#BiggBoss4Tamil இல் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள் பற்றிய thread. Image
#The_plague
Albert Camus இன் 'The Plague' நாவலை 'கொள்ளை நோய்' என்று தமிழில் 'ச. மதனகல்யாணி' மொழிபெயர்த்துள்ளார்.
அல்ஜீரியக் கடற்கரையில் அமைந்திருக்கும் ஓரான் என்றழைக்கப்பட்ட ஒரு சாதாரண நகரத்தின் மக்கள்தொகையில் பாதிப் பேரைக் கொன்றழித்த நுண்கிருமியைப் பற்றிய கதைதான் இந்த நாவல். Image
#அவமானம்
என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை.என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது.
-சாதத் ஹசன் Image
#வெண்முரசு
இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. Image
#புயலிலே_ஒரு_தோணி
ப.சிங்காரம் புனைந்துள்ள மொழியின் அதிகபட்ச சாத்தியங்கள், நாவல் ஆக்கத்திற்கு புதிய பரிமாணங்களைத் தந்துள்ளன. நீட்டி முழக்கிப் பகடிசெய்யும் போக்கு, நாவலில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது. 2ஆம் உலகப்போரில் தூரதேசத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல நினைப்பவர்களின் குமுறல். Image
#அழகர்_கோயில்
"ஒரு பகுத்தறிவாளர் எழுதிய புத்தகத்தில் பக்தர்களின் உணர்வுக்கு எவ்வளவு இடம் கொடுத்திருக்கிறார் என்பதற்கான சான்று" என்று பெருந்தமிழஞறிஞர் தொ.ப குறித்து கமல் கூறியுள்ளார். அழகர் கோயில் குறித்து தொ. பரமசிவம் செய்த ஆய்வு நூல். Image
#அடிமையின்_காதல்
எஸ்-ஏ. பி. 'The Man From Rio' என்ற படத்தைப் பார்த்துவிட்டு, அதில் வரும் உற்சாகமான, ஆபத்துக்களைச் சிரித்துக் கொண்டே எதிர்நோக்கும் ஹீரோவைப் போல 'அடிமையின் காதல் ' கதாநாயகனைப் படைக்கும்படி ரா. கியிடம் யோசனை சொன்னார். அதைவைத்து ''அடிமையின் காதல்'' நாவல் வெளிவந்தது. Image
#மிர்தாதின்_புத்தகம்
இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் இது உயர்ந்து நிற்பது. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது. மிகைல் நைமி, இவரே எல்லா நூற்றாண்டுகளிலும் மாபெரும் எழுத்தாளர். நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன், எதுவுமே இதற்கு ஈடாகாது   என்கிறார் ஓஷோ. Image
கோபல்ல கிராமத்தின் இரண்டாம் பாகம்தான் 'கோபல்லபுரத்து மக்கள்'. இந்தியா சுதந்திரம் பெற்ற கதையோடு முடியும் இந்நாவலில், சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களாக விளங்குவதையும், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுவதையும் சுவை பொங்க விவரிக்கிறார் கி.ரா Image
தமிழின் ஆகச்சிறந்த கதை சொல்லிகளில் ஒருவரான வண்ணநிலவன், ஆரம்பக் காலங்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே ‘எஸ்தர்’. அந்த நூலில் இடம்பெற்றுள்ள ‘எஸ்தர்’ என்ற சிறுகதை இன்றளவும் தமிழின் மிக முக்கியமான படைப்பாக விமர்சகர்களாலும் வாசகர்களாலும் கொண்டாடப்படுகிறது. Image
இது ஒரு மனிதன் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம், இவையே அவன் வாழ்க்கை. Image
#தொடுவானம்_தேடி
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு மற்றும் நுண் தொழில் முனைவோருக்கு ஒரு பெரிய பங்கு உண்டு. அவர்கள் தினசரி சவால்களை எதிர்கொண்டு தொழிலை வெற்றிகரமாக நடத்திச் செல்ல இந்த நூல் பல உத்திகளை அளித்திருக்கிறது. Image
சுந்தர ராமசாமியின் ஜே.ஜே:சில குறிப்புக்கள் நாவலில், ஜேஜே வை மைய அச்சாக வைத்து அவனை சுற்றியுள்ள சமூகத்தை ஜேஜே மூலமாகவே விமர்சிக்கிறார் இதன் ஆசிரியர். இந்நாவல் முழுக்க நீங்கள் சிரித்துக்கொண்டே இருக்கலாம். அங்கதமும் பகடியும் இந்நாவல் முழுக்க நிறைந்துள்ளது. Image
அசோகமித்திரனின் #கரைந்தநிழல்கள்
சினிமாவில் பணியாற்றும் மனிதர்களினூடே சினிமா உலகத்தின் அசலான அவலத்தைப் பேசும் நாவலாக இருக்கிறது. ஹீரோ/யின், இயக்குனர்களின் வாழ்க்கை முறையை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் எமக்கு அடிமட்டத்தில் பணியாற்றுபவர்கள் மீது கரிசனத்தை ஏற்படுத்துகிறது. Image
பெருமாள்முருகனின் #கூளமாதிரி பண்ணையத்தில் வேலை செய்யும் ஒருவனின் வாழ்க்கையை அவனின் பார்வையினூடாக விவரித்து செல்கிறது கதை.
