆரியத்தை முதல் எதிரியாக பார்த்து திராவிடத்தை வளரவிட கூடாது. ஒருகாலும் ஆரியத்தை எதிர்ப்பதாக நினைத்து திராவிடத்துக்கு ஓட்டு போட கூடாது. ஆரிய, திராவிடர்கள் அடித்துக்கொள்வார்கள் பிறகு தமிழர்களை அழிப்பதில் சேர்ந்துகொள்வார்கள். வெள்ளை உடுத்திய பாஜக தான் காங்கிரஸ்.
ஆம், பாஜக இன்னும் அதிகமான நாசகார திட்டங்களை அறிமுகபடுத்துகிறது, வேற்றுமதத்தினருக்கு ஆபத்தாகஉள்ளது. அதை எதிர்க்க, இனமாக ஒன்றிணைந்து, எல்லா மத ஆன்மீகத்தையும் பேசி விரட்டுவதே. திமுக ரத்தம் உறிஞ்சும் அட்டை அல்ல, ஒன்னரைலட்சம் ஈழதமிழர் இனஅழிப்புக்கு துணைநின்று வேடிக்கைபார்த்த ராட்சசன்.
70 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சி தான் பாஜகவின் வளர்ச்சிக்கு காரணம். அதேபோல், 50 ஆண்டுகால திராவிட ஆட்சி, பாஜகவின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது. 50 ஆண்டுகால திராவிட ஆட்சியை வேறொரு தத்துவத்தின் (தமிழ்த்தேசிய) மூலம் மாற்றவேண்டும். அதுவே பாஜகவின் வளர்ச்சியை தடுக்கும்.
70 ஆண்டுகால காங்கிரஸ்ஆட்சியை மாற்றுகிறேன் என்று வந்ததுபோல், 50 ஆண்டுகால திராவிடஆட்சியை மாற்றுகிறேன் பேர்வழி என்று எளிதில் உள்ளே நுழைந்துவிடும், ஆரியத்தை முதன்மையாக எதிர்த்தால். 50 ஆண்டுகால திராவிட சீர்கேடுகளின் பலனை தமிழ்தேசியம் பெறவிடாமல் ஆரியம் திருடிவிடும். தமிழனை அடிமையாகும்.
போட்டி தமிழ்த்தேசியத்துக்கும், திராவிடத்துக்கும் இருக்கவேண்டும். தமிழ்தேசியர்கள் தமிழ்தேசியகட்சிக்கே ஓட்டுபோடவேண்டும், ஆரியத்தை முதன்மையாக எதிர்க்கிறேன் என்று திராவிடத்துக்கு ஓட்டுபோடக்கூடாது. திராவிடர் vs தமிழர் போரை சீமான், ஸ்டாலின் தொகுதியில் நிற்பதில் இருந்து தொடங்கவேண்டும்.
போட்டி தமிழ்த்தேசியத்துக்கும், திராவிடத்துக்கும் இருக்கும்பட்சத்தில், நாளடைவில் திராவிடம் அழிந்துபோகும். திராவிடத்துக்கு மாற்றாக தீவிரதமிழ்த்தேசியம் பேசும் இன்னொரு கட்சி வந்து மிதவாததமிழ்த்தேசிய கட்சியை எதிர்க்கவேண்டும். அதாவது இரு வேறு தமிழ்த்தேசிய கட்சிகளுக்குள் போட்டிவேண்டும்.
இதுவரை பல காணொளிகளை பொறுமையாக பார்த்துவிட்டேன். இது தான் எனது சாராம்சம். கல்யாணசுந்தரம் மீது பல *சரியான* குற்றசாட்டுகள் உள்ளன (சில தவறானவை). ஆனால், அவற்றை சீமான் ஏன் கல்யாணசுந்தரத்திடம் பகிர்ந்துகொள்ளவில்லை? 5 மாதம் வரை ஏன் அவரின் அழைப்புகளை எடுக்கவில்லை, வந்தவரை சந்திக்கவில்லை?
இடும்பை காணொளியோ, துரைமுருகன் காணொளியோ, சீமானின் காணொளியோ இந்த பிரச்சனையை சரிவர பேசவில்லை. அதில், பல குறைபாடுகள், முரண்பாடுகள் உள்ளன. நான் பார்த்த செந்தில்நாதனின் காணொளியும், தடம் காணொளியும் இதை சரியாக அணுகி இருந்தனர். கல்யாணசுந்தரத்தின் மீதான குற்றசாட்டை சரியாக சொல்லியிருந்தனர்.
அக்காணொளிகளில், கல்யாணசுந்தரம் கட்சி நிகழ்வுகளை, போராட்டங்களை முகநூலில் பகிரவில்லை என்ற சரியான குற்றசாட்டை சொல்லியுருந்தனர். அவர் பகிராதது மிக பெரிய தவறு. நான் முகநூலில் இல்லை எனவே எனக்கு இது தெரியாது. இதற்கு கட்சி கண்டிப்பாக விளக்கம் கேட்டு இருக்கவேண்டும், கேட்பதில் தவறில்லை.
அண்ணன் கொடுத்ததுதான் எல்லாம் என்றால், அண்ணனுகான வெளிச்சத்தை கொடுத்தது தேசியதலைவர் பிரபாகரன். ஆம், சீமான் எல்லோரும் பிரபாகரன் படத்தை வைத்துக்கொள்ள பயந்த நேரத்தில் அதை முன்னிறுத்தினார். அவர் பிரபாகரனை முன்னிறுத்தியதால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்தது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
இனஅழிப்பு நடந்ததால் வந்த கோபத்தின் விளைவு தான் நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவு என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். சீமானுக்காக வந்த கூட்டம் அல்ல. அது ஈழ தமிழருக்காக வந்த கூட்டம், தேசிய தலைவருக்காக தானாக சேர்ந்த கூட்டம். அதிதி புகழ்ச்சி சீமானுக்கு கொடுக்கவேண்டாம். அவர் ஒருங்கிணைத்தார்.
ஒன்னும் தெரியாத சிலருக்கு / பலருக்கு ஈழ புரிதல் ஏற்படுத்தினார். சீமான் புகழ்ச்சிக்கு உரித்தானவர் இல்லை என்பது என் கருத்து அல்ல. அதீத புகழ்ச்சி, சீமானிசம், ரசிகமனப்பான்மை தான் தவறு. ரசிகமனப்பான்மை இல்லாமல் தான் பலர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். மற்ற கட்சிகள் போல் செய்வது தவறு.