அவனுக்கு ஏற்படும் அவமானங்கள், துரோகங்கள், அவன் மீது செலுத்தப்படும் அதிகாரம், அவனுடைய இயலாமை போன்றவையே கூளமாதாரி. Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மாஸ்டர்🍥

மாஸ்டர்🍥 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @peru_vaikkala

9 Jan
'தமிழ் பயங்கரவாதம்' என்று அரசியல் செய்யும் நிலை தற்போது இலங்கையில் இல்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு அப்படியொரு பிம்பத்தை கட்டமைத்தால்தான், அவர்களின் கையாலாகாத்தனங்களை மூடி மறைக்க முடியும். யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தது சதுரங்கத்தின் முதல் நகர்வு Image
இனிமேல்தான் காய்கள் கவனமாக நகர்த்தப்படவேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
யாழ் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறப்படாது நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூபியை அகற்றியதாக பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகிறது. Image
ஆனால் இரவோடு இரவாக, ராணுவத்தினரின் பாதுகாப்போடு இடிக்க வேண்டிய தேவை என்ன?
அந்த தூபி அனுமதி பெறப்படாது கட்டப்பட்டது என்றால், முறையாக மாணவர் ஒன்றியத்துடன் பல்கலைக்கழக நிர்வாகம் கூட்டமொன்றில் அதற்கான தீர்வினை ஆலோசித்திருக்க வேண்டும். Image
Read 6 tweets
9 Jan
Suspect X (2008/Japanese)

"Galileo" என்ற ஜப்பானிய துப்பறியும் தொடர் ஒன்றின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட படம். The Devotion of Suspect X என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. "ஒரு கொலையை மறைத்து குற்றவாளி தப்பிக்கிறதுதான்" படத்தோட கதை. Image
இதை adopt பண்ணி நிறைய படங்கள் வந்திருக்கு.
1. Perfect Number (2012/Korean)
2. Drishyam (2013/Malayalam)
3. பாபநாசம் (2015)
4. கொலைகாரன் (2019) Image
The Other Me (2016/Greek)
இதுவும் கொலைகளை துப்பறியும் படம்தான்.கொலைகளில் தடையங்களா 220 எண்ணை கொலையாளி விட்டுட்டு போறான். "ஏன் அப்டி செய்யிறான்? , யார் கொலையாளி?" என்று கண்டுபிடிக்கிறதுலாம் செமையா இருக்கும். முக்கியமா cinematograohy வேற லெவல்ல இருக்கும். Image
Read 5 tweets
8 Jan
விக்ரம் ❤️

சியான் விக்ரம். இந்த மனுசனை புடிக்காதுன்னு சொல்லுறவங்க யாராச்சும் இருப்பாங்களா என்ன?
யாரையுமே கடிந்து பேசாம, fans கூட அவ்ளோ அன்பு, versatality acting, சக நடிகர்களோட ego இல்லாம பழகுறதுனு சொல்லிட்டே போகலாம்.
100 years of indian சினிமா விழாவில், 'தலைவா' பட பிரச்சனையால தளபதிக்கு கடைசி வரிசைல இருக்க இடம் குடுத்து ரொம்ப insult பண்ணாங்க. அப்போ தளபதி கூட இருந்து தன்னோட நட்பை காட்டியிருப்பார்.
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
இயக்குனர் பாலா எழுதின "இவன்தான் பாலா" biographyல விக்ரம் பற்றி நிறைய சொல்லி இருப்பார். சேது படத்திற்க்காக உடல் எடையை குறைச்சிட்டு இருக்கிறப்போ பாலா கேட்ட கேள்விக்கு விக்ரம் சொன்ன பதில், அந்த ஓர்மம். அதுதாங்க விக்ரம்.
Read 7 tweets
7 Jan
(நிஜத்துல நடக்கிறதுதான் படத்துல வருதுனும் சொல்லலாம்)
நான் இப்போ "படத்துல வாறது எல்லாமே 2020/2021ல உண்மையிலையே நடந்துட்டு இருக்கு போல"ன்னு சொல்லிக்கிறேன்.
அடுத்து Aliens வருதான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.
Trump, வல்லரசு அமெரிக்காவையே டல்லரசு ஆக்கிட்டாப்ல. Image
இது காலம் காலமா நடந்துட்டு வருதுன்னாலும், இப்போ கட்டுபாட்டில இருக்கு என்றாலும், ஒரே வருசத்துல எல்லாம் நடக்குதேனு நினைச்சா பீடை வருசம்னு தான் சொல்ல தோணுது. BlackLivesMatter சம்பவம்லாம் சரித்திரம் திரும்புதானுதான் நினைக்க தோணுது. Humanityலாம் கிலோ என்ன விலைனு கேட்பானுங்க போல. Image
Hurricane, Windstorm, Floods, Earthquake, Cycloneனு மொத்தமா வச்சு செஞ்சிருக்கு. ஒருத்தன் அடிச்சா பரவாயில்லை, 5 பேரு கதற கதற அடிச்சுட்டு ஆட்டோல coronaட ஏத்தி விட்ட வடிவேலு கதைதான். இதுக்கு இல்லையா சார் ஒரு endடு. Global warming & Climate change ரொம்ப சீரியஸ் விசயம். Think about it Image
Read 6 tweets
21 Dec 20
சிவா முத்தொகுதி - அமிஷ்
1.மெலுஹாவின் அமரர்கள்
2.நாகர்களின் இரகசியம்
3.வாயுபுத்ரர் வாக்கு
சிவன் பழங்குடி இனமொன்றின் தலைவனாக இருந்து கடவுளாக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை வைத்து புனையப்பட்டதே இந்த நாவல்.
விதிமுறைகளையும்,கொள்கைகளையும் மீறாது கடைப்பிடிக்கும் மெலுஹா ராச்சியம், அவரவர் விருப்பப்படி எந்தவித விதிமுறைகளோ கொள்கைகளோ இல்லாத ஸ்வத்வீப ராச்சியம்,எது தேவையோ அதை மட்டுமே ஏற்று வாழும் நாகர்கள் என வாழ்க்கை முறையின் பல கட்டமைப்புகளை ஒவ்வொரு வகையான ராச்சியங்கள் மூலம் விவரித்துள்ளார்
சிவன் ஒரு மனிதனைப் போல நடனமாடுகிறார்; காதலிக்கிறார்; திருமணம் செய்கிறார்; போர் செய்கிறார். தனது கழுத்து நீல நிறமாகியதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கிறது என்று நம்புகிறார். அதற்கு மேலாக கஞ்சா புகைக்கிறார்.
Read 6 tweets
20 Dec 20
Aamis (Assamese/2019)
அஸாமிஸ் மொழியில Aamis என்றால் இறைச்சி.
சுமோன் என்பவன் மானுடவியல் (Anthropology) துறையில் ஒரு ஆராய்ச்சியாளன். வட கிழக்கு இந்தியாவின் மக்களின் இறைச்சி உண்ணும் மரபுகள் குறித்து ஒரு ஆராய்ச்சி செய்து வருகிறான்.
தன் நண்பர்களுடன் ஒரு 'meat club' வைத்திருக்கிறான். அதன் மூலமாக இறைச்சிகளை நேரடியாக உயிருள்ளவற்றை வாங்கி, வெட்டி, சுத்தம் செய்து, சமைத்து உண்ணுதலை ஒரு பொழுதுபோக்காக கொண்டுள்ளான். அவனுக்கு குழந்தைநல மருத்துவர் நிர்மாலியுடன் பழக்கம் ஏற்படுகிறது.
சுமோன் நிர்மாலியை அவள் ருசித்திராத சுவையுடைய இறைச்சி வகைகளை அறிமுகப்படுத்தி சாப்பிட வைக்கிறான். சுமோனுக்கு நிர்மாலியுடனான ஈர்ப்பு அவனை யாருமே செய்யாதா ஒரு காரியம் செய்ய வைக்கிறது. அது அவர்களை பெரும் சிக்கலில் மாட்டிவிடுகிறது. அது என்னன்னு படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!